புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

"மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"

(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)

(ஏன் நமக்கும்தான்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி. (ஒரு பகுதி).


கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக வந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம் தெரியாது. ஏன்னா, அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.

அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப் பார்த்துட்டுப் போகலாமேன்னுதான். வந்தவர் வரிசையில் நின்னார்.தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.

எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது. நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா அவரைப் பார்த்து, " என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட 'என்னடா இது, நாம எதுவுமே சொல்லலை.ஆனா எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா சொல்றாரே!'ன்னு ஆச்சரியம்.

"பெரியவா! குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து. .சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு .பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார்.?. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.

" ஒரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு பல்வலி இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே, பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா.மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா. இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க போயிடுவா .அதுக்காக சாதரண காய்ச்சல்னோ, தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம் அலட்சியப்படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.

சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா, பிறவிப்பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.

அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும் பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா பேசறதும் தப்பு இல்லையா?"

பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு அடையாளமா அந்த ஆசாமியோட கண்ணுல இருந்து தாரைதாரையா நீர் வடிஞ்சுது. அதுவே அவரோட தவறானஎண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம்.

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-இது பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான்சொல்லணும்

=AZUQ36CKbfkxSL3doloRkQn2HXGBv6_rQ98fkBGfArCLxN4mlT0PHNybegAVZff68vnW1cNK8xxdw5_ff5I7K1wmY_l73bvpDs44yuPQqC_NYkcR3gVijdHDMVGhJz-8o8D8lFWmnggH45Z5kqvHlxHcFBdxNT9baWZ12pUutlFrxL65ravcEnt8E-BNAedul3t0CPsqOvf0zsos0t6C7R5YVKUddM2egGKTiR9pU-4uEw&__tn__=EH-R]
மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா  448019050_8134447896600304_8746543318650419063_n.jpg?stp=dst-jpg_s640x640&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U62TVDt1kgoQ7kNvgHQrYxz&_nc_ht=scontent.fmaa2-2
=AZUQ36CKbfkxSL3doloRkQn2HXGBv6_rQ98fkBGfArCLxN4mlT0PHNybegAVZff68vnW1cNK8xxdw5_ff5I7K1wmY_l73bvpDs44yuPQqC_NYkcR3gVijdHDMVGhJz-8o8D8lFWmnggH45Z5kqvHlxHcFBdxNT9baWZ12pUutlFrxL65ravcEnt8E-BNAedul3t0CPsqOvf0zsos0t6C7R5YVKUddM2egGKTiR9pU-4uEw&__tn__=EH-R]

=AZUQ36CKbfkxSL3doloRkQn2HXGBv6_rQ98fkBGfArCLxN4mlT0PHNybegAVZff68vnW1cNK8xxdw5_ff5I7K1wmY_l73bvpDs44yuPQqC_NYkcR3gVijdHDMVGhJz-8o8D8lFWmnggH45Z5kqvHlxHcFBdxNT9baWZ12pUutlFrxL65ravcEnt8E-BNAedul3t0CPsqOvf0zsos0t6C7R5YVKUddM2egGKTiR9pU-4uEw&__tn__=EH-R]

=AZUQ36CKbfkxSL3doloRkQn2HXGBv6_rQ98fkBGfArCLxN4mlT0PHNybegAVZff68vnW1cNK8xxdw5_ff5I7K1wmY_l73bvpDs44yuPQqC_NYkcR3gVijdHDMVGhJz-8o8D8lFWmnggH45Z5kqvHlxHcFBdxNT9baWZ12pUutlFrxL65ravcEnt8E-BNAedul3t0CPsqOvf0zsos0t6C7R5YVKUddM2egGKTiR9pU-4uEw&__tn__=EH-R]


மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா  Svg%3E


[size=1]எல்லா உணர்ச்சிகளும்:

110110

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:[/size]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக