Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்கதிர்
Page 1 of 1
திரைக்கதிர்
சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா
-
சென்னை:
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் ,
விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த
திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்
ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து
தயாரிக்கின்றனர்
-தினகரன்
-
சென்னை:
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் ,
விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த
திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்
ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து
தயாரிக்கின்றனர்
-தினகரன்
Re: திரைக்கதிர்
டோலிவுட் போனார் இந்துஜா
-
-
ஐதராபாத்:
இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில்
நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம்
ஆகிறார்.
கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்
மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை
இயக்கினார்.
தொடர்ந்து டைரக்ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம்
செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’,
‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில்
உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளார்.
இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான்,
மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன்
இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு
வெளியிட்டுள்ளது.
-தினகரன்
-
-
ஐதராபாத்:
இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில்
நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம்
ஆகிறார்.
கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்
மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை
இயக்கினார்.
தொடர்ந்து டைரக்ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம்
செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’,
‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில்
உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளார்.
இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான்,
மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன்
இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு
வெளியிட்டுள்ளது.
-தினகரன்
Re: திரைக்கதிர்
ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)
-
-
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது.
அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்)
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர்.
ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு
கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப்
பிடிக்கவில்லை.
இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம்
செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு
போடுகிறார்.
அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம்
இது.
ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான
முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல்
என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும்,
தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது
என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது.
நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக
நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை
நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில்
வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் பார்க்கலாம்.
-
-தினகரன்
-
-
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது.
அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்)
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர்.
ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு
கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப்
பிடிக்கவில்லை.
இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம்
செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு
போடுகிறார்.
அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம்
இது.
ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான
முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல்
என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும்,
தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது
என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது.
நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக
நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை
நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில்
வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் பார்க்கலாம்.
-
-தினகரன்
Re: திரைக்கதிர்
ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
-
-
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம்
இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின்
நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும்
என்பது ஆசை.
அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார்.
அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார்
(மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக
பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு.
இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு
செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து
கொள்கிறார்.
தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப்
பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்.
இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க
எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச்
சொல்லியிருக்கிறது படம்.
இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின்
ரியாக்ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித்
எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப்
பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா.
கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக,
வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.
மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு
காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.
சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்.
சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல்
வெளியாகியுள்ளது.
-தினகரன்
-
-
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம்
இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின்
நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும்
என்பது ஆசை.
அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார்.
அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார்
(மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக
பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு.
இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு
செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து
கொள்கிறார்.
தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப்
பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்.
இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க
எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச்
சொல்லியிருக்கிறது படம்.
இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின்
ரியாக்ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித்
எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப்
பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா.
கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக,
வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.
மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு
காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.
சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்.
சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல்
வெளியாகியுள்ளது.
-தினகரன்
Re: திரைக்கதிர்
தமிழுக்கு வருகிறார் ஆனந்த் தேவரகொண்டா
-
-
-சென்னை:
இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா
நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’.
இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை
14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து
வெற்றியடைந்தது.
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’
கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’
பெரிய வரவேற்பை கொடுத்தது.
‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின்
ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர்
ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில்
ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ்,
தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு
வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன்
இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.
-
-தினகரன்
-
-
-சென்னை:
இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா
நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’.
இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை
14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து
வெற்றியடைந்தது.
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’
கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’
பெரிய வரவேற்பை கொடுத்தது.
‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின்
ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர்
ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில்
ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ்,
தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு
வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன்
இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.
-
-தினகரன்
Re: திரைக்கதிர்
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்.
-
-
நவம்பர் 13
-
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார்.
53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை
மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகிறார்கள்.
-
நன்றி- செய்திச்சோலை
-
-
நவம்பர் 13
-
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார்.
53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை
மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகிறார்கள்.
-
நன்றி- செய்திச்சோலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|