Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
3 posters
Page 1 of 1
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
ஒரு பெண்ணுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி நடந்தது.
வளையல் போட்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசி வழங்கும்
பேரில் கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தது. எல்லாரும் அந்தப்
பெண்ணுக்கு வளையலை அணிந்துவிட்டு, வாயில் சர்க்கரையையும்
அள்ளிப் போட்டு விட்டு சொன்ன செய்தி சர்க்கரையைக் கூட
கசப்பாய் மாற்றிவிட்டது.
"இந்தா பாருமா! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையைப்
பெற்றுத்தரணும்!" ஏற்கெனவே அந்தப் பெண்ணின் கணவன்
"ஆண் பிள்ளை பிறந்தால்தான் என் வீட்டுக்கு வர வேண்டும் இல்லை
எனில், உன் அப்பா வீட்டோடவே இருந்து விடு!" என்று சொன்ன
வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பிரளயத்தை நடத்திக் கொண்டிருக்க
வந்தவர்கள் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.
இந்த வார்த்தைகளைச் சொல்லிப் போனவர்கள் எல்லாம் ஊர்ப்பக்கம்
'கட்டுகளத்திகள்' என்று மரியதையோடு அழைக்கப்படும் வயதில்
முதிர்ந்த பெண்கள்! இது ஏதோ பெண்ணடிமை காலத்தில்
சொல்லப்பட்ட வார்த்தைகளும் அல்ல. நாகரிகம் மிகுந்த இந்தக்
காலத்திலும் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லப்படும் வலி மிகுந்த
வார்த்தைகள்.
குழந்தை பெறுவது ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட ஒரு
விஷயம் ! இதில் பெண்ணை மட்டும் சாடுவதும் அதுவும் பெண் குழந்தை
வேண்டாம், ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று வேண்டுவதும்
எவ்வளவு பெரிய அறியாமை!
பொதுவாக, பெண்ணியம் பேசுபவர்கள் முன் வைக்கும் கருத்து
ஆண்களால்தாம் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று!
ஆனால், இன்று பல பெண்கள் தாங்கள் அடிமையாய் இருப்பதுதாம்
தங்களின் கற்புக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்ற நினைப்பதுதான்
அவர்களை இன்னும் அடிமையாய் வைத்திருக்கிறது.
தங்களின் மீதான அடக்குமுறையையே இத்தனை யுகங்கள் அடிமையாய்
இருந்தும் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்தச் சமூகமும், அவளைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவளை,
அடிமைத் தளையைப் பூண்டு கொள்வதுதான் பெண்ணின் பிறவிப் பயன்
என்னும் மடமையைப் போதித்துக்கொண்டிருக்கிறது.
எப்பொழுது ஒரு பெண் பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவளுக்குப்
படிப்பிக்கப்படும் வாழ்க்கை பாடம் என்ன தெரியுமா! திருமணம் செய்து
வைக்கப்படும் இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை
நீ சகித்துக்கொள்ள வேண்டும். கணவன் எப்படி இருந்தாலும் அங்குதான்
உன் வாழ்க்கை!
ஒரு வேளை நீ வாழாவெட்டியாகத் திரும்பி வந்தால் இந்தச் சமூகம் எங்கள்
வளர்ப்பைத்தான் குறை சொல்லும். இப்படியான படிப்பினைகளை
நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நீட்டி முழக்கி ஒவ்வொரு நாளும் அந்தப்
பெண்ணுக்குச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
அவளின் அம்மாவும் தன் அடிமை வாழ்க்கை மூலம் தன் மகளுக்கு
எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதே
சமயத்தில் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் அப்பாவும் தன் ஆண்
பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது செலுத்த
வேண்டும் என்பதை தன் மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் காட்டுகிறார்.
காலம் காலமாய் ஆண் பெண் வேறுபாட்டையும், பெண்ணடிமையையும்,
ஆணாதிக்கத்தையும் இன்றுவரை நிலைக்கச் செய்வது இந்த
போதனைகள்தாம். இதனை படிப்பு கொடுத்து மாற்றி விடலாம் என்று
பலபேர் நினைத்தனர். இன்று எத்தனையோ பெண்கள் படித்துவிட்டார்கள்.
வேலைக்குப் போகிறார்கள். ஆண் பெண் பாலின விகிதம் எவ்வளவோ
உயர்ந்திருக்கிறது. ஆனால், மாற்றத்தின் வேகம் திருப்தியாக இல்லையே!
மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
இன்று பெண்ணடிமை வாதம் மாறிவிட்டது என்று யாராவது சொல்ல
முன்வந்தால் அவர்கள் கடைக்கோடி கிராமங்களை இன்னும் முழுமையாய்
படிக்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பெண்களுக்கு வெறும் பாலியல் கொடுமை மட்டும் பிரச்னையல்ல
உடலளவிலும் மனதளவிலும் இந்தச் சமூகம் நிதம் நிதம் ஏற்படுத்தும்
வலிகள் அதிகம்! ஆனால், அதையும் அமைதியோடு ஏற்பதே பெருமை
என்று போராடிக்கொண்டிருக்கிறது இந்தப் பெண் சமூகமும்!
இதிலிருந்து எல்லாம் வெளியே வர ஒரே வழி பெண்களே தங்களின்
பிரச்னையைப் புரிந்துகொண்டு சமூகம் என்ன நினைக்குமோ? என்று
பயந்து ஒடுங்கக் கூடாது. அதைவிட மிக முக்கியமானது பெண் என்பதில்
பெருமைகொள்ள வேண்டும்.
அந்த மனநிலைதான் பெண்ணியத்தின் முதல் படி.
இந்த வேலை பெண்ணான என்னாலும் செய்ய முடியும், தனக்குப் பெண்
குழந்தை பிறப்பதில் பெருமை, பெண் குழந்தை எனப் பேதம் பார்க்க
மாட்டேன் என்கிற மன உறுதிகளைப் பெற வேண்டும்.
இவ்வாறு நினைக்கும் சகப் பெண்களை மதித்து, அவர்களோடு இணைந்து
பணியாற்ற வேண்டும். அப்போதே சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க
முடியும்.
-
நன்றி-இர.ஏஞ்சலின் ரெனிட்டா (விகடன்)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
ஒரு பெண் கர்பம் ஆவதற்கு எப்பிடி ஆன் முக்கியமோ
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
அறியாமை என்ற இருள்.
Print out கடவுள் தான் உரிமையாளர்
Print out கடவுள் தான் உரிமையாளர்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
Similar topics
» ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...
» ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|