ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம்…

Go down

மனைவி அமைவதெல்லாம்… Empty மனைவி அமைவதெல்லாம்…

Post by ayyasamy ram Sat Nov 04, 2023 7:23 pm

மனைவி அமைவதெல்லாம்… Main-qimg-f186eaea2b888fb6ac424108fb7f4a8c
-
ஒருவரது ஜாதகத்தில் 7-ம் வீடு மனைவியைக் குறிக்கும் இடம். சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் காரகர்; களத்திரகாரகர். 7-ம் இடமும், 7-ம் வீட்டோனும், சுக்கிரனும், லக்னாதிபதியும் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவதுடன், மனைவியால் யோக பாக்கியங்களும் உண்டாகும்.

திருமண வாழ்க்கை வெற்றிபெறும். நல்ல அந்நியோன்யம் உண்டாகும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்போடு வாழும் நிலை அமையும்.

சூரியன், சந்திரன், லக்னம் இவை மூன்றில் எது பலம் மிக்கதோ அதற்கு 7-ம் இடம் வலுக்கவேண்டும். 7-ம் வீட்டோனும் வலுப் பெற வேண்டும். சுக்கிர பலம் சிறப்பாக இருக்கவேண்டும். பலம் என்பது குறிப்பிட்ட கிரகமானது ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம், திரிகோணம், கேந்திரம் ஆகிய நிலைகளில் இருப்பது ஆகும். அதே போன்று சுபக் கிரகப் பார்வையைப் பெற்றிருப்பது, அஷ்டக வர்க்கத்தில் குறிப்பிட்ட கிரகத்துக்கு அதிக பரல்கள் இருப்பதுவும் பலம் சேர்க்கும்.

வளர்பிறை சந்திரன் 7-ல் அமர்ந்து, பாபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள். முகம் மலர்ச்சியுடன் இருக்கும். தெளிவான மனநிலையோடு இருப்பாள். மென்மையான சுபாவம் இருக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமைவதெல்லாம்… Empty Re: மனைவி அமைவதெல்லாம்…

Post by ayyasamy ram Sat Nov 04, 2023 7:25 pm

மனைவி அமைவதெல்லாம்… Main-qimg-7f73e6f883b84ebe68ec6d379c0a0065
-
சுப பலத்துடன், சுப ஆதிபத்தியத்துடன் குரு 7-ல் அமர்ந்தால் சத்களத்திர யோகம் உண்டாகும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட மனைவி வாய்ப்பாள். மனைவியால் செல்வம் சேரும்.

7-ல் புதன் சுப பலத்துடன் இருந்தால் நற்குணமுள்ள, பேச்சாற்றல் உள்ள மனைவி அமைவாள்.

களத்திரகாரகனான சுக்கிரன் யோக காரக கிரகத்தின் சாரம் பெற்று வலுத்திருந்தாலும் 1, 4, 10, 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் உத்தம களத்திரம் அமையும்; நல்ல மனைவி வாய்ப்பாள்.

மேஷத்துக்கு சூரியனும், குருவும் யோக காரகர்கள். ரிஷபத்துக்கு சனி; மிதுனத்துக்கு புதனும் சுக்கிரனும்; கடகத்துக்கு செவ்வாய்; சிம்மத்துக்கு செவ்வாய்; கன்னிக்கு புதனும், சுக்கிரனும்; துலாத்துக்கு சனி; விருச்சிகத்துக்கு சூரியன்; தனுசுக்கு சூரியனும் செவ்வாயும்; மகரத்துக்கு புதனும் சுக்கிரனும்; கும்பத்துக்கு சுக்கிரனும் செவ்வாயும்; மீனத்துக்கு செவ்வாயும் குருவும் யோக காரகர்கள்.

7-ம் வீட்டோன் 9-ல் இருந்தால் மனைவியால் பாக்கியம் சேரும். பானை பிடித்தவள் பாக்கியசாலி; அதிர்ஷ்டம் மிகுந்தவள்.

லக்னாதிபதி, 7-ம் வீட்டோன், சுக்கிரன் ஆகியோர் வலுத்து, சுபகிரகங்கள் பார்த்தால் நற்குணமுள்ள மனைவி அமைவாள். மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவிக்குள் கருத்து ஒற்றுமை அதிகமாகும்.

களத்திரகாரகன் சுக்கிரனுக்கு 9-ல் வளர்பிறை சந்திரன், குரு ஆகியோர் அமர்ந்தால் மனைவி தெய்வபக்தி மிகுந்தவளாக அமைவாள். தான, தர்மங்களில் ஈடுபடுவாள்.

பூமி காரகன் செவ்வாய்க்கு 4, 7, 10-ம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும்.

சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரமாகவோ (1,4,7,10), திரிகோணமாகவோ (1, 5, 9) இருந்தால், மனைவியால் செல்வமும், தங்கமும், வெள்ளியும், உயர் ரக ஆடைகளும் சேரும்.

லக்னாதிபதி, 7-ம் வீட்டோன், சுக்கிரன் ஆகியோர் லக்னத்துக்கு 6, 8, 12-ம் இடங்களில் இருக்கக்கூடாது.

லக்னாதிபதியும் (ஜாதகர்), 7-ம் வீட்டோனும் (மனைவி) 6/8 என்ற நிலையில் சஷ்டாஷ்டகமாக இருப்பது கூடாது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமைவதெல்லாம்… Empty Re: மனைவி அமைவதெல்லாம்…

Post by ayyasamy ram Sat Nov 04, 2023 7:25 pm

வளர்பிறை சந்திரன், பாபிகளுடன் சேராத புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்கள் ஆவார்கள். இவர்களது தொடர்பு லக்னத்துக்கும், 7-ம் வீட்டோனுக்கும், சுக்கிரனுக்கும் அமைவது விசேஷம். இதனால் நல்ல மனைவி அமைவதற்கும், மண வாழ்க்கை சிறப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் பாபக்கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது விசேஷம் ஆகாது. இதனால் மணவாழ்க்கை பாதிக்கும்.

செவ்வாய் 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது செவ்வாய் தோஷம் ஆகும். களத்திர தோஷம் என்றும் இதை அழைப்பார்கள். இந்த தோஷம் இருந்தால் மண வாழ்க்கை பாதிக்கும். சம தோஷமாக இருந்தாலும், செவ்வாய்க்கு நல்ல ஆதிபத்தியம் இருந்தாலும், செவ்வாய் சுபகிரகப் பார்வையைப் பெற்றிருந்தாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம தோஷமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு வராது.

ஆண் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரனுக்கு முன்னும் பின்னும் பாபக் கிரகங்கள் அமைந்து, பாப கர்த்தரி யோகத்தில் சுக்கிரன் இருப்பாரானால், மனைவியின் ஆயுளுக்குப் பங்கம் உண்டாகும்.

களத்திரகாரகன் களத்திர ஸ்தானமான 7-ல் இருப்பது களத்திர தோஷம் ஆகும். ‘காரகோ பாவ நாசாய’ என்ற விதிப்படி மண வாழ்க்கையைப் பாதிக்கும். சுக்கிரனின் ஆதிபத்தியத்தைப் பொறுத்துக் கெடுபலன்கள் உண்டாகும்.

செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிக ராசிகளில் சுக்கிரன் இருப்பது விசேஷம் ஆகாது. அதுபோல் சனியின் ராசிகளான மகர, கும்பத்தில் சுக்கிரன் இருப்பதும் குறை ஆகும். காம வேட்கை அதிகமாகும். பிற பெண்கள் தொடர்பு ஏற்படும். சுக்கிரன் செவ்வாய், சனி ஆகியோரது வர்க்கம் ஏறியிருந்தாலும் இந்த நிலை உண்டாகும்.

களத்திரகாரகன் சுக்கிரனுக்குப் பாபக் கிரகங்களின் சம்பந்தம் ஏற்பட்டாலும் மனைவியைத் தவிர பிற பெண்கள் சகவாசம் ஏற்படும்.

ஜன்ம லக்னத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் அமைந்து, 7-ம் வீட்டோன் வலு குறைந்தாலும், லக்னத்தில் கேது, 7-ல் ராகு வலு குறைந்திருந்தாலும் 2-ல் கேது 8-ல் ராகு; 2-ல் ராகு, 8-ல் கேது வலு குறைந்து இருந்தாலும் மனைவியை விட்டுப் பிரிய வேண்டிவரும். சம தோஷம் இருந்தால் பாதிக்காது. சர்ப்பதோஷம் ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் போகுமானால் விவாகரத்து, மரணம் ஆகியவை ஏற்படும்.

மொத்தத்தில் ஒருவருக்கு நல்ல மனைவி அமைய, ஜாதகத்தில் லக்னாதிபதியும் (ஜாதகர்), 7-ம் வீட்டோனும் (மனைவியைக் குறிக்கும் வீட்டின் அதிபதி), 7-ம் வீடும் (மனைவியைக் குறிக்கும் வீடு), களத்திரகாரகனான சுக்கிரனும் அதிபலம் பெறவேண்டும்.

நன்றி-ராம்திலக் – சக்தி விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமைவதெல்லாம்… Empty Re: மனைவி அமைவதெல்லாம்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum