Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
2 posters
Page 1 of 1
உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
![உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன? E4a18320-5f95-11ee-97e0-499c8a26b67a](https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/6d16/live/e4a18320-5f95-11ee-97e0-499c8a26b67a.jpg)
இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த நாள்
1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி, விளையாட்டு வரலாற்றில் மிகப் பெரிய அதிர்ச்சியாக இன்றும் பார்க்கப்படுகிறது.
அப்போது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததாகக் கருதப்பட்டது; முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.
25 ஜூன் 1983 அன்று, கிரிக்கெட் ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, இந்தியாவிற்கு எது சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ, அதைச் சாதித்தது .
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு மாறாக விவ் ரிச்சர்ட்ஸ் தனது அணியை 50-1 என அழைத்துச் சென்றபோது, அந்த கரீபிய அணியின் கொண்டாட்டத்திற்கான மற்றொரு வாய்ப்பாகத் தோன்றியது. ஆனால் பின்னர் அனைத்தும் இந்தியாவை நோக்கித் திரும்பியது.
ரிச்சர்ட்ஸ் மிட்-விக்கெட் மீது ஹூக்கை தவறாக டைம் செய்து பந்தை வெகு உயரத்துக்குச் செல்லும் விதத்தில் அடித்து அனுப்பினார். இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திய கேப்டன் கபில்தேவ் மிட்-ஆனில் இருந்து பின்வாங்கி, பந்தின் மீது தனது பார்வையை நிலைநிறுத்தி, பறந்துவந்த அந்த பந்தை தனது உள்ளங்கையில் பிடித்துக்கொண்டார். இதன் விளைவாக வலிமைமிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியைத் தழுவியது. இந்தியா மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட் மீது இந்திய அணியின் காதல் அப்போது தான் பிறந்தது.
இந்திய அணியின் மிக மோசமான செயல்பாடு
2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தான் இந்தியா மிகக்குறைந்த புள்ளிகளைப் பெற்றிருந்தது. ராகுல் டிராவிட் தலைமையிலான ஒரு அணி வங்காளதேசம் மற்றும் இலங்கையிடம் குரூப் நிலைகளில் தோல்வியடைந்து வெளியேறியது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
வர்ணனையாளர்கள் இந்தியாவின் ஆட்டத்தை "சரியாகத் திட்டமிடாத விளையாட்டு" என்று அழைத்தனர் என்பதுடன் அணியின் "பல் இல்லாத பந்துவீச்சு தாக்குதல்" மற்றும் "மோசமான பீல்டிங்" ஆகியவையே தோல்விக்கு காரணம் என்று கூறினர்.
அந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், அப்போது கட்டப்பட்டு வந்த இருந்த விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். சில நகரங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. கொல்கத்தாவில் கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
1992 உலகக்கோப்பையில் மியான்தத் - மோரே மோதல்
மார்ச் 1992 இல் சிட்னியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரே மற்றும் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத் இடையேயான மோதல் மறக்க முடியாதது.
"லெக்-சைட் கேட்சுக்கு விக்கெட் கீப்பர் விடுத்த வேண்டுகோள் அப்போது வாக்குவாதத்துக்கு வழிவகுத்தது. பின்னர் மியான்டட் கேலியாக மேலும் கீழும் குதித்தது, வெளிப்படையான சச்சரவுக்குக் காரணமாக அமைந்தது," என்று ESPN Cricinfo எழுதியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மோரே ஒரு நேர்காணலின் போது, நடந்த அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
"இந்தியில், 'கவலைப்படாதே, இந்தப் போட்டியை எளிதாக வெல்வோம்' என்று அவர் கூறிக்கொண்டிருந்தார். நான், 'அப்படியெல்லாம் இல்லை. இந்த மேட்சை நாங்கள் வெல்வோம்' என்றேன். அப்போது சச்சின் டெண்டுல்கரின் லெக் சைடுக்கும் ஒரு வேண்டுகோள் இருந்தது. அவர் பின்னால் சிக்கிவிட்டார் என்று நினைத்தேன். அப்போது நான் மேல்முறையீடு செய்தேன். ஜாவேத் என்னை திட்டினார். நான் அவரை வாயை மூடச் சொன்னேன். அவர் என்னிடமும் அதையே சொன்னார். பின்னர், நான் குதித்து ஸ்டம்பைத் தட்டிவிட்டபோது ரன் அவுட் கோரப்பட்டது," என்று மோரே கூறினார்.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்க, மியான்டட் 110 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011-ல் இந்தியா மீண்டும் சாம்பியன்
1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக 2011 ஆம் ஆண்டில், உலகக் கோப்பையைப் பெற்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தில் உற்சாகத்தை வரவழைத்த இறுதிப் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
கெளதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் கேப்டன் எம்எஸ் தோனி அற்புதமாக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தது இந்தியாவை 10 பந்துகள் மீதமிருக்கையில் புகழ்பெற்ற வெற்றியை ஈட்ட வழிவகுத்தது.
போட்டி முழுவதும் ஃபார்மிற்காக போராடிய கேப்டன், தனது வாழ்க்கையின் மிக முக்கிய இன்னிங்ஸை அப்போது விளையாடினார் என்பதுடன் நுவான் குலசேகரவின் பந்துவீச்சில் ஒரு அற்புதமான சிக்ஸரையும் அடித்திருந்தார்.
அந்த ஆறும் அதன் பின் அவருடைய எதிர்வினையும் தலைமுறைதலைமுறையாக மறக்காத நினைவுகளாக இருக்கும்.
கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன்
1975 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க பேட்டர் சுனில் கவாஸ்கர் சந்தேகத்திற்குரிய பெருமையைப் பெற்றார்.
இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 60 ஓவர்களில் 334-4 ரன்கள் எடுத்தது. அது அந்த நேரத்தில் அதிகபட்ச ODI ஸ்கோர் ஆகும். இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது.
"இந்திய ஸ்டோட்ஜ் இங்கிலாந்தின் மசாலாவைப் பின்பற்றுகிறது" என்று சண்டே டெலிகிராப் அப்போது எழுதியது.
கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 174 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் ஒரு பவுண்டரியும் இருந்தது.
இந்திய அணியின் மேலாளர் ஜி.எஸ். ராம்சந்த் இதை "நான் பார்த்த மிக அவமானகரமான மற்றும் சுயநலம் மிக்க செயல்" என்று விவரித்தார்.
"அவர் [என்னிடம்], ஆடுகளம் மோசமாக இருந்ததால் முறையாக விளையாட முடியவில்லை என மன்னிப்பு கேட்டார். ஆனால் இங்கிலாந்து 334 ரன்கள் எடுத்த பிறகு அது முட்டாள்தனமான விஷயம்," என்று அவர் கூறினார். நமது தேசப் பெருமை மிக முக்கியமானது என்றார் அவர்.
பின்னர் இது "நான் விளையாடிய மிக மோசமான இன்னிங்ஸ்" என்றும் அவரது பேட்டிங் "வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டின் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை" என்றும் கவாஸ்கர் ஒப்புக்கொண்டார்.
1999 உலகக்கோப்பையின் போது சச்சின் தந்தை மறைவு
1999 உலகக் கோப்பை போட்டியில், டெண்டுல்கர் தனது தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு சதம் அடித்தார்.
தொடக்க ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது என்பது மட்டுமல்லாமல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக, 26 வயதான டெண்டுல்கருக்கு தனது தந்தையின் மரணச் செய்தி கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அவர் விமானம் மூலம் இந்தியா திரும்பினார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா மற்றொரு தோல்வியை சந்தித்து வெளியேற்றத்தை எதிர்கொண்டது.
அவரது தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, டெண்டுல்கர் இங்கிலாந்து திரும்பினார் என்பதுடன் பிரிஸ்டலில் கென்யாவுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றாமல் 140 ரன்கள் எடுத்து இந்தியாவை 329-2 என்ற ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கென்யாவை 235-7 என இந்தியா வசதியாக கட்டுப்படுத்தி, 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது.
போட்டியின் நாயகனாக டெண்டுல்கர் தேர்வானார். .
"நான் என்ன செய்யவேண்டும் என என் தந்தை நினைத்தாரோ அதுதான் அந்த இன்னிங்ஸ் என்று எனக்கு தோன்றியது. அதுதான் மீதமுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட லண்டனுக்குத் திரும்பும் முடிவைத் தூண்டியது. நான் சதம் அடித்தாலும் கென்யாவுக்கு எதிரான போட்டி - இது எனது மிகவும் நேசத்துக்குரிய சதங்களில் ஒன்றாகும், இது நான் என் தந்தைக்கு அர்ப்பணித்த ஒன்று - என் மனம் எப்போதும் விளையாட்டில் இல்லை" என்று டெண்டுல்கர் தனது சுயசரிதையான பிளேயிங் இட் மை வேயில் (Playing It My Way) எழுதியுள்ளார்.
1996-ல் கொல்கத்தாவில் ரசிகர்கள் ரகளை
கொல்கத்தாவில் 1996 உலகக் கோப்பை போட்டியின் போது, 252 ரன்களைத் துரத்திய இந்தியா, 120-8 என்ற பரிதாப நிலையில் இருந்தது.
இதனால், ஆத்திரமடைந்த கொல்கத்தா ரசிகர் கூட்டத்தினர் மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தி மைதானத்துக்கு தீ வைத்ததால் மார்ச் மாத அரையிறுதியை நடத்த முடியாமல் போனது. உலகக் கோப்பைப் போட்டி ஒன்று கைவிடப்பட்டது அதுவே வரலாற்றில் முதலும், கடைசியுமாகும். அந்த போட்டியில் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் ஆட்டமிழக்காத பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறிய படம் அந்த போட்டியின் ஒரு நீங்கா நினைவாகத் தொடர்கிறது. "எனது நாட்டிற்காக அதைப் [வெற்றி] பெறுவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டதாக நினைத்து நான் அழுதேன்," என்று காம்ப்லி கூறினார்.
இந்திய அணியின் கேப்டனான முகமது அசாருதீன், முதலில் களமிறங்குவதைத் தேர்ந்தெடுத்ததன் காரணமாக கடுமையான பின்னடைவைச் சந்தித்தார். மேலும் அவரது வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
2003-ல் நெஹ்ரா சிறப்பான பந்துவீச்சு
2003 உலகக் கோப்பை போட்டியில் டர்பனில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 250 ரன்களை தக்கவைத்துக் கொண்டிருந்தது. இது அந்த விளையாட்டை ஒரு போட்டி என்ற நிலையில் வைத்திருந்ததே ஒழிய வெற்றி பெறும் என்ற அளவுக்கு இருக்கவில்லை.
முதல் 6 ஓவர்களில் இங்கிலாந்து 18-2 என்று இருந்தது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தீவிரமாக களத்தில் தாக்குதலைத் தொடங்கினார்.
"இதைத் தொடர்ந்து பந்து வீச்சு வேகம் பிடித்தது. விக்கெட்டுக்கு மேல் கோணலாகவும், குறுகிய வகையில் நேராக வைத்திருப்பது" என்று ESPNCricinfo இல் கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த்த வைத்தியநாதன் எழுதினார்.
கணுக்கால் வீங்கியிருந்தாலும், நெஹ்ரா தனது 10 ஓவர்களை முழுமையாக வீசினார் என்பதுடன், 6-23 என்ற குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் முடித்தார் - இது உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த செயல்பாடு ஆகும்.
இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கங்குலி - டிராவிட் சாதனை
1999 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் 300 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தபோது, அது அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
45 ஓவர்களில் 318 ரன்கள் எடுத்த அவர்களின் கூட்டு அந்த நேரத்தில் எந்தவொரு வரையறுக்கப்பட்ட ஓவர்களிலும் அதிகபட்சமாக இருந்தது.
கங்குலி 158 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் உட்பட 183 ரன்கள் எடுத்தார் - அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர். வழக்கமாக டோர் டிராவிட் 129 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 145 ரன்கள் எடுத்தார்.
இந்த பார்ட்னர்ஷிப் மூலம் இந்தியா 373 ரன்கள் குவித்து இலங்கையை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் இந்த பார்ட்னர்ஷிப்பால் தான் பாதிக்கப்பட்டதாக கூறினார் .
"அவை எனது ஆரம்ப ஆண்டுகள் மற்றும் கங்குலி மற்றும் டிராவிட் பெரிய சதங்கள் அடித்த அந்த ஆட்டத்தைப் பார்ப்பது நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று பட்லர் கிரிக்பஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஒருநாள் போட்டிகளில் தோனியின் கடைசி இன்னிங்ஸ்
ஓல்ட் ட்ராஃபோர்டில் நடந்த பரபரப்பான 2019 உலகக் கோப்பை அரையிறுதியில், போட்டிக்கு முந்தைய ஃபேவரைட்டான இந்தியா அணிக்கு, நியூசிலாந்து அணி அதிர்ச்சி அளித்தது.
அந்த ஆடுகளத்தில் வெற்றிக்காக 240 ரன்களை எடுக்க முயற்சிக்கும் போது இந்தியா 5-3 மற்றும் 24-4 என தடுமாறியது.
49-வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 11 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் தோனி ஸ்ட்ரைக்கில் நின்றார். அவர் இன்னும் அதை செய்ய முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணமாக அது அமைந்தது.
ஸ்டிரைக்கைத் தொடர முயற்சித்த தோனி, விரக்தியில் இரண்டாவது ரன் எடுக்கத் திரும்பினார். ஆனால், மார்ட்டின் கப்டிலின் நேரடி அடியால் ரன் அவுட் ஆனார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக இருந்த போதிலும், அந்த போட்டியில் தோனி ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் அடித்தார். இந்தியாவுக்கான தனது இறுதி இன்னிங்ஸில், அவர் 72 பந்துகளில் 50 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
பிபிசி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
அருமையான தகவல் கதம்பம்.
![உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிகச் சிறந்த சொற்பொழிவு!
» உலகின் மிகச் சிறந்த 3D - புகைப்படம்
» மிகச் சிறந்த வீடியோ downloader
» உலகின் மிகச் சிறந்த பிரவுசர்
» வ.உ.சி மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார்...
» உலகின் மிகச் சிறந்த 3D - புகைப்படம்
» மிகச் சிறந்த வீடியோ downloader
» உலகின் மிகச் சிறந்த பிரவுசர்
» வ.உ.சி மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|