ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?

Go down

சாம்பாரின் வியப்பூட்டும் கதை   ! எப்ப வந்தது  ?,  எப்படி வந்தது ? Empty சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?

Post by sugumaran Sat Mar 16, 2024 4:51 pm

சாம்பாரின் வியப்பூட்டும் கதை   ! எப்ப வந்தது  ?,  எப்படி வந்தது ? Hw2TB3m


உங்களின்  ஆதரவு பெற்ற "இனியதமிழ் அமிர்தம் " சேனலுக்கு வரவேற்கிறோம்!  
நான் உங்கள் அண்ணாமலை சுகுமாரன் ,

இன்றைய வீடியோவில், உலகெங்கிலும் உள்ள லட்ச்க்கணக்கான    மக்களின்  இதயங்களையும்,  நாவின் சுவை மொட்டுகளையும் ,வென்ற அனைவரின்  பிரியமான , தென்னிந்திய சுவையான  சாம்பாரின் வசீகரிக்கும் வரலாற்றில் , அதன் கல்வெட்டு ஆதாரங்களில்  ஆழமாக முழுக இருக்கிறோம் .
சாம்பாரில் இத்தனை செய்திகளா ? வியப்பூட்டும் வீடியோ இது ! முழுவதும் பாருங்கள் !. 🍛🌐

🔍 தஞ்சையின் அரச சமையல் அறைகளில் இருந்து உலகப் பரபரப்பான சாம்பாரின் சந்தையைப்பற்றிய செய்திகளை அறியவும் ,. தொன்மங்களை நீக்கி , , பழங்கால கல்வெட்டுகளை ஆராய்ந்து, சாம்பாரின்  தோற்றம் பற்றிய உண்மையை வெளிகொணர , எங்களுடன் சேருங்கள்

இப்போது ,சாம்பார் இல்லாது சைவ உணவு இல்லை ,
அது இட்டலி ஆக இருக்கட்டும் , பூரியாக  இருக்கட்டும் ,சாம்பார், அத்தனைக்கும் சிறந்த துணைவன் .

சுவையான சாம்பாரினாலேயே வாடிக்கையாளர்கள் கூட்டம்  சேர்த்த அடையார் ஆனந்த பவன் ,  சரவணபவன் ,உடுப்பி, போன்ற இந்த கால உணவகங்களும் , அந்த நாளைய ரத்தினா கபே ,கோவை அன்னபூர்ணா போன்றவை மறக்க முடியாதவை .
இட்டலி சாம்பார் , போய் இப்போது சாம்பார் இட்டலி தான் முன்னிலை வகிக்கிறது  , அத்தோடு சாம்பார் வடை சக்கைபோடு போடுகிறது .

தென்னிந்திய சாம்பார் இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. அது ஏற்கனவே இந்திய எல்லைகளையும் தாண்டிஉலகமெங்கும் பரவி விட்டது.
சாம்பார், இட்லியின் தவிர்க்க முடியாத தோழன்

இப்போது சாம்பாரின் வரலாற்றை ஆராய இருக்கிறோம் .

மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார் என்று கூறபடுகிறது , நம்பப்படுகிறது .

அதே சமயம் தமிழர்களின் பூர்வீக உணவுசாம்பார்  என்பது நமக்குகிடைத்த  ஒரு பண்டைய கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது  அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து , முற்றிலும் விலகி நிற்க  ஒரு  முக்கிய கல்வெட்டு கிடைத்துள்ளது .
. மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள்.
தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 ,காலத்தில் தான் சாம்பார் உருவானதுஎன்று கூறப்படுகிறது
12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர், மராட்டியர்கள் செய்யும் உணவு ஆம்தி,  என்பது சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான கோகம் புளி  என்பது ஒரு நாள் வந்து சேரவில்லை  . இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை,  எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள்,

நாம் இப்போது பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது.

எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜியை விருந்துக்கு அழைத்து , அந்த  விருந்தில் சாம்பாரைப் பரிமாரியுள்ளார்  .
அதன்பிறகு சாம்போஜியை கவுரவிக்கும் வகையில்,  அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

சாம்பார் தொடர்பான சமையல் குறிப்புகள்  போஜன குதூகலம்,  சரபேந்திர பாக சாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளன.

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள்.

மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே, எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது.

அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள்.
பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் ,இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால்சரபேந்திர பாக சாஸ்திரத்தில் ,வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் ,கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஒரு வேளை அதற்குப் பிறகு, மற்ற சாம்பார் வகை பிரசித்தி பெற்றிருக்கலாம்.

ஆனால் அதே சமயம் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது.

சம்பாஜி மகாராஜை கெளரவிக்கும் விதத்தில், இந்த உணவை சம்பாஜி ,, ஆஹார்  (சம்பாஜியின் உணவு) என்று அழைத்தனர். இது சாம்பாராக மாறியது.
செய்முறையில் பல மாற்றங்களைக் கொண்ட ,அதே உணவு தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ,பின்னர் இந்தியா முழுவதிலும் பரவியது.
இது சாம்பாருடன் தொடர்புடைய பொதுவான கதை.

பிரபல உணவு வரலாற்றாசிரியரும் உணவு நிபுணருமான கே. டி. ஆச்சார்யா இந்த கதையை உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, சாம்பார், தஞ்சாவூரில் தோன்றியதாக பொதுவாக கருதப்படுகிறது.

சம்பாரம் என்பது மசாலா பொருட்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால் தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.


சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு. தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது

அதாவது இது , தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க, இந்த கல்வெட்டு துணையாக, அமைந்துள்ளது.

"அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”

(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[4])
என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.

"கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்று பொருள்.

"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் ,
இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது , ஆனால் தமிழ் கல்வெட்டு காலம் 1530,
இப்போ சொல்லுங்க , எது முந்தியது ?

இப்படி இருக்க சாம்பார் . தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் .

இந்த சம்பவத்தில் அதிக உண்மை இல்லை என்று புனேவைச் சேர்ந்த உணவு கலாச்சார ஆராய்ச்சியாளர் முனைவர் சின்மய் டாம்லே கூறுகிறார்.

"1684இல் ஷாஹூஜி ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு 12 வயது. சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் ஆட்சிக்காலம் 1680 - 1689 வரை இருந்தது. இந்த சம்பவம் 1684 மற்றும் 1689 க்கு இடையில் நடந்திருக்க வாய்ப்பில்லை," என அவர்தெரிவிக்கிறார் .

மாராட்டிய மாநிலத்தில் வெறும் பருப்பை "தால்" என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது
அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.

தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.

"சாம்பார் என்ற சொல் சுவை அதிகரிக்கும் ,பொருட்களுக்கு பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.
மசாலா மற்றும் சாம்பார் போன்றவையும் இதே போன்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளன,"

"லீலாசரித்ராவில் மசாலாப் பொருட்களுக்கு சம்பாரு என்ற வார்த்தையைக் காணலாம்.

குஜராத்தி (சாம்பார்), பெங்காலி (சாம்பாரா),
தெலுங்கு (சாம்பராமு), தமிழ் (சாம்பார்),
கன்னடம் (சாம்பார் ) போன்றவை, சமஸ்கிருத சம்பாருக்கு ஒத்ததாக உள்ளன.

மலையாளத்தில் மசாலாப் பொருட்களுடன் கூடிய மோர் 'சம்பாரம்' என்று அழைக்கப்படுகிறது,

"சக்ரதார்சுவாமியின் லீலாசரித்ராவின், முதல் பாதியில், வசனம் எண் 260 , சம்பாரு என்ற வார்த்தையை, சுவை கூட்டி என்ற பொருளில் குறிப்பிடுகிறது," என்று டாக்டர் சின்மய் டாம்லே கூறுகிறார்.

மராட்டியர்களுக்கு முன்பு, நாயக்கர்கள் வம்சம் தஞ்சாவூரை ஆண்டது.   அப்போதைய மன்னர் ரகுநாத் நாயக்கின் ,வாழ்க்கையில் ஒரு நாளை விவரிக்கும் 'ரகுநாத புயுதம் ' என்ற கவிதை நூல் உள்ளது.

ராஜாவின் உணவில் பரிமாறப்பட்ட உணவுப் பொருட்களின் நீண்ட பட்டியலை இந்த கவிதை நூல் குறிப்பிடுகிறது. அதில் சாம்பாரொட்டி மற்றும் சாம்பார் சாதம் போன்ற சில உணவுகள் உள்ளன (சேர்க்கப்பட்ட மசாலாப் பொருட்களுடன்).,  ஆனால், இன்று சாப்பிடப்படும் சாம்பாருக்கு ஒத்ததாக எந்த உணவுப் பொருளும் இருந்ததாகத் தெரியவில்லை.

"தஞ்சாவூரின் ஷாஹாஜி மகாராஜ் தான் சாம்பாரை கண்டுபிடித்தார் என்று கூறப்பட்டாலும், அவர் எழுதிய எந்த புத்தகத்திலும் இந்த உணவு வகை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஒரு புத்தகத்தில் ' 'பொரிச்சகுழம்பு' என்ற ஒரு உணவு பற்றிக்கூறப்படுகிறது. இதில் துவரம் பருப்பு, காய்கறிகள், புளி, கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகாய்பொடி ஆகியவை அதில் சேர்க்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

எனவே, சாம்பாருக்கும் , ஷாஹாஜி என்ற வார்த்தைக்கும் , எந்த தொடர்பும் இல்லை.

எனவே, பல்வேறு வரலாற்று குறிப்புகள் மற்றும் கிடைக்கக்கூடிய இலக்கியங்களைத் தேடிய பிறகு,
இன்று நடைமுறையில் இருக்கும் சாம்பாருக்கும், அதன் தோற்றத்தின் மராட்டிய கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது.
கிடைத்துள்ள கல்வெட்டு படி , தமிழ் நாட்டில் சாம்பார்  அதற்க்கு முன்பே ,வழக்கில் இருந்து வந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது

இப்போது சாம்பார் ஒரு வணிகப்பொருள் , சாம்பார் பொடித் தயாரித்து கோடிக்கணக்கில் பொருளீட்டியவர்கள் உண்டு .
ஒரு காலத்தில் ஒரு பிரபல நடிகரை சாம்பார் என்று அழைத்தது உண்டு .
எப்படியோ இப்போது தமிழர்களால் சாம்பாரின்றி வாழ முடியாது .
வாழ்க சாம்பார் !

அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum