புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_m10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_m10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_m10இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 24, 2023 11:14 am


ஷீரடி சாயிபாபாவின் 106வது மஹாசமாதி தினம்
-
இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்! Main-qimg-54a0435a8b75ef00f534e02af94ef873
-
ஞானிகளின் கடைக்கண் பார்வை, மலை போன்ற நம் பாவங்களை
அழித்து நம்மை நல்லொழுக்க நெறியில் ஈடுபடுத்துகிறது.
அவர்களுடைய சாதாரணப் பேச்சே நமக்கு நல்ல உபதேசங்களை
வழங்குகிறது.

அத்தகைய மகான்களில் ஒருவரான ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின்
106வது மஹாசமாதி ஆண்டு 24.10.2023 விஜயதசமி நன்னாளன்று
துவங்குகிறது.

ஸ்ரீ ஷீரடி சாயியின் பக்தர்களில் முக்கியமானவர் தாஸ்கணு.
ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் என்று சாயி பக்த கோடிகளால் அன்புடன்
அழைக்கப்பட்டவர். இவர் ஒரு முறை ஈஷோபநிஷதத்திற்கு
மராத்தியில் விளக்க உரை எழுத ஆரம்பித்தார்.

ஆத்மாவின் மதிப்பு மிக்க உணர்வுகளை பதினெட்டே செய்யுட்களில்
விளக்கும் உபநிஷதம் இது. ஒரு பக்கம் தீயன செய்யத் தூண்டும்
மயக்கங்கள், மற்றொரு பக்கம் வாழ்வில் எதற்கும் கலக்கமுறாத
முழு மனநலம் வாய்க்கப் பெற்றிருப்பது.

இதில் ஒன்று கர்மா, மற்றொன்று ஞானம். இந்த நேர் எதிரிடையான
இரண்டு விஷயங்களும் ஏதோ ஓர் புள்ளியில் சந்தித்து
கூட்டிணைக்கப்படும் வாய்ப்பு வரும்போது, அந்த உயர்நிலை
இணைப்பில் பேதம் எப்படி துடைத்தழிக்கப்படுகிறது என்பதை
சுருக்கமாகவும், அற்புதமாகவும் கூறுவதுதான் ஈஷோபநிஷதம்.

இதுவே இந்த உபநிஷத்தின் மிக மிக மதிப்பு வாய்ந்த கருத்தாகும்.
தாஸ்கணுவால் இந்த சாராம்சத்தை தெளிவுற விளங்கிக்கொள்ள
முடியாததால் பாபாவை சரணடைந்து வழி காட்டும்படி வேண்டினார்.

பாபா அவரிடம், "இவ்விஷயத்தைப் பற்றிய கவலை கொள்ளாதே!
நீ வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் விலேபார்லேயில்
காகா சாஹேபின் வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து
வைப்பாள்" என்றார்.

கல்வி அறிவற்ற ஒரு வேலைக்காரியால் ஒரு உபநிஷதத்திற்கு விளக்கம்
எப்படி கிடைக்கும் என்று அங்கிருந்த கற்றறிந்த சிலர் கேலி பேசிய
போது பாபாவிடம் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ள தாஸ்கணு
எந்தவிதமான தயக்கமுமின்றி நேராக விலேபார்லே சென்று
காகா சாஹேபின் வீட்டில் தங்கினார்.

மறுநாள் ஒரு இனிமையான பாடல் ஒலி கேட்டு எழுந்தார்.
காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு
ஏழைப்பெண் களிப்பாகப் பாடிக்கொண்டே பாத்திரம் துலக்கிக்
கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது மேனியை கிழிந்த துணி ஒன்றே
அலங்கரித்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் அவளுடைய மனநிலையில் சந்தோஷத்துக்கு எந்தக்
குறைவுமில்லை.

அடுத்த நாள் ராவ் பஹதூர் ப்ரதான் என்பவர் தாஸ்கணுவிற்கு ஒரு ஜதை
வேஷ்டி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தபோது, அவரிடம் தாஸ்கணு
அந்த ஏழைச் சிறுமிக்கும் ஒரு புதிய உடை வாங்கி அளிக்கும்படி கேட்டுக்
கொண்டார்.

ராவ் பஹதூரும் அழகிய பாவாடை தாவணி ஒரு செட் வாங்கி வந்து அந்த
பெண்ணிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மறுநாள் புத்தாடையை
அணிந்து கொண்ட அவளது மகிழ்ச்சி கரை காணாது போயிற்று. தினமும்
பழையது சாப்பிடும் ஒருவனுக்கு அறுசுவை உணவு சாப்பிடக் கிடைத்தால்
எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?

அதேபோல அவள் பெருமகிழ்ச்சியோடு சுழன்று சுழன்று நடனமாடினாள்.
மற்ற சிறுமிகளோடு விளையாட்டுகளில் போட்டியிட்டு அவர்களை எல்லாம்
வென்றாள்.

அதற்கடுத்த நாள் புதிய உடையை வீட்டில் வைத்து விட்டு தன்னுடைய
பழைய கிழிந்த துணியையே அணிந்து வந்தாள். ஆனால் முன் தினம்
காணப்பெற்ற அதே அளவு ஆனந்தத்துடனேயே காணப்பட்டாள். அவள்
ஏழையானதால் கிழிசல் உடையையே அணிய வேண்டும்.

தற்போது ஒரு புதிய உடை அவளிடம் இருக்கிறது. அதை பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாள். ஆனாலும் பழைய கந்தலையே உடுத்தியும் துளிக் கூட
மனச்சோர்வோ துன்பமோ இல்லாதபடி அவள் காணப்பட்டாள்.

இவ்வாறாக வாழ்க்கையில் நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது
மனப்பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார்.
அது மட்டுமல்ல, இக்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை
நிலை, அவளது கந்தல் உடை, புதுப் பாவாடை தாவணி, அதை
அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள் இவை எல்லாம்
கடவுளின் கூறுகளே.

அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி கலந்திருக்கிறார் என்கிற உபநிஷதப்
பாடத்தின் நடைமுறை விளக்கத்தையும் தாஸ்கணு பெற்றார்.

பாபாவே தாஸ்கணுவிற்கு இந்த போதனையை நேரிடையாக செய்திருந்தால்
இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்குமா?
"காகா சாஹேப் வீட்டிலுள்ள வேலைக்காரி ரூபத்தில் உனக்கு ஞானத்தை
உபதேசித்ததும் நான்தானே?" என்று சொல்லாமல் சொல்லி, சொல்ல வந்த
விஷயத்தை ஆணித்தரமாக உணர்த்தி எல்லோர் மனதிலும் பதிய வைத்து
விட்டாரே?

வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டிலும் உண்மையிலேயே இறைவன்
நம் கூடவே இருக்கிறார்! ஈஷோபநிஷதத்தின் சாராம்சத்தை தாஸ்கணு
மஹராஜுக்கு விளக்குமுகமாக பாபா சத்சரித்திரத்தில் பக்தர்கள்
அனைவருக்கும் இந்த உண்மையை புலப்படுத்துகிறார்.

ஸ்ரீ பாபாவின் மஹாசமாதி நாளாகிய 24.10.2023 (விஜயதசமி) அன்று நாமும்
பாபாவை வழிபட்டு அவருடைய அருளுக்குப் பாத்திரமாவோம்!
-
நன்றி: ரேவதி பாலு - (கல்கி)





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக