ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!

Go down

முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!  Empty முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!

Post by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!  634424
--
திருவாரூரையும் திருவாரூரைச் சுற்றியுள்ள விடங்கர் கோயில்களையும் ஒரேநாளில் சென்று தரிசிக்கலாம். அப்படி தரிசிப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படும் இந்த ஏழு தலங்களையும், ஒரேநாளில் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவனாரின் கோயில்களில்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவுகளாக, பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. காவிரியின் வடகரைக் கோயில்கள், தென் கரைக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்றெல்லாம் இருக்கின்றன.

அதேபோல், சிவபெருமானின் பரிகாரக் கோயில்களும் வெகு பிரசித்தம். சிவன் கோயில்தான் என்றாலும் அம்பாளே பிரதானம் என்றிருக்கும் ஆலயங்களும் இருக்கின்றன. முருகப்பெருமானே முக்கியமான தெய்வம் என்று புகழப்படும் கோயில்களும் உண்டு.

விநாயகர் பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. பிரம்மா பிரபலமாக இருக்கும் ஆலயமும் உண்டு. பைரவர், சிறப்பு மிக்கவராகவும் சரபேஸ்வர மூர்த்தி விசேஷமானவராகவும் இருக்கும் கோயில்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதேபோல் சிவன் கோயில்களில், சப்த விடங்கத் தலங்கள் என்று இருக்கின்றன. திருவாரூர், திருக்காராயில், நாகப்பட்டினம், திருநல்லார், திருக்கோளிலி, வேதாரண்யம் மற்றும் திருவாய்மூர் முதலான தலங்கள், சப்த விடங்க திருத்தலங்கள் என்று போற்றப்படுகின்றன.
இதுகுறித்து சுவாரஸ்மான புராண சரிதம் ஒன்று உண்டு.

சிவ வடிவத்தை மகாவிஷ்ணு இந்திரனுக்கு வழங்கியிருந்தார். அந்த விடங்கரின் திருமேனியை இந்திரன் அனுதினமும் பூஜித்து வந்தான். ஆரூரை தலைமையிடமாகக் கொண்டு, முசுகுந்த சக்கரவர்த்தி ஆட்சி செய்து வந்தார். அவர், அசுரர்களை அழிப்பதற்காக, தேவர்களுக்கு மிகப்பெரிய உதவிகள் செய்தார். அரக்கக் கூட்டத்தையே அழித்தார்.

அதற்குப் பரிசாக, ‘என்ன வேண்டும் முசுகுந்தா’ என்று கேட்டார் இந்திரன். ‘நீங்கள் பூஜிக்கும் விடங்கரை, தியாகராஜ சுவாமியின் ரூபத்தை வழங்கினாலே போதும்’ என்றார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போனார் இந்திரன். வலிமை மிக்க விடங்கரை கேட்கிறாரே... என்று கலங்கினார். உடனே இந்திரனுக்கு யோசனை வந்தது. மகாவிஷ்ணு அளித்த விடங்கரைப் போலவே இன்னும் ஆறு விடங்கர்களை அப்படியே செய்துவைப்போம். இவற்றில் உண்மையான விடங்கரை, கண்டுபிடித்து எடுத்துக் கொள் என்றார்.

மறுநாள்... ஏழு விடங்கர் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்தன. முசுகுந்த சக்கரவர்த்தி மிகுந்த சிவபக்தர். தன் மூச்சும்பேச்சும் சிவபெருமானாகவே கொண்டு வாழ்ந்தவர். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு, உண்மையான விடங்கர் திருமேனி தெரியாமல் இருக்குமா என்ன?

ஏழு விடங்கர்கள் இருந்தார்கள். அவர்களில், மகாவிஷ்ணு இந்திரனுக்கு அளித்த விடங்கரை, மூல விடங்கரைச் சரியாக எடுத்தார் முசுகுந்த சக்கரவர்த்தி. வியந்து மலைத்த இந்திரன், ஏழு விடங்கர்களையும் முசுகுந்த சக்கரவத்திரிக்கு வழங்கினான் என்கிறது ஸ்தல புராணம்.
அந்த ஏழு விடங்கர் திருமேனிகளையும் முசுகுந்த சக்கரவர்த்திக்கே வழங்கினார். மூலவிடங்கர், திருவாரூரில் வைக்கப்பட்டார் என்றும் மற்ற ஆறு விடங்கர் திருமேனிகளையும் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆலயங்களில் வைத்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

’ஆரூரா... தியாகேசா...’ என்று அழைக்கப்படும் திருவாரூர், பிறக்க முக்தி தரும் தலம் என்கிறது ஸ்தல புராணம். அதாவது திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம் என்பதாக ஐதீகம்.

திருவாரூரையும் திருவாரூரைச் சுற்றியுள்ள விடங்கர் கோயில்களையும் ஒரேநாளில் சென்று தரிசிக்கலாம். அப்படி தரிசிப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படும் இந்த ஏழு தலங்களையும், ஒரேநாளில் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

--வி.ராம்ஜி- இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum