புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிறுகதை - சீம்பால்! I_vote_lcapசிறுகதை - சீம்பால்! I_voting_barசிறுகதை - சீம்பால்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - சீம்பால்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 11, 2024 7:25 pm

சிறுகதை - சீம்பால்! Kalkionline%2F2023-12%2F804c550a-b7cc-4641-9dab-cc4cf97c135e%2FSample_Size_26_9_Image.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
- ஹ. ராகிணி

கமர்ந்த நிலத்தில் முளைத்தப் பயிர்களுக்கு மத்தியில் மளமளவென
வளர்ந்த களைகளைக் கழித்தப்பின், கால்வாயில் கற்களையும்
ஓடுகொண்டு ஒளிந்து கொள்ளும் நத்தைகளையும், துடுப்புப் போட்டு
துள்ளிக் குதிக்கும் மீன்களையும், வயல்களுக்குள்ளே வளை பறிக்கும்
நண்டுகளையும் மறையாவண்ணம் கண்ணாடிபோல தெளிவாய்
காட்டிவிட்டு செல்லும் வளி மூலத்தின் வரமான நீர் கைகால்களில்
படிந்த மண் சுவடுகளை வளமாகப் பெற்றுக்கொண்டு மீண்டும்
கதிர்களைத் தொட ஓடியது...

நெற்றி முனைப்பில் நிழலுக்காக போர்த்திய சீலை முந்தானை,
முடிச்சவிழ்ந்து மூச்சிரைக்க வேலை செய்தவளின் வேல் விழியோரம்
வந்த வேர்வையான வெண்முத்தை தாங்கச்சென்றது… காலை
கதிரவன் களைப்போடு மலைகளுக்கு நடுவே கண்ணயர, வானமோ
செந்தூரம்கொண்டு தன்னில் வர்ணத்தைப் பூசிக்கொள்ள,
பெண்ணவளின் காப்பு காய்த்த அந்தக் கரங்கள் காத்துச் சென்றன.

களிமண் கறைபடிந்த தூக்குச்சட்டியை… பொழுதுபோன வேளையில்
கோலமில்லா தன் வீட்டு வாசலைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள்
செண்பகம். சீமையிலே வேலை பார்க்கும் தன் மகள் சீக்கிரமாய் வீடு
வந்திருப்பதைப் பார்த்தாள்; மகளின் மங்கிய முகத்திலுள்ள சோர்வை
காணாமல்,

“அதான் சீக்கிரமா வந்துட்டேலே, செத்த கோலம் போட்டிருக்கக்
கூடாதா...? பாரு மணி 5.30 ஆச்சு, கொஞ்சம் தரையை நனைச்சு கோலம்
போட்டுடேன்…”

மறுமுனையில் பதில் கூறாமல் தாயின் சொல்லுக்குச் செவி
சாய்த்தவளாய் மீனா சோர்வுடன் ஏக்கமாய் ஏறிட்ட பார்வையால் தன்
தாயை நோக்க, அவளோ மறுகணமே மறைந்துவிட்டாள்
அடுப்பங்கறைக்குள்…

முணுமுணுப்போடு முடிந்தது எறும்புகளுக்கான அரிசிமாவு விருந்து;
மீண்டுமொரு உத்தரவு வரும்முன்னே முடிக்கா பல முக்கியப் பணிகளைச்
செய்து முடிக்க முந்திக்கொண்டு முன்னேறினாள் மீனா.

ஓயாமல் சுற்றும் காத்தாடி கண்டதோ களைத்தவளின் முகத்தில் கைப்
பேசியைக் கண்டதும் உண்டான களிப்பை… கைக்குவளையில் பானமோ,
அது பேறுகாலத்தில் பெறப்படும் பொக்கிஷமோ, அதன் மணம் கண்டதும்
மனம் பெற்றதோ புத்துணர்ச்சி…

தாயவளின் தன்மையான அழைப்பைக் காட்டிலும் தனது வயிற்றுப்பசிக்குப்
பானத்தை ருசிக்கக் குதித்தெழுந்தாள் மீனா… கடைசி சொட்டும் இல்லாமல்
காலி குவளையைக் கவிழ்த்தாள். கறை பாத்திரம் கழுவும் இடத்தில்…
“ஏன்மா, யாரு வீட்டு மாடு கன்னு போட்டுச்சு; சீம்பால் செம ருசியா இருக்கு.
ஆமா, என்ன கன்னு… காளையா, கிடெரியா…” என விடாமல் விசாரித்து
முடித்தாள், குவளை சீம்பால் குடித்ததும்…

“அதுவா, வயலுக்கு போனேன்ல, அப்ப நம்ம விசாலம் இருக்காளே அவ வந்து
தூக்குச்சட்டில குடுத்துட்டுப் போனா…” என்றாள் மிக சலிப்பாக…

“இதுக்கு ஏன்மா சலிச்சுகுற… மாடு கன்னு போட்டா நல்ல விஷயம்தானே…”

“நல்ல விஷயம்தான். ஆனா...” என இழுத்தவளிடம்

“என்னமா என்ன விஷயம்னு சொன்னாத்தானே தெரியும்…”

“அத ஏன் கேக்குற… விசாலம் வீட்டு மாடு ரொம்ப இளசானது… சீக்கிரமாவே
சினை வேற ஆயிடுச்சு… அதனால டாக்டர்லாம்கூட வந்து அப்ப அப்ப
பாத்துட்டுப் போனாங்க… அதுக்கு பேறுகாலமும் அடுத்த மாசம் தானேன்னு
இவங்களும் மேய்ச்சலுக்குத்ற தனியா விட்டுருக்காங்க…

கடைசில பாத்தா முந்தா நேத்து ராத்திரி வலி வந்து நம்ம ஊர் கவர்ன்மென்ட்
ஸ்கூல் இருக்குல, அந்த ஸ்கூல் க்ரௌண்ட்ல குட்டி போட்டிருக்கு…
காலையிலேதான் இவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு போயிருக்காங்க…”

“சரி இதனால என்ன? குட்டியும் பசுவும் நல்லா இருக்குல…”

“அட ஏன்டி நீ வேற. ராத்திரி முழுக்க மாடு வலியில கஷ்டப்பட்டுருக்கு…
அது சத்தம் கேட்டு, ஸ்கூல் வாட்ச்மேனும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களும்
போய் பாத்துருக்காங்க… குட்டி வெளிய வரப்பவே, மூச்சில்லையாம்…
சரி குட்டிதான் உயிர் இல்லாம போச்சு, பசுவ பாக்கலாம்னா, அது நச்சு
வெளியேத்த முடியாம விடிய விடிய கஷ்டப்பட்டுருக்கு; அப்புறம் டாக்டர்
வந்துதான் வெளியேத்தி காப்பாத்துனாங்களாம்…”

“அட என்னமா சொல்ற... குட்டி இறந்துடுச்சா…”
“ஆமாடி, இப்ப அந்த மாடு க்ரௌண்ட்ல சுத்தி சுத்தி தேடுதுடி…”
“ச்சே, பாவம்மா… ஏன்மா இந்த விசாலம் சித்தி இப்படி பண்ணுச்சு…
அந்த மாட்ட வீட்டிலயே கட்டிப் போட்டிருக்கக்கூடாதா… நானும் எத்தனை
முறைதான் எங்க ஆளுங்களோட வந்து இங்க காட்டுக்கத்து கத்துறது…”

“இதோட நாங்க இங்க மூணு கேம்ப் போட்டுடோம்… நீயும் மாசம் மாசம்
இப்படி ஏதாவது ஒரு கதை சொல்லிடுற… என்னதான் பண்ணுறதுன்னே
தெரியல…” என்றாள் புளுகிராஸ் ஆர்வலரான மீனா.

“ஏன்டி, என்கிட்ட கத்துற… புரிஞ்சுக்குறவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க”
எனச் சொல்லிக்கொண்டே இரவுக்கான உணவைத் தயார் செய்தாள்.

“ஆமா, எவ்ளோதான் நாங்களும் முயற்சி பண்றது…
பிள்ளைபோல பாத்துக்கணும்னா புரிஞ்சுக்காம விட்டுட்டு இப்படி எல்லாம்
பிரச்னையா வருது…” என முணுமுணுத்துக்கொண்டாள் மீனா, தனது
முகநூல் பக்கத்தில் ’சேவ் அனிமல்’என இடுகையிட்டுக் கொண்டே…
-
நன்றி-மங்கையர் மலர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

சிறுகதை - சீம்பால்! 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக