ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு

Go down

ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Empty ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு

Post by தண்டாயுதபாணி Wed Jan 27, 2010 6:23 pm



மனிதன் மனிதனாக வாழ்வதற்காக அவனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் அமைக்கப்பெற்ற ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avun
ஒழுக்க சீலங்களே “மதங்களும,; மத வழிபாட்டுத் தலங்களும்” இதை எந்த ஒரு
புத்தி ஐPவிகளும் மறுப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மதங்களிலே மிகவும் தொன்மை
வாய்ந்ததாகவும், கீழைத்தேசத்தில் வாழ்கின்ற அநேகமான மக்களால் வழிபடப்பட்டு
வருகின்றதுமாகிய இந்துமதத்தின், மதவழிபாட்டுத்தலங்களாக இருக்கின்ற
ஆலயங்கள் எவ்வளவு தூரம் மக்களை ஆலயவழிபாட்டுக்காக...



இழுத்துக்கொள்கின்றது என்பதை உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் இக்கட்டுரையை ஆராய்ந்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.


“மனம் ஒரு குரங்கு” எனும் அடைமொழி சுட்டுவது, குரங்கு எவ்விதம் ஒரு இடத்தில்
தரித்து இருக்காது, ஒரு பொருளை மட்டும் விரும்பி உண்ணாது மரத்துக்கு மரம்,
இடத்துக்கு இடம் தாவித்திரியுமோ அதேபோல் மனித மனங்களும் ஒரு நிலைப்பட்டு
இருக்காமல், அது வாழ்க்கை என்ற வட்டத்தில் இன்ப துன்பங்களுக்கு வசப்பட்டு கோபம், விரக்தி, சந்தோசம்,
எரிச்சல், பொறாமை, அன்பு, பாசம், கவலை போன்ற எல்லாவற்றையும் தனக்குள்ளே
வைத்துக் கொண்டு குரங்கைப் போல தாவித்திரிகின்றன. எனவே, இவற்றை ஒரு
நிலைப்படுத்தி மனதுக்கு அமைதியைக் கொடுப்பதில் இந்த ஆலய வழிபாடு ஒரு முக்கிய மனவமைதிப் பொருளாக இருக்கின்றது என்பதே உளவியலாளர்களின் கருத்து.

சாம்பிராணிப் புகையில் ஒரு வகையான மாங்கல்ய குணம் உள்ளது. அதாவது
மனங்களை பரவசப்படுத்துகின்ற உணர்வு. ஆலயங்களிலே கட்டப்பட்டிருக்கின்ற
மங்கலான மின்குமிழ்
வெளிச்சமும் இந்த சாம்பிராணிப் புகையும், மற்றும் தூப தீபங்களின்
தன்மையும் எமது ஐம்புலன்க~டாக சென்று எமது மனதைப் பரவசப்படுத்தும் அல்லது
இறைவன்பால் சிந்திக்க வைக்கும் இயல்புடையது. இந்த நேரத்தில்த் தான்
எல்லோர் உள்ளங்களிலும்
புத்துணர்வு ஏற்பட்டு, இறைவனைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. ஆண்டவன்
அருளால் எமது மனதுக்குச் சந்தோசம், நிம்மதி கிடைத்துவிட்டது என்று
கூறுகின்றோம். இங்கு நீங்களே ஒன்றை உணர்வீர்கள் பூசை இல்லாத நேரங்களில் எமக்கு இவ்வாறான ஒரு மனநிலை ஏற்படுவது இல்லை.

குளிர்மை, வெண்மை என்றாலே மக்களின் மனங்கள் நிறைந்துவிடும். அத்தோடு, மரக்கறிச் சாப்பாடு மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவும், ஆலயங்களில் பூஜை முடிந்ததும் அங்கு பிரசாதங்களாக ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avu2
கொடுக்கப்படுகின்ற
சந்தனம், குங்குமம், மஞ்சள் என்பனவற்றை நாங்கள் நெற்றியிலே பூசுகிறோம்.
இங்கு ஒர் உண்மை இருக்கின்றது. என்னவெனில், மனிதனின் நரம்பு
மண்டலங்கள் எல்லாம் நெற்றியிலே குவிவதனால் நெற்றியில் சந்தனத்தைப்
பூசுகின்ற போது அவ்விடம் குளிர்வடைய ஏனைய உடம்பின் எல்லாப் பகுதிகளும்
குளிர்வடைகின்றது. அப்போது, எம் உள்ளத்தில் மனிதம் மறைக்கப்பட்டு, தெய்வீகம் குடிகொள்கின்றது.

ஆண்டவன் மீது கொண்டுள்ள அளவு கடந்த நம்பிக்கை, பிறவிப் பேறான சரீரத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த பற்று
எம்மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கின்றது. தமது எண்ணங்கள், நோக்கங்கள்,
வேண்டுதல்கள், குறிக்கோள்கள், போன்றவற்றை அடைவதற்காக இறைவனிடம்
கோரிக்கைகளை வைத்து, தமது உடலை வருத்தி நேர்த்திக்கடன் செய்கின்றார்கள்.
குறிப்பாக விரதம் இருத்தல், தீ மிதித்தல், கற்பூரச் சட்டி
ஏந்துதல், அலகு குத்தி காவடியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற
நேர்த்திகளைச் செய்து, உடலை வருத்தி ஆண்டவனிடம் மன்றாடினால் தமது
வேதனைகளைக் கண்ணுற்றாவது இறைவன் நிச்சயம் அருள் புரிவான், நிச்சயம் அருள் கிடைக்கும் என்கின்ற மன எண்ணம் அடியவர்களின் நனவிலி மனங்களிலே படிந்திருக்கின்றது.

இறைவனின் உறைவிடமான ஆலயம் சென்று, இறைவனின் திருவடிகளைத் தினமும் மனதார துதிப்பதன் ஊடாக எமக்கு தனு, கரன, புவன, போகங்களும் வந்து சேரும் என்கின்றனர் சமயப்
பெரியார்கள். இந்துக்களும் இதனையே நம்புகின்றனர். இதனையே
ஒளவைப்பிராட்டியார் கூறும் போது “ஓங்கார மூர்த்தியாகவும், பேரறிவே
உருவாகவும் விளங்குகின்ற யானைமுகக் கடவுளாம் விநாயகப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை திரி கரணத்துடன் தினமும் வனங்கித் துதிப்போர்க்கு,

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்”

என்று உறுதி செய்கின்றார். நாம் தொடர்ந்து ஆலயம் செல்கின்ற போது
ஆலயச் சூழல், ஆலய அமைப்பு, விக்கிரகங்களின் தோற்றம், ஆலயத்தில் இருந்து
வரும் வாசைன (பூக்கள், பூமாலைகள்,
திருநீறு, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, பந்நீர்) போன்றவற்றின்
ஊடாகவும், ஆலயத்தில் தினமும் நடாத்தப்படும் ஆன்மீகச் சொற்பொழிவுகள்,
பிரசங்கங்கள் ஊடாகவும் எமது மனம் தமக்கு ஓர் “ஆன்மீக பலன்” கிடைத்து
விட்டதாக உணர்கின்றது. இவ்வாறான ஆன்ம பலத்திலிருந்து அபரீதமான சக்தி உருவாகின்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

மக்களாகிய எமக்கு ஏற்படுகின்ற உடலியற் காயங்களையும், உளவியற் காயங்களையும் இறைவனின் சந்நிதானம் சென்று, இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்தால்த் தான் மனம் நிம்மதியடையும், ஏதோ ஒரு வகையான திருப்தி கிடைக்கும். இறைவன் நிச்சயம் எமது மண்றாட்டங்களைத் தீர்த்து வைப்பான் என்கின்ற மன நிலையே எம்மை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கின்றது என்றால் மிகையாகாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தியானம் என்கின்ற யோகநெறி பற்றி நோக்குவது பொருத்தப்பாடுடையது. தியானம்
இருப்பதன் மூலம் மன இறுக்கம், மனக் கஸ்ரம், மனப் பாரம் , மனச் சஞ்சலம்,
என்பன தூக்கி வீசப்பட்டு மக்கள் மனங்களின் அச்ச நிலையைப் போக்கி,
தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு நினைவாற்றலையும் வளர்த்துச் செல்கின்றது. நாம்
வாழ்க்கையில் எதிலும் திருப்தி
கொள்ளாது இருப்பவர்கள். ஆனால், தொடர் தியானத்தின் மூலம் புதுப்பொலிவும்,
புத்தூக்கமும் ஏற்படுவதோடு ஆன்ம திருப்தியும் மனதளவிலாவது கிட்டும் என்பதை
மனதில் நிலைநாட்டி வாழ்கின்ற மக்கள் தமது தியானத்துக்கு உகந்த அமைதியான இடமாக ஆலயங்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களில் சிலர் இறைவனின் அருளால்த் தான் தமக்கு மனநிம்மதி ஏற்படுகின்றது என்று
எணணுகின்ற போதும், சிலர் அமைதியான சூழல், அதனால்த் தான் தாம் ஆலயம்
நாடிவருகின்றோம் என்றும் கருதுகின்றனர். இங்கு ஒரு விடயத்தை நாங்கள் நோக்க
வேண்டும். தியானம் செய்வதற்கு குழப்பங்கள் இல்லாத அமைதியான இடம் வேண்டும். அது வீடுகளில் கிடைக்காது. வீட்டில் தியானம் இருக்கின்ற போது புறச் சூழல், இன்ப துன்பங்களின்
தொல்லைகள் என்பன மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் இருப்பதற்கு சிலவேளைகளில்
இடம் தராது. இந்த சூழ் நிலையில் மனம் அமைதியாகவும், நறுமணங்களின்
வாசனையுடனும் தியானம் இருப்பதற்கு ஆலயச் சூழல் மனதுக்கு நிறைவைத் தருகின்றது என்பதுதான் வெளிப்படை உண்மையாக இருக்கின்றது.

உருவச் சிலைகள் அமைத்து வழிபடுகின்ற தன்மை மனதை ஒருநிலைப்படுத்தவும், மக்கள் ஆலயவழிபாட்டில்
விருப்புடன் ஈடுபடவும் பெரிதும் உதவின. இங்கு உருவச் சிலைகள் அமைக்காது
மனக்கண் மூலம் வழிபடுகின்ற வழிபாட்டு முறை இருந்திருந்தால் யாருமே ஆலயம்
செல்ல மாட்டார்கள். சிறந்த முறையில் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை வழிபடுவதற்கு விக்கிரக அமைப்பு முறை பெரிதும் உதவுகின்றன. இதன் காரணமாகவேதான் ஆலயங்கள் அமைத்து விக்கிரகங்களை பிரதிஸ்ட்டை செய்தார்கள் இங்கு மிகப்பெரிய உளவியல்ப் பின்புலம் காட்டப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

மேலும் வறுமை, போர் என்பன எம்மைத் துரத்தி வரும் போது நாம் இறைவனைத் தேடி ஓடுகிறோம். இறைவன் எங்களைப் பாதுகாக்கின்றான் என்று எங்கள் மனங்களை
நாங்களே திருப்த்திப்படுத்திக் கொள்கின்றோம் “படைத்தவன் படி அளப்பான்.”
என்று கூறி இடையிடையே வியாக்கியானங்களையும் முன்வைக்கின்றோம.; ஆக
மொத்தத்தில், எங்களுடைய உள்ளங்களின் நம்பிக்கையே ஆலய வழிபாடுகளுக்கு முக்கிய காரணம் என்பதையும், மக்கள் ஆலயம் நோக்கி படையெடுக்க முக்கிய கருவி என்பதையும் யாருமே மறுப்பதற்கில்லை.

கட்டுரையை எழுதியவர் : Supakaran.S




ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum