புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
59 Posts - 58%
heezulia
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
Guna.D
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
kavithasankar
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
54 Posts - 58%
heezulia
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 2%
Guna.D
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
kavithasankar
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 18, 2023 9:32 pm

Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Main-qimg-8009479d43fe3a5cfded86374db2a4dc


Dr ரேணுகா ராமகிருஷ்ணன் அப்போது 16 வயது. கும்பகோணம் மகாமகக் குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தப் பகுதியைக் கடந்து போகும் எல்லோருமே மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் அருவருப்பு தெரிந்தது. ‘புண்ணியமே போச்சு. குளத்தை முழுக்க சுத்தம் பண்ணணும்’ என்று சிலர் முணுமுணுத்தனர். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். அந்த இடத்தை நோக்கி ரேணுகா வேக வேகமாகச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி மனதைப் பதைபதைக்கச் செய்தது.

மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்று அங்கலாய்த்தார்களே தவிர, யாருக்கும் இறந்துகிடந்த மனிதர்மீது கொஞ்சம்கூடப் பரிதாபம் வரவில்லை. காரணம், இறந்து கிடந்தவர் கைகால் விரல்கள் சூம்பிப் போன ஒரு தொழுநோயாளி.

படிக்கட்டில் வேக வேகமாக இறங்கிய ரேணுகா, தன் துப்பட்டாவை எடுத்து அந்தப் பெரியவரின் உடல்மீது போட்டு மானம் காத்தார். அங்கே கூட்டமாகக் கூடி நின்றிருந்த அனைவரும் ரேணுகாவை விநோதமாகப் பார்த்தார்கள். ‘யாராவது உதவி பண்ணுங்களேன். இவரை இங்கிருந்து தூக்கிட்டுப் போயிடலாம்’ என்று அங்கே நின்றிருந்தவர்களிடம் ரேணுகா கோரிக்கை வைத்தார். ஒருவரும் முன்வரவில்லை. சிலர் விலகிப் போனார்கள். ‘உனக்கெதுக்கும்மா வேண்டாத வேலை...’ என்று சிலர் இலவச அறிவுரை வழங்கினார்கள். `இறந்த பிறகு யாருக்கும் இப்படியெல்லாம் அவமரியாதை நிகழக் கூடாது’ என்று ரேணுகாவின் மனம் விசும்பியது. தானே எப்படியாவது அந்தப் பெரியவரின் உடலுக்கான இறுதிக் காரியங்களையெல்லாம் நிகழ்த்திவிடலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை இறந்த ஒருவரின் உடலை ரேணுகா அவ்வளவு பக்கத்தில் பார்த்ததுகூட இல்லை. ஆனால், மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை, ரேணுகாவுக்குள் உத்வேகத்தைக் கொடுத்தது. ரிக்‌ஷாக்காரர் ஒருவர் உதவ முன்வந்தார். ‘கையில துணியைச் சுத்திட்டு வாங்க. தூக்கி அந்த ரிக்‌ஷாவுல வையுங்க போதும்’ என்று சுற்றியிருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். சில மனிதர்கள் கைகொடுத்ததால் ரிக்‌ஷாவில் பெரியவரின் பிணம் ஏற்றப்பட்டது. ரேணுகா இடுகாட்டுக்குச் சென்றார்.

‘இது மத்தவங்க காரியம் பண்ற இடம். தொழுநோயாளி பொணத்துக்கெல்லாம் இங்கே காரியம் பண்ண முடியாது’ என்று மனசாட்சியே இல்லாமல் அங்கே அனுமதி மறுத்தார்கள். ரேணுகா கலங்கவில்லை. அந்தப் பெரியவரைத் தன் மடியில் ஏந்திக்கொண்டார். ரிக்‌ஷா மேலும் பல மைல்கள் தள்ளி உள்ள இடுகாடு ஒன்றை அடைந்தது. அங்கே மனிதநேயமிக்க வயதானவர் ஒருவர் இருந்தார். ரேணுகா நடந்ததைச் சொன்னார். ‘என்கிட்ட பத்து ரூபாதான் இருக்கு. உதவி பண்ணுங்க தாத்தா!’ என்று மனம் கலங்கிப் பேசினார். ‘சின்னப்பொண்ணு நீ! எவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கே...’ என்று ரேணுகாவைப் பாராட்டிய அந்த மனிதர் அங்கே காரியம் பண்ண அனுமதித்தார். இதையடுத்து இறுதிக் காரியங்கள் அனைத்தையும் ரேணுகாவே முன் நின்று செய்தார். தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்டபோது, அந்த இடுகாட்டு மனிதரின் கண்கள் கலங்கியிருந்தன.


எல்லாம் முடிந்ததும் ரேணுகா வீடு திரும்பினார். ராணுவ அதிகாரியான அவரின் தந்தையிடம், ‘அப்பா, நான் இடுகாட்டிலிருந்து வர்றேன்’ என்று நடந்த எல்லாவற்றையும் கூறினார். இதைக் கேட்டதும், ‘மிகப்பெரிய காரியம் செய்திருக்கிறாய். ஆனால், இப்போதைக்கு வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். சொன்னால் எல்லோருக்கும் புரியவும் செய்யாது’ என்று அக்கறையுடன் சொன்னார் ரேணுகாவின் தந்தை. அப்போது ரேணுகாவின் மனதில் பெரும் லட்சிய விதை ஒன்று விதைக்கப்பட்டதாக உணர்ந்தார். `நிச்சயமாக மருத்துவம் படிக்க வேண்டும். இந்தச் சமுதாயமே புறக்கணிக்கும் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டும்’ என்பதே அந்த லட்சியம். ரேணுகாவின் கண்களில் அன்னை தெரசா புன்னகைத்தார்.

கும்பகோணத்தில் வளர்ந்த ரேணுகாவுக்கு, சிறு வயது முதல் டாக்டர் விளையாட்டு என்றால் அத்தனை பிரியம். தான் ஒரு டாக்டராகவும் மற்ற குழந்தைகளுக்கு ஊசி போடுவதுபோலவும் விளையாடுவது அவருக்குப் பிடித்திருந்தது. வளர வளர அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. மகாமகச் சம்பவம் ரேணுகாவின் வைராக்கியத்தை அதிகரித்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ரேணுகாவுக்கு பாண்டிச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. தொழுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்புப் படிப்பை முடித்துவிட்டு, சருமநோய் மருத்துவராக வெளியே வந்தார்.

சருமநோய் மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்தாலும், தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டார். சுமார் ஒரு வருட காலம் மருத்துவர்கள் இல்லாத கிராமங்களுக்குச் சென்று சேவை செய்துவந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தொழுநோயாளிகளைத் தொட்டால் தொழுநோய் ஒட்டிக்கொள்ளும் என்ற மூடநம்பிக்கை, சமூகத்தில் இப்போதும் இருக்கிறது. தொழுநோயாளிகள் பலரே தங்களை யாரும் நெருங்காத வண்ணம் முடங்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடிச் சென்று, உரிய சிகிச்சைகள் அளித்து, அன்புடன் பேசி, அரவணைத்து, ஆறுதல் சொல்லி, அவர்களைத் தேற்றுகிறார் ரேணுகா. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எனச் சமுதாயமே புறக்கணித்தாலும், `உங்களுக்கு நான் இருக்கிறேன்’ என்று தொழுநோயாளிகளின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்கிறார். அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார். ஆம், அந்த நோயாளிகள் ரேணுகாவை அன்னை தெரசாவின் மறு உருவமாகவே பார்க்கிறார்கள்.

சென்னை ஷெனாய் நகரில் இயங்கிவரும் `ஜெர்மன் லெப்ரசி அண்ட் டிபி ரிலீஃப் அசோசியேஷன்’ (German Leprosy and TB Relief Association)-ல் டாக்டர் ரேணுகா, தொழுநோயாளிகளுக்காகத் தொடர்ந்து சேவையாற்றிவருகிறார். தமிழகமெங்கும் பல்வேறு தொழுநோயாளிகள் குடியிருப்புகளுக்குச் சென்று மருத்துவச் சேவை செய்கிறார். பல்வேறு ஊர்களில் இலவச தொழுநோய் முகாம்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார். ‘தொழுநோய் இல்லாத இந்தியா’ என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மையான கள நிலவரம் அப்படி இல்லை. தொழுநோயாளிகளுக்கென தம் வாழ்வை அர்ப்பணித்துவரும் டாக்டர் ரேணுகா போன்றோரால்தான் தொழுநோய் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது மற்றும் சமூக சேவைக்கான பல்வேறு விருதுகள் என்று ஏராளமான கௌரவங்கள் டாக்டர் ரேணுகாவுக்குக் கிடைத்திருக்கின்றன. 28 ஆண்டுகள் மருத்துவச் சேவையை நிறைவு செய்திருக்கும் டாக்டர் ரேணுகாவுக்கு லட்சியம் ஒன்று இருக்கிறது.

‘தொழுநோயாளிகளுக்கான இலவச மையம் ஒன்றை அமைக்க வேண்டும். என் வாழ்வின் இறுதிவரை அவர்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆசை. எனக்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களும் தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கென தொடர்ந்து சேவையாற்ற முன்வர வேண்டும். சமூகம் புறக்கணிப்பதுபோல, மருத்துவர்களும் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தொடுதலால் தொழுநோய் பரவாது என்பதற்கு நானே வாழும் உதாரணம்!’ என்கிறார் டாக்டர் ரேணுகா.......

நந்தினி M -தமிழ் கோரா Dr ரேணுகா ராமகிருஷ்ணன், 1571444738 Dr ரேணுகா ராமகிருஷ்ணன், 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Vikatan%2F2022-11%2F8bcae576-180b-4ef9-8191-dc5f04f51cce%2FWhatsApp_Image_2022_11_26_at_11_49_57_PM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
டாக்டர் ரேணுகா.
----------------------------------


மாநிலமெங்கும் தொழுநோயாளிகள் குடியிருப்புகளைத்
தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
மருத்துவச் சேவையில் 35 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்
இவருக்கு `சேவை தேவதை' விருது வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீ தேவன் இவ்விருதினை
அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
-
நன்றி- கி.ச.திலீபன் (அவள் விகடன் 29-11-2022 )
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 26, 2023 10:11 pm

டாக்டர் ரேணுகா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.



Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக