ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_m10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10 
VENKUSADAS
பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_m10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_m10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10 
VENKUSADAS
பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_m10பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்?

Go down

பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? Empty பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்?

Post by ayyasamy ram Sat Feb 03, 2024 6:57 am

பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? C750e56708bc3f089e22aa56895c3af672c283ad37ce0166748c2c842e0c09d5
-
விஸ்வாமித்திரர், ஏன் ராமனை காட்டுக்கு அழைத்துச் சென்றார்
என்ற கேள்விக்கு பாசுரப்படி ராமாயணத்தில் இந்த இரண்டு வரி
பதில் சொல்கிறது.

"காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து"


அதாவது, சீதைக்கு ராமனை மணம் முடிக்கவே விஸ்வாமித்திரர்
அழைத்துச் செல்கிறார். தசரதனுக்கு இது தெரியாது. அவர் ஏதோ
தாடகை வதத்திற்குத்தான் தன் மகனை அழைத்துச் செல்கிறார்
என்று நினைத்தார்.

ஆனால், வசிஷ்டருக்குத் தெரியும். ராமாயணம் என்பது வில், இல்,
சொல் என்ற மூன்று வார்த்தையில்தான் முடிகிறது.

ராமனுக்கு, "ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்" என்பார்கள். இங்கேயும்
அதுதான் நடக்கிறது. விஸ்வாமித்திரரின், ''ராமனை அனுப்பு'' என்ற
சொல், ஜனகன் வைத்திருக்கக்கூடிய வில்லைக் காட்டுகிறது.

அந்த வில், சீதையைக் கரம் பிடிக்க வைத்து, ராமனுக்கு ஒரு ''இல்''
(இல்லறம்) காட்டுகிறது. ஒரு வில்லை வளைத்து தாடகையை வதம்
புரிந்தான். ஒரு வில்லை வளைத்து ஒடித்து சீதையை மணம்
புரிந்தான்.

அவதார நோக்கம் நிறைவேறவேண்டும் என்று சொன்னால்,
விஸ்வாமித்திரர் வசிஷ்டர் போன்ற ஆச்சாரியர்கள் உதவவேண்டும்.
அதைத்தான் விஸ்வாமித்திரர் செய்கின்றார். அதை வசிஷ்டர்
அங்கீகரிக்கிறார்.

அகல்யா சாப விமோசனம் முடிந்தவுடன்,
ராமனையும் லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலைக்கு
செல்லுகின்றார் விஸ்வாமித்திரர். எதற்காக? சீதையை ராமனோடு
சேர்க்க வேண்டும் என்பதற்காக.

அதற்கான நோக்கம்தான், தாடகை வதமே தவிர, தாடகை வதம்
என்பது பிரதான நோக்கம் அல்ல. விஸ்வாமித்திரர் போன்ற
மகரிஷிகள் ஒரு ஹூங்காரத்தாலே, தாடகை போன்ற அற்ப
பகைகளை நீக்கிக் கொள்ள முடியும்.

திரி சங்கு சொர்க்கத்தையே உருவாக்கியவருக்கு தாடகை வதம்
பெரிய காரியமா என்ன? ஆனால், அதைவிட மிக முக்கியமான
காரியம் சீதையை ராமருடன் சேர்ப்பது அல்லவா.

திருவையும் மாலையும் சேர்த்தால் தானே "திருமால்" ஆவார்.
கோயில் உற்சவங்கள் எத்தனை இருந்தாலும், மிக அற்புதமான
உற்சவம் என்பது திருக்கல்யாண உற்சவம். (சேர்த்தி உற்சவம்)
அந்த உற்சவம் நடத்துவதுதான் விஸ்வாமித்திரர் நோக்கம்.

அதற்காகத்தான் மிதிலைக்கு அழைத்துச் செல்கின்றார்.
மிதிலைக்குள் நுழையும்போது, ஆடுகின்ற கொடிகளின் அசைவு
ராமனுக்கு ஒரு செய்தியைச் சொல்வது போல இருக்கிறது என்று
கம்பர் ஒரு அற்புத நயத்தைக் காட்டுகின்றார்.

`மை அறு மலரின் நீங்கி.
யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்' என்று.
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. 'ஒல்லை வா' என்று
அழைப்பது போன்றது அம்மா!'


"இந்த நகரம் (மிதிலை) செய்த தவத்தினால், மகாலட்சுமிதான்
வசிக்கின்ற தாமரைமலரில் இருந்து பிரிந்து இங்கு அவதாரம்
செய்திருக்கிறாள் அவளை மணந்து கொள்ள நீ வரவேண்டும்''
என்று வரவேற்பது போல் கொடிகள் அசைகிறதாம்.

இதற்குப் பிறகு மிதிலை வீதிகளில் நுழைகிறார்கள். ராமன்
சீதையைப் பார்க்கின்றான். மேல்மாடத்திலிருந்து சீதையும்
ராமனைப் பார்க்கின்றாள். மிக அற்புதமான ஒரு பாட்டு.

`எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்'.


அதற்குப் பிறகு, சனகர் அரண்மனையில் நுழைகிறார்கள்.
ஜனகரிடம் ராமனுடைய தோள் வலிமையைப் பற்றி மிகச் சிறப்பாக
விஸ்வாமித்திரர் கூறுகின்றார். காரணம், அந்த தோள் வலிமையைக்
காட்டித்தானே மைதிலியை மணம் முடிக்கப் போகின்றான்.

பிறகு அந்த பெரிய வில் வருகின்றது. அந்த வில்லை ராமன் வ
ளைத்தால். தன்னுடைய துயரம் தீரும் என்று ஜனகன் சொல்கின்றார்.
ராமன், ஒரு யானையைப் போல் நடந்து சென்று, வில்லை
எடுக்கின்றான்.

எப்படி எடுக்கின்றான் என்று சொன்னால், ஒரு மாலையைப் போல்
தூக்குகின்றானாம். அவன் எப்போது தூக்கினான் எப்பொழுது வில்
முறிந்தது என்பது தெரியவில்லை.

`தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது
கேட்டார்.'

இத்தனை விரிவான செய்திகளையும் “காரார் திண் சிலை இறுத்து''
என்று ஒரே வரியில் பாசுரப்படி ராமாயணத்தில் தொகுக்கிறார்
பெரியவாச்சான் பிள்ளை. ஒரு செயல் (action) என்றால், அதனுடைய
விளைவு (effect) இருக்கும் இல்லையா? அந்த விளைவு சுபவிளைவு.

ஆம்.. மைதிலியை மணம் முடிப்பது. இங்கே ஒரு அற்புதமான
விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆழ்வார்கள் பெரும்பாலும் ஜானகி,
மைதிலி என்கின்ற பெயர்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

ஜானகி என்றால் ஜனகனின் பெண். மைதிலி என்றால் மிதிலையில்
தோன்றியவள். ஜானகியின் தாயைக் குறித்து பெரிய விஷயங்கள்
எதுவும் ஆழ்வார்கள் பாடியதாகத் தெரியவில்லை.

ராமரைப் பாடுகின்ற பொழுது “மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு
வாய்த்தவன்'' என்று பாடியவர்கள், சீதையைச் சொல்லுகின்ற பொழுது,
அவளுடைய வளர்ப்புத் தந்தையான ஜனகரின் பெயரையும், அவள்
வாழ்ந்த நகரமான மிதிலையின் பெயரையும் குறிப்பிடுகின்றார்கள்.
காரணம், இரண்டுக்கும் பெருமை சேர்த்தவள் அல்லவா!

இதைப் பின்னால், அனுமன் ராமனிடமே ஒரு பாடலிலே சொல்வதாக
கம்பன் காட்சிப்படுத்துகின்றார்.

`உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெருந் தனயைஎன்னும்
தகைமைக்கும், தலைமை சான்றாள்
என் பெருந்தெய்வம்! ஐயா!
இன்னமும் கேட்டி என்பான்';


உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உனது சிறந்த மனைவி என்ற
தகுதிக்கும்; உன்னைப் பெற்ற மன் பெருமருகி என்னும் வாய்மைக்கும் –
உன்னை மகனாகப் பெற்ற அரசரான தசரத சக்கரவர்த்தியின் சிறந்த
மருமகள் என்னும் சிறப்புக்கும்; மிதிலை மன்னன் தன் பெருந்தனயை
என்னும் தகைமைக்கும் – மிதிலை நகரத்து அரசனாகிய ஜனகனுடைய
சிறந்த மகள் என்ற குணச்சிறப்புக்கும்; தலைமை சான்றாள் – தலைமை
உள்ளாதற்கு ஏற்பச் சால்புடையாள்.

ஒரு தந்தை எப்படி ஒரு பெண்ணை வளர்க்க வேண்டும்? என்பதற்கு
உதாரணமாக சீதையை, ஜனகன் வளர்த்து, தகுந்த மணமகனாகிய
ராமனுக்கு மணமுடிக்கிறார்.

எனவே, ஒரு பெண்ணுக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுப்பதில், தாயைவிட
தந்தைக்கு மிக அதிக பொறுப்பு என்பதைக் காட்டுகின்றது ராமாயணம்.

தொகுப்பு: தேஜஸ்வி- தினகரன்
-Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்!
»  உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!
» பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
» ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் வாங்கிக் கொடு, பெண்ணை கட்டிக்கோ: இப்படியும் ஒரு தந்தை......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum