Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
+5
vijaybemech
VIJAY
யமுனாஸ்
சிவா
சாந்தன்
9 posters
Page 1 of 1
தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
உடல் நலம் காப்போம்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி
தினமணி மருத்துவமலர் கூறிய சில
கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக
இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய
வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி,
உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால்
உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை
செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல்
எடை இயல்பான அளவுக்குக் குறையும்,
இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால்
(எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும்,
நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும்.
மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல்
10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக்
கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன்
5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்.
முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு
செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்
படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது
வாகனங்களைச் சிறிது தொலைவிலே
நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை
நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம்
ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய்
வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்
அடையாள அட்டையை எப்போதும் சட்டைப்
பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது
நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்
பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை
நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி,
வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்
கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில்
வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள்
எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும்
கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள்
கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு
என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன்.
நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு
சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.
மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று
துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு
படுக்கப் போகும் முன் அரை டம்ளர்
தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக
வெண்டைக்காய் துண்டங்களை வெளியே
எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக்
குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ
வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே
வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என
திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர்
புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ்
பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில்
வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில்
மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை
தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல்
இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி
இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி
விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின்
பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன்
தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே
செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான்.
190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து
வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல்
இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில்
குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின்
இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது
என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக
ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும்
எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம்.
உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி
ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால்
மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்
திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே
இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த்
தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள
என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது
ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி
வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு
வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி
எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து
கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த
டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத்
தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள
லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி
செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி.
ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட
வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி
தினமணி மருத்துவமலர் கூறிய சில
கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக
இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய
வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி,
உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால்
உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை
செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல்
எடை இயல்பான அளவுக்குக் குறையும்,
இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால்
(எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும்,
நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும்.
மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல்
10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக்
கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன்
5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்.
முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு
செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்
படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது
வாகனங்களைச் சிறிது தொலைவிலே
நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை
நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம்
ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய்
வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்
அடையாள அட்டையை எப்போதும் சட்டைப்
பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது
நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்
பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை
நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி,
வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்
கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில்
வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள்
எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும்
கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள்
கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு
என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன்.
நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு
சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.
மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று
துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு
படுக்கப் போகும் முன் அரை டம்ளர்
தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக
வெண்டைக்காய் துண்டங்களை வெளியே
எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக்
குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ
வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே
வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என
திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர்
புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ்
பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில்
வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில்
மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை
தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல்
இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி
இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி
விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின்
பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன்
தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே
செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான்.
190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து
வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல்
இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில்
குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின்
இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது
என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக
ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும்
எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம்.
உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி
ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால்
மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்
திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே
இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த்
தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள
என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது
ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி
வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு
வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி
எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து
கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த
டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத்
தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள
லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி
செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி.
ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட
வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
மிகவும் எளிதான மருத்துவம் தான்!! தகவலுக்கு நன்றி நிர்மல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
சிவா அண்ணாவுக்கு
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
தகவலுக்கு மிக்க நன்றி
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
god bless you
it is amazig!
my father also a sugar patient
thank you for your information siva
it is amazig!
my father also a sugar patient
thank you for your information siva
vijaybemech- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
இதுவரை அறிந்திராத புதியதோர் தகவல், பதிவிற்கு நன்றி நிர்மல்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
அருமையான தகவல்.....
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Similar topics
» இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov.
» இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்
» இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம்.
» உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
» இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்
» இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம்.
» உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|