புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
467 Posts - 55%
heezulia
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
27 Posts - 3%
prajai
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
4 Posts - 0%
mini
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
3 Posts - 0%
vista
ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_m10ஒரு சாமியார் உருவாகிறார்.......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சாமியார் உருவாகிறார்..........


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 6:37 pm

(வீரபாண்டியன் ஒரு பிரம்மச்சாரி. தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் அவன் லாட்ஜ் வாடகை கட்டுப்படியாகாமல்.. தனக்குத் தெரிந்த தரகர் ஒருவரிடம் சிறிய வீடொன்று பார்க்கச் சொல்லியிருக்க... அது பற்றி விசாரிக்க அந்த தரகர் வீட்டிற்குச் செல்கிறான்)

காட்சி - 1


இடம்: தரகர் வீடு

பாத்திரங்கள்: அண்டா, குண்டா.. ச்சே.. தரகர் தங்கமணி, வீரபாண்டி.

தரகர்: அடடே! வாங்க வீரபாண்டித்தம்பி!



வீ.பா: நான் வீரபாண்டி தம்பி இல்ல. வீரபாண்டியே நாந்தான்.

தரகர்: கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா! சும்மா பாசமா தம்பி'ன்னு கூப்பீட்டேன்..

வீ.பா: வேணாம். கூப்பிடாதீங்க. சொத்துல பங்கு கேட்டுடுவேன்.. (சுற்றிலும் பார்த்து) எங்க உங்க சம்சாரத்தைக் காணோம்?

தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!

வீ.பா: யோவ்.. வீட்ல இல்லியான்னு கேட்டேன். சரி.. வீடு பாக்கச் சொன்னேனே.. என்னாச்சு?

தரகர்: வீடு இருக்கு தம்பி. சின்னதா ஒரு ரூம். பாத்ரூம்.. டாய்லெட்.. அவ்ளோதான். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து நேராப் போய் ரைட்ல கட் பண்ணினா வீடு வந்துடும்..

வீ.பா: வீடு வந்துடுமா? என்னய்யா.. நடமாடும் வீடா? வாடகை எவ்ளோ? வீட்டுக்க்காரர் யாரு?

தரகர்: வாடகை ரொம்பக் கம்மிதான். ஹவுஸ் ஓனர் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. ரொம்ப நல்லவரு. கறை படியாத கைக்காரர்!

வீ.பா: ஏன்.. இங்க் பேனாவே யூஸ் பண்ண மாட்டாரா?

தரகர்: லஞ்சமே வாங்க மாட்டாருன்னேன்பா..

வீ.பா: இப்ப யாருமே லஞ்சம் வாங்கறதில்ல.. ஒன்லி `அன்பளிப்பு'தான்!

தரகர்: எல்லாத்தையும் விட தண்ணி கஷ்டமே இல்ல..

வீ.பா: பககத்துலயே டாஸ்மாக்கா? சரி.. எப்ப அங்க போலாம்?

தரகர்: கிளம்புங்க.. இப்பவே போலாம்.


காட்சி - 2



இடம்: புதிய வீடு

பாத்திரங்கள்: வீட்டுக்காரர், அவரது மகள், வீரபாண்டி & தரகர்



(தரகர் கதவைத் தட்டுகிறார்)

தரகர்: என்னங்க.. சார்.. ஹலோ..

வீ.பா: போதும்யா.. விட்டா மைக் டெஸ்டிங் மாதிரி பேசிட்டே போற..? பொறு.. வருவாங்க..
(கதவு திறந்து ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் நிற்கிறாள் ஒரு இளம்பெண்)

பெண்: யாருங்க வேணும்?

வீ.பா: வீட்டுக்காரர் இல்லையா?

(அவள் வெட்கமாய் நெளிகிறாள்)

வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..

பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..

வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?

தரகர்: (இடைமறித்து) உங்க வீட்டுக்காரர் இல்லீங்க.. ஹவுஸ் ஓனரைக் கேட்டோம்..

பெண்: ஓ! அப்பாவா?

வீ.பா: அது எனக்கெப்படிங்க தெரியும்?

தரகர்: (வீரபாண்டியிடம்) அடி வாங்காம போகமாட்ட போல..

பெண்: உள்ள வந்து உட்காருங்க.. (சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, இருவரும் சோபாவில் அமர்கிறார்கள்)

வீ.பா: யாருய்யா இந்தப் பொண்ணு? மாதாஜி திவ்யாதேவி மாதிரி?

தரகர்: ஐயோ.. அந்த மாதிரி இல்லிங்க.. கொஞ்சம் பக்தி ஜாஸ்தி.

(வீட்டு ஓனர் வருகிறார்)

ஓனர்: வீட்டைப் பாத்தீங்களா?

வீ.பா: பாத்துட்டோங்க.. அதுசரி.. ஏன் வீட்டு வெளி சுவத்துல பூரா காவி அடிச்சிருக்கு?

ஓனர்: அதுவா? மொதல்ல அங்க ஒரு சாமியார் இருந்தார்..

வீ.பா: சாமியாரா? அப்ப இந்நேரம் வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருக்குமே?

ஓனர்: அந்த மாதிரி இல்ல. ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின ஒரிஜினல் சாமியார்.. சரி.. எப்ப பால் காய்ச்சுவீங்க?

வீ.பா: தினமும் காலைல பால்காரன் வந்ததும் பால் காய்ச்சுவோம்

ஓனர்: யோவ்.. வீட்டுக்கு எப்ப குடி வர்ற-ன்னு கேட்டேன்..

வீ.பா: நாளைக்கே வந்துட்டா போச்சு!


காட்சி: 3


(புதிய வீட்டிற்கு குடி போன ஒரு வாரத்தில் வீரபாண்டியின் வேலை போய்விடுகிறது. வெறுத்துப் போய் அவன் அமர்ந்திருக்க கமிஷன் பணத்திற்காக தரகர் வருகிறார்)

தரகர்: தம்பி.. உங்க கம்பெனிக்கு போயிருந்தேன்.. வேலையை விட்டு நிறுத்தீட்டாங்களாமே.. ஏன் தம்பி?

வீ.பா: ஆங்? எல்லாரும் தூங்கும்போது, நான் மட்டும் வேலை செஞ்சேன்னுதான். நீ வேற ஏன்யா! டெம்பரவரி தானே.. வேணாம்னதும் வீட்டுக்குப் போடான்னுடாங்க..

தரகர்: சாப்பாடு, வாடகையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?

வீ.பா: அதான் யோசிக்கறேன். இருக்கறத வெச்சு ஒருமாசம் ஓட்டிடுவேன்.. (இந்த நேரத்தில் வெளியே ஒரு கிராமவசியின் குரல் கேட்கிறது)

கி.வாசி: சாமி.. சாமி..

வீ.பா: (வெளியே வந்து) யாரு வேணும்?

கி.வாசி: சாமி.. நீங்கதான் இந்த வீட்ல இருக்கற சாமியாரா? சாமி.. என் பசுமாடு ஒண்ணு காணல.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க சாமீ..

வீ.பா: யோவ்.. என்னய்யா இது என்னை பேச விடாம.. நானே வேலை தேடீட்டு இருக்கேன்.. இதுல இவன் மாட்டை வேற தேடணுமாம்.

கி.வாசி: சாமி.. எப்படியாச்சும் மனசு வைங்க சாமி..

வீ.பா: (எரிச்சலோடு) போய்யா மொதல்ல.. (என்று கிராமவாசியைத் துரத்த அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான்) போய்யான்னா.. (என்று கத்தியபடி கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்து எறிகிறான் வீரபாண்டி) இனிமே இந்தப் பக்கம் வந்தே... அவ்வளவுதான்..

தரகர்: தம்பி.. நம்ம கமிஷன்...

வீ.பா: நீ வேற கமிஷன், கமிஷன்னுகிட்டு.. என் ஃப்ரண்டு ஒருத்தன் எனக்குப் பணம் தரணும். ரெண்டு பேருமா போலாம். அதை வாங்கி உனக்குத் தர்றேன்
(மறுபடி வெளியே கிராமவாசியின் குரல் கேட்கிறது)

கி.வாசி: சாமீ.. சாமீ..

வீ.பா: இன்னும் போகலியா இவன்.. இவனை... (கோபமாய் வெளியே வர கிராமவாசி பசுமாட்டுடன் நிற்கிறார்)

கி.வாசி: சாமீ... எங்க கிராமத்துல சொன்னாங்க.. சாமியார் எதையுமே குறிப்பாத்தான் சொல்லுவாருன்னு. நீங்க கல்லைத்தூக்கி எறிஞ்சீங்களா.. சரீன்னு அந்த திசைலயே போனனா, என் பசுமாடு கெடச்சுடுச்சு! என் கூட வந்த பயலுக எல்லாம் உங்களைப் பாத்ததே இல்லியாமே.. பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கானுவ.. உங்களுக்கு பூஜை போடணுமில்லா.. இருங்க கூட்டியாரேன்.. (சொல்லிவிட்டு ஓடுகிறான். வீரபாண்டி தலையிலடித்தபடி உள்ளே போகிறான்)

தரகர்: தம்பி.. போலாமா உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு?

வீ.பா: இருய்யா.. குளிச்சுட்டு வரேன்


காட்சி: 4


(குளித்துவிட்டு வந்த வீரபாண்டி தலைசீவி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் வைக்கப் போக, வெளியே ஏதோ குரல் கேட்கிறது. விபூதிக் கையுடன் வெளியே வருகிறான். அங்கே கிராமவாசியும், அவன் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறு கூட்டமாய் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன் தரகர் அமர்ந்திருக்கிறார்)

தரகர்: நம்ம வீரபாண்டிச் சாமி ரொம்ப அடக்கமானவரு.. தான் கடவுளோட மறு அவதாரம்கிற கர்வமே இல்ல..

வீ.பா; (கோபமாய்) கர்வப்பட இதென்ன கலெக்டர் வேலையா? போங்கய்யா.. நான் சாமியாருமில்ல.. ஒண்ணுமில்ல...

கூட்டத்தில் ஒருவர்: என்னா அடக்கம்.. என்னா அடக்கம்..

மற்றொருவர்: `நான்' கிறது ஒண்ணுமில்ல ன்னு எவ்ளோ எளிமையா சொல்றாரு!!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..

கூட்டம்: ஜே!

வீ.பா: சும்மா கத்தாதீங்க. நான் சாமியாரே (அதற்குள் தரகர் அவனது வாயைப் பொத்தி, காதில் கிசுகிசுப்பாய்..)

தரகர்: தம்பி.. சும்மா இருங்க.. இதை விட்டா சூப்பர் பிஸினசே இல்ல! (கூட்டத்திடம்) நீங்க சொல்லுங்க..

கூட்டம்: வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!

(இந்த நேரத்தில் வீட்டு ஓனரின் மகள் கையில் ருத்திராட்ச மாலையுடன்
வர.. கூட்டம் அவளப் பார்த்து..)

“சிஷ்யாதேவிக்கு ஜே! ஜே!”

வீரபாண்டி வெறுப்புற்றவனாய் `என்னமோ பண்ணுங்க' என்று கையை உதற கையிலிருந்த விபூதி சிதறுகிறது.. அதைப் பார்த்த தரகரும், வீட்டு ஓனரின் மகளும் கூட்டத்தினரோடு சேர்ந்து கோஷமிடுகிறார்கள்..

“வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!”

(வீரபாண்டி திகைத்து நிற்கிறான்)
ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 838572





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 1:07 pm

கதை நல்லா நகைச்சுவையாக இருக்கிறது....
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 1:13 pm

ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196 ஒரு சாமியார் உருவாகிறார்.......... 677196



ஒரு சாமியார் உருவாகிறார்.......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக