Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
3 posters
Page 1 of 1
குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
"இப்படி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று இதற்கு முன்பு நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. எனக்குச் சிறு வயது முதலே ஐஏஎஸ் ஆக
வேண்டும் என்ற கனவு இருந்தது. பிறந்த ஊர் ஒட்டன் சத்திரத்துக்கு அருகில் உள்ள வெரியப்பூர். அப்பா முத்துசாமி அந்த நாளிலேயே மிகப் பெரிய
சீர்திருத்தவாதி. அதனால் எனக்கு எல்லாச் சுதந்திரங்களும் கொடுத்து
வளர்த்தார். பெண்கள் நிறையப் படிக்க வேண்டும் என்று நினைத்தார்.
நான் என் பள்ளிக் கல்வியை மதுரையில் முடித்தேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படித்தேன். அப்புறம் சென்னைப்
பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., மானுடவியல் படித்தேன். அப்புறம் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் முடித்தேன்.
ஐஏஎஸ் தேர்வு எழுதி மெயின் தேர்வு வரைக்கும் போனேன். அப்புறம்
திருமணம் ஆகிவிட்டது.
என் கணவர் அப்போது ஸ்பிக் நிறுவனத்தில் என்ஜினீயராக இருந்தார்.
பிஸியான வேலை அவருக்கு. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
குடும்பப் பொறுப்பும் குழந்தைகளைப் பார்க்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. அதனால் ஐஏஎஸ் கனவு கனவாகவே நின்று போனது. இதில் எனது மாமியார் ராஜாமணிக்கும், அம்மா ஞானத்துக்கும் ரொம்ப வருத்தம்.
![குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை 17ko1](https://2img.net/h/www.dinamani.com/edition/images/17ko1.jpg)
2002 இலிருந்து நான்கு வருடங்கள் மதுரையில் இருந்தோம். மதுரையில் என் மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக அப்போது நான் வேலை செய்தேன். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கிலப் பாடம்
நடத்தினேன்.
என் வகுப்பு பிற ஆசிரியைகளின் வகுப்பைவிட எப்போதும் சத்தமாக
இருக்கும். அந்த அளவுக்குக் குழந்தைகளிடம் ஃபரீயாகப் பழகுவேன்.
குழந்தைகள் அவர்கள் வீட்டில் நடந்ததை எல்லாம் என்னிடம் சொல்வார்கள். வீட்டில் அப்பா, அம்மா சண்டை போட்டதிலிருந்து, அவர்கள் தங்களை
அடித்தது வரை எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிடுவார்கள். குழந்தைகளின் பெற்றோரும் என்னிடம் வந்து தங்களுடைய குழந்தைகளைப் பற்றிச் சொல்வார்கள். சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புகார் சொல்வார்கள்.
ஆசிரியையாக வேலை செய்த இந்த நான்கு வருடங்களில் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டுவிட்டேன். என் மகள்கள் இமயா, இதயா இருவருடனும் பழகிய அனுபவமும் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள உதவியது.
அதன்பின்பு சென்னையில் டாக்டர் எம்மா நடத்தும் கல்விநிறுவனத்தில் கவுன்சிலிங் கோர்ஸ் படித்தேன். இவை எல்லாமும் சேர்ந்துதான் குழந்தை வளர்ப்பு தொடர்பான புத்தகத்தை எழுத எனக்குத் துணிச்சல் கொடுத்தது.
பொதுவாகப் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் சொல்வதை யாரும் கேட்காத சூழ்நிலையே இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல பெற்றோர் விரும்புவதில்லை. தான் சொல்வதைக் கேட்டு நடக்கவே குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
நிறையப் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் தாங்கள் சொல்வதைக்
கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தைகள் சொல்வதை நாம் கேட்டால்தான் நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்பார்கள் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.
இன்று நிலைமை மாறிவிட்டது. பெற்றோரைவிடக் குழந்தைகள்
அறிவாளிகளாக இருக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாத பல விஷயங்கள் இப்போது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே குழந்தைகளைப் பெற்றோர் மதித்து நடக்க வேண்டும்.
![குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை 17ko](https://2img.net/h/www.dinamani.com/edition/images/17ko.jpg)
பெற்றோருக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரே தேவைதான் இருக்கிறது. நல்ல பெற்றோர்தாம் அவர்களுடைய ஒரே தேவை.குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அறிவுத்திறன் வளரும். கேள்வி கேட்கும்
குழந்தைகளிடம் கோபமாக எரிந்துவிழுந்தால் அவர்கள் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ஏதாவது கேட்டால் திட்டுவார்கள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் பேசமாட்டார்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
பெற்றோர் குழந்தைகளை அடிக்கக் கூடாது. பெரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களை அடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் நம்மைத் திருப்பி அடித்துவிடுவார்கள். ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அடித்து
விடுகிறோம். ஆனால் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். எனவே குழந்தைகள் தவறு செய்துவிட்டது தெரிய வந்தால், அந்த நேரத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டு, பிறகு நிதானமாக அதைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும்.
சில குழந்தைகள் பள்ளியிலிருந்து பிற பிள்ளைகளின் பென்சில், ரப்பர் போன்றவற்றை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். அதைப் பெரிய திருட்டுக் குற்றம் போல நினைத்து சில பெற்றோர் கடுமையாகத் தண்டித்துவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யக் கூடாது. "உன்னுடைய பென்சிலை உன்னுடன் படிக்கும் வேறு யாராவது எடுத்துக் கொண்டால் நீ எப்படி
வருத்தப்படுவாய்? அதுமாதிரிதானே அவர்களும் வருத்துப்படுவார்கள்?' என்று நிதானமாகப் பேசிப் புரிய வைத்தால் அவர்கள் அதற்குப் பின்பு ஒருநாளும் பிறர் பொருளை எடுத்துவரமாட்டார்கள்.
குழந்தைகளிடம் எப்போதும் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று பெற்றோர் சிலர் ஆணையிட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதே குழந்தை சிறப்பான செயல் ஒன்றைச் செய்யும்போது பாராட்டமாட்டார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பா, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, டிவி பார்க்கக் கூடாது என்பார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல்
போய்விடுவார். டிவி பார்ப்பதைக் கூடாது என்று சொல்லும்போது படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பாராட்டும்விதமாகப் பேச வேண்டாமா? "படிக்கிறியா? குட் இன்னும் நல்லாப் படி' என்று சொன்னால் குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சி வந்துவிடும். இன்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள்.
இப்போது பள்ளிகளில் நிறையப் போட்டிகள் வைக்கிறார்கள். இந்தப்
போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுமே வெற்றி பெற்றுவிட முடியாது. தனது குழந்தை போட்டியில் வெற்றி பெறவில்லை
என்பதற்காக வெற்றி பெற்ற குழந்தையுடன் ஒப்பிட்டுத் திட்டக் கூடாது.
அப்படிச் செய்தால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும்.
தன்னம்பிக்கை குலைந்துபோகும்.
அதைவிட எவ்வளவோ பிள்ளைகள் போட்டியில் பங்கேற்கப் பயப்பட்டுக் கொண்டிருக்கும்போது தைரியமாகப் போட்டியில் பங்கெடுத்ததே பெரிய
விஷயம் என்பதாக அவர்களிடம் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் அவர்கள் அடுத்துவரும் போட்டிகளில் உற்சாகமாகப் பங்கெடுப்பார்கள்.
நான் எழுதிய இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்கே அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இன்னும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஏராளமான விஷயங்களை எழுத முடியும். எழுதுவேன்.
இதுதவிர நாங்கள் ஆரம்பித்துள்ள "வே. தங்கப்பாண்டியன் அறக்கட்டளை' வேலைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். பள்ளி, கல்லூரி அளவில் நன்றாகப் படிக்கும் வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது உட்பட பல உதவிகளை இதன்மூலம் செய்து
வருகிறோம்.
என் அக்கா வளர்மதி அமெரிக்காவில் இருக்கிறார். அண்ணன் ரவி ஐஜியாக இருக்கிறார். இன்னோர் அண்ணன் செந்தமிழ்ச் செல்வன் கூட்டுறவுத்துறையில் கூடுதல் பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார்'' என்றார்.
மணிமேகலையின் கணவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு !
வேண்டும் என்ற கனவு இருந்தது. பிறந்த ஊர் ஒட்டன் சத்திரத்துக்கு அருகில் உள்ள வெரியப்பூர். அப்பா முத்துசாமி அந்த நாளிலேயே மிகப் பெரிய
சீர்திருத்தவாதி. அதனால் எனக்கு எல்லாச் சுதந்திரங்களும் கொடுத்து
வளர்த்தார். பெண்கள் நிறையப் படிக்க வேண்டும் என்று நினைத்தார்.
நான் என் பள்ளிக் கல்வியை மதுரையில் முடித்தேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படித்தேன். அப்புறம் சென்னைப்
பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., மானுடவியல் படித்தேன். அப்புறம் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் முடித்தேன்.
ஐஏஎஸ் தேர்வு எழுதி மெயின் தேர்வு வரைக்கும் போனேன். அப்புறம்
திருமணம் ஆகிவிட்டது.
என் கணவர் அப்போது ஸ்பிக் நிறுவனத்தில் என்ஜினீயராக இருந்தார்.
பிஸியான வேலை அவருக்கு. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
குடும்பப் பொறுப்பும் குழந்தைகளைப் பார்க்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. அதனால் ஐஏஎஸ் கனவு கனவாகவே நின்று போனது. இதில் எனது மாமியார் ராஜாமணிக்கும், அம்மா ஞானத்துக்கும் ரொம்ப வருத்தம்.
![குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை 17ko1](https://2img.net/h/www.dinamani.com/edition/images/17ko1.jpg)
2002 இலிருந்து நான்கு வருடங்கள் மதுரையில் இருந்தோம். மதுரையில் என் மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக அப்போது நான் வேலை செய்தேன். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கிலப் பாடம்
நடத்தினேன்.
என் வகுப்பு பிற ஆசிரியைகளின் வகுப்பைவிட எப்போதும் சத்தமாக
இருக்கும். அந்த அளவுக்குக் குழந்தைகளிடம் ஃபரீயாகப் பழகுவேன்.
குழந்தைகள் அவர்கள் வீட்டில் நடந்ததை எல்லாம் என்னிடம் சொல்வார்கள். வீட்டில் அப்பா, அம்மா சண்டை போட்டதிலிருந்து, அவர்கள் தங்களை
அடித்தது வரை எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிடுவார்கள். குழந்தைகளின் பெற்றோரும் என்னிடம் வந்து தங்களுடைய குழந்தைகளைப் பற்றிச் சொல்வார்கள். சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புகார் சொல்வார்கள்.
ஆசிரியையாக வேலை செய்த இந்த நான்கு வருடங்களில் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டுவிட்டேன். என் மகள்கள் இமயா, இதயா இருவருடனும் பழகிய அனுபவமும் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள உதவியது.
அதன்பின்பு சென்னையில் டாக்டர் எம்மா நடத்தும் கல்விநிறுவனத்தில் கவுன்சிலிங் கோர்ஸ் படித்தேன். இவை எல்லாமும் சேர்ந்துதான் குழந்தை வளர்ப்பு தொடர்பான புத்தகத்தை எழுத எனக்குத் துணிச்சல் கொடுத்தது.
பொதுவாகப் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் சொல்வதை யாரும் கேட்காத சூழ்நிலையே இருக்கிறது. குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல பெற்றோர் விரும்புவதில்லை. தான் சொல்வதைக் கேட்டு நடக்கவே குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
நிறையப் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் தாங்கள் சொல்வதைக்
கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தைகள் சொல்வதை நாம் கேட்டால்தான் நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்பார்கள் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.
இன்று நிலைமை மாறிவிட்டது. பெற்றோரைவிடக் குழந்தைகள்
அறிவாளிகளாக இருக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாத பல விஷயங்கள் இப்போது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே குழந்தைகளைப் பெற்றோர் மதித்து நடக்க வேண்டும்.
![குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை 17ko](https://2img.net/h/www.dinamani.com/edition/images/17ko.jpg)
பெற்றோருக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரே தேவைதான் இருக்கிறது. நல்ல பெற்றோர்தாம் அவர்களுடைய ஒரே தேவை.குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அறிவுத்திறன் வளரும். கேள்வி கேட்கும்
குழந்தைகளிடம் கோபமாக எரிந்துவிழுந்தால் அவர்கள் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ஏதாவது கேட்டால் திட்டுவார்கள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் பேசமாட்டார்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
பெற்றோர் குழந்தைகளை அடிக்கக் கூடாது. பெரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களை அடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் நம்மைத் திருப்பி அடித்துவிடுவார்கள். ஆனால் குழந்தைகள் தவறு செய்தால் அடித்து
விடுகிறோம். ஆனால் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். எனவே குழந்தைகள் தவறு செய்துவிட்டது தெரிய வந்தால், அந்த நேரத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டு, பிறகு நிதானமாக அதைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும்.
சில குழந்தைகள் பள்ளியிலிருந்து பிற பிள்ளைகளின் பென்சில், ரப்பர் போன்றவற்றை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். அதைப் பெரிய திருட்டுக் குற்றம் போல நினைத்து சில பெற்றோர் கடுமையாகத் தண்டித்துவிடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யக் கூடாது. "உன்னுடைய பென்சிலை உன்னுடன் படிக்கும் வேறு யாராவது எடுத்துக் கொண்டால் நீ எப்படி
வருத்தப்படுவாய்? அதுமாதிரிதானே அவர்களும் வருத்துப்படுவார்கள்?' என்று நிதானமாகப் பேசிப் புரிய வைத்தால் அவர்கள் அதற்குப் பின்பு ஒருநாளும் பிறர் பொருளை எடுத்துவரமாட்டார்கள்.
குழந்தைகளிடம் எப்போதும் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று பெற்றோர் சிலர் ஆணையிட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதே குழந்தை சிறப்பான செயல் ஒன்றைச் செய்யும்போது பாராட்டமாட்டார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பா, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, டிவி பார்க்கக் கூடாது என்பார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல்
போய்விடுவார். டிவி பார்ப்பதைக் கூடாது என்று சொல்லும்போது படித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பாராட்டும்விதமாகப் பேச வேண்டாமா? "படிக்கிறியா? குட் இன்னும் நல்லாப் படி' என்று சொன்னால் குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சி வந்துவிடும். இன்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள்.
இப்போது பள்ளிகளில் நிறையப் போட்டிகள் வைக்கிறார்கள். இந்தப்
போட்டிகளில் கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுமே வெற்றி பெற்றுவிட முடியாது. தனது குழந்தை போட்டியில் வெற்றி பெறவில்லை
என்பதற்காக வெற்றி பெற்ற குழந்தையுடன் ஒப்பிட்டுத் திட்டக் கூடாது.
அப்படிச் செய்தால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும்.
தன்னம்பிக்கை குலைந்துபோகும்.
அதைவிட எவ்வளவோ பிள்ளைகள் போட்டியில் பங்கேற்கப் பயப்பட்டுக் கொண்டிருக்கும்போது தைரியமாகப் போட்டியில் பங்கெடுத்ததே பெரிய
விஷயம் என்பதாக அவர்களிடம் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் அவர்கள் அடுத்துவரும் போட்டிகளில் உற்சாகமாகப் பங்கெடுப்பார்கள்.
நான் எழுதிய இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்கே அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இன்னும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஏராளமான விஷயங்களை எழுத முடியும். எழுதுவேன்.
இதுதவிர நாங்கள் ஆரம்பித்துள்ள "வே. தங்கப்பாண்டியன் அறக்கட்டளை' வேலைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். பள்ளி, கல்லூரி அளவில் நன்றாகப் படிக்கும் வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது உட்பட பல உதவிகளை இதன்மூலம் செய்து
வருகிறோம்.
என் அக்கா வளர்மதி அமெரிக்காவில் இருக்கிறார். அண்ணன் ரவி ஐஜியாக இருக்கிறார். இன்னோர் அண்ணன் செந்தமிழ்ச் செல்வன் கூட்டுறவுத்துறையில் கூடுதல் பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார்'' என்றார்.
மணிமேகலையின் கணவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
அருமையான கட்டுரை யுவா உங்களின் நிஜ கதை மாதிரியே இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
பெற்றோருக்கு ஆயிரம் தேவைகள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரே தேவைதான் இருக்கிறது. நல்ல பெற்றோர்தாம் அவர்களுடைய ஒரே தேவை.
சிறந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி.யுவா.
சிறந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி.யுவா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: குழந்தைகளை மதிக்க வேண்டும்! -மணிமேகலை
சிநேகிதிக்கும் தேவை போல அப்படியா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
» பிரான்ஸ் மாப்பிள்ளை… பூஞ்சேரி பொண்ணு… மாமல்லபுரத்தில் டும்… டும்… டும்…!
» நடிகர் கார்த்திக்கு திருமணம்...
» இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!
» செல்வராகவனுக்கு ஜூனில் டும் டும் டும்! காதலியை மணக்கிறார்!!
» பிரான்ஸ் மாப்பிள்ளை… பூஞ்சேரி பொண்ணு… மாமல்லபுரத்தில் டும்… டும்… டும்…!
» நடிகர் கார்த்திக்கு திருமணம்...
» இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!
» செல்வராகவனுக்கு ஜூனில் டும் டும் டும்! காதலியை மணக்கிறார்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|