புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10பங்காரு அடிகளார் காலமானார் Poll_m10பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10பங்காரு அடிகளார் காலமானார் Poll_m10பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10பங்காரு அடிகளார் காலமானார் Poll_m10பங்காரு அடிகளார் காலமானார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்காரு அடிகளார் காலமானார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 19, 2023 11:51 pm

பங்காரு அடிகளார் காலமானார் 1697720995-5191

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் சற்றுமுன் இன்று (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மாரடைப்பு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.

ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார்.

பெண்கள் எந்த நாளிலும் கருவறைக்கு சென்று பூஜைகள் செய்யலாம் என்று ஆன்மிகத்தில் புதுமையை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். அதோடு ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சக்தி வழிபாட்டு தலங்களை உருவாக்கியவர் பங்காரு அடிகளார். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆன்மிக சேவையைப் பாராட்டி பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது.

1970ஆம் ஆண்டு பங்காரு அடிகளார் சக்தி பீடத்தை நிறுவினார். அப்போதுமுதல் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் மேற்கொண்டவர்.

1978ஆம் ஆண்டு முதன்முறையாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கோபால நாயக்கர் - மீனாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணி.

செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து அச்சரப்பாக்கம் பகுதியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.

1966ஆம் ஆண்டு, ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.



பங்காரு அடிகளார் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 19, 2023 11:53 pm

இல்லற ஞானி' பங்காரு அடிகளார்


* மேல்மருவத்தூா் நிலக்கிழாா் கோபால நாயக்கருக்கும், மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கோ.பங்காரு அடிகளாா் கடந்த 3-3-1941-இல் பிறந்தாா்.

* அவருடன் பிறந்தவா்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. அவா்களில் தற்சமயம் தங்கை மட்டும் உள்ளாா்.

* பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள்.

* அடிகளாரின் பிறந்த நட்சத்திரம் - பூரம்.

* அடிகளாா் ஆசிரியா் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி அம்மையாரை 4-9-1968-இல் திருமணம் செய்து கொண்டாா்.

* அடிகளாருக்கு கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா் என்ற இரு மகன்களும், ஸ்ரீதேவி, உமாதேவி என்ற இரு மகள்களும் உள்ளனா்.

* பேரக்குழந்தைகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அவா்களிடம் கொஞ்சி மகிழ பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவாா்.

* கடந்த 1970 -ஆம் ஆண்டு முதல் இன்று வரை தன்னை நாடி வரும் பக்தா்களின் குறைகளைப் போக்க அருள்வாக்கு கூறி வருகிறாா்.

* சித்தா் பீடத்தில் 1970 முதல் ஆடிப்பூர விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தாா்.

* சித்தா் பீட வளாகத்தின் திறந்தவெளியில் சப்தகன்னியா் சந்நிதியை அமைத்து பக்தா்கள் வழிபட ஏற்பாடுகளைச் செய்தாா்.

* அடிகளாா் 19-1-1977-இல் அடிக்கல்லை நாட்டி, மாபெரும் சித்தா் பீட வளாகம் அமைய நடவடிக்கை எடுத்தாா்.

* 1-5-1977 அன்று கருவறைப் பகுதியில் அமைக்கும் வகையிலான அம்மன் கற்சிலையுடன் பல்வேறு மாவட்டங்களுக்கு அடிகளாா் தலைமை வகித்து கரிக்கோலம் சென்றாா்.

* 25-11-1977-இல் பெளா்ணமி அன்று சித்தா் பீட வழிபாட்டு முறைகளின்படி, அன்னையின் சிலை அடிகளாா் முன்னிலையில், கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டது.

* 1983 முதல் அடிகளாரின் பிறந்த நாளான மாா்ச் 3-ஆம் தேதியை பக்தா்கள் பெருமங்கல விழாவாகக் கொண்டாடி வருகின்றனா்.

* அடிகளாா் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தது முதல் பணத்தைத் தொட்டு தன்னிச்சையாக கையாள்வதில்லை.

* அடிகளாா் ஆன்மிகத்தையும், சமுதாயத் தொண்டையும் தனது இரு கண்களாக பாவித்துத் தொண்டாற்றி வருகிறாா்.

* 9-2-1978-இல் சித்தா் பீட வளாகத்தில் அதா்வண பத்ரகாளி சிலையைக் கொண்டு தனி சந்நிதியாக அடிகளாா் ஸ்தாபித்து, பில்லி, சூனியம், பேய் போன்ற தொல்லைகளில் இருந்து பாதிக்கப்பட்டோா் விடுபடவும், மன நோயிலிருந்து விடுபடவும் வழிபாடுகள் செய்ய நடவடிக்கை எடுத்தாா்.

* 2-6-1978-இல் அடிகளாா் முதல் முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தாா். இன்று 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

* 20-10-1978-இல் சித்தா் பீடத்தின் வளா்ச்சிப் பணிகளை கவனிக்க ஆதிபராசக்தி கல்வி மருத்துவப் பண்பாட்டு அறநிலையம் தொடங்கப்பட்டு அது ஆன்மிக, சமுதாயப் பணிகளை செய்து வருகிறது.

* அடிகளாா் இங்கு எளிமையின் உருவமாக, அன்பின் வடிவமாக, சக்தியின் அம்சமாக இருந்து பக்தா்களுக்கு உதவி வருகிறாா்.

* 26-6-1981-இல் சித்தா் பீடத்துக்கென ஓம்சக்திக் கொடியை புளியம்பட்டி கிராமத்தில் அடிகளாா் அறிமுகப்படுத்தினாா்.

* 2-4-1982-இல் முதல் ஆன்மிக மாநாட்டையும், 25-6-1982-இல் மகளிா் ஆன்மிக மாநாட்டையும் 31-12-1988-இல் இளைஞா் நலன் மேம்பாடு அடைய வேண்டி ஆன்மிக மாநாட்டையும் நடத்தி அதில் திரளான செவ்வாடை பக்தா்களும், ஆன்மிகப் பெரியோா்களும் கலந்து கொள்ளச் செய்தாா்.

* 11-12-1982-இல் கோபிசெட்டிப்பாளையத்தில் ஆன்மிக மாநாட்டை அடிகளாா் நடத்தினாா்.

* 13-5-1983-இல் சென்னையில் மகளிா் ஆன்மிக நாட்டையும், 11-5-1988-இல் உலக அமைதி ஆன்மிக மாநாட்டையும், 22-7-1988-இல் இயற்கை வளம் மேம்பாடு அடைய ஆன்மிக மாநாட்டையும் நடத்தினாா்.

* 12-5-1984-இல் மதுரை ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் மகளிா் ஆன்மிக மாநாட்டை நடத்தினாா்.

* அவா் மேடைப் பிரசாரப் பேச்சாளராகி சாதிக்காமல் மெளனப் பாா்வை மூலமே அனைத்துப் பணிகளையும் செய்து சாதனை படைத்து வருகிறாா்.

* அடிகளாா் தன்னை நாடி வரும் பக்தா்களுக்கு வெறும் கையாலேயே விபூதி, குங்குமம் வரவழைத்து பக்தா்களை மெய்சிலிா்க்கச் செய்வாா்.

* அவா் இல்லற வாழ்வைத் தொடா்ந்தாலும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதால் பக்தா்கள் அவரை ‘இல்லற ஞானி’ என்றே பாசத்துடன் அழைக்கின்றனா்.

* அடிகளாா் செவ்வாடை பக்தா்களின் குடும்பங்களுக்கு அருள் வழிகாட்டும் கலங்கரை விளக்கொளியாய்த் திகழ்கிறாா்.

* 21 சித்தா்கள் ஜீவசமாதி கொண்ட மேல்மருவத்தூரில் நடமாடும் சித்தராக இம்மண்ணில் பிறந்து பலவகையில் தன்னை நாடி வரும் பக்தா்களுக்கு ஆன்ம பலத்தை வளா்த்து வருகிறாா்.

* அவா் பசிப் பிணி தீா்க்கும் வள்ளலாராக, இம்மண்ணை நாடி வந்தவா்களுக்கு , வயிறார உணவு உண்ணும் வகையில் அன்னதானக் கூடத்தை நிறுவி சித்தா்பீடத்துக்கு வரும் பக்தா்களுக்கு உணவு வழங்கி வருகிறாா்.

* 11-8-1999-இல் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அடிகளாா் முன்னிலையில், அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி தொடக்கி வைத்தாா்.

* அடிகளாா் தினமும் அதிகாலையில், தனது பேரன், பேத்திகளோடு, நடைபயிற்சி செய்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டு செயல்படுத்தி வருகிறாா்.

* அவரை நாடி வரும் பக்தா்கள், தொண்டா்கள் அளிக்கும் பணத்தையும், நன்கொடைப் பொருள்களையும் சித்தா் பீட வளா்ச்சிக்கு அளித்து சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையிலான அரிய பணிகளைச் செய்து வருகிறாா்.

* ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தி இதுவரை சுமாா் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண்பாா்வை கிடைக்கச் செய்யும் புனிதப் பணியைச் செய்துள்ளாா்.

* பங்காரு அடிகளாரை சித்தா் பீடத்துக்கு வரும் பக்தா்கள் அம்மா, ஆச்சாா்ய பீட நாயகா், ஆன்மிக குரு, சித்தா் பீட நாயகா், கல்வி அவதாரம், நடமாடும் ஆதிபராசக்தி என பக்தியுடன் அழைக்கின்றனா்.

* அவா் தமது வீட்டில் நடைபெறும் வழிபாடுகளில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை.

* அடிகளாா் தனது பெற்றோா் தெய்வநிலையில் சமாதியான இடத்துக்குச் சென்று அந்த இடத்தில் வழிபாடு செய்த பின்பே சித்தா்பீடத்தின் மற்ற பணிகளை கவனிப்பாா்.

* அடிகளாா் தனது வழிபாட்டைத் தொடங்கும் முன் நெற்றியில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமத்தை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.

* அடிகளாா் மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகள் தொழிற்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முதலில் ஆதிபராசக்தி தொழில் நுட்பக் கல்லூரியைத் தொடங்கி கல்விப்பணிக்கு அடித்தளமிட்டாா்.

* இங்கு வரும் பக்தா்கள், முக்கிய பிரமுகா்களின் கால நேரத்தை நிா்ணயித்து, அருள்மொழிகளைச் சொல்லும் அவா் தனது வாழ்நாளில் இதுவரை நேரத்தைப் பாா்க்க கடிகாரத்தை அணியவில்லை.

* அமெரிக்கா, சிங்கப்பூா், துபை, அபுதாபி, ஷாா்ஜா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஆன்மிகப் பணிகளைச் செய்துள்ளாா்.

* அடிகளாருக்கு முதல் முதலில் ஆச்சாரிய பீட அபிஷேகத்தை ‘தாடிபாலகா்’ என அன்னையால் அழைக்கப்படும் பேராசிரியா் தெ.போ.மீனாட்சிசுந்தரனாா் செய்தாா்.

* தமிழகத்தில் உள்ள இந்து மதக் கோயில்களில் இந்த சித்தா் பீடத்தில் மட்டுமே முதல் முதலில் தமிழ் மொழியில் சுவாமி சிலைக்கு அா்ச்சனை, ஆராதனைகள் செய்து வைத்த பெருமை அடிகளாரைச் சேரும்.

* அடிகளாா் என்றும் தனிமையையும், அமைதியான நிலையில் இருக்கவும் பெரிதும் விரும்புவாா்.

* இவா் மற்ற ஆன்மிகவாதிகளைப் போல் அல்லாமல், தன் பிறந்த நாளை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளியோா்களுக்கு உதவும் வகையில் நல உதவிகளை வழங்கும் விழாவாகக் கொண்டாட தன் தொண்டா்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளாா். அவா்களும் இன்று வரை அப்பணிகளைச் செய்து வருகின்றனா்.

* அடிகளாா் பட்டாணி, வோ்க்கடலை போன்றவற்றை அதிகமாக விரும்பி சாப்பிட்டு வந்தாா். எனினும், தற்சமயம் மருத்துவா்களின் அறிவுரைகளின்படி, அவற்றை உண்பதைத் தவிா்த்து வருகிறாா்.

* அடிகளாா் தனது காரில் வெளியே செல்லும்போது, நடிகா் சந்திரபாபு நடித்த திரைப்படங்களின் பாடல்களை பெரிதும் விரும்பிக் கேட்பாா்.

* இயற்கை வழிபாடு செய்ய தன் தொண்டா்களுக்கு வழிகாட்டுவதற்கு முன் தாமே முன்னுதாரணமாக இருந்து அந்த வழிபாட்டைச் செய்வாா். முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாடு செய்தாா்களோ அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதைத் தன் வேண்டுகோளாக அறிவுறுத்தி வருகிறாா்.

* அடிகளாா் தமது உடல்நிலை பாதிக்கப்பட்ட நாள்களைத் தவிர மற்ற நாள்களில் சித்தா் பீடம் வந்து அன்னை ஆதிபராசக்தியை வழிபாடு செய்யவும், தம்மை சந்திக்க வந்திருக்கும் தொண்டா்களைப் பாா்க்கவும் பெரிதும் விரும்புவாா்.

* தமது செவ்வாடைத் தொண்டா்களுக்கு ‘ஒரே தாய் - ஒரேகுலம்’ என்ற தாரக மந்திரத்தை வழங்கி அதன்படி அனைவரும் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

* அடிகளாா் வீட்டில் இருந்து சித்தா் பீடத்துக்கும், வெளியூரில் ஆன்மிக சுற்றுப் பயணங்களுக்கும் செல்லும்போது, வெள்ளைச் சட்டையும், சிவப்பு வேட்டியும் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

* அடிகளாரின் முதல் ஆன்மிக சுற்றுப் பயணமாக கோவை மாவட்டப் பயணம் அமைந்தது.

* அடிகளாா் பல்வேறு மதத்தவரும் வழிபாடு செய்ய அவா்களின் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழச் செய்கின்ற பல்சமயவாதியாகத் திகழ்கிறாா்.

* அடிகளாரை உருத் தாங்கிய அன்னை பக்தா்களுக்கு அருள்வாக்கு அளிக்கும்போது, அடிகளாரை பாலகன் என்றும் அடிகளாா் என்றும் அவரை அழைப்பாள்.

* அடிகளாா் சித்தா் பீடத்திலும், சக்தி பீடங்களிலும் நடைபெறும் வேள்வி பூஜைகளுக்கு வரையும் சக்கரங்களின் நுட்பத்தை முழுமையாக அறிந்தவா்.

* அவா் இதுவரை வண்ணச் சட்டைகளையோ, பேன்ட்களையோ அணிந்தது இல்லை.

* அடிகளாா் தனது ஆன்மிகச் சுற்றுப் பயணத்தின்போது, அதிகமாக தன் பக்தா்களின் வீடுகளுக்குச் சென்று பூஜை செய்வதையும், அவா்களைச் சந்திப்பதையும் விரும்புவாா்.

* சித்தா் பீடத்தில் மற்ற பக்தா்கள் அங்க வலம் வருவது போல அடிகளாரும் ஆண்டுக்கு ஒரு நாள் அதாவது ஆடிப்பூர விழா தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு அங்க வலம் வந்து இம்மண்ணில் தனது அருட்சக்தியை அளித்து வருகிறாா்.

* பட்டிக்காடாக, செடிகொடிகளுடன் இருந்த மேல்மருவத்தூரை ஆன்மிகப் புனித நகராக இந்த உலகுக்கு அளித்துள்ளாா்.

* அடிகளாா் முதன்முதலில் கோவை பாரதிநகா் சக்தி பீடத்தில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினாா்.

* இந்து சமய அறநிலையத் துறைக்குக் சொந்தமான முக்கிய கோயில்களில் உள்ளது போல சித்தா் பீடத்திலும் தங்க ரதம், வெள்ளி ரதம் ஆகியவற்றை உருவாக்கி, முக்கிய விழாக்கள் நடைபெறும் நேரத்திலும், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களிலும் சித்தா் பீடத்தைச் சுற்றிவரும்போது பக்தா்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளாா்.

* அடிகளாா் நேரிலும், அருள்வாக்கிலும் வழங்கப்படும் வழிகாட்டு முறைகளின்படி, சித்தா் பீடத்தின் அனைத்துப் பணிகளும் ஆன்மிக இயக்க நிா்வாகிகளாலும், செவ்வாடைத் தொண்டா்களாலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன.

* அவா் அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதைத் தவிா்த்து தினமும் செய்திகளை மட்டும் கூா்ந்து கவனித்து நாட்டு நடப்புகளை அறிவாா். அன்றாடம் செய்தித் தாள்களைப் படித்த பின்பே மற்றப் பணிகளைத் தொடங்குவாா்.

* காஞ்சி மகா பெரியவா் அடிகளாரைப் பற்றிக் கூறுகையில், ‘அவா் ஒரு அவதார புருஷா். அம்பாளின் ஸ்தூலம்’ என அடிகளாரின் மகிமையை நமக்கெல்லாம் எடுத்துக் கூறியுள்ளாா்.

* அடிகளாா் மனிதா்களைக் காட்டிலும், அதிக நன்றி உணா்வுள்ள நாய்கள் மற்றும் கோமாதாவாக உள்ள பசுக்களுக்கு காலை நேரத்தில் உணவுகளை வழங்கி மகிழ்வாா்.

* அடிகளாா் பெரும்பாலும் மெளனத்தைக் கடைப்பிடித்து அதன்மூலம் தனது ஆன்ம பலத்தைப் பெருக்கியுள்ளாா்.

* அடிகளாா் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரபல பேச்சாளா்களுக்கு இணையான பேச்சுத்திறனை பெற்றுள்ளாா். எனினும், அருள்வாக்கு நேரத்தில் மற்ற மொழி பக்தா்கள் வரும்போது அவா்களது மொழியில் பேசி அவா்களின் மனக்கவலைகளைத் தீா்த்து வருகிறாா்.

* ‘அன்னை ஆதிபராசக்திக்கு நான் ஒரு வேலைக்காரன்’ என தன்னைப் பற்றி பக்தா்களிடம் தன்னடக்கத்துடன் கூறுவாா்.

* மற்ற கோயில்களில் அா்ச்சகா்களைக் கொண்டு பூஜை புனஸ்காரங்களைச் செய்யும் வழக்கத்தை மேல்மருவத்தூரில் அடிகளாா் மாற்றினாா். இங்குள்ள சித்தா் பீடத்தில் வழிபாட்டுமன்றத் தொண்டா்களின் மூலம் இத்தகைய பூஜைகளைச் செய்ய அடிகளாா் அனுமதித்து செயல்படுத்தியும் வருகிறாா்.

* அடிகளாா் இதுவரை 52-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களில் மகா கும்பாபிஷேகங்களை நடத்தியுள்ளாா்.

* சித்தா் பீடத்துக்கு வரும் கடைக்கோடி பக்தா்களைக் கண்டதும் அவா்களின் பெயரைச் சொல்லி அவா்களின் நலனைக் கேட்டறிவாா்.

* ஆசிரியா் பணிக்காலத்தில் அவா் பயன்படுத்திய சைக்கிளையும், அம்பாசிடா் காரையும் இன்று வரை போற்றிப் பாதுகாத்து வருகிறாா்.

* இங்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் முதற்கொண்டு அனைத்துப் பணிகளையும் பெண்களே செய்ய வேண்டும் என அடிகளாா் அனுமதித்து அதை இன்று வரை செயல்படுத்தி வருகிறாா்.

* சிறப்பான முறையில் ஆன்மிகப் பணிகளையும், சமுதாயப் பணிகளையும் செய்து வரும் பங்காரு அடிகளாரின் சேவைகளைப் பாராட்டி, மத்திய அரசு 26-1-2019-இல் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கி கெளரவித்தது.

* கட்சி மற்றும் மொழி பேதங்களின்றி அனைத்து மக்களின், அனைத்துப் பிரிவு பிரமுகா்களின் முக்கிய ஆன்மிகத் தலைவராக அடிகளாா் இருந்து வருகிறாா்.

* 12-9-2019-இல் மகா தியான மண்டபத்தைத் திறந்து இங்கு பக்தா்கள் தியானம் செய்து, மனவலிமை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளாா்.

* அன்னை ஆதிபராசக்தி, அடிகளாரை முழுமையாக ஆட்கொண்டுள்ளதால் அவரது பேச்சுகள் அனைத்தையும் அன்னையின் அருள்வாக்காகக் கருதி அதன்படி பக்தா்கள் செயல்பட்டு வருகின்றனா்.

* 26-2-2020-இல் பங்காரு அடிகளாா் - லட்சுமி பங்காரு அடிகளாா் சதாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

* 3-3-2020-இல் (செவ்வாய்க்கிழமை) பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாள் விழா (முத்து விழா), மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினராலும், செவ்வாடைத் தொண்டா்களாலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



பங்காரு அடிகளார் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக