ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 9:15 pm

» கருத்துப்படம் 03/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:57 pm

» வேல் மாறல்.
by Renukakumar Yesterday at 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Sep 02, 2024 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Sep 02, 2024 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 6:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 02, 2024 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Sep 01, 2024 8:52 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.

Go down

 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும். Empty 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.

Post by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும். AkGkRiK
--



தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல்,
விமானம் என, நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம்
தூத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து
வரும் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது.

'பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார்' உற்பத்தி ஆலை,
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என, அடுத்தடுத்து புதிய
திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, தூத்துக்குடி
விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி -- சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும்,
தூத்துக்குடி -- பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும்
விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதல் விமானங்களை கையாளும் வகையில்,
227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி
துவங்கியுள்ளது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய
முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு
கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு
துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

தூத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான
நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு
இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது.

புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும்,
21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும்,
இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான
வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள்,
இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக
வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை
கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன்
உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக
அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி
விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 76 சதவீத பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு,
அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.

மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து
வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும்
வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள்
முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் கூறியதாவது:

விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும், சென்னை,
பெங்களூருக்கு மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம்
உள்ளிட்ட, நாட்டின் பெரிய நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்படும்.
தற்போது, 78 பயணியர் வரை செல்லும் ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் தான்
இயக்கப்படுகின்றன.

இனி, 250 பயணியருடன் செல்லும், 'ஏ321' ரக ஏர்பஸ் விமானங்களும்
இயக்கப்படும். சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,611 மீட்டர்.
அதற்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய
இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக தூத்துக்குடி
மாறுகிறது.

இதன் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,
விருதுநகர் மாவட்ட பயணியர் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83879
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்
» சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..!
» இந்தியாவில் உல்லாசபிரயாணிகள் வந்து செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
» மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum