புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_m10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_m10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_m10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_m10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_m10தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 10, 2023 8:26 pm

தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  YLN0nGS

நாட்டை, மொழியை, ஆற்றைப் பெண்ணாக உருவகித்துக் கூறும் மரபு பழந்தமிழ் மரபாகும்.

உள்ளத்து உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவது தாய்மொழி. மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது மொழி. பெற்ற குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் தாயிடம், பிறந்தது முதல் பேசிப் பழகிக் கற்கும் மொழியே தாய்மொழி எனப்பெறும். குழந்தைக்கு முதலில் அறிமுகமாகின்றவளும் பிறரை அறிமுகப்படுத்துபவளும் தாய். அத்தாயிடம் குழந்தை பற்றுக் கொள்வது போன்று நாம் ஒவ்வொருவரும் நம் தாய் மொழி மீது பற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தியத் தாய் தொன்மை வாய்ந்தவள். அவளைப் போன்று நம் தமிழ்த்தாயும் மிகத் தொன்மை வாய்ந்தவளாவாள்.

`பொருப்பிலே பிறந்தவள்', `தென்னன் புகழிலே கிடந்தவள்', `சங்கத்திருப்பிலே தவழ்ந்தவள்', `வைகை ஏட்டிலே கிடந்தவள்' என்ற பெருமைகளுக்குரியவள் தமிழ்த்தாய். முன்னைப் பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், கன்னித் தமிழாய்க் காலங்கடந்து விளங்குபவள் நம் தமிழ்த்தாய்!

உலகத்து மொழிகளில் இல்லாத தனிச்சிறப்பு நம் தாய்மொழியாம் நற்றமிழுக்கு உண்டு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண அழகுகளுடன் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் வண்டமிழுக்கு உரியது. எண்ணரிய இலக்கண இலக்கியங்களையும் தெய்வீகப் பாடல்களையும் அறநூல்களையும் பெற்ற நம் முத்தமிழின் சிறப்பு `குன்றின் மேலிட்ட விளக்குப் போலத்' தெளிவாக விளங்கும்.

"ஒலி கொண்ட நீரால் சூழப்பெற்ற நிலஉலகத்து
இருளை அகற்றிட மின்னலொத்த ஒளிப் பிழம்பாகிய
சூரியன் தனக்கு ஒப்பார் இன்றி வெம்மைக் கதிர்பாய்ச்சி
உலா வருவதைப் போல, தன்னிகரற்ற உயர் தனிச்
செம்மொழியாகத் திகழ்ந்து அறியாமையை அகற்ற வலம்
வருபவள் தமிழ்த்தாய்" என்பதை அறியலாம்.

இக்கருத்தை நிலைநாட்டுவது போன்று "தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள மொழிகட்குத் தலைமையும், அவற்றினும் மிகவே தகவுடைமையும் உள்ளமொழி, தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்ற தனிமொழி, திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி எனப் புகலும்படியான செம்மொழி" என உயர் மொழி, தனிமொழி, செம்மொழிக்கு விளக்கம் தந்து தமிழை `உயர்தனிச் செம்மொழி' என்கின்றார் பரிதிமாற் கலைஞர்.

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் போற்றிப் புரந்து, அவர்களுக்கு ஆக்ககமும் ஊக்கமும் அளித்தனர் என்றால் அவர்கள் தமிழின் மீது கொண்ட பற்றே காரணமாகும்.

தகடூரைத் தலைநகராகக் கொண்டாண்ட அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அதியமானின் அரசவைப்புலவராய் ஔவையார் இருந்தார். அப்பொழுது `உண்பார் ஊறு இன்றி நெடுநாள் வாழலாம்; அரியதாய்க் கிடைக்கக்கூடியது; அத்தகைய சிறந்த நெல்லிக்கனியைத் தான் உண்பதினும் ஒளஔவையார் உண்ணின் நெடிது வாழ்வார்; தமிழும் வாழ்ந்து சிறக்கும்; அதனால் உலகம் உய்வு பெறும்' என்று எண்ணினான். ஔஔஒளவையார் அக்கனியின் அருமை பெருமையை அறிந்திடின் அதை உண்ணாது தன்னை உண்பிப்பார் என்பதை உணர்ந்தான். அதனால் கனியின் பெருமை கூறாது. ஔஒளவையாருக்கு அக்கனியைக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்ட பின்னர், அந்நெல்லிக் கனியின் சிறப்பினை எடுத்தியம்பினான்!

அதியமானின் அன்பால் கிடைக்கப் பெற்ற கனியை உண்டு மகிழ்ந்த ஔவையார் "பொன்னொளி மாலை அணிந்த வள்ளலே! அணுகுதற்கு அரிய மலைவிடரில் அமைந்த கனியின் அருமையையும் கருதாது, பயனையும் குறியாது, அக்கனியை என்னிடம் உவந்தளித்தாயே! உன் பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில் எழுந்த அமுதினைப் பிறர்க்களித்து நஞ்சுண்டு, கண்டம் கருத்த செஞ்சடைக் கடவுள் போல் நீயும் என்றும் இப்புவியில் வாழ்வாயாக" என்று வாயார வாழ்த்தினார். இன்றமிழ் பா இயற்றும் நல்லிசைப் புலவர்க்குப் பற்றுக் கோடாய் விளங்கிய அதியமானின் தாய்மொழிப் பற்றை என்னென்று இயம்புவது?

பலமொழிகள் கற்றறிந்த சான்றோர்கள் யாவரும் தங்கள் படைப்புகளைத் தத்தம் தாய் மொழியிலேயே வெளியிட்டுள்ளனர். நாட்டுத் தந்தை காந்தியடிகள் பல மொழிப் புலமை பெற்றிருந்தாலும் தம் வரலாற்றைத் தம் தாய்மொழியில் தான் எழுதினார்.

இரவீந்திரநாத் தாகூர் அவர்களும் பன்மொழிப் புலமை பெற்றிருந்தாலும் தம் படைப்புகள் அனைத்தையும் தம் தாய் மொழியாம் வங்க மொழியிலேயே எழுதினார்.

பலமொழி வல்லுநரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களும் பாரதியார் அவர்களும் தங்கள் படைப்புகளைத் தாய்மொழியாகிய தமிழிலேயே படைத்தனர்.

"தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு நடத்த முடியும்" என்பதும் அதன் மூலமே நமது "பழம் பண்பாட்டை அழியாது வளர்க்க முடியும்" என்பதும் காந்தியடிகள் கண்டறிந்த உண்மை.

நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவற்றுள் சிறந்தது மொழி. ஆதலால் நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது" என்பதும் "ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும்" என்பதும் திரு.வி.கவின் மணிமொழிகள்.

"தாய்மொழியை மதித்துப் போற்றுங்கள்; மடமையைக் கொளுத்துங்கள். தாய்மொழியும் உள்ளக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்ந்து உங்கள் உண்மைக் கல்வி நிறைவாகும்" என்பது இராமதீர்த்தர் கூற்றாகும்.





தாய்மொழி வழியாகவே இயற்கை வாழ்வு வாழ முடியும் - தாய்மொழி போற்றுவோம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக