புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_m10கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 11:42 am

டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு

சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு? சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார். அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள். இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!'
- இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!
சென்னை செய்த எச்சரிக்கை!
முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.

நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.
சிக்கன், மட்டன், சிறை!
கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.
'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.
உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.
ஸ்டார் பார், குளிர்பான கிக்!
இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.
கசகசா ஏன் கதி கலக்குது?

உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.


ஜூனியர் விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 11:45 am

நன்றி தோழரே அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 11:48 am

மலேசியாவிலும் கசகசாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பின்னர் இந்திய உணவக உரிமையாளர்களின் கடுமையான ஆட்சேபத்தால் கைவிடப்பட்டது!

கசகசா உண்மையிலேயே போதைப் பொருள்தான் என்று சிங்கப்பூர் அரசாங்கமும் தடை செய்துள்ளது!

வெளிநாடு செல்பவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி ரபீக்!



கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 11:52 am

சிவா wrote:மலேசியாவிலும் கசகசாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பின்னர் இந்திய உணவக உரிமையாளர்களின் கடுமையான ஆட்சேபத்தால் கைவிடப்பட்டது!

கசகசா உண்மையிலேயே போதைப் பொருள்தான் என்று சிங்கப்பூர் அரசாங்கமும் தடை செய்துள்ளது!

வெளிநாடு செல்பவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி ரபீக்!

நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 11:17 am

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி இது உண்மையா என்று தெரிந்தவர்கள் கூறவும்


As Received................
If you plan to travel via GCC.........
Do not carry Khas-Khas.

Please take care while bringing luggage given by relatives or friends.
Dear Friends,

Yesterday only I came to know of a case from a friend of mine which
is very scary. One of his friends was traveling to UK via Dubai .
Unfortunately he was carrying a packet of Khas Khas which is a
commonly used spice in some Indian curries and sweets. Khas Khas is
also known as poppy seed which can be sprouted to grow narcotics
(afeem etc.).

This innocent person did not know that recently the laws in UAE and
other Gulf countries have been revised and carrying Khas Khas is
punishable with minimum 20 years of imprisonment or even worse with
death penalty . Currently, the person is in a jail in Dubai for the
last two weeks. His friends are frantically trying hard for his
release but are finding that this has become a very very serious
case. Lawyers are asking huge fees amounting to AED 100,000 even to
appear in the court to plead for his innocence.

Please forward this email to all you know specially in India . They
should know the seriousness of this matter and should never ever
carry even minutest quantities of the following items when traveling
to Gulf countries:

1. Khas Khas whether raw, roasted or cooked.
2. Paan
3. Beetle nut (supari and its products, e.g. Paan Parag etc.)

The penalties are very severe and it could destroy the life of an
innocent person.

I appeal you to create the awareness by forwarding this email to all
you know.

குறிப்பு :- நான் இங்கே ஓமானில் சில பல்பொருள் அங்காடிகளிடம் (Haridas Nensy, Sultan, al Jadeed etc ) இது பற்றி விவரம் கேட்டேன் அவர்கள் கூறியது இது புதுசாக வரவில்லை பல ஆண்டுகளாகவே இந்த சட்டம் உள்ளதாகவும் புதிதாக வருபவர்களுக்கு இது தெரிவதில்லை என்றும் கூறினார்கள், இது பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறவும் மேலும் இங்கே மேலே குறிபிடப்பட்டுள்ள பொருள்களுக்கு மட்டும் கட்டுபாடா இல்லை இது போல மேலும் பல பொருட்கள் உள்ளதா என்பதையும் விளக்குங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 13, 2010 11:18 am

உண்மை தான் பாலாகார்த்திக்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 11:20 am

ராஜா wrote:உண்மை தான் பாலாகார்த்திக்

பகரினில் இந்த கட்டுப்பாடு இல்லை என்றும் கேள்விபட்டேன் அதுவும் உண்மையா மேலும் வேறேதாவது பொருட்களுக்கு கட்டுப்பாடு உள்ளதா



ஈகரை தமிழ் களஞ்சியம் கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 13, 2010 1:12 pm

உண்மைதான் பாலா. இந்த சட்டம் பல வருசமாகவே இருக்கு.
நம்மூர் வெத்திலை இங்க தடை செய்ய பட்ட பொருள்.
ஆனா இங்க கள்ள சந்தைல கிடைக்குது.
எங்க தலைஎழுத்து வெத்திலைய கள்ள சந்தைல யாருக்கும் தெரியாமா வாங்க வேண்டி இருக்கு. துபாய் அரசாங்கத்த சொல்லியும் குற்றமில்லை. நம்ம ஆளுகதான் வெத்திலை போட்டு கண்ட இடத்துலயும் துப்பி வைக்கிறாங்களே




கழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Uகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Dகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Aகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Yகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Aகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Sகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Uகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Dகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) Hகழுத்தையும் நெரிக்கும் கசகசா (ஓபியம்) A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Oct 13, 2010 1:57 pm

உதயசுதா wrote:உண்மைதான் பாலா. இந்த சட்டம் பல வருசமாகவே இருக்கு.
நம்மூர் வெத்திலை இங்க தடை செய்ய பட்ட பொருள்.
ஆனா இங்க கள்ள சந்தைல கிடைக்குது.
எங்க தலைஎழுத்து வெத்திலைய கள்ள சந்தைல யாருக்கும் தெரியாமா வாங்க வேண்டி இருக்கு. துபாய் அரசாங்கத்த சொல்லியும் குற்றமில்லை. நம்ம ஆளுகதான் வெத்திலை போட்டு கண்ட இடத்துலயும் துப்பி வைக்கிறாங்களே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் உலகின் குப்பை இந்தியா....
கொஞ்சம் கூட சுற்றுபுற சுழல் பற்றி விழிபுணர்வு இல்லை ......



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 13, 2010 2:01 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
உதயசுதா wrote:உண்மைதான் பாலா. இந்த சட்டம் பல வருசமாகவே இருக்கு.
நம்மூர் வெத்திலை இங்க தடை செய்ய பட்ட பொருள்.
ஆனா இங்க கள்ள சந்தைல கிடைக்குது.
எங்க தலைஎழுத்து வெத்திலைய கள்ள சந்தைல யாருக்கும் தெரியாமா வாங்க வேண்டி இருக்கு. துபாய் அரசாங்கத்த சொல்லியும் குற்றமில்லை. நம்ம ஆளுகதான் வெத்திலை போட்டு கண்ட இடத்துலயும் துப்பி வைக்கிறாங்களே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் உலகின் குப்பை இந்தியா....
கொஞ்சம் கூட சுற்றுபுற சுழல் பற்றி விழிபுணர்வு இல்லை ......


இப்படியெல்லாம் சொல்லாதீங்க நண்பா ,,, நமது நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ,,அரசாங்கம் ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன செய்யும் ? நாம் நம்மாலான வரையில் சரியாக இருந்தால் நாடு தானாக சரியாகும் நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக