Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 18 of 23
Page 18 of 23 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Tue Feb 28, 2023 2:07 pm; edited 2 times in total
Re: கனவுகளின் பலன்கள்
praveenmecg34 wrote:எனக்கு அடிக்கடி தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு வருகிறது.ஆனால் நான் இப்பொழுது படித்து முடித்து வேலையில் உள்ளேன்.
இப்படி கனவு வருவதற்கு என்ன பலன்?????
கவலைப்படாதிங்க, தூங்கும் முன் நமக்கு எந்த கனவும் வராமல் நல்ல படி தூங்கனும் என்று மனமார பலதடவை சொல்லிவிட்டு படுங்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவரானால் , கை கால் அலம்பிவிட்டு நெத்திக்கு இட்டுக்கொண்டு , தெரிந்த ஸ்லோகத்தை சொல்லிவிட்டு படுங்கள்
சரியா?
அப்புறம், அறிமுகப்பகுதி இல் போய் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kanavil yen kuzhanthai
இந்த கனவு எனக்கு அதிகாலையில் வந்தது. எனது 1 1/2 வயது மகன் yenai நோக்கி வரும் பொழுது vealai வேஷ்டி அணிந்து oru கையில் ஊதுபக்தி yeaduthu கொண்டு வருகிறான் நெற்றியில் பெருமாள் நாமம் irukirathu . எனது பெற்றோர் அவன் உடன் வருகிறார்கள். etharku என்ன பலன் இதனால் என் மகனிற்கு எஅதும் கெடுதல் allathu ஏன் குடும்பத்திற்கு eathum கிடுதல் வருமா? thaerinthavargal பதில் அலிஉங்கல் ப்ளீஸ்
ரேவதி.
ரேவதி.
revathiraja- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
Kanavu palangal
என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது
Anamika- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
Re: கனவுகளின் பலன்கள்
Anamika wrote:என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? பத்திரிகையில் கல்யாண தேதி முன்னதாகவே குறிப்பிட பட்டு உள்ளது உண்மையான தேதியில் இருந்து , விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது இதில் கெடுதல் இல்லையே
சிவா அண்ணா எங்க இருக்கீங்க
Anamika- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
Re: கனவுகளின் பலன்கள்
Anamika wrote:என் தோழியின் கல்யாண பத்திரிகை பார்ப்பது போல் கனவு வந்தால்? பத்திரிகையில் கல்யாண தேதி முன்னதாகவே குறிப்பிட பட்டு உள்ளது உண்மையான தேதியில் இருந்து , விரைவில் அவருக்கு திருமணமாக உள்ளது இப்போது இக்கனவு எனக்கு அவரை பற்றி வந்து உள்ளது இதில் கெடுதல் இல்லையே
நிச்சயம் இந்த கனவில் கெடுதல் ஏதுமில்லை! உங்கள் தோழியின் திருமணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே தூங்கியிருந்தால் இவ்வாறான கனவுகள் வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளின் பலன்கள்
revathiraja wrote:இந்த கனவு எனக்கு அதிகாலையில் வந்தது. எனது 1 1/2 வயது மகன் yenai நோக்கி வரும் பொழுது vealai வேஷ்டி அணிந்து oru கையில் ஊதுபக்தி yeaduthu கொண்டு வருகிறான் நெற்றியில் பெருமாள் நாமம் irukirathu . எனது பெற்றோர் அவன் உடன் வருகிறார்கள். etharku என்ன பலன் இதனால் என் மகனிற்கு எஅதும் கெடுதல் allathu ஏன் குடும்பத்திற்கு eathum கிடுதல் வருமா? thaerinthavargal பதில் அலிஉங்கல் ப்ளீஸ்
ரேவதி.
பிளஸ் யாராவது எது பற்றி திரிந்தால் ரெப்ல்ய் பண்ணுங்கள்
revathiraja- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
Re: கனவுகளின் பலன்கள்
இதை மேலே கொண்டுவருவதர்க்காக இதில் ஒரு பதிவு போடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
களைப்பாகவும் – பயணம் – தண்ணீர் இவைகள் கனவில் கண்டால் என்ன பலன்
தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்
ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.
அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும்.
தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள்.
பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்
வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும்.
இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும்.
ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம். சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.
மற்ற பலன்கள் இங்கே ...
-நிரஞ்சனா
நன்றி பக்தி பிளனேட்.காம்
ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.
அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும்.
தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள்.
பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்
வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும்.
இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.
விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும்.
ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம். சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.
மற்ற பலன்கள் இங்கே ...
-நிரஞ்சனா
நன்றி பக்தி பிளனேட்.காம்
கனவு பலன்கள்
கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர்.
கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு செல்கிறோம். அந்த நாட்டின் அரசர் என் கணவரை கள்வன் என்று கூறி கொன்று விடுகிறார்.” என்று, தான் கண்ட கனவை பற்றி தோழியிடம் கூறினாள் கண்ணகி.
அதேபோல அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை. அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது. இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா?” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது? அந்த ஆயுதத்தின் பெயர்என்ன? என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான். இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார்.
இப்படி சிலருக்கு முன்கூட்டியே வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கனவில் தோன்றிவிடும். பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.
- நிரஞ்சனா
நன்றி : பக்தி பிளனேட்.காம்
Last edited by ராஜு சரவணன் on Fri Jul 05, 2013 9:14 pm; edited 2 times in total
Page 18 of 23 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23
Similar topics
» கனவுகளின் பலன்கள்
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
Page 18 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|