Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை இயக்கும் மகாசக்தி
Page 1 of 1
மனதை இயக்கும் மகாசக்தி
சக்தி விகடன் :
மனதை இயக்கும் மகாசக்தி!
ஜனவரி 19,2010,10:34 IST
- சுகி.சிவம்
அந்த ரயில், பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது மூன்று பேர் மூச்சிரைக்க ஓடி வந்தனர். அதற்குள் ரயிலின் வேகம் கூடிவிட்டிருந்தது. ஆனாலும் தலைதெறிக்க ஓடி வந்து இரண்டு பேர் ரயிலில் ஏறினர்; ஒருவர் மட்டும் ரயிலை தவறவிட்டு விட்டு பரிதாபமாக நின்றார்.
இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், விடுங்க சார், ஓடி வந்த மூணு பேர்ல ரெண்டு பேர் ஏறிட்டாங்க, இதுவே பெரிய விஷயம்தான்! என்றார்.
ரயிலைத் தவறவிட்டவர் சலிப்புடன் சொன்னார்; அடப் போப்பா அவங்க என்னை வழியனுப்ப வந்தவங்க, சொல்லச் சொல்ல கேக்காம தண்ணி போட்டானுங்க, இப்ப போதைல அவனுங்க ஏறிப் போறானுங்க!
போதை மயக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலேயே எதையேனும் இசகுபிசகாகச் செய்வது வழக்கம்தான்! ஆனால், குடிக்காமலேயே மயக்கத்தில் இருப்பவர்களும் உண்டு; அவர்களும் இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு!
கோபம், காமம், புகழ், பயம், மோகம் ஆகியவையும் குடிக்காமலேயே மயக்கம் ஏற்படுத்தும் போதைதான்! கோபப்பட்டு கூச்சல் போடும் எவரேனும், நான் கோபத்தில் இன்ன இன்ன பேசுகிறேன் எனும் தெளிவுடன் பேசுகிறார்களா என்ன? ஆக, கோபமும் போதைதான்; கோபத்தில் பேசுவதும் குடிகாரனின் உளறல்தான். காமத்திலும் இதே கதைதான்!
ஓ�ஷா கேட்கிறார்; காமத்தால் நீங்கள் என்னதான் பெறுகிறீர்கள்? ஏதாவது கிடைக்கிறதா? அல்லது அது வெறும் திரும்பச் செய்தல்தானா? நீண்டகாலம் செய்து வந்ததை நிறுத்திவிட்டால், ஏதோ இழந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. தொடர்ந்தாலோ எந்த லாபமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு லாபமும் இல்லை எனும்போது நிறுத்தி விட்டால் என்ன நஷ்டம்? ஆனால் ஏன் இப்படி ஏதோ இழந்ததுபோல் தோன்ற வேண்டும்? எல்லாம் பழைய பழக்கம்தான். திரும்பத் திரும்பச் செய்ததால் அது வசியமாகிவிட்டது; மீண்டும் செய்ய வேண்டியதாகிவிட்டது. தவிர்க்க முடியாத உணர்வாகிவிட்டது என்கிறார்.
மிகப்பெரிய உண்மை இது.
காலையில் தூக்கத்தில் இருந்து விழிப்பது மட்டுமே விழிப்பு அல்ல! எல்லாச் சொற்களிலும் செயல்களிலும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஆனால் அப்படி விழிக்க முடியாதபடி நம்மை மயக்கமுறச் செய்கிறது மனம். அந்த நிலையிலேயே, அதாவது... மயக்க நிலையிலேயே சில செயல்களை நம்மை அறியாமலேயே செய்கிறோம்.
சரி... மனதில் மயக்கம் ஏற்படுவது எப்படி?
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். திரும்பத் திரும்ப சொல்வது அல்லது செய்வது, மனோலசியத்தை ஏற்படுத்துகிறது. ஒரே விஷயத்தை, திரும்பத் திரும்பச் சொல்லும் போது பொய்யைக்கூட திடமான உண்மையாக மனம் ஏற்றுக் கொண்டுவிடுகிறது என்கிறார்கள்.
நோயாளியை ஆழ்நிலைத் தூக்கத்துக்கு இட்டுச் செல்லும் மனநல மருத்துவர் என்ன செய்கிறார்? உனக்குத் தூக்கம் வருகிறது; உன் இமைகளைக் கூட கனமாக உணரும்படி தூக்கம் வருகிறது; உன் கண்களை உன்னால் திறக்க முடிவதில்லை என்பன போன்ற வார்த்தைகளை, அவர் திரும்பத் திரும்பச் சொல்ல... நோயாளியின் மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. வசியத்தின் அடிநாதமே திரும்ப திரும்ப என்பதில்தான் இருக்கிறது.
ஜெர்மானியர் அனைவரையும் வசியம் செய்திருந்தான் ஹிட்லர். எப்படி? உலகிலேயே உயர்ந்த இனம் நம் இனம்... நம்மை நசுக்குபவர்களும், வளர விடாமல் தடுப்பவர்களும் யூதர்களே! அவர்களை அழித்தால் ஒழிய நாம் வளர முடியாது. இதைத் திரும்பத் திரும்ப அவன் சொன்னபோது அந்த நாடே வசியப்பட்டது. முதலில் நம்ப மறுத்த அந்த நாட்டு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இறுதியில் நம்பத் தொடங்கினர். திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஒரு பொய்யைக்கூட மக்கள் மனதில் வலிமையான நிஜமாகப் பதிய வைக்க முடியும் என்பதை அரசியல்வாதிகள் பலர் நன்கு அறிவார்கள்.
மனோதத்துவம் இந்த அளவில் நின்று போகிறது. திரும்பத் திரும்ப நாம் செய்தறியாத சில விஷயங்களில்கூட மனம் லயித்து, வசப்பட்டு நம்மைச் சிக்கலில் தள்ளுவது ஏன் என்பதற்கு மேலைநாட்டு மனோவியல் பதில் சொல்லவில்லை. இதை உணர இந்திய யோகக் கலை, குறிப்பாக பதஞ்சலியின் யோக சூத்திரம் படிப்பது அவசியம்!
பொதுவாக நாம் மனம் என்று சொன்னாலும், அது வெளி மனம், உள் மனம், ஆழ்மனம் மூன்று நிலைகளில், மூன்று விதமாகச் செயல்படுகிறது என்பதை உளவியல் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதையும் தாண்டி மனதை இயக்குவது எது என்ற கேள்விக்கு, பிராணன் என்று விடை கண்டது யோக சாஸ்திரம். பிராணனின் உதவியின்றி மனம் செயல்பட முடியாது. பிராணனின் அதிர்வுகளே, மனதுள் எண்ணங்களை உண்டுபண்ணுகின்றன. பிராணனை உபயோகிக்கும் சிறந்த கருவி மனமே!
மனம் மூன்றாகத் தொழிற்படுவது போல், பிராணனும் ஸ்தூல, சூட்சும, காரணப் பிராணன் என்று மூன்று வகையில் தொழிற்படுகிறது. ஆத்மாவின் நிழல் போல அமைந்துள்ள காரணப் பிராணன், ஆண்- பெண் இருவரது விந்து (சுக்கிலம்) சினை (சுரோணிதம்) ஆகியவற்றில் இருந்து கொண்டு கருவிலேயே அந்த ஜீவனின் கர்ம வினைக்கு ஏற்ப கரு உருவாக வழிகாட்டுகிறது. அதனால்தான் ஆழ்மனப் பதிவுகள் உண்டாகின்றன.
அடுத்து சூட்சுமப் பிராணன், கரு, குழந்தையாக வெளிவந்ததும் ஜீவனின் உடம்பில் உச்சி முதல் நெற்றி வரை சஞ்சரித்து சுவாசிக்கும்படி உடலைத் தூண்டுகிறது. உடனே உடல், உலகின் புறக்காற்றில் கலந்துள்ள ஸ்தூல பிராணனை உள்ளிழுப்பதன் மூலம் குழந்தை உயிர்வாழத் தொடங்குகிறது.
கர்மவினைக்கு ஏற்ப கரு உருவாக, சுக்கில, சுரோணித இணைப்பில் உள்ள காரணப் பிராணன் பங்கு வகிக்கிறது என்றேன். கர்மவினை எப்படி உருவாகிறது என்று அடுத்த கேள்வி வரலாம்!
பல ஜன்மங்களில் நாம் திரும்பத் திரும்பச் செய்த செயல்களால் வசியமாகிறோம். நல்ல செயல்கள் புண்ணியமாகின்றன; தீய செயல்கள் பாவமாகின்றன, ஆனால், இந்தச் செயல்கள்... இவற்றால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் பதிகின்றன என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
இந்தப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்பர். கர்மபீஜம், வாசனா என இரண்டு வகைகளாக சம்ஸ்காரங்கள் செயல்படுகின்றன. மனதில் பதிவாகி மீண்டும் செயல்படத் தூண்டும் செயல்களில் வித்தாக விளங்கும் விதைநிலை கம்மபீஜம். இந்த சம்ஸ்காரங்களால் தூண்டப்பட்டு நம்மைச் செயல்பட வைக்கும் நினைவுகள் வாசனா எனப்படும்.
நீர்நிலையின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி வரும் குமிழி, நீர்ப் பரப்புக்கு அருகில் வரும்போது கூட நம் கண்களுக்குத் �திவதில்லை. நீர்ப் பரப்புக்குமேல் குமிழி தோன்றி உடைந்து போகும் நிலையில்தான் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது.
அதே போல், ஆழ் மனதில் பதிவாகி இருக்கம் சம்ஸ்காரங்கள் ஜம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளிமனதில் பதிவாகி இருக்கும் சம்ஸ்காரங்கள் ஐம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளி மனதில் எண்ணங்களாக வெளிப்பட்ட பின்னரே அவற்றை நாம் அறிய முடிகிறது. நம் ஆழ்மனதில் கணக்கற்ற கர்மபீஜங்கள், சம்ஸ்காரங்கள் நிறைந்துள்ளன. இவையே ஆசைகளாக, உணர்ச்சிகளாக, நினைவுகளாக, எண்ணங்களாக மீண்டும் மீண்டும் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றன. பிறவா நிலை எய்தும் ஞானி கர்மபீஜங்களை முழுமையாக அழித்துவிடுகிறார்.
இவ்வளவு தகவல்களும் ஸ்ரீஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் எழுதியுள்ள பிராண வித்யா எனும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எனவே மனதைக் கடக்க நினைப்பவர்கள் ஸ்தூல பிராணனை நெறிப்படுத்தி, சூட்சுமப் பிராணனில் பிரவேசித்து காரணப் பிராணனைக் கண்டறிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
அன்னமய கோசத்தை ஆட்டிப் படைப்பது மனோபய கோசம். மனோபய கோசத்தை ஆள்வது பிராணமய கோசம். பிராணனை ஒழுங்குபடுத்துவதன் மூலமே மனோலயம் சாத்தியம் என்கிறது இந்திய யோகக்கலை. பிராணாயாமம் என்பது என்பது பிராணனை ஒழுங்குபடுத்தும் யுக்தி. ஆனால் பிராணாயாமம் செய்தவர்கள் எல்லோருமே ஞானிகள் ஆனார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
- ஆனந்தம் தொடரும்....
படம்: கே.ராஜசேகரன்
மனதை இயக்கும் மகாசக்தி!
ஜனவரி 19,2010,10:34 IST
- சுகி.சிவம்
அந்த ரயில், பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது மூன்று பேர் மூச்சிரைக்க ஓடி வந்தனர். அதற்குள் ரயிலின் வேகம் கூடிவிட்டிருந்தது. ஆனாலும் தலைதெறிக்க ஓடி வந்து இரண்டு பேர் ரயிலில் ஏறினர்; ஒருவர் மட்டும் ரயிலை தவறவிட்டு விட்டு பரிதாபமாக நின்றார்.
இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், விடுங்க சார், ஓடி வந்த மூணு பேர்ல ரெண்டு பேர் ஏறிட்டாங்க, இதுவே பெரிய விஷயம்தான்! என்றார்.
ரயிலைத் தவறவிட்டவர் சலிப்புடன் சொன்னார்; அடப் போப்பா அவங்க என்னை வழியனுப்ப வந்தவங்க, சொல்லச் சொல்ல கேக்காம தண்ணி போட்டானுங்க, இப்ப போதைல அவனுங்க ஏறிப் போறானுங்க!
போதை மயக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலேயே எதையேனும் இசகுபிசகாகச் செய்வது வழக்கம்தான்! ஆனால், குடிக்காமலேயே மயக்கத்தில் இருப்பவர்களும் உண்டு; அவர்களும் இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு!
கோபம், காமம், புகழ், பயம், மோகம் ஆகியவையும் குடிக்காமலேயே மயக்கம் ஏற்படுத்தும் போதைதான்! கோபப்பட்டு கூச்சல் போடும் எவரேனும், நான் கோபத்தில் இன்ன இன்ன பேசுகிறேன் எனும் தெளிவுடன் பேசுகிறார்களா என்ன? ஆக, கோபமும் போதைதான்; கோபத்தில் பேசுவதும் குடிகாரனின் உளறல்தான். காமத்திலும் இதே கதைதான்!
ஓ�ஷா கேட்கிறார்; காமத்தால் நீங்கள் என்னதான் பெறுகிறீர்கள்? ஏதாவது கிடைக்கிறதா? அல்லது அது வெறும் திரும்பச் செய்தல்தானா? நீண்டகாலம் செய்து வந்ததை நிறுத்திவிட்டால், ஏதோ இழந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. தொடர்ந்தாலோ எந்த லாபமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு லாபமும் இல்லை எனும்போது நிறுத்தி விட்டால் என்ன நஷ்டம்? ஆனால் ஏன் இப்படி ஏதோ இழந்ததுபோல் தோன்ற வேண்டும்? எல்லாம் பழைய பழக்கம்தான். திரும்பத் திரும்பச் செய்ததால் அது வசியமாகிவிட்டது; மீண்டும் செய்ய வேண்டியதாகிவிட்டது. தவிர்க்க முடியாத உணர்வாகிவிட்டது என்கிறார்.
மிகப்பெரிய உண்மை இது.
காலையில் தூக்கத்தில் இருந்து விழிப்பது மட்டுமே விழிப்பு அல்ல! எல்லாச் சொற்களிலும் செயல்களிலும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஆனால் அப்படி விழிக்க முடியாதபடி நம்மை மயக்கமுறச் செய்கிறது மனம். அந்த நிலையிலேயே, அதாவது... மயக்க நிலையிலேயே சில செயல்களை நம்மை அறியாமலேயே செய்கிறோம்.
சரி... மனதில் மயக்கம் ஏற்படுவது எப்படி?
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். திரும்பத் திரும்ப சொல்வது அல்லது செய்வது, மனோலசியத்தை ஏற்படுத்துகிறது. ஒரே விஷயத்தை, திரும்பத் திரும்பச் சொல்லும் போது பொய்யைக்கூட திடமான உண்மையாக மனம் ஏற்றுக் கொண்டுவிடுகிறது என்கிறார்கள்.
நோயாளியை ஆழ்நிலைத் தூக்கத்துக்கு இட்டுச் செல்லும் மனநல மருத்துவர் என்ன செய்கிறார்? உனக்குத் தூக்கம் வருகிறது; உன் இமைகளைக் கூட கனமாக உணரும்படி தூக்கம் வருகிறது; உன் கண்களை உன்னால் திறக்க முடிவதில்லை என்பன போன்ற வார்த்தைகளை, அவர் திரும்பத் திரும்பச் சொல்ல... நோயாளியின் மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. வசியத்தின் அடிநாதமே திரும்ப திரும்ப என்பதில்தான் இருக்கிறது.
ஜெர்மானியர் அனைவரையும் வசியம் செய்திருந்தான் ஹிட்லர். எப்படி? உலகிலேயே உயர்ந்த இனம் நம் இனம்... நம்மை நசுக்குபவர்களும், வளர விடாமல் தடுப்பவர்களும் யூதர்களே! அவர்களை அழித்தால் ஒழிய நாம் வளர முடியாது. இதைத் திரும்பத் திரும்ப அவன் சொன்னபோது அந்த நாடே வசியப்பட்டது. முதலில் நம்ப மறுத்த அந்த நாட்டு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இறுதியில் நம்பத் தொடங்கினர். திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஒரு பொய்யைக்கூட மக்கள் மனதில் வலிமையான நிஜமாகப் பதிய வைக்க முடியும் என்பதை அரசியல்வாதிகள் பலர் நன்கு அறிவார்கள்.
மனோதத்துவம் இந்த அளவில் நின்று போகிறது. திரும்பத் திரும்ப நாம் செய்தறியாத சில விஷயங்களில்கூட மனம் லயித்து, வசப்பட்டு நம்மைச் சிக்கலில் தள்ளுவது ஏன் என்பதற்கு மேலைநாட்டு மனோவியல் பதில் சொல்லவில்லை. இதை உணர இந்திய யோகக் கலை, குறிப்பாக பதஞ்சலியின் யோக சூத்திரம் படிப்பது அவசியம்!
பொதுவாக நாம் மனம் என்று சொன்னாலும், அது வெளி மனம், உள் மனம், ஆழ்மனம் மூன்று நிலைகளில், மூன்று விதமாகச் செயல்படுகிறது என்பதை உளவியல் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதையும் தாண்டி மனதை இயக்குவது எது என்ற கேள்விக்கு, பிராணன் என்று விடை கண்டது யோக சாஸ்திரம். பிராணனின் உதவியின்றி மனம் செயல்பட முடியாது. பிராணனின் அதிர்வுகளே, மனதுள் எண்ணங்களை உண்டுபண்ணுகின்றன. பிராணனை உபயோகிக்கும் சிறந்த கருவி மனமே!
மனம் மூன்றாகத் தொழிற்படுவது போல், பிராணனும் ஸ்தூல, சூட்சும, காரணப் பிராணன் என்று மூன்று வகையில் தொழிற்படுகிறது. ஆத்மாவின் நிழல் போல அமைந்துள்ள காரணப் பிராணன், ஆண்- பெண் இருவரது விந்து (சுக்கிலம்) சினை (சுரோணிதம்) ஆகியவற்றில் இருந்து கொண்டு கருவிலேயே அந்த ஜீவனின் கர்ம வினைக்கு ஏற்ப கரு உருவாக வழிகாட்டுகிறது. அதனால்தான் ஆழ்மனப் பதிவுகள் உண்டாகின்றன.
அடுத்து சூட்சுமப் பிராணன், கரு, குழந்தையாக வெளிவந்ததும் ஜீவனின் உடம்பில் உச்சி முதல் நெற்றி வரை சஞ்சரித்து சுவாசிக்கும்படி உடலைத் தூண்டுகிறது. உடனே உடல், உலகின் புறக்காற்றில் கலந்துள்ள ஸ்தூல பிராணனை உள்ளிழுப்பதன் மூலம் குழந்தை உயிர்வாழத் தொடங்குகிறது.
கர்மவினைக்கு ஏற்ப கரு உருவாக, சுக்கில, சுரோணித இணைப்பில் உள்ள காரணப் பிராணன் பங்கு வகிக்கிறது என்றேன். கர்மவினை எப்படி உருவாகிறது என்று அடுத்த கேள்வி வரலாம்!
பல ஜன்மங்களில் நாம் திரும்பத் திரும்பச் செய்த செயல்களால் வசியமாகிறோம். நல்ல செயல்கள் புண்ணியமாகின்றன; தீய செயல்கள் பாவமாகின்றன, ஆனால், இந்தச் செயல்கள்... இவற்றால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் பதிகின்றன என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
இந்தப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்பர். கர்மபீஜம், வாசனா என இரண்டு வகைகளாக சம்ஸ்காரங்கள் செயல்படுகின்றன. மனதில் பதிவாகி மீண்டும் செயல்படத் தூண்டும் செயல்களில் வித்தாக விளங்கும் விதைநிலை கம்மபீஜம். இந்த சம்ஸ்காரங்களால் தூண்டப்பட்டு நம்மைச் செயல்பட வைக்கும் நினைவுகள் வாசனா எனப்படும்.
நீர்நிலையின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி வரும் குமிழி, நீர்ப் பரப்புக்கு அருகில் வரும்போது கூட நம் கண்களுக்குத் �திவதில்லை. நீர்ப் பரப்புக்குமேல் குமிழி தோன்றி உடைந்து போகும் நிலையில்தான் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது.
அதே போல், ஆழ் மனதில் பதிவாகி இருக்கம் சம்ஸ்காரங்கள் ஜம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளிமனதில் பதிவாகி இருக்கும் சம்ஸ்காரங்கள் ஐம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளி மனதில் எண்ணங்களாக வெளிப்பட்ட பின்னரே அவற்றை நாம் அறிய முடிகிறது. நம் ஆழ்மனதில் கணக்கற்ற கர்மபீஜங்கள், சம்ஸ்காரங்கள் நிறைந்துள்ளன. இவையே ஆசைகளாக, உணர்ச்சிகளாக, நினைவுகளாக, எண்ணங்களாக மீண்டும் மீண்டும் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றன. பிறவா நிலை எய்தும் ஞானி கர்மபீஜங்களை முழுமையாக அழித்துவிடுகிறார்.
இவ்வளவு தகவல்களும் ஸ்ரீஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் எழுதியுள்ள பிராண வித்யா எனும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எனவே மனதைக் கடக்க நினைப்பவர்கள் ஸ்தூல பிராணனை நெறிப்படுத்தி, சூட்சுமப் பிராணனில் பிரவேசித்து காரணப் பிராணனைக் கண்டறிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
அன்னமய கோசத்தை ஆட்டிப் படைப்பது மனோபய கோசம். மனோபய கோசத்தை ஆள்வது பிராணமய கோசம். பிராணனை ஒழுங்குபடுத்துவதன் மூலமே மனோலயம் சாத்தியம் என்கிறது இந்திய யோகக்கலை. பிராணாயாமம் என்பது என்பது பிராணனை ஒழுங்குபடுத்தும் யுக்தி. ஆனால் பிராணாயாமம் செய்தவர்கள் எல்லோருமே ஞானிகள் ஆனார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
- ஆனந்தம் தொடரும்....
படம்: கே.ராஜசேகரன்
Similar topics
» என். கணேசன் எழுதிய ஜென் கதைகள், பிரசாதம், மகாசக்தி மனிதர்கள் ஆகிய நூல்கள் கிடைக்குமா ?
» ரோகினி இயக்கும் பம்பரம்!!
» புதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன்
» ’ரஜினி’யை இயக்கும் ஏ.வெங்கடேஷ்!
» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
» ரோகினி இயக்கும் பம்பரம்!!
» புதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன்
» ’ரஜினி’யை இயக்கும் ஏ.வெங்கடேஷ்!
» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|