புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பூக்குழி - ஒரு பார்வை Poll_c10பூக்குழி - ஒரு பார்வை Poll_m10பூக்குழி - ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்குழி - ஒரு பார்வை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 1:39 am

மனித இனம் இன்று உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆளும் திறன் படைத்ததாக வளர்ந்து வருகிறது. இத்தகைய மனித இனத்தையும் ஆளும் திறன் தெய்வங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணம் வினோதமாக இருந்தாலும் வலுவாக இருப்பதால்தான் 'அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப்பற்றி கொண்டிருக்கும் கருத்துக்கள்' என்று முழங்கிய பெரியாரின் கருத்துக்கள் காலப்போக்கில் கரைந்து போய்விட்டன.

இந்து மதங்களில் தெய்வங்களை பணக்கார தெய்வங்கள், நடுத்தர மக்களின் தெய்வங்கள், மக்களோடு மக்களாக கிராம எல்லைகளில் உள்ள காவல் தெய்வங்கள் என்று பிரிக்கலாம்.

தெய்வ வழிபாட்டில் பூக்குழி இறங்குதல், மொட்டையடித்தல், அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற தங்களை வருத்திக் கொள்ளும் செயல்களும் இடம்பெறுகின்றன.

இவற்றில் பூக்குழி இறங்குதல் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் ராசையா சுவாரஸ்யமான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:

பெரும்பாலும் கிராமங்களில் எல்லை காவல் தெய்வங்களான மாரியம்மன், துரெளபதியம்மன், எக்கலாதேவி அம்மன், கண்ணகி, பத்திரகாளி அம்மன் பொன்ற பெண் தெய்வங்கள் இருக்கும். இக்கோவில்களில்தான் இப்பூக்குழி திருவிழா சங்க காலத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. கண்ணகி, பாண்டிய மன்னனால் வஞ்சிக்கப்பட்ட போது நெருப்பினால் மதுரையை அழித்தாள். துரெளபதி சபையில் வைத்து துகில் உரிக்கப்பட்ட போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தன் கூந்தலை முடிக்காமல் இருந்தாள். சீதையை ராமன் சந்தேகிக்கப்பட்டு நெருப்பில் குளித்து வரும்படி ஆணையிட்டான். அனுமான் சீதையைக் காக்க இலங்கையைத் தீயிட்டு அழித்தான். இப்படி பெண் குலத்திற்கு ஏற்பட்ட கொடுமைகளைப் போக்க தீ முக்கிய பங்கு வகித்தது. அந்த பெண் இனத்தைப் போற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இப்பூக்குழி திருவிழா நடத்தப்படுகிறது என்கிறது வரலாறு.


பஞ்சபூதங்களில் ஒன்றுதான் தீ. இத்தீயினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பல திருவிழாக்கள் கொண்டாடி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இப்பூக்குழி திருவிழா ஆதிகாலத்தில் நெருப்புக்குளி விழா என்று இருந்து நாளடைவில் பூக்குழி என்றானது. அதாவது நெருப்பை அள்ளி உடல் முழுவதும் போட்டுக் கொண்டதை நெருப்புக்குழி விழா என்றும் அதன் பின் வழக்கம் மாறி நெருப்பை பூவாக நினைத்து நடந்து செல்வதால் பூக்குழி விழா என்று பெயர் வந்தது.

இக்காலத்திலும் பூக்குழி இறங்குவது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் பெண் இனத்திற்கு பெண் இனம் பெருமைதேடித் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கொண்டாடப் படுவதுதான் இப்பூக்குழி விழாக்கள். யாரையும் துன்புறுத்தாமல் பெண் தெய்வங்களை மனதில் நினைத்து 10 நாட்கள் விரதம் இருந்து 2 அடி ஆழம் உள்ள நெருப்பில் நடப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. இவ்விழா கட்டுப்பாடான வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒன்று எனலாம்.


இத்தகைய பூக்குழி விழாக்களுக்கு பெரியார் காலத்தில் இருந்தே பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. கடவுளை நம்பி தீ மிதிப்பது தவறு என்று சொல்லி கடவுளே இல்லை, அனைவரும் சமம் என்று சொல்லி மது அருந்தி திராவிட கழகம் சார்பில் பூக்குழி இறங்கும் சம்பவங்களை இன்றும் காணலாம்.

'கோவில்களில் பூக்குழி இறங்கும் போது நெருப்புத் துண்டுகளை சரிசமமாக மேடு பள்ளம் இல்லாமல் இருக்கச் செய்து பின்புதான் பூக்குழி இறங்குகின்றனர். அப்பொது நெருப்பில் இருக்கும் சாம்பல் அகற்றப்பட்டு விடுகிறது. அதனால் நெருப்பு சுடுவதில்லை. நெருப்பில் உள்ள சாம்பல் காலில் பட்டால்தான் கால் சுடும். மரங்களை நெருப்பாக்கி அதனை சமப்படுத்தாமல் மக்களை பூ இறங்கச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்கிறார் பகுத்தறிவாளர் மணியன். இவர் 'சாமியாவது, மண்ணாங்கட்டியாவது' என சொல்லி பலமுறை பூ இறங்கியிருக்கிறார். மனதை ஒருமுகப்படுத்திய கட்டுப்பாட்டுடன் நெருப்பில் இங்கும்பொது நெருப்பு என்று எண்ணாமல் மலர் என்று எண்ணுவதால் பக்தர்களுக்கு கால்கள் சுடுவதில்லை என்பது இவரது கருத்து. இதுபோன்ற சம்பிரதாயங்களுக்கு ஒழிக்கப்பட்வேண்டும் என சீறுகிறார் இப்பகுத்தறிவாதி.

சமுகவியல் பேராசியரான கதிரேசனின் பார்வை வேறு விதமாக உள்ளது. 'இன்று இந்து மத தெய்வங்கள் என்றாலே திருப்பதி, பழனி, சபரிமலை, மேல்மருவத்தூர்தான் என்ற ஒரு வடிவத்தை கொண்டுவர ஒரு முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியால்தான் மத நல்லிணக்கத்திற்கு பெரும் கேடுகள் உருவாகி வருகிறது. மேற்சொன்ன பல கோவில்களில் கோவில் வாசல்படி முதல் சிறப்பு பூஜை நடைபெறும் இடம் வரை எல்லாமே பணம்தான் பிரதானப்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடுத்தர கிராம எல்லை காவல் தெய்வங்களால்தான் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.

வருடத்திற்கு ஒருமுறை பத்துநாட்கள் இப்பூக்குழி விழாவை சிறப்பாக கொண்டாடி விட்டு தங்களதுவேலைகளைப் பார்க்க மக்கள் சென்றுவிடுகின்றனர். பின்பு ஓராண்டு வரை காத்திருக்கும் சுகத்தினை அனுபவிக்கின்றனர். அதனால் பூக்குழி போன்ற பிற தெய்வ வழிபாடுகளை கேவலமாக பார்ப்பதை விட அதனைப் பற்றி சிந்திக்காமல் சென்றுவிடுவது பகுத்தறிவாளர்களுக்கு ஓர் அறிவுரை' என்கிறார் சமுகவியல் பேராசியர் கதிரேசன்.

avatar
Krishnamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 14/02/2009
http://www.kavithamil.blogspot.com

PostKrishnamoorthy Fri Apr 24, 2009 10:46 pm

சனாதன தர்மம்.. அர்த்தமுள்ளது. ஆழமானது. பகுத்தறிவுக்கு கூட சில சமயம் எட்டாத உண்மையெல்லாம் உள்ளே பொதிந்திருப்பது. அத்துனை பெருமை வாய்ந்த தர்மத்தை.. இப்படி சிலர் கொச்சைப்படுத்துவது அவர்களின் அறியாமையே. இன்னமும் சிறுதெய்வ வழிபாடுகள் தேவையா? கண்ட கண்ட இடங்களில் இப்படி சிறு தெய்வங்களின் கோயில்களை எழுப்பி.. அதனால் பெரிய பெரிய கலவரங்கள் எல்லாம் தோன்றி மறைந்தாலும்.. நம்மிடையே மட்டும் எந்த மாற்றமும் இருக்காது! இன்னமும், என் எதிர்வீட்டு நண்பர் (Apartment) வீட்டின் முன்புறம் மதுரைவீரன் மேடை வைத்து, தினமும் Guinness Stout வாங்கி வைத்து வணங்கி வருகிறார்.. இதை மற்றவர் பார்க்கும்போது, எனக்கும் என்னவோ போல் இருக்கிறது. இதை சொன்னால் புரிந்து கொள்வார்களா?? யார் சொல்வது??!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக