ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)

2 posters

Go down

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Empty கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)

Post by ayyasamy ram Thu Apr 25, 2024 1:26 pm

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Kalkionline%2F2024-04%2Fa310bd62-850b-42f0-be0a-11e1caecf77e%2FKalyanam_Panniyum_Brahmachari
---
கமலும் 'கிரேசி' மோகனும் இணைந்த பல படங்களில் ஆள்
மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று
நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று
சொன்னால் நம்புவீர்களா? அதுவும் 'நடிகர் திலகம்' நடிப்பில்?
சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' என்ற படம்தான் அது.

கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும்
நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப்
போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள
நகைச்சுவை படம் இது.

டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம்
செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால்
கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்
காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில்
ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன்.

டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி
கணேசனை அழைத்து தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள
சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம்,
நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட
டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக
நங்கையை திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.

இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின்
சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி
தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின்
எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள்.

அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய
அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில்
மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக்
கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க,
அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.

தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான்
மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன்
ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த
நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும்
கூத்துதான் மீதி கதை.

இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக்.
கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்
கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ்.
-
பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு.
இசை டி ஜி லிங்கப்பா.

பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி,
ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.

டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி
பாடிய 'ஜாலி லைப் ஜாலி லைப்' பாடல் பலரால் விரும்பப்பட்டது.

'மதுமலர் எல்லாம் புது மணம் வீச,' 'வெண்ணிலாவும் வானும் போலே'
போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன்,
மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக
சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும்,
தவிக்கும் காட்சி வெகு ஜோர்!

தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி
வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!

தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி
நன்றி- கல்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Empty Re: கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)

Post by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

26.04.2024

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  1954  பாட்டுக்கள் 

1. வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும் போலே - ராதா ஜெயலட்சுமி 
ராகினி பாட, பத்மினி ஆட, சிவாஜி கணேசனும், TR ராமச்சந்திரனும் ஒளிஞ்சிருந்து ரசிப்பாங்க. 

2. கவியின் கனவில் வாழும் காவியமே கருத்தில் அழகு செய்யும் ஓவியமே - VN சுந்தரம் 

இந்த பாட்டை TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். சிவாஜி கணேசன் மறைவா உக்காந்து ஹார்மோனிய பொட்டிய வாசிச்சுட்டு அவருக்காக பாடுவார். எதுத்த வீட்டில இருக்கிற  பத்மினியும், ராகினியும் TR ராமச்சந்திரன்தான் பாடுறார்னு நெனச்சுட்டு கேட்டு ரசிப்பாங்க. 

இந்த பாட்டை பாக்கும்போது ஆறு வருஷம் கழிச்சு வந்த ஒரு படத்ல வரும் ஒரு பாட்டு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அடுத்த வீட்டுப்பெண் 1960. அதுலயும் TR ராமசந்திரன் ஹீரோ.

"கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே". PB ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தார்.

இந்த பாட்டுல TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். அவருக்கு பின்னணி பாடியது தங்கவேலு. அந்த பாட்டுல நடந்த மாதிரியே இந்த பாட்லயும் நடக்கும். எதுத்த வீட்ல இருந்த அஞ்சலிதேவி TR ராமசந்திரன் பாட்றார்னு நெனச்சு கேட்டு ரசிப்பார். 

இந்த ரெண்டு பாட்டையும் சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் பகுதியில அனுப்பியிருக்கேன் பாருங்க, கேளுங்க.


3. மதுமலர் எல்லாம் புது மணம் வீசி மகிழ்ந்திடும் வசந்த காலம் - ராதா ஜெயலட்சுமி & கோரஸ் 
ராகினி தோழிகள்கூட சேந்து ஜா............லியா டான்ஸ் ஆடி பாடுறாங்க. 

4.  மேதாவிபோலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா அய்யாவே - ஜிக்கி & AM ராஜா 
பத்மினி & சிவாஜி கணேசனுக்கு ஜாலி டூயட் பாட்டு. 

5. அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம் மனமாருதம்  வீசும் - சூலமங்கலம் ராஜலட்சுமி 
பத்மினி தனியே ஆடி பாடுவார். 

6. ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் - சந்திரபாபு 
சிவாஜி ஆடி பாட, அவர்கூட TR ராமச்சந்திரனும் ஜாலியா ஆடுவார்.

7. பரமன்  அருளை பெறும் மார்க்கமா  இதுதான் பரமன் அருளை பெறும் மார்க்கமா - ஜிக்கி 
ஒரு மேடை நிகழ்ச்சியில பத்மினி பாடி ஆடுவார். 

8. அழகே பெண் வடிவமான பிம்பமே - சூலமங்கலம் ராஜலட்சுமி & VN சுந்தரம் 

9. என்ன சிகிச்சை உனக்கு வேண்டும் வேண்டிக்கொள் என் நாயகி - கண்டசாலா 


பேபி     மகிழ்ச்சி  சூப்பருங்க  அருமையிருக்கு    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum