புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருஞ்சுனை காத்த ஐயனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 5:36 pm

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார்.

மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள்.

அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக் காவலர்கள். அந்த மாங்கனிக்கு அப்படியொரு மகத்துவம் இருப்பதாக அந் நாட்டு அரசவையில் இருக்கும் சோதிடன் சொல்லி வைத்ததால் அரசனும் அம் மாம்பழத்தைக் காக்க வேண்டும் என்று காவலர்களை நியமித்திருந்தான்.

அங்கு மாமரம் இருக்கின்றது. அதில் எத்தனை பழம் இருக்கிறது என்றெல்லாம் அந்த விதவைப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் அன்றும் சுனைக்குச் சென்று குளித்துவிட்டு ஐயனாரை வழிபட்டுத் தான் கொண்டு சென்ற குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிட்டாள்.

விடிந்ததும் காவலர்கள் வந்தனர். சுற்றிப் பார்த்தனர் யாரும் இல்லை. மாமரத்திடம் வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நேற்று மாலை வரை இருந்த மாம்பழத்தை இன்று காணவில்லை. இது அரசனுக்குத் தெரிந்தால் நம் தலை தப்பாது என்று, காவலர்கள் அருகில் இருக்கும் இடையர்குடிக்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்களையெல்லாம் அழைத்து மாம்பழத்தைத் திருடியவர்கள் யார் என்று மிரட்டினார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் விழித்தனர். ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அந்தச் சுனை பக்கம் கூடப் போவதில்லை'' என்று சொன்னார்கள். ''உண்மையைச் சொல்லவில்லை என்றால் அரசனிடம் சொல்லி ஊரையே அழித்துவிடுவோம்'' என்று காவலர்கள் மிரட்டினர். அந்த விதவையின் தாய் தந்தையருக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ''ஐயா எங்கள் மகள் அந்தச் சுனைக்குப் போவாள். தண்ணீர் கொண்டு வருவாள். ஆனால், இந்த மாதிரிக் காரியம் எல்லாம் செய்யமாட்டாள்'' என்று கூறினர்.

காவலர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் ஆனது. பழியை அவள் மீது போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ''சரி அவளைக் கூட்டி வாருங்கள்'' என்றனர். விதவையின் தாய் தந்தையர் பயந்து போயினர். ''ஐயா, என் மகள் இதுவரை எந்த வேற்று ஆணையும் பார்த்ததில்லை. பகலில் அவள் எங்கும் வெளியில் வருவதில்லை. நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்து பாருங்கள்'' என்றனர். உடனே காவலர்களும் அவர்களின் வீட்டிற்குப் போய்த் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலும் தேடினர். பார்த்தால் அதில்தான் மாம்பழம் இருக்கிறது. மாம்பழத்தைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் கோபமும் சேர்ந்து கொள்ள காவலர்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். ''பழத்தைத் திருடிக் கொண்டு வந்ததல்லாமல் அறைக்குள் ஒளிந்திருக்கிறாளா? அவளை வெளியே வரச் சொல்லுங்கள்'' என்று சத்தமிட்டனர். விதவையின் தாய் தந்தையருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தனர். காவலர்கள் விடுவதாக இல்லை.

என்ன செய்வது? எப்படி அந்த மாம்பழம் தன் குடத்துக்குள் வந்தது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தாள் விதவை. பாவம் அவள் தண்ணீர் எடுக்கும்போது அவளுக்கும் தெரியாமல் மாம்பழம் குடத்துக்குள் வந்தது அவளுக்கெப்படித் தெரியும். அரசனுக்கு முன் நின்று நியாயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்து அரசவைக்குப் போனாள்.

அரசவை கூடிவிட்டது. காவலர்கள் ''மாம்பழத்தைத் திருடியவள் இந்தப் பெண்தான்'' என்று கூறினர். விதவைப் பெண், ''ஐயா, நான் சுனையில் குளித்து, தண்ணீர் எடுத்து வருவேனே தவிர அங்கு மாமரம் இருந்ததையோ, அதில் மாம்பழம் பழுத்திருந்ததையோ நான் அறியேன்'' என்றாள். காவலர்கள், ''இவள் மட்டுமே அங்கு போவாள். வேறு யாரும் அந்தத் திசைக்குக் கூடப் போனதில்லை. மேலும் அந்தப் பழத்தை இவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலிருந்து எடுத்தோம்'' என்று கூறினர். விதவையால் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தண்டனை கொடுப்பது என்று அரசவை முடிவெடுத்தது.

ஐயனார் மாற்றுருவில் தோன்றி அரசனிடம் அவள் குற்றமற்றவள் என்று கூறினார். விதவைக்குத் தனக்காக வந்து சாட்சி சொன்னது ஐயனார் என்று தெரிந்தது. அரசவை, ஐயனாரின் சாட்சியை ஏற்காமல் தண்டனை கொடுத்தது. கோபம் கொண்ட அந்த விதவைப் பெண், ''என் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டியதால் இந்த நாடே மண்மாரி பொழிந்து அழிந்து போகும். எனக்காக நியாயத்தைச் சொன்ன ஐயனார், ஐயனாரின் சுனை தப்பிக்கும்'' என்று கூறி மண்வாரித் தூற்றினாள். மண்மாரி பொழிந்து நாடே அழிந்தது. ஐயனாரும் சுனையும் தப்பின. அந்தப் பத்தினி விதவையிடமிருந்து சுனையைக் காத்ததால் ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார் என்ற பெயர் பெற்றார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 10, 2009 5:57 pm

எப்படி திறந்த புத்தகமாக இருக்கிறிர்கள்......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 6:00 pm

vijaydga wrote:எப்படி திறந்த புத்தகமாக இருக்கிறிர்கள்......

திறந்த புத்தகமா?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 17, 2024 6:00 pm

நீதியைக் காப்பாற்ற , அன்றும் இன்றும் , படாத பாடு படவேண்டியுள்ளது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக