ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

Go down

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Empty என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

Post by eraeravi Tue Nov 21, 2023 1:56 pm

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,

மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50.
போன் : 044 26251968 ; பக்கங்கள் : 816 ; விலை. ரூ.1000

*****

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருபவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள், இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து உரையாற்றி, தன்னம்பிக்கை விதைத்து வருபவர். பேச்சுக்கலை பற்றி எத்தனையோ நூல்கள் வந்து இருந்தாலும் இவ்வளவு பிரமாண்டமாக இதுவரை வந்ததே இல்லை.

மேடைப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டி - இந்நூல். அவர்களுக்கு மட்டுமல்ல நேர்முகத் தேர்வு சந்திக்கும் இளைஞர்களுக்கு, வளரும் கவிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, குடும்பத்தில் எப்படி உரையாட வேண்டும், அலுவலகத்தில் எப்படி உரையாட வேண்டும், எந்த ஒரு பேச்சும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் நூல். ஆவணம் என்று சொல்ல வேண்டும். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் உன்னத நூல் இது. இது ஒரு பிரமாண்ட நூல். ஒரே நேரத்தில் வாசித்து முடித்துவிட முடியாது. ரசித்து, ருசித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க வேண்டிய நூல் இது.

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஒவ்வொரு நூலும் MASTER PIECE என்றே சொல்ல வேண்டும். அவருடைய ஒவ்வொரு நூலையும் அவரே வெல்லும் வகையில் பிரமிக்கத்தக்க வகையில் படைத்து வருகிறார். ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் வந்தபோது தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னை துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டார்கள், ‘இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்களே நினைத்தாலும் திரும்ப படைக்க முடியாது’ என்று. அதுபோலவே, ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வந்தபோது பிரபல மருத்துவர்கள் எல்லாம் படித்துவிட்டு வியந்து போனார்கள். மருத்துவர்களான நாங்கள் அறியாத பல விசயங்கள் இவர் அறிந்து எழுதி பிரமிக்க வைத்துள்ளார் என்று பாராட்டினார்கள். இந்த நூலும் அப்படித்தான். பேசும் கலை பற்றி, இப்படி ஒரு நூலை இனி யாரும் எழுத முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

வாங்கி படித்துப் பாருங்கள், நான் எழுதியவை உண்மை என்பதை உணருவீர்கள். நல்ல தரமான தாள்கள், சிறப்பான அச்சு, பொருத்தமான வண்ணப்படங்கள் என நல்லமுறையில் பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குப் பாராட்டுகள்.

நூலின் உள்ளே தகவல் பரிமாற்ற வரலாறு, உடல்மொழி இலக்கணம், உள்ளடக்கம், மேடையில் கதைகள், மேடையில் சிறக்க, மேடை நகைச்சுவை, மேடைகள் பலவிதம் என 134 தலைப்புகளில் அற்புதமாக எழுதி உள்ளார். பேசும் கலை பற்றி தகவல் தொடர்பு வரலாற்றில் தொடங்கி பேச்சாளர்களின் வகைகள் வரை எடுத்து இயம்பி உள்ளார்.எல்லோருக்கும் நாம் பேசுவதை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் .ஆனால் பிறர் பேசுவதை கேட்கும் விருப்பம் இருக்காது .கேட்டல் ,கவனித்தல் அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார் .நல்ல கேட்பாளராக இருந்தால்தான் நல்ல பேச்சாளர் ஆக முடியும் .என்பதை வலியுறுத்து உள்ளார் .

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பல உரைகளை நேரில் கேட்டு இருக்கிறேன். இணையத்திலும், புலனத்திலும், வலையொளியிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டு இருக்கிறேன். அவர் தெளிந்த நீரோடை போன்ற நடையில் பேசுவார். கவனச்சிதறல் வராதவண்ணம் யாரும் இடையில் வெளியேறாதவண்ணம் மிகச்சிறப்பாக உரையாற்றுவார். ஒருமுறை பேசிய தகவலை, மறுமுறை வராமல் பார்த்துக்கொள்வார். ஒவ்வொரு உரையும் புத்தம்புதிதாக இருக்கிறது. என்றும், எப்போதும் கேட்டு ரசிக்கும்வண்ணம் தகவல் சுரங்கமாக சிறுசிறு கதைகள், அயல்நாட்டு அறிஞர்களின் மேற்கோள்கள் என அனைத்தையும் பயன்படுத்துவார். கையில் சிறுகுறிப்பின்றி நினைவாற்றலுடன் பேசும் வல்லமை மிக்கவர். சிறந்த பேச்சாளரின் பேசும் கலை பற்றிய பிரமாண்டமான படைப்பு இந்நூல்.

ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார் . அவரைச் சொல்வார்கள், முதல்முறை கேட்டால் டாப். இரண்டாம் முறை கேட்டால் டேப் என்பார்கள். எங்கும், எப்போதும், எல்லா மேடையும் ஒரே பேச்சு, பேசியதையே பேசுவது, கூறிய நகைச்சுவைகளையே திரும்பக் கூறுவது, இப்படி பேசுபவர் அல்ல இறையன்பு அவர்கள். தினந்தோறும் புதுப்புது தகவல்களை வாரி வழங்கும் வள்ளல்.

நடமாடும் பல்கலைக்கழகம், நடமாடும் என்சைக்ளோபீடியா, நடமாடும் கூகுள் என்றே சொல்லலாம். திருக்குறள், கம்ப இராமாயணம் மட்டுமல்ல, மேல்நாட்டு இலக்கியங்களையும் அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, பொருத்தமான மேடையில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருபவர். சிலருக்கு நன்றாக எழுத வரும் ; சிலருக்கு நன்றாக பேச வரும்; வெகுசிலருக்கு நன்றாக எழுதவும்,நன்றாக பேசவும் வரும். அப்படிப்பட்ட வெகுசிலரில் சிகரமாக விளங்குபவர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.

முதுமுனைவர் என்பதையோ, இ.ஆ.ப. என்பதையோ கூட எழுதாமல் இறையன்பு என்று மட்டுமே புத்தகத்தில் உள்ளது. மிகப்பெரிய அறிஞர். அடக்கமாக, எளிமையாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. என்ன பேசுவது எப்படி பேசுவது கேள்விக்குறி போடாமல் ஆச்சரியக்குறியிட்டு படிக்கும் வாசகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள பிரமாண்டமான படைப்பு. வாழ்த்துகள்.

*****

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum