புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜி 20 மாநாடு 2023
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?
‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.
1999-ம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.
அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.
அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.
இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.
ஜி-20 குழுவின் அதிகாரம் என்ன?
இக்குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பெயர்களைப் பார்த்தாலே இந்தக் குழுவின் பலம் என்னவென்று நமக்குத் தெரியும்.
ஜி-20 குழுவில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன. இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது.
இந்த முறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 2/3 பங்கையும் அதன் உறுப்பு நாடுகள் கொண்டிருப்பதில் இருந்து இதன் வலிமையை நாம் மதிப்பிட முடியும்.
இவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?
எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.
ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.
இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?
இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.
ஜி20 மாநாட்டால் இந்தியாவுக்கு என்ன பயன்?
ஜி-20 நாடுகள் உலகின் 85% ஜி.டி.பி.யையும், 75% சர்வதேச் வர்த்தகத்தையும், 70% உலக மக்கள்தொகையையும் உள்ளடக்கியது, இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடப்பது, இந்தியாவிலிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மற்றும் திறன்மிக்க மனிதவளம் ஆகியவற்றை இந்தச் சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.
“இது இரண்டு முக்கிய வழிகளில் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒன்று, இது இந்தியாவின் பலத்தையும், இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் உலக நாடுகள் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வழியாக இருக்கும். இரண்டாவது, இந்தியாவின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்தும்,”.
ஜி20 மாநாட்டால் சர்வதேச அரசியலில் இந்தியா பயன் பெறுமா?
இந்த மாநாடு தொடர்பாக இதுவரை ஜி-20 நாடுகள் பங்குபெற்ற 18 அமைச்சரவைக் கூட்டங்கள், 80 செயல் குழு கூட்டங்கள், 33 எங்கேஜ்மென்ட் குழு கூட்டங்கள் என இந்தியாவின் 56 வெவ்வேறு இடங்களில் பல கூட்டங்களும் சந்திப்புகளும் நடைபெற்றது.
“இதற்காக சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களோடு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பல வழிகளில் தொடர்பில் இருந்திருப்பார்கள். இது இந்தியா மீதான சர்வதேசப் பார்வையை அதிகப்படுத்தும். மேலும் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் துவங்குதல் ஆகியவற்றுக்கு இது உதவும்,”.
கடந்த ஒரு வருடமாக தனது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பது மிகப்பெரிய வாய்ப்பு.
“அரசியல் ரீதியாக உலக நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கையில், இதுபோன்ற ஒரு தலைமைப் பொறுப்பின் மூலம், உலக நாடுகளும், இந்தியாவின் அண்டை நாடுகளும் இந்தியப் பிரதமரும் நிதியமைச்சரும் பேசுவதைக் கூர்ந்து கவனிப்பார்கள். இந்த அதிகாரம் இந்தியாவிடம் இருப்பது அரசியல் சர்வதேச அரசியல் ரீதியாகவும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்,”.
இது பல நாடுகள் ஒன்றாகக் கூடும் மாநடாக இருப்பினும், இரு நாடுகள் தனித்தனியே தங்களுக்குள் என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுக்கின்றன என்பதைப் பொறுத்தே தனிப்பட்ட நாடுகளுக்கான அடைவுகள் இருக்கும்.
“உதாரணமாக இந்தியா, அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் தனிப்பட்ட முறையில் என்ன பேசுகிறது என்பதைப் பொறுத்து இந்தியாவுக்கான அடைவுகள் இருக்கும்,”.
அதேபோல், மூன்றாம் உலக நாடுகள், தீவு நாடுகள், மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றின் சர்வதேசக் குரலாக இந்தியா இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருகிறது. இதற்குச் சான்றாக, “ஜி-20 தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா ஜி-20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் பெற்றது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கடேசம், எகிப்து, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது,”.
BRICS கூட்டமைப்பு விரிவாக்கப்பட்டது போலவே, ஜி-20 கூட்டமைப்பும் விரிவாக்கப்படவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
“முன்னர் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் உலகப் பொருளாதாரத்தின் 90%-த்தை வைத்திருந்தனர். ஆனால் இப்போது அது 75%-ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், ஜி-20 கூட்டமைப்பின் பொருளாதார அதிகாரத்தை மேம்படுத்த, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளைச் சேர்க்க வெண்டும் என்ற பார்வையும் இருக்கிறது,”.
உதாரணத்திற்கு, போலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்து வருகிறது, அந்நாடுகளை ஏன் ஜி-20 கூட்டமைப்பில் சேர்க்கக்கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜி20 விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உணவு
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிகளால் ஆன பாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாரத் மண்டபத்தில் செப்டம்பா் 9, 10 ஆகிய இரு நாள்கள் நடக்கிறது. இதற்கு வருகை தரும் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவா்கள் தில்லியில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனா்.
பாதுகாப்பு கருதி அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகளின் தலைவா்கள் ஐடிசி, தாஜ் போன்ற முழு நட்சத்திர ஹோட்டலை தனியாக எடுத்து தங்குகின்றனா். நிகழாண்டு சா்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இவா்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில், புதுமையான தினை உணவு வகைகளைக் கொண்டு சா்வதேச தலைவா்களுக்கு உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்ற உலகின் முக்கியத் தலைவர்களுக்கு வெள்ளி தட்டுகள், குவளைகள் போன்ற பாத்திரங்களாலும், தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களாலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Delegates of the G20 Summit to be served in silverware and gold utensils pic.twitter.com/1f2Zm0wGTL — ANI (@ANI) September 6, 2023 |
இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக 15,000 பாத்திரங்களை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த பணிகள் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பாத்திரங்களை 200 கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
பாரத் மண்டபத்திலும், நட்சத்திர விடுதிகளிலும் முக்கிய தலைவர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பாத்திரங்களில்தான் உணவு பரிமாறப்படவுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாதுகாப்பு
சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.
இந்தியாவின் உயரடுக்கு தேசிய பாதுகாப்புப் படையின் கே9 மோப்ப நாய் குழு பிரிவினர், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினருடன் இணைந்து மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும். இன்று (செப்டம்பர் 7) கோகுலாஷ்டமி விடுமுறையுடன், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படுவதை பெருமையாக கொள்வதால், இத்தனை கட்டுப்பாடுகளையும் டெல்லி மாநகர மக்கள் வரவேற்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இசை நிகழ்ச்சி
இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், புது தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு இசைக் கருவிகளைக் கொண்டு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக, இதுபோன்றதொரு இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இசைப் பயணம் என்ற பெயரில், நாட்டில் உள்ள பல்வேறு இசைக் கருவிகளைக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்கு இந்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதெமி ஏற்பாடு செய்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் உலக தலைவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியின்போது, 78 இசைக் கலைஞர்களைக் கொண்டு மூன்று மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
34 இந்துஸ்தானி இசைக்கரவிகள், 18 கர்நாடக இசைக் கருவிகள், 40 ஃபோல்க் இசைக்கருவிகள் என நாட்டின் பல்வேறு நாடுகளிலிருந்து 11 குழந்தைகள், 13 பெண்கள், 7 மாற்றுத் திறனாளிகள், 26 இளைஞர்கள், 21 மூத்தக் குடிமக்கள் என 78 இசைக் கலைஞர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
ஜி20 தலைவா்களின் உச்சி மாநாடு வரும் செப்டம்பா் 9-10 வரை தில்லி பிரகதி மைதானில் புதிதாக கட்டப்பட்ட சா்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பங்கேற்பவர்கள், பங்கேற்காதவர்கள் பட்டியல்
தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், புறக்கணித்துள்ள தலைவர்கள் பட்டியலைக் காணலாம்.
நாட்டின் தலைநகரான தில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால், இந்தப் பட்டியல் தற்போது இறுதியாகியுள்ளது.
தில்லி பிரகதி திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூரோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். |
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்நாடு சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். |
வரும் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வருகைபுரியவுள்ளதால், தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 39 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுவரை 17 மாநாடு நடந்துள்ளது. தற்போது 18வது மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது. |
1. 2008 அமெரிக்கா ஜார்ஜ் புஷ்
2. 2009 பிரிட்டன் கார்டன் புரவ்ன்
3. 2009 அமெரிக்கா ஒபாமா
4. 2010 கனடா ஸ்டீபன் ஹார்பர்
5. 2010 தென் கொரியா லீ மியூங்
6. 2011 பிரான்ஸ் நிகோலஸ் சர்கோஷி
7. 2012 மெக்சிகோ பெலிப் கெய்டெரின்
8. 2013 ரஷ்யா புடின்
9. 2014 ஆஸ்திரேலியா டோனி அபாட்
10. 2015 துருக்கி எர்டோகன்
11. 2016 சீனா ஜி ஷின்பிங்
12. 2017 ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல்
13. 2018 அர்ஜென்டினா மவுரிகோ மாக்ரி
14. 2019 ஜப்பான் ஷின்சோ அபே
15. 2020 சவுதி மன்னர் சல்மான்
16. 2021 இத்தாலி மரியோ டிராஜி
17. 2022 இந்தோனேஷியா ஜோகோ விடோடோ
18. 2023 இந்தியா மோடி
19. 2024 பிரேசில் லுலா டா சில்வா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குழுவினர் தங்குவதற்காக டெல்லி ஐடிசி மவுரியாவில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜி20 மாநாடு: வளர்ச்சிக்கான புதிய பாதைகளை அமைக்கும்! - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இதற்காக ஜி-20 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைநகர் தில்லிக்கு வருகை புரிகின்றனர். இதனையொட்டி தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லிக்கு வருகைபுரியும் தலைவர்களை மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த்குமார் ஜக்னாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ருடோ, சீன பிரதமா் லி கியாங் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியா வந்தார் அதிபர் ஜோ பைடன்
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். தனி விமானம் மூலம் தலைநகர் தில்லி வந்த ஜோ பைடனை உயரதிகாரிகள் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (செப். 8) இரவு இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் ஈடுபடவுள்ளார். அதில் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக முதுகலை மாணவர்களுக்கான விசாக்களில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.
மரபுசாரா எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஒப்பந்தங்கள் குறித்தும் உலகம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடியான சவால்களை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இதற்காக ஜி-20 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைநகர் தில்லிக்கு வருகை புரிகின்றனர். இதனையொட்டி தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் தங்குவதற்கான விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
ஜி-20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரஷிய அதிபா் விளாதிமீர் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. சீன அதிபருக்கு பதில் பிரதமா் லி கியாங், ரஷிய அதிபருக்கு பதில் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா்கள் என்று அறிவித்துள்ளனா்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கிய அரசு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில், உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கியுள்ளது மத்திய அரசு. மேலும், பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நடைபெறவுள்ளதால், அமெரிக்கப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை இந்திய அரசு நீக்கீயுள்ளது.
அதன்படி, கொண்டக்கடலை, பருப்பு, ஆப்பிள், வால் நட், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|