புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_m10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_m10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_m10பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணக்காரர்கள் அதிகம் உள்ள நகரம்! டாப் 5இல் சென்னை..


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 12, 2023 12:49 pm



இந்தியாவின் சூப்பர் பணக்காரர்கள் எங்கே அதிகம் உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் சென்னை உட்பட 3 நகரங்கள் டாப் 20இல் வந்துள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகத் திணறும் போதும் கூட இந்தியாவின் வளர்ச்சி மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது. இதனால் பெரும் பணக்காரர்கள் எனப்படும் ரூ. 1,000 கோடி அல்லது அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹுருன் இந்தியா என்ற அமைப்பு 2023 ஆண்டிற்கான சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சூப்பர் பணக்காரர்கள்: இதில் நகரம் வாரியாக எந்த நகரில் சூப்பர் பணக்காரர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் டாப் 5 இடங்களில் வழக்கம் போல மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்கள் உள்ளது. இதில் பட்டியலில் திருப்பூரும் இடம்பெற்றுள்ளது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்தான்.
இந்த லிஸ்டில் டாப் இடத்தில் மும்பை இருக்கிறது. நமது நாட்டின் பொருளாதார தலைநகராக அறியப்படும் மும்பையில் மட்டும் 328 பெரும் பணக்காரர்கள் உள்ளதாக ஹுருன் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பும் 1000 கோடி ரூபாயைத் தாண்டும். இது மும்பையின் நிதி வலிமைக்குச் சான்றாகும். வங்கி, முதலீடுகள், பங்குச் சந்தைகள் என நிதித்துறையின் உயிர் நாடியாக நீண்ட காலம் மும்பை இருந்து வருகிறது. "பெரும் பணக்காரர்கள்.."
: இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் நமது நாட்டின் தலைநகரான புது டெல்லி வருகிறது. மொத்தம் 199 பெரும் பணக்காரர்களுடன் இந்த லிஸ்டில் டெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தலைநகர் டெல்லி அரசியல்வாதிகள், தொழிலதிபர்களால் நிறைந்துள்ள நிலையில், அது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளிலும் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூர் வருகிறது. இங்கே 100 பெரும் பணக்காரர்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நகரில் இருக்கும் தொழில்முனைவோருக்கு ஏற்ற சூழல், தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் இதற்குக் காரணமாகும். மேலும், பெங்களூரின் வானிலை, கலாச்சாரம் ஆகியவையும் பெரும் பணக்காரர்களைப் பெங்களூரை நோக்கி ஈர்க்கிறது.

இதில் நான்காவது இடத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நகரமும் வணிக மையமுமான ஹைதராபாத் வருகிறது. ஐதராபாத்தில் மொத்தம் 87 பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். முதலில் ஐடி துறையில் ஹைதராபாத் பெரியளவில் கால்பதிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு, ஐடி துறையில் ஹைதராபாத் அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. அங்கே ஐடி பூங்காக்கள் எண்ணிக்கை வேகமாக வளர்கிறது. கூகுள், இன்டெல் என முக்கிய நிறுவனங்களும் இங்கே தங்கள் அலுவலகங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

சென்னைக்கு எந்த இடம்:

இந்த லிஸ்டில் 67 பெரும் பணக்காரர்களுடன் சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆட்டோமொபைல், உற்பத்தி மற்றும் ஐடி துறைகளில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவை தொழிலதிபர்களைச் சென்னையை நோக்கி ஈர்க்கிறது. இதற்கு
அடுத்து குஜராத்தின் மிகப் பெரிய நகரான அகமதாபாத் 55 பணக்காரர்களுடன் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா (51 பணக்காரர்கள்) 7ஆவது இடத்தில் உள்ள நிலையில், புனே (39 பணக்காரர்கள்)
8ஆவது இடத்திலும்,
சூரத் (27 பணக்காரர்கள்) 9ஆவது இடத்திலும் உள்ளது.
இந்த லிஸ்டில் 10ஆவது இடத்தில் தேசிய தலைநகருக்கு அருகிலேயே உள்ள குருகிராம் இருக்கிறது. அங்கே 18 சூப்பர் பணக்காரர்கள் உள்ளனர்.

தமிழக நகரங்கள்: சென்னையைத் தவிர இந்த லிஸ்டில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இதில் 16 சூப்பர் பணக்காரர்கள் உடன் கோவை 12ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல 7 சூப்பர் பணக்காரர்களுடன் திருப்பூர் 19ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் திருப்பூர் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.


நன்றி தட்ஸ் தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 12, 2023 12:51 pm

அரசியல் மூலம் / அரசியலில் அதிகம் பணம் பண்ணும் மாநிலம் எதுவாக இருக்கும். ?????



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Oct 13, 2023 9:39 pm

எண்ண முடியாத அளவுக்கு பணம் தேவை தானா  அதிர்ச்சி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக