புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_m10அதிர்வெண் மாயை - Frequency illusion  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்வெண் மாயை - Frequency illusion


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 12:48 am


அதிர்வெண் மாயை - Frequency illusion  449225-brain

அதிர்வெண் மாயை என்பது எதைக் குறிக்கிறது?



மருத்துவ அறிவியலில் அதிர்வெண் மாயை (Frequency illusion) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு மிகவும் பொதுவானதாகும்.

இது, Baader-Meinhof நிகழ்வு என்றும் அறியப்படுகிறது. இது மூளையின் நினைவகத்துடன் தொடர்புடையது.

Baader-Meinhof நிகழ்வு என்ற பெயர் 1994 இல் ஒரு ஜெர்மன் மன்ற பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1970களில் இயங்கி வந்த ஜெர்மன் பயங்கரவாதக் குழுவான ரெட் ஆர்மி ஃபெஷன் (RAF), Baader - Meinhof என்றும் அழைக்கப்பட்டது. இந்த பயங்கரவாதக் குழுவின் இரு முக்கிய தலைவர்களின் குடும்பப் பெயர்களால் அந்த குழு அழைக்கப்பட்டது. ஜெர்மன் மக்களின் கவனத்தை ஈர்த்த இந்தக் குழுவின் Baader - Meinhof பெயரிலேயே அதிர்வெண் மாயை நிகழ்வு பின்னர் அழைக்கப்பட்டது.

இந்த பெயர் சூட்டலுக்கு பின், ஜெர்மன் மன்ற நிகழ்வுகளில் பங்கேற்ற பயனர்கள் அதிர்வெண் மாயை குறித்த தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் இது ஓர் புதிய நிகழ்வல்ல. நம் ஒவ்வொருவருக்கும் நமது மூளை எவ்வாறு தனித்தன்மையுடன் செயல்படுகிறது என்பதோடு இது எப்போதும் தொடர்புடைய ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது உங்களின் மனதில் ஏதாவது ஒரு பொருள் தெரியும். நீங்கள் அதை அடிக்கடி பார்ப்பது போல் தோன்றும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் உயிரியலில் பட்டம் பெற்ற டாக்டர் நேஹா பதக், சிறப்பு இணையதளமான WebMD இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விளக்குகிறார்.

“முதலில் ஏதோ ஒன்று அடிக்கடி தோன்ற ஆரம்பித்திருக்கிறது என்று நீங்கள் நம்புவீர்கள். பின்னர் அந்த வார்த்தையோ, கருத்தோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ இப்போது இருப்பது போல் தோன்றாது என்று நீங்கள் சமாதானம் அடைவீர்கள்.

இது உறுதிப்படுத்தல் சார்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது உண்மையில் மூளையின் அதிர்வெண் அதிகரிக்கவில்லை. ஆனால், உங்கள் மூளை அதை உங்களுக்கு உணர்த்துகிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மூளை இதை செயல்படுத்துவது எப்படி?



ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரான அர்னால்ட் ஸ்விக்கி, 2005 இல் “அதிர்வெண் மாயை” என்ற வார்த்தையை முதலில் உருவாக்கினார். அவரது கூற்றுப்படி, இந்த நிகழ்வு இரண்டு நன்கு அறியப்பட்ட உளவியல் செயல்முறைகளின் விளைவாகும்.

ஒருபுறம், தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாட்டில் நாம் கவனம் செலுத்துகிறோம். இதனால் அந்த நேரத்தில் நமக்கு முக்கியமானதாக தோன்றும் விஷயத்தில் ஒருவரின் கவனம் குவிகிறது மற்றும் மற்ற விஷயங்களின் மீதான கவனம் நிராகரிக்கப்படுகிறது.

மறுபுறம் உறுதிப்படுத்தல் சார்பு செயல்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் நினைப்பதை ஆதரிக்கும் விஷயங்களைத் தேடுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கணத்தில் அதிக நீல நிற கார்களைப் பார்ப்பதன் மூலம், இவை மிகவும் பொதுவானவை என்று நாம் நம்புகிறோம். இந்த நிறத்தில் அதிக கார்கள் உள்ளன என்ற ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தல் சார்பு மேலும் உறுதிபடுத்தப்படுகிறது.

இந்த வழியில், அதிர்வெண் மாயை நம் ஒவ்வொருவருக்கும் நமது மூளை தனிப்பட்ட முறையில் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அதிர்வெண் மாயை அனுபவம் அனைவருக்கும் ஏற்படாது அல்லது இதுகுறித்த புரிதல் நமக்கு பொதுவாக இல்லாததால், ஒருவேளை இந்த அனுபவம் ஒருவருக்கு நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ளாமலும் போகலாம். ஆனால் இந்த நிகழ்வின் பரிணாமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்று பிபிசியிடம் விளக்குகிறார் மருத்துவ உளவியலாளரான ஜோனா ரியாரா.

இது மனிதர்களின் உயிர் வாழ்தலோடு தொடர்புடைய பரிணாம காரணிகளைக் கொண்டிருப்பதால், மனிதர்களில் பெரும்பாலோருக்கு இந்த அனுபவம் நிகழ்கிறது என்கிறார் உளவியில் மற்றும் மனம் தொடர்பான சிறப்பு வலைத்தளத்தின் பயிற்சி இயக்குநர்.

மனிதர்களுக்கு உணர்தல் திறன் உள்ளது. அதாவது அகம் மற்றும் புறத்தில் நிகழும் எல்லா தூண்டுதல்களும் மனித மூளையால் கவனிக்கப்படுவதில்லை. அத்தகைய சூழலில் தான் நம் புலன்கள் மூலம் அவை உணரப்பட்டு செயல்களாக்கப்படுகின்றன. அந்த செயல்முறைதான் உணர்தல் எனப்படுகிறது.

“குறிப்பிட்ட ஒரு தூண்டுதல் ஒருவரை வலுவாக ஆட்கொண்டால், ஒன்று சமீபத்தில் அது வெளிப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு தீவிர நிறத்தால் அல்லது உணர்ச்சி ரீதியாக அவரை செயல்படுத்தும் ஏதோவொன்றால் தூண்டப்பட்டிருக்கலாம் அல்லது சமீபத்தில் ஏதாவது ஒன்றை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கலாம்” என்று இதன் பரிணாம செயல்முறைகளை நிபுணர்கள் விளக்குகின்றனர்.

“அதிர்வெண் மாயையானது விண்வெளியுடன் இணைக்கப்பட்ட உணர்வின் செயலாக்கம் போன்ற பல்வேறு மூளைப் பகுதிகளை இணைக்கிறது. இது ஒருவர் தம்மை சுற்றியுள்ள உலகை புரிந்து கொள்ள பயன்படும் முக்கிய கூறாக விளங்கும் மூளையின் Parietal Lobe பகுதியில் உள்ளது. ஆனால் மனிதர்களின் உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கூறுகளும் அதிர்வெண் மாயையில் பங்கு வகிக்க முடியும்,” என்கிறார் ஸ்பானிஷ் உளவியல் நிபுணர்.

அதாவது, “அடிப்படையில் இது மூளையின் ஹிப்போகாம்பல் கட்டமைப்புகளாகும் மற்றும் மூளையின் நினைவகத்துடன் தொடர்புடையது. மனிதர்களுக்கு தன்னிச்சையாக எழும் பயம் இதற்கு ஒரு உதாரணம்” என்கிறார் அவர்.

இந்த வழியில் குறிப்பிட்ட தூண்டுதலுக்கு அதிக கவனத்தைச் செலுத்துவதன் மூலம் உணர்ச்சிக் கூறுகளை அந்த அதிர்வெண்ணின் மாயையுடன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இணைக்க முடியும். இது ஏன் ஒரு தூண்டுதல் மற்றும் பொருளுக்கு எல்லோரும் ஒரே மாதிரியாக செயல்படவில்லை என்பதை விளக்குகிறது.

உதாரணமாக ஒருவர் ஒரு கர்ப்பிணியைப் பார்க்கிறார் எனவும், அதன் பிறகு அவர் கர்ப்பிணி பெண்களை பார்ப்பதாகவும் வைத்து கொள்வோம். அது அவரது வாழ்க்கையில் அந்தத் துல்லியமான தருணத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக இருக்கலாம்.

“இது உணர்ச்சி அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவாற்றலுடனும் தொடர்புடையது. ஒருவேளை நான் குழந்தையை இழந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாக இருந்திருக்கலாம். எனவே அந்தத் துல்லியமான தருணத்தில் அது எனக்கு முக்கியமான ஒன்று,” என்கிறார் ரீரா.

நாம் எதிர்கொள்ளும் தூண்டுதலின் வகையைப் பொறுத்து, மூளையின் வெவ்வேறு பகுதிகள் அதிர்வெண் மாயை தீர்மானிக்கின்றன. மேலும் இது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது.

“ இது உளவியலில் மிகவும் அடிப்படையான ஒன்று, அதாவது நமக்கு எதிர்படும் ஒரு பொருள் அல்லது மூலப்பொருளை நாம் முழு உணர்ச்சி அமைப்பின் மூலமாக நாம் உணரும் விதத்தில் அதிர்வெண் மாயை போன்றவை ஏற்படுகிறது” என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அதிர்வெண் மாயை மூளையின் எதிர்மறை தாக்கமா?



“ஒருவர் கெட்டு போன ஒரு பழத்தை சாப்பிட்டு அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதாக வைத்து கொள்வோம். அதன் பின்னர், அது அடிக்கடி நிகழும் ஒன்றா என்பதை அறியவும் அல்லது இந்த உடல்நல கோளாறை அனுபவித்தவர்களுடன் பேசுவதற்கு குறைந்தபட்சம் சில நாட்களை அவர் செலவிடுகிறார். இது ஆபத்தான சூழலுக்கு ஏற்றவாறு ஒருவரை மாற்றியமைக்கும் மூளையின் செயல்பாடாகும்” என்கிறார் ரீரா.

எனவே, “உறுதிப்படுத்துதல் சார்பு எப்போதும் மோசமானதாக இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழும்படியாகவும் சார்புகள் உள்ளன” என்று மேலும் கூறுகிறார் அவர்.

இதில் சாதாரண விஷயம் என்னவென்றால், இது ஒரு போக்குவரத்து விபத்தை அனுபவித்தது போன்ற அதிர்ச்சிகரமான கூறுகளுடன் இணைக்கப்படாவிட்டால் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தாது.

ஆனால் இந்த விஷயத்தில் நிபுணர்களின் கூற்றுப்படி, அதிர்வெண் மாயை, மனஉளைச்சலுக்கு பிந்தைய நிலையுடன் தொடர்புடைய மற்றொரு அறிகுறியாக உருவாக்கப்படலாம், ஆனால், அது எவ்வித உடல்நலப் பிரச்னையையும், சிரமத்தையும் ஏற்படுத்தாது.



அதிர்வெண் மாயை - Frequency illusion  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக