புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10தீட்டு என்பது என்ன?  வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீட்டு என்பது என்ன? வாட்ஸ் அப் பகிர்வு


   
   
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 07, 2024 6:15 pm

படித்ததில் பிடித்தது.

🌻 தீட்டு என்றால் என்ன.?

"தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

🌻 தீட்டு என்பது என்ன.?

இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

🔻 ஆண், பெண் கலந்தாலும் தீட்டு,
🔻 குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
🔻 பெண்கள் மாதவிடாயும் தீட்டு,
🔻 இறந்தாலும் தீட்டு!

இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

🔘 தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்.?

சிந்தித்துப் பாருங்கள்.
இதுவல்ல உண்மையான தீட்டு.

இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

🤗 தீட்டு என்பது வேறு அவை.,

✴ காமம்,
✴ குரோதம்,
✴ லோபம்,
✴ மதம்,
✴ மாற்சரியம்
என்னும் பஞ்சமா பாதங்கள்!

🔺 காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை.

நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

🔺 குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம்.

யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

🔺️ லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம்.

பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

🔺️ மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்).

ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

🔺️ மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை.

பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது. தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்த அகத் தீட்டுக்களையுடைவர்கள்.. இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

அதோடு புறத் தூய்மையும் சுகாதாரமும் ஒழுக்கமும் அவசியம் என்பதற்காக மற்றைய
தீட்டுகளாக நம் முன்னோர்கள் வகுத்து பகுத்தறிந்து வைத்தவைகள் தான்…….

🔻 ஆண், பெண் கலந்தாலும் தீட்டு,
🔻 குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
🔻 பெண்கள் மாதவிடாயும் தீட்டு,
🔻 இறந்தாலும் தீட்டு!

இந்த நான்கும் சற்று விலகி நிற்க வேண்டிய விஷயமாகவே சுகாதாரமாய் இருப்பதற்காக…..

இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள்………
அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் எனபதற்காக கடைபிடிக்க பட்ட ஒன்றாக இருந்தாலும் ,
விஞ்ஞான ரீதியிலும் சுகாதாரம் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ளபடுகிறது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக