ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ விழிப்புணர்வு

3 posters

Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:40 pm

* காதில் அழுக்கிருந்தால் ஊசி, ஹேர் பின், பென்சில், குச்சி ஆகியவற்றாலோ பஞ்சு சுற்றிய குச்சிகள் கொண்டோ அகற்ற முயற்சிக்கக் கூடாது. இவற்றால் செவிப்பறை கிழிந்து நிரந்தரக் காது கேளாமை நேரலாம். காதிலிருக்கும் அழுக்கை அகற்றச் சிறந்த வழி காது - மூக்கு - தொண்டை மருத்துவரை அணுகுவதே.

* செவிட்டு ஊமை என்பது பிறவியிலேயே வரக்கூடியது. காது, காதின் உள்ளிருக்கும் எலும்புகள் சயாக வளர்ச்சியடையாத நிலையிலும் மூளை நோயாலும் இந் நிலை ஏற்படும். மூளை உறை அழற்சி, உட்செவி அழற்சி, தட்டம்மை, பிறவிப் பால்வினை நோய், உட்செவிக் காயம் ஆகியவற்றாலும் செவிட்டு ஊமை நிலை ஏற்படலாம்.

* "கரு விழி' என்று தவறாக அழைக்கப்படும் நிறமிலி இழைமத்தில் (Cornea) ஏற்படும் எந்தப் புண்ணும் ஆபத்தானது. விரைந்த, முனைப்பான மருத்துவம் மட்டுமே புண்ணையாற்றிப் பார்வையைக் காப்பாற்றும். அதனால் கண்ணில் சிவப்போ, புண்ணோ, வலியோ எது ஏற்பட்டாலும் கண் மருத்துவடம் உடனடியாகச் செல்வது பார்வைக்குப் பாதுகாப்பு.

* கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் வெளுத்துப் போகும் நிலையில் ஏற்படும் பார்வையிழப்பு (Cataract) தாற்காலிகமானதே; வெளுத்த லென்ûஸ அகற்றிப் புதிய லென்ஸ் பொருத்தினால் மீண்டும் பார்வை பெற முடியும். இப்படிப் பொருத்தப்படும் லென்ûஸத்தான் "இன்ட்ரா ஆக்யுலர் லென்ஸ்' (ஐ.ஓ.எல்.) என்று அழைக்கின்றனர்.

* மாறு கண் அறுவையில் கண்ணில் ஒளியேற்கும் பகுதிகளுக்குத் தொடர்பில்லை. விழிவெளிப் படலத்தின் கீழுள்ள கண்ணை இயக்கும் தசைகளைக் கணக்கீடு செய்து, ஒதுங்கும் மாறு கண்ணின் அமைப்பிற்கேற்பக் குறை நீக்கம் மேற்கொள்வதே மாறு கண் அறுவை. இது, மயக்க மருந்து தந்து 20 - 30 நிமிஷத்துக்குள் செய்யப்படும் ஆபத்தற்ற சாதாரண அறுவைச் சிகிச்சையாகும்.

* கான்டாக்ட் லென்ஸ்கள் பார்வைக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்காகவும் பயன்படுகின்றன. நாட்பட்ட நிறமிலி இழைமப் புண், நிறமிலி இழைமச் சிராய்ப்புகள், வேதி - வெப்பப் பொருட்களால் ஏற்படும் நிறமிலி இழைமத் தீக்காயங்கள், நிறமிலி இழைமத் துளை, கீறல்கள் எனும் பல்வேறு வகையான பாதிப்புகளிலிருந்து நிறமிலி இழைமத்தைக் காப்பாற்றக் கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* எய்ட்ஸ் நோயாளிகளில் 75% பேருக்குக் கண் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு வகையினவாகக் கண்டறியப்பட்டுள்ள இப் பாதிப்புகள், ஏறத்தாழக் கண்ணின் அனைத்துப் பகுதிகளையும் சேதப்படுத்துகின்றன. அதனால் ஒவ்வொரு எய்ட்ஸ் நோயாளிக்கும் முனைப்பான கண் சோதனை அவசியம்.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:41 pm

* காதுகளைத் தினமும் சுத்தம் செய்யத் தேவையில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதி இயற்கையாகவே காதுக்கு உள்ளது. தோலில் வியர்வை உண்டாவதுபோல் காதில் எண்ணெய்ப் பசை கொண்ட குருமிகள் உள்ளன. இவ்வமைப்பு, எறும்பு போன்ற சிறு பூச்சிகள் காதுகளில் நுழையாது தடுக்கின்றன. ஒருவேளை பூச்சிகள் நுழைந்துவிட்டால், சிறிது உப்பு கலந்த நீரைக் காதுக்குள் விட்டால் போதுமானது. பூச்சிகள் இறந்து மிதக்கும்.

* குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் வீட்டில் உள்ள மிக்சி போன்ற இயந்திரங்களின் ஓசையைக் கவனிக்கத் தொடங்கும். நான்கு மாதங்களில் பெயவர்கள் பேசினால் ஓசை வரும் திசையை நோக்கி முகம் பார்க்க ஆரம்பிக்கும். ஒரு வயதாகும்போது குழந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கும். இவற்றிலிருந்து குழந்தையின் காது கேட்கும் திறனை நன்கு அறியலாம்.

* பார்வைக் குறைவுள்ள குழந்தைகள் கண்களைச் சுருக்கிப் பார்க்கும். அடிக்கடி கண் சிமிட்டுவது, கண்களைத் தேய்த்துக் கொள்வது, படிக்கும்போது கண் கூச்சம், தலைவலி அல்லது தலை சுற்றல் இருப்பதாகக் கூறுவது, தலையை வித்தியாசமான நிலைகளில் வைத்து விதம் விதமான கோணங்களில் பொருளைப் பார்ப்பது முதலியன பார்வைக் குறைவின் அடையாளங்கள். பெற்றோரும் ஆசியர்களும்குழந்தைகளின் இச் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து மருத்துவடம் குழந்தையை உடனேகாண்பிக்க வேண்டும்.

* குழந்தை பிறந்த உடனேயே அதற்குக் காதுகள் கேட்கின்றனவா என்பதைச் சோதிக்கக் கையைத் தட்டியோ, கதவை வேகமாகச் சாத்தியோ பார்க்கலாம். குழந்தை அதிர்ச்சியடைந்து உடலை அசைக்கும். ஓசை வந்த திசையை நோக்கிக் குழந்தையின் கண் போகும். இவை குழந்தைக்குக் காது கேட்கிறதென்பதை உறுதிப்படுத்தும் வெளிப்பாடுகளாகும்.

* உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள், தோல் மீது பட்டால் சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ அந்த இடம் தடித்து வீங்கி விடும். இதனை ஒட்டுக் கரப்பான் என்பர். செய்யும் தொழில், உடுத்தும் உடை, காலணி, பயன்படுத்தும் அலங்காரப் பொருள்கள், உணவு, மருந்து, உலோகம், தாவரம் என எதன் காரணமாகவும் ஒட்டுக் கரப்பான் வரலாம்.

* பொதுவாக ஆறு மீட்டர் தொலைவில் உள்ள பொருளைக் குழந்தை அடையாளம் காண வேண்டும். மூன்று மீட்டர் தொலைவு வரை அடையாளம் சொல்லிவிட்டால் நல்லது. அதற்கும் குறைவான தொலைவில்தான் பொருளின் அடையாளம் குழந்தைக்குத் தெகிறது என்றால் கண் மருத்துவடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

* பிறவியிலேயே மாறு கண் ஏற்படலாம். வளரும் போதும் ஏற்படலாம். சில குழந்தைகளுக்குப் பிறப்பில் மாறு கண் இருக்காது. ஆனால் தூரப் பார்வைக் கோளாறு பிறவியிலிருந்தே இருக்கும். இந் நிலையில் இரண்டு வயதாகும்போது எந்தக் கண்ணில் தூரப் பார்வைப் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்தக் கண்ணில் மாறு கண் ஏற்படும்.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by தாமு Tue Jan 26, 2010 3:42 pm

super anna மருத்துவ விழிப்புணர்வு 677196 மருத்துவ விழிப்புணர்வு 677196 மருத்துவ விழிப்புணர்வு 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:52 pm

* மாறு கண் அதிர்ஷ்டத்தின் குறியீடல்ல. அது, கண்ணை இயக்கும் தசைகளில் ஏற்படும் தளர்வின் அல்லது தூண்டலின் காரணமாக ஏற்படும் குறைபாடாகும். சிறு வயதில் பயிற்சி மூலம் இக் குறைகளைச் ச செய்யலாம். தேவையெனில் அறுவைச் சிகிச்சை செய்தும் ச செய்யலாம். மாறு கண் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்குப் பார்வைத் திறன் குறைவிருப்பதால், உடனடியாகக் கண் மருத்துவடம் ஆலோசனை பெறுவது நல்லது.

* நடுவயதுக்காரர்களில் சிலருக்கு ஊசித் தலையளவு அல்லது அதைவிடச் சற்றுப் பெய அளவிலான சிவப்புப் புள்ளிகள் முகம், மார்பு, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தோன்றலாம். இவை சிறு சிறு முடிச்சுகள் போலவும் அமையலாம். இவற்றால் ஆபத்து ஏதுமில்லை என்பதால் மருத்துவம் தேவையில்லை.

* வியர்வை அதிகமாகவும் தொடர்ந்தும் ஏற்படும் நிலையில்தான் வியர்க்குரு (Prickly heat) உண்டாகிறது. இது பொதுவாகக் குழந்தைகள், சிறுவர்கள், பருமனான உடல்உள்ளவர்கள் ஆகியோரையே அதிகம் பாதிக்கிறது. சிறு சிறு மொக்குகளாகத் தோல் முழுவதும் தோன்றும் வியர்க்குரு அதாகவே கொப்புளங்களாகும். வியர்வை இல்லாமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவுக்கு "டாட்டா' !

* சிறுவர், சிறுமியர் கண்ணிமைகளை அடிக்கடி தேய்த்துக் கொண்டால், இமை முடிகளில் பேன்கள் இருப்பதாக அர்த்தம். 'Paediculosis bulbi’ எனப்படும் இப் பேன்கள், இமை முடிகளில் முட்டையிட்டு வாழும் தன்மையுடையவை. இமை முடிகளைக் கத்தத்து நீக்கி, இமை விளிம்பில் மருந்திட்டு இவற்றை அகற்ற வேண்டும். சில நேரங்களில் இவற்றை அகற்ற இடுக்கிகூடத் தேவைப்படும்.

* பார்ப்பனவெல்லாம் இரண்டிரண்டாகத் தெகிறதென்றால், கண் தசைகளை இயக்கும் நரம்புகளில் கோளாறு என்று பொருள். இக் கோளாறு தசைத் தளர்வாகவும் மிகைத் தூண்டலாகவும் அமையலாம். நரம்பு தொடர்பான இந் நிலையைச் சசெய்யக் கண் மருத்துவடமும் நரம்பு மருத்துவடமும் செல்ல வேண்டும்.

* தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி அணிந்து கொள்வது தலைவலியைப் போக்கப் பயன்படாது. மேலும் பார்வைத் திறனில் உள்ள குறைபாடு காரணமாகவே தலைவலி தோன்றுவதால், அக் குறை நீக்கத் தரப்படும் கண்ணாடியை வலி நிவாரணியாகக் கருதாமல், பார்வை மேம்பாட்டுச் சாதனமாகக் கொண்டு எப்போதும் அணிவது அவசியம்.

* சர்க்கரை நோயாளிகளும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண் சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளிலும் பார்வைத் திரை ("ரெட்டினா') ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவேற்பட வாய்ப்பு உண்டு. இக் கசிவுகள் பார்வைக் குறைவையோ, பார்வையிழப்பையோ உண்டாக்கக் கூடுமாதலால் முன்னெச்சக்கை தேவை.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:53 pm

* தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்ணை மூடி ஐந்து நிமிஷம் இருந்தால் போதும். தூசு ஏற்படுத்தும் உறுத்தலால் பெருகும் கண்ணீர் வெள்ளம், அந்தத் தூசை வெளியே கொண்டு வந்து விடும். ஐந்து நிமிஷக் கண் மூடலுக்குப் பிறகும் தூசு இருப்பதாக உணர்ந்தால், கண் மருத்துவடம் சென்று தூசை அகற்றிக் கொள்ள வேண்டும்.

* 35 வயதுக்கு மேல் உடலில் ஏற்படும் இயல்பான தளர்வு காரணமாகவே வெள்ளெழுத்து உண்டாகிறது. கண்ணிலுள்ள லென்ûஸ, பார்வைப் புலனில் வரும் பொருளின் தொலைவுக்கேற்ப தகவமைத்துக் கொடுக்கும் தசை நார்களின் தளர்வே வெள்ளெழுத்துக்கு வாயிலாகிறது. இதற்குத் தீர்வு கண்ணாடிகள்தான்.

* உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ தயாப்பு தோல் வழியாகவே நடைபெறுகிறது. தோலின் மேற்பகுதியில் உள்ள (Epidermis) ஸ்டீரால்கள் (Sterols) சூயக் கதிர்வீச்சால் வைட்டமின் ஈ ஆக மாறி நமக்குப் பயன்படுகின்றன.

* தோலில் வியர்வைத் துளைகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. அதனால் குளிக்கும்போது எதிர்ப்புறமாய், அதாவது மேல்நோக்கித் தேய்த்துக் குளிக்க வேண்டும். வழித்துவிட்டாற்போல் கீழ்த்தேய்ப்பு செய்து குளித்தால் பயன் ஏதுமில்லை. அடைத்திருக்கும் வியர்வைத் துளைகளைத் திறந்துவிட எதிர்த் தேய்ப்பு உதவும்.

* உதடுகளிலும் வாயின் உட்புறத்திலும் ஏற்படும் குழிப் புண்கள், பி - காம்ப்ளெக்ஸ் சத்துக் குறைவாலும் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. இப் புண்கள் மரபு வழித் தொடர்புடையவை. அமைதியின்மை, மன இறுக்கம், ஓயாத சிந்தனை ஆகியவற்றைத் தவிர்த்து தியான முறைகளைப் பின்பற்றுவது தொடர் துன்பம் தவிர்க்கும். ஈஸ்டு (Yeast) சத்துள்ள மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.

* குழந்தையின் கன்னம், காதுப் பகுதிகளில் அறைவது மிகவும் ஆபத்தானது. இத்தகு கோப அறைகள் காதிலுள்ள செவிப்பறை கிழியக் காரணமாகி விடுகின்றன. அடி பலமாக இருந்தால் காது நரம்பு முற்றிலுமாய்ப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

* மிக அதிகமாகப் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் உறுப்புகளுள் நாக்கும் ஒன்று. நாட்பட்ட ஆறாத புண், நாக்கின் பக்கப் பகுதிகளிலோ அல்லது கீழ்ப் பகுதியிலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் ஆகியவை ஆபத்தானவை. நாக்கில் ஏற்படும் சாதாரண புண்கள் 15 நாள்களுக்குள் ஆறாவிட்டால் மருத்துவரைப் பார்ப்பது பாதுகாப்பானது.

* பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது சவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்திக் காலைத் தாழ்த்தி வைத்தபடி கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும்போது காது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:55 pm

* இமைக் கட்டிகள் "சூட்டால்' வருவனவல்ல. இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் தொற்றும் அடைப்புமே இத்தகு சீழ்க் கட்டிகளுக்குக் காரணிகள். பெரும்பாலான சீழ்க் கட்டிகளை மருந்திட்டுச் சப்படுத்தலாம். சீழ் இறுகிப் போகும் நிலையில் சில கட்டிகளை அறுவையால் மட்டுமே சரி செய்ய முடியும்.

* உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தோலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இரத்தக் குழாய்களின் விசை, வியர்வையின் அளவு, முடிகளின் அசைவு, தோலிலிருந்து வெளியாகும் சுரப்புகள் காரணமாக பல்வேறு விதமான உணர்வுகளைத் தோல் வெளிப்படுத்த முடிகிறது.

* தோலைப் பாதுகாக்க குளியல் சோப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிகக் காரத்தன்மை கொண்ட சோப்புகளைப் பயன்படுத்துவதில் புத்துணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அது தோலைப் பாதிக்கும்.

* வயிற்றில் ஏற்படும் அமிலத் தன்மை, தொண்டை நோய்களுக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. சயான நேரத்தில் சாப்பிடாமை, தேவையான ஓய்வின்மை, மன அழுத்தம், மது அருந்துதல் முதலிய காரணங்களால் வயிற்றில் அமிலத் தன்மை உண்டாகின்றது. உணவு, வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வது அமிலத் தன்மை குறையவும் அதன் வழி தொண்டை நோய்கள் வாராதிருக்கவும் வழியமைக்கும்.

* உடலின் எதிர்ப்புச்சக்தியை அறிந்து கொள்ள உதவும் கண்ணாடி தோல். அதனால்தான் காச நோயை அறியும் "மாண்டோ' உள்படப் பல பசோதனைகள் தோலில் செய்யப்படுகின்றன.

* சொறி, சிரங்கு, பூஞ்சை ஆகியவை பரவலாகக் காணப்படும் தோல் நோய்கள். குறுகிய இடங்களில் அதிகம் பேர் வசிப்பது, குளியலறை வசதியின்மை போன்றவையே சொறி நோய் ஏற்படக் காரணம். இந் நோயில் ஏற்படும் அப்பு இரவில் அதிகமாக இருக்கும். கந்தகம் கலந்த களிம்பு மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

* ஒவ்வாமை காரணமாகத் தோல் நோய் உள்ளவர்கள், அமிலத் தன்மை வாய்ந்த தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, சர்க்கரை, குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by சிவா Tue Jan 26, 2010 3:56 pm

* தினமும் நீராடி உடலைத் தூய்மையாக வைத்திருத்தல், நல்ல காற்றோட்டம் மிக்க இடத்தில் வசித்தல், நூலாடைகளையே அணிதல் ஆகியவை மூலம் பெரும்பாலான தோல் நோய்களைத் தவிர்க்க முடியும்.

* வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கு வரப்பிரசாதம்போல் "பை ஃபோக்கல் கான்டாக்ட் லென்ஸ்' வந்துள்ளது. தூரப் பார்வை, பக்கப் பார்வை இரண்டிற்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ள இத்தகு கான்டாக்ட் லென்ஸ்களை மருத்துவ ஆலோசனை பெற்று உய திறன்களில் வாங்கி அணிந்து கொள்ளலாம்.

* இரத்த அழுத்தத்தின் உயர் நிலை, சர்க்கரை நோய், வைட்டமின் ஏ சத்துக் குறைவு, மூளைக் கட்டிகள், கபால நீர் அழுத்த உயர்வு, தைராய்டு நோய்கள், பால் வினை நோய்கள் ஆகியவற்றைக் கண் சோதனை மூலமும் அறியலாம். 35 வயதுக்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தற்காப்புக் கண் சோதனை மேற்கொள்வது பாதுகாப்பானது.

* நாக்குப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளில் ஒன்று புகையிலை. வாயில் புகையிலையை நெடு நேரம் அடக்கியிருப்பது கன்னப் புற்றையும், நாக்குப் புற்றையும் உண்டாக்கலாம். புகையிலையைப் போலவே, நாக்கில் உரசி அடிக்கடி புண்ணேற்படுத்தும் ஒழுங்கற்ற பற்களும் ஆபத்தானவை. பல் மருத்துவடம் காட்டி இத்தகு சீரற்ற பற்களைச் சீரமைத்துக் கொள்வது அவசியம்.

* தொந்தரவுகள் ஏதுமில்லாதபோது மூக்கு என்ற உறுப்பே நம் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் மூக்கு பிரதானமான உறுப்பாகும். பெரும்பாலான காது - தொண்டை நோய்கள் மூக்கு நோய்களின் தொடர்ச்சியாகவே உருவாகின்றன.


மருத்துவ விழிப்புணர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by ராஜா Tue Jan 26, 2010 4:19 pm

அருமையான தகவல் தொகுப்புக்கள் தல ,

நீண்ட நாட்களுக்கு பிறகு இது போன்ற பதிவை உங்களிடம் இருந்து பார்க்கிறேன். மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642 மருத்துவ விழிப்புணர்வு 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவ விழிப்புணர்வு Empty Re: மருத்துவ விழிப்புணர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum