ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநீதி -சினிமா விமர்சனம்:

Go down

அநீதி -சினிமா விமர்சனம்: Empty அநீதி -சினிமா விமர்சனம்:

Post by ayyasamy ram Mon Sep 18, 2023 3:34 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fe34e6f5b-eeb2-4acd-979d-fc41e7b26838%2FWhatsApp_Image_2023_07_21_at_21_26_07.jpeg?rect=0%2C0%2C1255%2C706&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
சென்னையில் 'மீல் மங்கி' எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி
செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திருமேனி
(அர்ஜுன் தாஸ்). அந்தப் பணியில் தினசரியாக அவர் சந்திக்கும்
அவமானங்களும், சாக்லேட் மற்றும் அது குறித்த விளம்பரங்களும்
அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன.

இதன் விளைவாக யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களைக்
கொல்ல வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது.


இதற்காகச் சிகிச்சைக்குச் செல்லும் அவருக்கு உளவியல் சிக்கல்
இருப்பது தெரிய வருகிறது. மறுபக்கம் ஒரு பணக்கார வீட்டில்
தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணாக
இருக்கிறார் சுப்பு (துஷாரா விஜயன்).

இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருவர் பிரச்னைக்கு
மற்றவர்கள் ஆறுதலாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத
விதமாக ஒரு மரணம் குறுக்கிடுகிறது. அது இவர்கள் வாழ்க்கையை
என்னவெல்லாம் செய்கிறது என்பதே 'அநீதி' திரைப்படத்தின் கதை.
நிஜ வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறுபவராகவும்,
அதே வேளையில் கற்பனை உலகினில் கோபப்பட்டு எதிர்வினை
ஆற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி
இருக்கிறார் அர்ஜுன் தாஸ். இருந்தும் வாழ்வில் அனைத்தையும்
இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்கும் காதல் உணர்வுகளை இன்னும்
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் காதல்
காட்சிகளிலும், வீட்டு எஜமானர்களுக்குப் பயப்படும் அச்ச
உணர்வினை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் தனக்குக்
கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்
துஷாரா விஜயன்.

பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்சயன்
பார்வையாளர்களுக்குக் கோபத்தைத் தூண்டும் விதமாகப்
பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திருநெல்வேலி
வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட்,
உணர்வுபூர்வமான காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

உடல்மொழி, வசன உச்சரிப்பு என அவர் மெனக்கெட்டிருப்பது
பாராட்டுக்குரியது. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம்
ரெனிஷ் கவனிக்கத்தக்கப் புதுவரவு. வனிதா விஜயகுமார்,
சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின்
வில்லத்தனத்தில் மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது.

மற்ற கதாபாத்திரங்களான ஷாரா, பரணி, அப்துல் லீ ஆகியோர்
தங்களுக்கான பணியைச் செய்துள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அநீதி -சினிமா விமர்சனம்: Empty Re: அநீதி -சினிமா விமர்சனம்:

Post by ayyasamy ram Mon Sep 18, 2023 3:35 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fc847a055-eee2-4766-ad7f-d62f7fefdd7c%2FAneethi_Movie_Stills_IndustryHit_1.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
--
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் முதல் பாதியில் வரும் இரண்டு
பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல காட்சியின்
வீரியத்தை தன் பின்னணி இசையாலும் உயர்த்தியிருக்கிறார்
. குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியின் மதிப்பை
இசை கூட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ரவிக்குமார் மனப்பிறழ்வுக்கான சிக்கலான
மனநிலையை 'Requiem for a Dream' திரைப்படத்தின்
ரிதமேட்டிக் மான்டேஜ் பாணியில் கட் செய்திருப்பது அருமை.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே பிளாஷ்பேக் காட்சிகளில்
வெயில் பூமியின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில்
வரும் பெரும்பாலான இரவு ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன.

“கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே
இல்ல” என்ற வசனத்தில் வசனகர்த்தா எஸ்.கே ஜீவா கவனம்
பெறுகிறார்.

கதை ஆரம்பித்த சில காட்சிகளிலே நாயகனுக்கான பிரச்னை,
அவனது தொழில், நாயகியின் அறிமுகம், அவளுக்கான பிரச்னை எனக்
காட்சிகளின் கோர்வையாக மட்டுமே நகர்கிறது கதையோட்டம்.
இதில் முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் “பெரிய கேட்”க்கு நடுவே
ஆக்கிரமிப்பு செய்கிற காதல் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.
ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அந்த காட்சிகளின் நீளத்தைச் சற்றே
கத்தரித்திருக்கலாம். இப்படி மெல்ல நகரும் திரைக்கதை முதல்
பாதியின் முடிவில்தான் சற்று வேகமெடுக்கிறது.

அடுத்தது என்னவென்று இரண்டாம் பாதி பரபரப்பான காட்சிகளால்
நகரும் என்று எதிர்பார்ப்பில் இருக்க, அதிலிருந்து விலகி நாடகத்
தன்மைக்குள் நுழைகிறது திரைக்கதை. திரைப்படத்தின் முக்கியமான
கட்டத்தில் அறந்தாங்கி நிஷாவை வைத்து நகைச்சுவை செய்ய
வைத்திருப்பது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

இருப்பினும் பிளாஷ் பேக் காட்சிகளில் நாயகனின் மீது பரிதாபம்
உண்டாகும்போது ‘வெயில்’ வசந்தபாலன் டச் வெளிப்படுகிறது.

ஏற்கெனவே சிக்கலுக்கு மேல் சிக்கலாக நகரும் திரைக்கதையில்
உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தையும்,
அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களையும் காட்டியது அக்கறையான
அலசல் என்றாலும் வலிந்து திணித்த உணர்வினையே தருகிறது.

தனியார்மயத்தின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் துரித
பொருளாதாரத்தின் (Gig Economy) கீழ் வரும் இத்தொழிலாளர்கள்
ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு பணிரீதியாகவும்
உரிமை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் திரைக்கதையில்
சரியாகப் பதிவு செய்யவில்லை.

மேலும், கதாநாயகனின் மனரீதியான பிரச்னைகளுக்கும் அதன்
விளைவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் இந்த பணிச்சுமை காரணமா
அல்லது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பெருந்துயரம் காரணமா என்பது
தெளிவுபடுத்தப்படவில்லை.

பணிச்சூழலை எதிரியாகக் கருதி, கதாநாயகன் போன்ற பல
தொழிலாளர்களின் பக்கம் உரிமை ரீதியாக நிற்பதா அல்லது
கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரத்தை
மட்டும் எடுத்துக்கொண்டு, அவரின் மேல் இரக்கத்தைச்
செலுத்துவதா எனக் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தக் குழப்பத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கதாநாயகன் கோபத்தில்
செய்யும் கொலைகளுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது திரைக்கதை.
மொத்தத்தில் இது தனிநபர் பிரச்னையா அல்லது தொழிலாளர்களின் நிஜ
வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறுபவராகவும், அதே
வேளையில் கற்பனை உலகினில் கோபப்பட்டு
எதிர்வினையாற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை
வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

இருந்தும் வாழ்வில் அனைத்தையும் இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்கும்
காதல் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் காதல் காட்சிகளிலும்,
வீட்டு எஜமானர்களுக்குப் பயப்படும் அச்ச உணர்வினை வெளிப்படுத்தும்
காட்சிகளிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம்
செய்திருக்கிறார் துஷாரா விஜயன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அநீதி -சினிமா விமர்சனம்: Empty Re: அநீதி -சினிமா விமர்சனம்:

Post by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

அநீதி -சினிமா விமர்சனம்: Vikatan%2F2023-07%2Fc3a26944-18cc-491c-9d7e-c97f71cadec3%2F64a5262da806b.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்சயன்
பார்வையாளர்களுக்குக் கோபத்தைத் தூண்டும் விதமாகப்
பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திருநெல்வேலி
வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட்,
உணர்வுபூர்வமான காட்சிகளில் நெகிழ வைக்கிறார். உடல்மொழி,
வசன உச்சரிப்பு என அவர் மெனக்கெட்டிருப்பது பாராட்டுக்குரியது.

அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ்
கவனிக்கத்தக்கப் புதுவரவு. வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி,
அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின் வில்லத்தனத்தில் மிகை நடிப்பு
எட்டிப் பார்க்கிறது. மற்ற கதாபாத்திரங்களான ஷாரா, பரணி,
அப்துல் லீ ஆகியோர் தங்களுக்கான பணியைச் செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் முதல் பாதியில் வரும் இரண்டு
பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல காட்சியின்
வீரியத்தை தன் பின்னணி இசையாலும் உயர்த்தியிருக்கிறார்.
குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியின் மதிப்பை இசை
கூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் ரவிக்குமார் மனப்பிறழ்வுக்கான
சிக்கலான மனநிலையை 'Requiem for a Dream' திரைப்படத்தின்
ரிதமேட்டிக் மான்டேஜ் பாணியில் கட் செய்திருப்பது அருமை.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே பிளாஷ்பேக் காட்சிகளில்
வெயில் பூமியின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில்
வரும் பெரும்பாலான இரவு ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன.

“கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே இல்ல”
என்ற வசனத்தில் வசனகர்த்தா எஸ்.கே ஜீவா கவனம் பெறுகிறார்.

கதை ஆரம்பித்த சில காட்சிகளிலே நாயகனுக்கான பிரச்னை,
அவனது தொழில், நாயகியின் அறிமுகம், அவளுக்கான பிரச்னை எனக்
காட்சிகளின் கோர்வையாக மட்டுமே நகர்கிறது கதையோட்டம். இதில்
முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் “பெரிய கேட்”க்கு நடுவே ஆக்கிரமிப்பு
செய்கிற காதல் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.

ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அந்த காட்சிகளின் நீளத்தைச் சற்றே
கத்தரித்திருக்கலாம். இப்படி மெல்ல நகரும் திரைக்கதை முதல் பாதியின்
முடிவில்தான் சற்று வேகமெடுக்கிறது.

அடுத்தது என்னவென்று இரண்டாம் பாதி பரபரப்பான காட்சிகளால் நகரும்
என்று எதிர்பார்ப்பில் இருக்க, அதிலிருந்து விலகி நாடகத்தன்மைக்குள்
நுழைகிறது திரைக்கதை. திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில்
அறந்தாங்கி நிஷாவை வைத்து நகைச்சுவை செய்யவைத்திருப்பது
காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது.

இருப்பினும் பிளாஷ் பேக் காட்சிகளில் நாயகனின் மீது பரிதாபம் உண்டாகும்
போது ‘வெயில்’ வசந்தபாலன் டச் வெளிப்படுகிறது.

ஏற்கெனவே சிக்கலுக்கு மேல் சிக்கலாக நகரும் திரைக்கதையில்
உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தையும்,
அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களையும் காட்டியது அக்கறையான
அலசல் என்றாலும் வலிந்து திணித்த உணர்வினையே தருகிறது.

தனியார்மயத்தின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் துரித
பொருளாதாரத்தின் (Gig Economy) கீழ் வரும் இத்தொழிலாளர்கள்
ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு பணிரீதியாகவும்
உரிமை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் திரைக்கதையில்
சரியாகப் பதிவு செய்யவில்லை.

மேலும், கதாநாயகனின் மனரீதியான பிரச்னைகளுக்கும் அதன்
விளைவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் இந்த பணிச்சுமை காரணமா
அல்லது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பெருந்துயரம் காரணமா என்பது
தெளிவுபடுத்தப்படவில்லை.

பணிச்சூழலை எதிரியாகக் கருதி, கதாநாயகன் போன்ற பல
தொழிலாளர்களின் பக்கம் உரிமை ரீதியாக நிற்பதா அல்லது கதாநாயகனின்
தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு,
அவரின் மேல் இரக்கத்தைச் செலுத்துவதா எனக் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தக் குழப்பத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கதாநாயகன் கோபத்தில்
செய்யும் கொலைகளுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது திரைக்கதை.
மொத்தத்தில் இது தனிநபர் பிரச்னையா அல்லது தொழிலாளர்களின்
பிரச்னையா என்பதில் இறுதிக்காட்சி வரையுமே தெளிவு இல்லை.

ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்ற கனமான உணர்வினைத் தந்த
பின்னரும் 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் பழிவாங்கும் காட்சிகள் யாரைப்
பழிவாங்க? இருந்தும் அதில் சுவாரஸ்யம் குறையாமல் `ஆங்கிரி யங்மேன்'
உருவாகும் இடமாக அதை மாற்றியிருப்பது ஆறுதல்.

மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை ஆரம்பத்தில்
கோர்வையாகக் கொண்டு சென்ற இயக்குநர், பின்னர் அதிலிருந்து சற்றே
விலகி, க்ளைமாக்ஸில் குழப்ப ரேகைகளைப் படரவிட்டுப் படத்தை முடித்து
வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்ற கனமான உணர்வினைத் தந்த
பின்னரும் 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் பழிவாங்கும் காட்சிகள் யாரைப்
பழிவாங்க? இருந்தும் அதில் சுவாரஸ்யம் குறையாமல் `ஆங்கிரி யங்மேன்'
உருவாகும் இடமாக அதை மாற்றியிருப்பது ஆறுதல்.

மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை ஆரம்பத்தில்
கோர்வையாகக் கொண்டு சென்ற இயக்குநர், பின்னர் அதிலிருந்து சற்றே
விலகி, க்ளைமாக்ஸில் குழப்ப ரேகைகளைப் படரவிட்டுப் படத்தை முடித்து
வைத்திருக்கிறார்.

-நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அநீதி -சினிமா விமர்சனம்: Empty Re: அநீதி -சினிமா விமர்சனம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum