ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றான் சாம்பான்

2 posters

Go down

பெற்றான் சாம்பான் Empty பெற்றான் சாம்பான்

Post by sugumaran Fri Apr 05, 2024 5:26 pm



இப்போது நான் பெற்றான் சாம்பான் 6Ze1Voe
பெற்றான் சாம்பான் Ag2crYe

பெற்றான் சாம்பான் பற்றிக் கூறப்போகிறேன்

அநேகமாகப் பலருக்கு திருநாளைப்போவார் எனும் நந்தனாரைப்பற்றித் தெரியும் .
ஆனால் பெற்றான் சாம்பான் பற்றிஅதிகம் தெரியாது .
உமாபதி சிவம், தாழ்த்தப்பட்ட குலத்தி்ல் தோன்றிய பெற்றான் சாம்பான் என்பவருக்கு முத்தியளித்தார்.
பெற்றான் சாம்பான் நாள்தோறும் தில்லைத திருக்கோயிலுக்குன் திருவமுத்துக்கு சமையலுக்கு வேண்டிய விறகு வெட்டி்க்கொண்டு வந்து சேர்க்கும்பணியை சிவத்தொண்டாகக்கருதி செய்துவந்தார் .
அவரின் இந்தத்தொண்டு ஒரு அர்ப்பணிப்பு மனோநிலையில் ஒரு தவமாக நடைபெற்றது
இவரின் திருப்பணிகண்டு மகிழ்ந்த தில்லைக்கூத்தன், பெற்றான் சாம்பான் கனவில்தோன்றி, தில்லைவாழ் அந்தணர்களால் தீண்டத்தகாதவர் போல் ஒதுக்கிவைக்கப்பெற்ற உமாபதிசிவத்திற்கும் கொற்றவன் குடிக்கு விறகு கொண்டுபோய்க் கொடுக்கும்பணியினைச் செய்யும்படி கூறினார்.
அவரும் அவ்வாறே உமாபதி சிவத்தின் மடத்திற்கும் விறகுகொண்டுவந்து கொடுத்துவந்தார். ஆனால், உமாபதிசிவத்திற்கு இது தெரியாது
இவ்வாறு நிகழ்ந்துவரும் நாளில், ஒருநாள் கடும்மழை காரணமாக விறகு கொண்டுவரத் தடைஏற்பட்டது. அன்று விறகு வந்துசேரவில்லை. எனவே, மடத்தில் உணவுசமைக்கக் காலதாமதம் ஆனது.
அதற்குக்காரணம் என்ன என உமாபதி வினவ, மடத்திற்கு நாளும் விறகு கொண்டுவரும் சாம்பான் வரவில்லை என்றனர். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட உமாபதிசிவம், அவர் வந்ததும் தமக்குத் தெரிவிக்கும்படி கூறினார். மறுநாள் சாம்பன் மடத்திற்கு விறகு கொண்டுவந்தார்.
அவர் மடத்திற்கு வரும்முன் தில்லைக்கூத்தன் ஒரு பெரியவர் வடிவில் அவன்முன்தோன்றி, ஒருசீட்டினைச் சாம்பானிடம் கொடுத்து அதனை உமாபதிசிவத்திடம் கொடுக்கும்படி கூறினார்.
அவரும் அச்சீட்டை, விறகு கட்டுடன் கொண்டுவந்தார். அவர் வந்ததை அறிந்த சீடர்கள் இச்செய்தியை உமாபதிசிவத்திடம் கூறினர்.
அவரைக் கண்டு மகிழ்ந்த உமாபதிசிவத்திடம் சாம்பான், பெரியவர் கொடுத்த ஓலையைக் கொடுத்தார். அதனைப்பெற்ற உமாபதிசிவம், அவ்வோலையில் இருந்த செய்தியைக் கண்டு திகைப்படைந்து பேரானந்தம் அடைந்தார்.
இறைவனே எழுதி அனுப்பிய ஓலை அது. அந்தச்சீட்டில் இருந்த செய்தி:
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்துமுத்தி கொடுக்க முறை”
என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது.
இதன்பொருள்அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. , இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்கைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம்.
இதன்படி பெற்றான் சாம்பானுக்கு உமாபதிசிவம் ஞானதீக்கை தொடங்கினார். அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், பலன்கருதாது தொண்டுப்பணியால் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார்.
அவருக்கு முறையாக அருள்பூசைகள் செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்;
அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார்.
செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது.
சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள்.
அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான்.
அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாசாரியரின் நயன தீக்ஷையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர்.
அரசன் பெரிதும் வியப்புற்றான்.தானே நேராக கொற்றங்குடிக்கு வருகை செய்தான்.
சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.
சிவாசாரியரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால் தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.
அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது.
அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.அரசன் இதைப் பார்த்து பிரமித்தான்.
இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன்.
அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.சிவாசாரியரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் சாம்பானின் மனைவிக்கு தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை.
இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் (Letters From Ramanasramam) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம். மேலும் சில இணையதளத்திலும் விரிவாக இந்த செய்திகள் கிடைக்கிறது
கொள்ளிடக்கரையில் ஆதனூரில் பிறந்த ,வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்புங்கூர் ல் நந்தி விலக நசிவனைத்தரிசித்த நந்தனார் தில்லையில் வந்து முக்தி அடைந்த கதை மிக பரவலாக தமிழ் மக்களால் அறியப்பட்டுள்ளது .
நந்தனாரின் பெயரால் ஒரு தங்குமிட வசதியுடன் கூடிய உயர்நிலை பள்ளியும் சிதம்பரத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது .
ஆனால் ஏனோ பெற்றான் சாம்பானுக்கு மக்களிடையே அதிக அறிமுகம் கிடைக்கவில்லை
நான் இந்த உமாபதி சிவம் பெற்றான் சாம்பான் வரலாறுகளைக்கூற க்காரணம் நம்மிடம் நிலவும் சில வரலாறுகளை பலரும் அறி யச் செய்வதற்க்கு தான்
.சில ஆண்டுகளுக்கு முன் நந்தனார் தில்லையில் புகுந்த தெற்கு வாசல் கோபுரம் அண்மையில் உள்ள தற்போது ஓமக்குளம் என்று வழங்கப்படும் அப்போது ஹோமம் நடந்ததாகக்கூறப்படும் அந்தக்குளத்தில் அகழ்வாயவு முனைவர்சத்தியமூர்த்திஅவ ர்களால் நடத்தப்பெற்று
சில சான்றுகளும் அங்கே கிடைத்ததாக படித்தேன் .
தில்லையில் திருஅண்ணாமலையிலும் அமைந்துள்ள மடங்களையும் சத்திரங்களில் பல தொன்மை வரலாறுகள் காத்திருக்கின்றன .
நான் திருபு வாதி அல்ல ஆனால் தமிழ் பற்றும் ,இறைப்பற்றும் ஒருங்கே உள்ளவன் .
சித்தர்களால் வளர்ந்த மொழி இது
நமது தமிழ் தெய்வத்தமிழ்! .இறையுடன் இணைந்தது .சேர்ந்தே வளர்ந்தது .!
அண்ணாமலை சுகுமாரன் 29/4/2021Repost 3/4/2024
படம் நன்றி தினமணி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பெற்றான் சாம்பான் Empty Re: பெற்றான் சாம்பான்

Post by Dr.S.Soundarapandian Sat Apr 06, 2024 1:32 pm

பெற்றான் சாம்பானின் மனைவி அரசினிடம் முறையிட்டபோது கூறியதே உண்மை ! ‘சோதியிலே கலந்தார்’ என்று வரும் இடங்களில் எல்லாம் கொலைதான் நடந்துள்ளது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum