ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?

Go down

இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா? Empty இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?

Post by சிவா Mon Oct 02, 2023 11:32 pm

இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா? 694b1c20-611d-11ee-bbd5-7dd593397a21

இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இது இன்னும் ஆழமடைந்துள்ளது.

இரு நாடுகளும் இந்திய பெங்கடல் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புவதால் இந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனா தனது கடற்படையை நவீனமயமாக்கியுள்ளது. ஏராளமான விமான தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டு கடற்படை கொண்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா? 0445a710-605e-11ee-8feb-1f7179b2c49b

சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “கடந்த 20-25 ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் இருப்பு மற்றும் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீன கடற்படையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உங்கள் சுற்றுப்புறத்தில் இவ்வளவு பெரிய கடற்படை இருக்கும் போது, அதன் செயல்பாடுகள் உங்கள் பக்கத்தில் அவ்வப்போது தெரியும்.” என குறிப்பிட்டார்.

சீன துறைமுக நடவடிக்கைகளை குறிப்பிடும்போது, குவாதர் மற்றும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவின் முந்தைய அரசுகள் மீதும் விமர்சனத்தை வைத்தார்.

“இதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் இந்த துறைமுகங்கள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அன்றைய அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எனவே, அவை நம் நாட்டின் பாதுகாப்பில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் இப்போது உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ” என்றார்.

இந்தியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது , முன்பை விட மிகப் பெரிய அளவில் இருக்கும் சீனாவின் இருப்புக்கு ஏற்ப இந்தியா தயாராவது சரியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

‘முத்துச்சரம்’ உத்தி


இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி வரும் உத்தி “முத்துச் சரம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த மூலோபாயம், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் மூலோபாய துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கட்டமைத்து பாதுகாப்பதை உள்ளடக்கியது. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் இந்த துறைமுகங்களை பயன்படுத்தலாம்.

சீனா தனது எரிசக்தி நலன்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களைப் பாதுகாக்க மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் வழிகளில் பல நாடுகளுடன் மூலோபாய உறவுகளை உருவாக்க உதவும் வகையில் இந்த "முத்துக்கள்" உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தில் எத்தியோப்பியா, சோமாலியா, ஜிபூட்டி, எரித்திரியா ஆகியவை உள்ள பகுதி கொம்பு போன்ற் இருப்பதால் இவை ஹார்ன் ஆப் ஆப்ரிக்கா ( Horn of Africa) என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள ஜிபூட்டி மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடாரில் சீனா துறைமுகங்களை கட்டி வருகிறது. இதுதவிர, இலங்கையின் ஹம்பாந்தோட்டையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை செயல்பாடுகளையும் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தத் துறைமுகங்கள் உதவியாக உள்ளன.

'சீனா நிரந்தர சவால்'


பாதுகாப்பு நிபுணர் சி. உதய் பாஸ்கர் இந்திய கடற்படையில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது டெல்லியில் உள்ள சொசைட்டி ஃபார் பாலிசி ஸ்டடீஸின் இயக்குநராக உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீனா கடற்படையின் இருப்பு அதிகரித்து வருவதால் இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்து என்ன என்று அவரிடம் கேட்டோம்.

இதற்கு அவர், “அச்சுறுத்தல் என்பதை விட, இது ஒரு நிரந்தர சவால் என்று நான் கூறுவேன். இந்தியப் பெருங்கடல் பகுதியில், தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்குவதன் மூலம், அந்த பகுதியில் தனது இருப்பைத் தக்கவைக்கும் திறன் இப்போது சீனாவிடம் உள்ளது. சீனா மிகவும் வலுவான கடல்சார் இருப்பைக் கொண்டுள்ளது, இது அதிகரித்து வருகிறது. அதில் கடற்படை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

சீனாவின் கடற்படை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு குறித்து பேசிய அவர், “அவர்களின் நோக்கம் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அதை என்ன செய்வார்கள்? இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்துவார்களா? போன்றவற்றை நாம் கவனமாக கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.

சரி சீனாவின் எண்ணம்தான் என்ன? “இந்தியப் பெருங்கடலில் சீனா எப்போதும் தனது வலுவான இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது” என்றும் உதய் பாஸ்கர் கூறுகிறார்.

சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?


சீன கடற்படையின் செல்வாக்கு ஒருபக்கம் அதிகரித்துவரும் சூழலில், இது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை எந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வி எழுகிறது.

சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை தற்போது சுமாராகவே உள்ளது என்கிறார் உதய் பாஸ்கர்.

“கடற்படையில் திறனை அடைவது என்பது மிகவும் மெதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்முறையாகும். ஒன்றிரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வாங்கினால் மட்டும் போதாது. நீர்மூழ்கி திறன்கள், வான்வழி கண்காணிப்பு என பலவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். ”

வைஸ் அட்மிரல் அனுப் சிங், இந்தியாவின் கிழக்கு கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

இந்த விவகாரம் குறித்து அவர் பேசும்போது, “சீனாவிடம் 500 கப்பல்கள் கொண்ட கடற்படை உள்ளது என்பது முக்கியமில்லை. கடல்வழி விநியோகம், மக்களிடையே, குறிப்பாக மாலுமிகளிடையே தொழில்முறையை வளர்ப்பதிலும் சீனா இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஏவுகணைகளின் எண்ணிக்கைதான் கடைசியில் முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை. அதேநேரம், கடற்படையின் தொழில்நேர்த்தி, தளவாட உதவி ஆகியவையும் முக்கியம். இந்தியப் பெருங்கடலில் தளவாட ஆதரவு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

சீனா அதிக எண்ணிக்கையில் பயணக் கப்பல்களை உருவாக்கியுள்ளது, ஆனால் எண்ணெய், உணவுப் பொருட்கள், நீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் துணைக் கப்பல்கள் அவர்களிடம் இல்லை என்றும் அனுப் சிங் கூறுகிறார்.

“இந்தியாவின் கடற்படை 138 கப்பல்களைக் கொண்டிருந்தாலும், புதிய கப்பல்களை கடற்படையில் இணைத்துக்கொள்வதை விட பழைய கப்பல்களை படையில் இருந்து நீக்கும் விகிதம் அதிகமாக இருப்பதால் தீபகற்ப நாடாக நம்மிடம் இன்னும் அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் உள்ளன. இது இந்தியா தன்னை சுற்றியுள்ள கடல் பகுதிகளை கட்டுப்படுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது


நீர்மூழ்கி கப்பலாக இருந்தாலும் கூட, இந்திய கடல் பகுதியில் எதுவும் இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“நீர்மூழ்கிக் கப்பல் ஒரு ஜலசந்தியைக் கடந்த பின்பு, அது நீரின் மேற்பரப்பிற்கு வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS)தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீன இதை செய்வதில்லை. எனினும் நாம் அவர்களை கண்டுபிடித்து விடுகிறோம். அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் விட்டுக்கொடுப்பதில்லை” என்றார்.

அனூப் சிங்கின் கூற்றுப்படி, “ஜிபூட்டியில் காலூன்ற சீனாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, எதிர்காலத்தில் அவர்கள் குவாடாருக்கும் வரலாம், ஆனால் அவர்கள் இன்னும் தீபகற்ப இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர்.”

மேலும், சீன கடற்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள பல மாலுமிகள் கட்டாய சேவையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அவர்களிடம் தொழில்முறை திறன் குறைவாகவே இருக்கும் என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“அவர்களின் மூத்த மாலுமிகள் மட்டுமே ஓரளவு தொழில்முறை வல்லுநர்கள். ஆனால், அவர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

உளவு பார்ப்பதாக அச்சம்


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படைக்கு சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து சுமார் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தது.

அப்போது, இந்தக் கப்பல் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கப்பல் மேற்கொள்ளும் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான பணிகள் சர்வதேச சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் சீனா கூறியிருந்தது.

எனினும், இது மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே வேலையாக கொண்ட“உளவுக் கப்பல்”என்று இந்தியாவில் கவலை எழுந்தது.

அப்போது, மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட “உளவுக் கப்பல்” என்ற கவலை இந்தியாவில் எழுந்தது. யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏழு நாட்கள் நிறுத்தப்பட்டு இருப்பது இந்தியாவை அருகில் இருந்து உளவு பார்க்க அந்த கப்பலுக்கு வாய்ப்பை ஏற்படுத்துமா என்றும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குமா என்றும் கேள்விகள் எழுந்தன.

ஹம்பாந்தோட்டையில் இருந்து வெறும் 900 கி.மீ முதல் 1500 கி.மீ வரையிலான தூரத்தில் சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் உள்ளதும் இந்தியாவின் கவலைக்கு முக்கிய காரணமாகும். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், ஹம்பாந்தோட்டையில் இருந்து 1100 கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் எண்ணிக்கையும் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதால், அவை உளவு பார்ப்பதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் கவலையாக உள்ளது.

ஆராய்ச்சிக்கும் உளவு பார்ப்பதற்கும் இடையே மிக நுண்ணிய கோடு இருப்பதாக சி உதய் பாஸ்கர், விளக்குகிறார். மேலும் அவர் “இவை அனைத்தும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் (UNCLOS) கீழ் அனுமதிக்கப்பட்ட முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகளாகவும் வகைப்படுத்தப்படலாம். எனவே இது தொடர்பாக எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. கண்காணிக்க கூடிய வசதி உள்ள அனைத்து நாடுகளும் இதில் ஈடுபடுகின்றன.” என்று தெரிவிக்கிறார்.

பிபிசி


இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum