புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
77 Posts - 43%
heezulia
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
10 Posts - 6%
prajai
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
mruthun
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_m10நா.முத்துக்குமார் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நா.முத்துக்குமார் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 8:33 pm

காதலித்து கெட்டு போ - கவிதை
-



அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
-
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
-
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..
-
~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்
நன்றி-இணையம்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 8:38 pm


குட்டி புத்தரின் கோபம்


"" இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!''
என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்;
""அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!'

..

நெஞ்சொடு கிளத்தல்


சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!

..

உள்ளும் புறமும்



அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!

..

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 8:40 pm

நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""
--
உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்.

---------------------------

குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.


------------------------

சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.
-------------------------

பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.


-------------------

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்.

----------------------
வாழ்க்கை

கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்து கொள்கிறார்

..


சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 8:42 pm


ஸ்தல புராணம்

-
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!
..

மரணம் பற்றிய வதந்தி


திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!

..

உயில்

-
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!

..


சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 8:45 pm


இட்லிப்புத்திரர்கள்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

- நா. முத்துக்குமார்

(தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)
..

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 9:01 pm


தூர்
—-
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
-
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
-
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
-
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
-
பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
-
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 03, 2023 9:03 pm


நில் கவனி செல்
-
மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
..
முதல் காதல்
-
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
..
கூர்வாள்

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்

- நா.முத்துக்குமார்..



சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 2:54 pm

அனைத்தும் அருமையான கவிதைகள்.

பகிர்வுக்கு நன்றி.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நா.முத்துக்குமார் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 04, 2023 9:18 pm

சமீப கால கவிஞர்களில்
ஆண்களில் - அமரர் முத்துக்குமார்
பெண்மணிகளின் தாமரை.--ஆங்கில சொற்கள் கலவா தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக