Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவுரி எனும் அமிர்தம் !
4 posters
Page 1 of 1
அவுரி எனும் அமிர்தம் !
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குவணிகம் செய்ய தேடி வந்ததற்கு பல காரணங்களில் , முக்கிய பங்கு இங்கிருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்க்கை சாயத்தை தேடித்தான் என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் .
அப்போது அது இண்டிகோ என்று அறியப்பட்டது .
இண்டிகோ என்னும் பெயர் அதன் பிறப்பிடமான நாட்டோடு இருக்கும் தொடர்பைக்கட்டுகிறது .. இண்டிகோ என்ற பெயர் கிரேக்க வார்த்தையான 'இண்டிகான்' என்பதிலிருந்து உருவானது,
அதாவது 'இந்தியாவில் இருந்து'. என்பது அதன் பொருள் . இண்டிகோ சாகுபடி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியில் (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா) இருந்ததாக கருதப்படுகிறது.
அந்த இயற்க்கை சாயமான இண்டிகோவுக்கு உலகளவில் அதிக தேவை இருந்தது. ஐரோப்பாவில் நீல நிற சாயத்திற்கான தேவை காரணமாக அப்போது இண்டிகோ வர்த்தகம் மிகவும் லாபகரமாக இருந்தது.
அந்த இண்டிகோ என்பதுதான் தமிழில் அவுரி என்று அழைக்கபட்டது .
நீலி என சமஸ்கிருதத்திலும், சென்னா என ஆங்கிலத்திலும் அறியப்படும , அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் ஒரு தாவரமாகும்.
இதற்க்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு.
அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும்.
பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை ,
விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின், அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார்.
அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல, அவுரி 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது
ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும். எனவே அதில் விளையும் உணவினை
உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர்.
ஆனால் இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது,
எளிதில் நோய் தாக்கும் படி மக்களும் பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.
ஆனால் இப்போதும் அவுரி நெல்லைவிட மதிப்பு வாய்ந்த தாவரமாக இருந்து வருகிறது . நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும்இந்திய மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது.
குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் ‘திருநெல்வேலி சென்னா’ என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும் தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர்.
அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
இன்னும் உலகில் இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது, நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்குஅயல்நாடுகளுக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வரும் செயற்கை சாயங்களை பயன்படுத்தி, தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம். பிறகு அதற்கும் ஆங்கில மருந்துகளுக்கு அவர்களையே நம்பி இருக்கிறோம் .
அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல , அது மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது.
இயற்கையாக கிடைக்கும் மிகச் சிறந்த மலமிளக்கி.
18 வகை விஷங்களை உடலில் இருந்து நீக்கும் வன்மை பெற்றது.
காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
உடல் பொன்னிறம் பெறும் என்கிறது குணபாடம்
இதன் குணங்கள் இவை ,
சோபாநாசினி, விஷநாசகாரி, மலகாரி, உற்ச்சாககாரி.
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது.
கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது.
இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன.
அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் மற்ற பெயர்கள்:
Botanical-Indigofera tinctoria Linn. (fam.Fabaceae)
Sanskrit-Nilika
English-Indigo
Gujarath-Gali
Hindi-nili
Kannada-Karunili
Malayalam-Neelamar Marathi-Neela Megam
Tamil-Avuri
Telugu-Nili chettu.
(
இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும்.
தினம் ஒரு வேளையாக, மூன்று நாள் சாப்பிட வேண்டும்.
இதன் இலையை அரைத்து தோல் நோய்கள்,
சிரங்குகளுக்கு பூச குணமாகும்.
இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும்.
இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்
அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும்.
சர்ப்ப (பாம்பு) விஷத்துக்குக் கூட தரலாம்.
அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு நாட்டுப் பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி, எலி முதலியவை கடிப்பதால் வந்த விஷம் நீங்கும்.
இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம்.
சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம்.
மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம்.
அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வெரு தனி முறை உள்ளது.
ஆனால் அவைகள் முழுவதும் தெரியாத நிலையில் எந்த மருத்துவ பொருளையும் நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் அந்த மருந்து சுத்தி ஆகும். அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.
அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து
மண் சட்டியில் அது சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி அதை முன்பு தந்த மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம்.
பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை தொடங்குவதற்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டு வந்த மருந்த்களின் வீரியத்தை உடலில் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது வழக்கம்.
இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் கிராமத்து மாடுகளுக்கும் கண்டதைத் தின்று அவைகளுக்கு பலவித நோய்கள் வருகின்றன.
பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக இல்லை
அதிலும் நஞ்சு கலந்துவிட்டது.
மனிதர்களுக்கு வைத்தியம் கண்டது போல் மாடுகளுக்கும் வைத்திய முறை கண்டிருந்தனர் நமது பண்டைய தமிழர். அத்தகைய மாட்டு வைத்திய முறைகள் அடங்கிய நூலுக்கு ‘மாட்டு வாகடம்’ என்று பெயர்.
இவ்வாறு ஒவ்வொரு மிருகத்திற்கும் உண்டு. ‘ஆட்டு வாகடம்’, ‘பறவை வாகடம்’ போன்று இருந்தது. இந்த வைத்திய முறைகளில் அவுரிக்கு பெரும் பங்கு உண்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலை முறையாக நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த இது போன்ற அறிவியல் பூர்வமான, சித்த வைத்தியக் கூறுகள், காலவெள்ளத்தால் அழிந்து, மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.
நாம் தொலைத்து விட்ட அறிவுசார் சொத்துக்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ?.
அவைகளை தமிழர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உங்களின் "இனிய தமிழ் அமிர்தம் "இத்தகைய காணொளிகளை தொடர்ந்து வெளியிட இருக்கிறது .
இவைகள் ஆய்வு நோக்கில் , தமிழர்களின் முக்கிய அனுபவ அறிவான ,மூலிகைகளின் முக்கியத்துவத்தையும் , குணங்களையும் விவரிக்கும். இவைகள் ஆய்வுகளின் தொகுப்பாக விளங்கும் .
இதற்க்கு உங்களின் ஆதரவும் , பங்களிப்பும் தேவை .
அத்தோடுகூட அவுரிக்கு இந்திய வரலாற்றிலேயும் முக்கிய பங்கிருக்கிறது . அதிகப்படியான இண்டிகோ சாகுபடி உலகளவில் அதன் அதிக தேவை இருந்ததால் ,வங்காளத்தில் 1777 இல்ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்டது .
பிறகு 19 ஆம் நூற்றாண்டில் விவசாயிகள் இயக்கங்கள்பல இதற்க்கு எதிர்ப்பாக எழுந்தது . இதனால் இண்டிகோ கிளர்ச்சி எனும் பெரும் கலகம் எழுந்தது .இந்த கிளர்ச்சி
1859-60 இல் வங்காளத்தில் தீவிரமாக நடந்தது
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய விவசாயிகள் எழுச்சிகளில் இதுவும் ஒன்று
பிறகு அதற்காக அவுரி ஆணையம் என்று தோன்றியது .
இது போன்ற செய்திகளை விரிவாக தனியே காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
29/2/2024
#indigofera# அவுரி ,#Auri, #Indigofera,
#tamilherbs, #traditionalmedicine, #cultural significance, #natural_ dye, #herbal _remedies, .#nature,
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: அவுரி எனும் அமிர்தம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அவுரி எனும் அமிர்தம் !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சித்தர் பாடல் சித்த மருத்துவம்
» அள்ளியணைக்கும் அமிர்தம்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
» மூதோர் சொல் அமிர்தம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» அள்ளியணைக்கும் அமிர்தம்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
» மூதோர் சொல் அமிர்தம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|