ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

3 posters

Go down

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Empty #எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

Post by T.N.Balasubramanian Thu Dec 14, 2023 5:53 pm

🙇🙏🏼


#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். 81pFULpkxGL._AC_UF894,1000_QL80_


ஐந்து வயதிலேயே பிரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்ட தன் உயிரைக் காப்பாற்றியவர்; பின், திரைத் துறையில் இந்த நிலைக்கு வளந்ததற்கு தன்னை ஆசான்போல இருந்து வழிநடத்தி ஆசீர்வதித்தவர் ராகவேந்திர சாமிதான் என எப்போதும் சொல்வார் இயக்குநர், நடிகர், சமூக சேவகர் எனப் பல முகங்கள்கொண்ட ராகவா லாரன்ஸ்.  ராகவேந்திரரின் தீவிர பக்தரான இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே ராகவேந்திரருக்கு பெரிய கோயில் ஒன்றைக் கட்டியவர். சினிமாவில் மட்டும் அல்லாமல், நிஜ வாழ்விலும் பலருக்கும் முன் உதாரணமாக இருப்பவர். ராகவேந்திரர் மேல், தான் வைத்திருக்கும் பக்தி பற்றிச் சொல்கிறார்.

``என் ஐந்து வயசுல உடம்பு சரியில்லாம ஆகிடுச்சு. பிரெய்ன் ட்யூமர்னு சொல்லிட்டாங்க. `ஆப்ரேஷன் செய்யணும், அதுக்கு நிறைய செலவாகும்’னு சொன்னாங்க. நாங்க ரொம்ப ஏழ்மையான குடும்பம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் எல்லாம் கிடையாது. என் அம்மா, என்னைத் தூக்கிட்டு போகாத கோயில் இல்லை. அப்ப ஒருநாள் வடிவுடையம்மன் கோயிலுக்கு என்னை தூக்கிட்டுப் போனாங்க. அங்கே அம்மாவைப் பார்த்த பெரியவர் ஒருவர், `ராகவேந்திர சாமி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போங்க... எல்லாம் சரியாகிடும்'னு சொல்லி இருக்கார். அப்போ அம்மாவுக்கு ராகவேந்திரர் யார்னுகூடத் தெரியாது. அப்பதான் ரஜினி சார் நடிச்ச `ராகவேந்திரா’ படம் ரிலீஸ் ஆச்சு. அதைப் பார்த்துட்டுதான், `இவர்தான் ராகவேந்திர சாமிகள், அவர் சமாதி மந்திராலயத்துல இருக்கு’னு தெரிஞ்சுக்கிட்டு, என்னை மந்திராலயத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே போனதும் என் லைஃப்ல நிறைய நல்ல மாற்றங்கள்.

எனக்கு வந்த பிரெய்ன் ட்யூமர் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடுச்சு. அது மருத்துவர்களுக்கே ரொம்ப ஆச்சர்யமான விஷயமா இருந்தது. அப்பக்கூட எனக்கு இவர்தான் ராகவேந்திர சாமினு தெரியாது. அது புரியறதுக்கான வயசும் அப்ப எனக்கு இல்லை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் நான் ராகவேந்திரரைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். `இவர்தான் என்னைக் காப்பாத்தினார்’னு மனசு உருகி அவரை வணங்க ஆரம்பிச்சேன். ராகவேந்திரரின் மந்திரத்தை உச்சரிச்சுக்கிட்டே இருந்தேன்.
`பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்‌ஷாய
நமதாம் காமதேனவே...'
- இந்த மந்திரங்களைச் சொல்லும்போது எல்லாம் ஏனோ மனசுக்கு திருப்தியா இருக்கும். ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும். `நான் பூரண குணம் அடைந்தால், ராகவேந்திர சாமிக்கு கோயில் கட்டறேன்’னும் வேண்டிக்கிட்டேன். கை, கால் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. நல்லா நடனம் ஆட ஆரம்பிச்சேன். டான்ஸ்லயும் நல்ல பேரு எடுத்தேன். அந்த சமயத்துல கோயில் கட்டணும்னு என் வேண்டுதலை நிறைவேற்றும் தருணம் என் மனதில் கனவாவே வந்தது’’ என ராகவேந்திர சாமிக்குக் கோயில்கட்டத் தூண்டுதலாக இருந்த அந்தக் கனவையும், கோயில் கட்டிய அந்த அனுபவத்தையும் சொல்கிறார்.

``தொடருகிறது


Last edited by T.N.Balasubramanian on Thu Dec 14, 2023 5:57 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Empty Re: #எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

Post by T.N.Balasubramanian Thu Dec 14, 2023 5:55 pm

தொடர்ச்சி ---2 ---

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். 411176278_1775736229518597_961614755377339238_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=c42490&_nc_ohc=RgID8aVPliEAX_UCtYE&_nc_ht=scontent.fmaa2-4


நான் சம்பாதித்த பணத்துல அம்பத்தூர்ல அரை கிரவுண்டு நிலத்தை முதன்முதல்ல வாங்கினேன். அந்த இடத்தைப் பார்த்துட்டு நைட் வந்து படுக்கையில படுத்தேன். அன்னைக்கு இரவு ஒரு கனவு. அந்த நிலத்துல எதையோ தோண்டுறேன். ஒரு புதையல் மாதிரி ஏதோ கிடைக்குது; பயத்தோட அதை எடுக்குறேன். திடீர்னு கையில இருந்து அது கீழே விழுந்து உடையுது. பார்த்தால், அது ராகவேந்திர சாமி சிலை... பார்த்தவுடனே பயம் எல்லாம் போயிடுச்சு. காலையில நிலத்தைப் பார்த்துட்டு வர்றோம்.. நைட் ராகவேந்திர சாமி கனவு... `அப்ப இந்த இடம் சாமிக்குத்தான். ராகவேந்திரருக்கு இங்க கோயில் கட்டணும்’னு முடிவு பண்ணினேன். எங்க அம்மாகிட்டயும் சொன்னேன்... அப்ப அரை கிரவுண்டு நிலத்துல கோயில்கட்ட ஆரம்பிச்சது. இப்ப அந்த சாமியின் நிலம் எட்டு கிரவுண்டு நிலமாக வளர்ந்திருக்கு. நான் வளர வளர அந்த கோயிலும் என்கூடவே வளர்ந்தது.
மந்திராலத்தில் ராகவேந்திரர் சாமியைத் தொட்டுக் கும்புட முடியாது. கொஞ்சம் தூரத்துல இருந்துதான் கும்பிட முடியும். அதனால, எல்லாரும் சாமியை பக்கத்துல பார்த்து, தொட்டுக் கும்பிடணும்கிறதுக்காகவே ராஜஸ்தான்ல 5 அடிக்கு ராகவேந்திரர் சிலை செய்ய தொடங்கினோம். அதை ரஜினி சார்கிட்ட சொன்னேன். `உடனே சிலை செய்றதை நிறுத்து'ன்னு சொல்லி அவர் வீட்டுல இருந்து யோகியாக இருக்குற ராகவேந்திரர் ஸ்டில்லை எடுத்துக் கொடுத்தார். `இந்தப் படத்துல இருக்கற மாதிரி பண்ணுங்க’னு சொன்னார். அதே மாதிரி சிலையை செஞ்சு, பிரதிஷ்டை பண்ணினோம். சின்னக் கோயிலாகக் கட்ட ஆரம்பித்து, அது இந்த 20 வருஷத்துல பெரிய கோயிலாக வளர்ந்து நிக்குது. என் மனசுக்கும் ரொம்ப நிறைவா இருக்கு.
``இப்ப ராகவேந்திரர் கோயிலுக்கு மேலேயே நரசிம்மர் சாமியையும் பிரகலாதனையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு இருக்கேன். எல்லா ராகவேந்திரர் கோயில்லயும் நரசிம்மன் இருப்பார். அதனாலதான் `காஞ்சனா’ படத்துல நரசிம்மர் சாமிகிட்ட நியாயம் கேட்கிறது மாதிரி ஒரு சீனையே வெச்சு இருப்போம். அடுத்து இதே இடத்துல காயத்ரி அம்மாவுக்கும், எங்க அம்மாவுக்கும் கோயில் கட்டணும்னு முடிவு பண்ணினேன். இப்ப அதற்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. எங்க அம்மாவின் சிலையையும் அதே ராஜஸ்தான்லதான் செய்யக் கொடுத்தேன். அதுவும் வந்துடுச்சு.
ஒரு காலத்துல `சாமி எங்க... சாமி எங்க?’னு எல்லா இடத்துலயும் தேடினேன். கடைசியில வீட்டுலேயே இருக்காங்கனு உணர்ந்துக்கிட்டேன். `டேய்... உயிரோட இருக்குறவங்களுக்கு யாராவது கோயில் கட்டுவாங்களா?'னு என் குடும்பத்துக்குள்ளயே அவ்வளவு எதிர்ப்பு. `அம்மா போன பிறகு அவங்களுக்குக் கோயில் கட்டி என்ன பண்றது? இருக்கும்போதே அவங்களைச் சந்தோஷமா வெச்சுக்கணும்னு தோணுச்சு. `என் புள்ளை எனக்காக கோயிலே கட்டி இருக்கான்'னு அவங்க பெருமைப்படணும். எனக்கு அம்மாவை வணங்குறதுலதான் மிகப் பெரிய சந்தோஷம்’’ என்றவர் தொடர்கிறார்.
``தினமும் அம்மாகிட்ட, மனைவிகிட்ட பேசுற மாதிரி கடவுள்கிட்டயும் கொஞ்ச நேரம் பேசுவேன். நாள் தவறாம தியானம் பண்ணுவேன். எனக்கு காலையில எழுந்ததும் தியானம் பண்ணணும். இல்லைன்னா மாலை நேரத்துல பண்ணிடுவேன். என்னைக்காவது தியானம் பண்ணலைன்னா, எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி இருக்கும். பூஜை பண்ணி வணங்குறதுங்கிறது நாம சாமியோட பேசுவது. அதுவே, தியானம் பண்ணினால் சாமி நம்மிடம் பேசும். அதுவும் காலையில பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானம் பண்ணினால், அந்த நாள் முழுக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.
தியானத்துல பல நிலைகள் இருக்குனு சொல்லுவாங்க. எல்லா நிலைகளுக்கும் போய்ப் பார்த்துட்டேன். ஆனா, எனக்கு ராகவேந்திரர், லட்சுமி தேவி பேரு சொல்லும்போதுதான் ஏனோ ரொம்ப சந்தோஷமா இருக்கும்’’ என்கிறார்.
``என்னோட அப்பா கிறிஸ்தவர், அம்மா இந்து. ரெண்டு பேரின் கோயிலுக்குமே சின்ன வயசில் இருந்தே போவேன். மேரி மாதாவை பார்த்துட்டே இருப்பேன். தர்காவுக்கும் அடிக்கடி போவேன். இங்க சாமி ஒண்ணுதான். நாம வழிபடும் உருவங்களும் முறைகளும்தான் வேற வேற. ஏன்னா, ராகவேந்திரா சாமி கோயில் கட்ட இடம் கொடுத்தது ஒரு முஸ்லிம்தான். ஏன்... ராகவேந்திரர் கோயில்கூட ஒரு தர்கா மாதிரிதான் இருக்கும்.
ராகவேந்திரர் கோயிலுக்கு வந்து கும்பிட்டுட்டுப் போனவங்களுக்கு வேண்டுறது எல்லாம் கிடைக்குது. எனக்கு உடம்பு சரியில்லாம இருந்து, அதுக்காக வேண்டி, கோயில் கட்டி.. இப்போ அதே கோயில்ல வேண்டுறவங்களுக்கும் நல்லது நடக்குதுன்னா... அதைவிட இந்தப் பிறவியில வேற என்ன நல்ல விஷயம் இருக்க முடியும்? எல்லாரையும் சாமி நல்லாவெச்சிருக்கணும். அதுதான் என் ஒரே பிரார்த்தனை’’ என நெகிழ்கிறார் ராகவா லாரன்ஸ்!

நன்றி முகநூல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Empty Re: #எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

Post by ayyasamy ram Thu Dec 14, 2023 6:22 pm

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Ragava-lawrance
-------
#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Ragava-lawrance-daughter
------
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு வரும்
அதிகப்படியான பணத்தால் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர்.

ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற
குழந்தைகளுக்கும் உதவும் குழந்தைகளுக்கும் கொண்டவர்
ராகவா லாரன்ஸ்.
அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு லதா என்ற மனைவியும் ராகவி என்ற மகளும் உள்ளனர்.
ராகவி 1999ஆம் ஆண்டு பிறந்தார். ராகவேந்திரவின் தீவிர பக்தர்
ஆன லாரன்ஸ் தனது மகளுக்கு ராகவி என பெயர் வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார்
ராகவி. பள்ளியில் படிக்கும்போதே தனது அப்பாவை போலவே
அவருடைய ட்ரஸ்ட்டில் மெம்பர் ஆகி அங்கு உள்ள குழந்தைகளுக்கு
உதவி செய்து வருகிறார்.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Empty Re: #எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

Post by ஆனந்திபழனியப்பன் Fri Dec 15, 2023 9:13 am

சிறந்த மனிதநேயமிக்க மனிதர் குஷ்பூக்கும், சமந்தாவுக்கும் ஜூ அமைத்த மனிதர்களுக்கு மத்தியில் உண்மையான கருவறைக்கு கோயில் கட்டும் சிறந்த மனிதர்தாம் இவர் இங்கு பலபேர் மனதிலே கோவிலை கட்டிக்கொள்வார்கள் அவர்களின் மனதிற்கு இவர் செய்கிற செயல் நிச்சயமாக சாமரம் வீசும் வாழ்த்துக்கள் தோழரே அவருக்கு மட்டும் அல்ல மனதில் வைத்து பூஜிக்கும் அனைவருக்குமே தோழர்களே
ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 29/03/2023

Back to top Go down

#எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ். Empty Re: #எனக்கு #எல்லாமே #ராகவேந்திரர்தான்!”--ராகவா லாரன்ஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum