ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?

Go down

தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு? Empty தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?

Post by சிவா Thu Sep 28, 2023 3:48 pm


தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு? Vikatan%2F2022-12%2Fd87213f9-a241-4bc9-803e-a77f5890d80d%2FFkUQKzpagAAAe_r.jfif?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி போராட்டம்:


தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், மெத்தனப்போக்குடன் செயல்படாமல் காவிரை நீரைப் பெற்றுத்தர தீவிர நடிவடைக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி கைதாகினர். அதேபோல, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சை மாவட்டம் பூதலூரில், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதேபோல, டெல்டா மாவட்டங்கள் முழுக்க காவிரி கடைமடை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.எஸ்.எம்.இ போராட்டம்:


மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், நிலைக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம், கதவடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. மேலும், இந்தப் பிரச்னைக்கு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி வரும் அக்டோபர் 9-ம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்:


கடந்த 2015-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மருத்துவப் படி உயர்வு, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50,000, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக தலைமையகங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்:


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றிவருவதாகவும், தி.மு.க தேர்தல் அறிக்கை 181-ல் வாக்குறுதி கொடுத்தபடி, பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றிவரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

என்.எல்.சி எதிர்ப்பு போராட்டம்:


நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி) 2-வது விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து கடலூரி சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விருதாச்சலம் அருகிலுள்ள மும்முடிசோழகன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி முறையான மாற்று குடியிருப்பும், நிரந்தர வேலையும் வழங்கவில்லை. மேலும், குறைந்த இழப்பீட்டுத் தொகையையே தங்களின் நிலத்திற்கு கொடுத்துள்ளதாகவும், உடனடியாக மாற்று குடியிருப்பு, நிரந்த வேலை, புதிய நில இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையப் போராட்டம்:


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடந்த 430 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, விமான நிலைய திட்டத்துக்காக நீர்நிலைகளை ஆய்வு செய்ய வரும் உயர்மட்ட வல்லுநர் குழுவுக்கு எதிராக, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இதுதவிர, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் அணிவகுத்து வருகின்றன. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களை சரி செய்வதிலும், கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!

விகடன்


தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
» குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா?
» புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்!
» டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை - ஜெயலலிதா உத்தரவு
» புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum