புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_m10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_m10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_m10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_m10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_m10சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 02, 2023 6:34 am

சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் 54igVAV

சிங்கப்பூர் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இன்று தேர்தல் நடந்தது. இதில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து சிங்கப்பூர் அதிபராக தேர்வானார்.

வாழ்க்கை வரலாறு



இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் பிரதமரின் ஆலோசகர் நிதியமைச்சர் கல்வி அமைச்சர் துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இது பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பின் நடக்கும் மூன்றாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.





சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2023 9:31 am

வாழ்த்துகள் .
அமெரிக்காவிலும் விவேக் ராமசாமி வந்துவிட்டால்,
கிழக்கில் இருந்து மேற்கு வரை தமிழர்கள் அரசுகள் தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 02, 2023 9:50 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் .
அமெரிக்காவிலும் விவேக் ராமசாமி வந்துவிட்டால்,
கிழக்கில் இருந்து மேற்கு வரை தமிழர்கள் அரசுகள் தான்.

ஆனால் தமிழகத்தை மட்டும் தமிழன் ஆளமுடியாது சோகம்



சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 02, 2023 9:53 pm

உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்; சிங்கப்பூர் அதிபரான தர்மனுக்கு மோடி வாழ்த்து



சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழரான தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியினரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தர்மன் சண்முகரத்னம் மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்டின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.

— Narendra Modi (@narendramodi) September 2, 2023




சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 02, 2023 9:54 pm

சிங்கப்பூர் அதிபரான தமிழ் வம்சாவளி: தர்மன் சண்முகரத்னம் கடந்து வந்த பாதை



சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பிரபல பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வளமான நாட்டிற்கு தலைமை தாங்கும் மூன்றாவது இந்திய வம்சாவளி நபர் ஆனார்.

2.7 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர் வாக்காளர்களில், ஏறக்குறைய ஒன்பது சதவீதம் சிங்கப்பூர் இந்திய சமூகம் உள்ளது.

சிங்கப்பூர் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தமிழ் மூதாதையர்களுக்குப் பிறந்த தர்மன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கண்ட நாட்டின் மிகவும் தகுதியான குடிமக்களில் தர்மன் ஒருவர்.

”பல தசாப்தங்களாக உங்களுக்கு பல வழிகளில் சேவை செய்ய நான் பாக்கியம் பெற்றுள்ளேன் – அடித்தளத்தில் பணியாற்றுவதுடன், நியாயமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கான தேசியக் கொள்கைகளை வடிவமைத்து, சர்வதேச அளவில் சிங்கப்பூர்க் கொடியை உயர்வாகப் பறக்க விடுவேன்” என்று 66 வயதான தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.

இவர் பொருளாதார நிபுணர் மட்டுமில்லை. ஒரு நல்ல விளையாட்டு வீரர் மற்றும் கவிஞர் ஆவார்.

சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தில் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான Ng Kok Song மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழிற்சங்க அடிப்படையிலான காப்பீட்டுக் குழுவான NTUC இன்கமின் முன்னாள் தலைவரான Tan Kin Lian ஆகியோரை, 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தர்மன் தோற்கடித்தார்.

தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் ஆறு ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர் ஆவார்.

சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினம், சிங்கப்பூரில் புற்றுநோய் பதிவேட்டை நிறுவியவர் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் மூன்று குழந்தைகளில் ஒருவர் தான் தர்மன்….

தர்மன், சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகியை மணந்தார், அவர் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும் லாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

ஆங்கிலோ-சீனப் பள்ளியில் பயின்ற தர்மன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இல் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். (LSE பின்னர் 2011 இல் அவருக்கு கௌரவ பெல்லோஷிப்பை வழங்கியது). பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள வொல்ப்சன் கல்லூரிக்குச் சென்றார், அங்கு பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் மாணவரானார், அங்கு அவர் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MPA) முடித்தார் மற்றும் Lucius N. Littauer Fellows விருதைப் பெற்றவர் (கல்வித் திறன் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் MPA மாணவர்களுக்கு வழங்கப்பட்டது).

தொழில் ரீதியாக ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், தனது பணி வாழ்க்கையை முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பொது சேவையில் செலவிட்டார். அவர் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

2011 மற்றும் 2019 க்கு இடையில் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், 2019 மற்றும் 2023 க்கு இடையில் மூத்த அமைச்சராகவும் தர்மன் பணியாற்றியுள்ளார்.

ஜூன் 2023 இல், தர்மன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்புவதாக அறிவித்தார்.

ஜனாதிபதி பதவி ஒரு கட்சி சார்பற்ற அலுவலகம் என்பதால், அரசாங்கத்தின் அனைத்து பதவிகளிலிருந்தும் மற்றும் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (PAP) உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜூலை 2023 இல் ராஜினாமா செய்தார்.

1970 களில் இங்கிலாந்தில் படிக்கும் போது ஒரு மாணவர் செயற்பாட்டாளரான, தர்மன் முதலில் சோசலிச நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார், பொருளாதாரம் குறித்த அவரது கருத்துக்கள் அவரது பணி வாழ்க்கையின் போது உருவாகின.

1992 இல் MAS இன் பொருளாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றியபோது, ​​சிங்கப்பூரின் 1992 இரண்டாம் காலாண்டு ஃபிளாஷ் GDP வளர்ச்சிக் கணிப்புகளை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிட்டது தொடர்பான வழக்கில், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (OSA) கீழ் தர்மன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 1,500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் பொதுத் துறைக்கு சேவையாற்றினார் மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

பின்னர் ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 இல் அரசியல்வாதியாக அறிமுகமான அவர், 2003 இல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார், 2008 வரை இந்தப் பொறுப்பில் பணியாற்றினார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 2007 மற்றும் 2015 க்கு இடையில் நிதி அமைச்சராகவும், 2011 மற்றும் 2012 க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும், 2015 மற்றும் 2023 க்கு இடையில் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இதுத் தவிர சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவர், 2011 மற்றும் 2023 க்கு இடையில் மத்திய வங்கி மற்றும் 2019 மற்றும் 2023 க்கு இடையில் சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டுக் கழகத்தின் (GIC) துணைத் தலைவராக அவர் பணியாற்றினார்.

தர்மன் 2001 மற்றும் 2023 க்கு இடையில் ஜூரோங் GRC இன் தாமன் ஜூரோங் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக (MP) இருந்தார். 2006, 2011, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தர்மன் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய கவுன்சிலான முப்பது குழுவின் அறங்காவலர் குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

தர்மன் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், 2024 ஆம் ஆண்டு ஐ.நா. உச்சிமாநாட்டில் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2011 முதல் 2014 வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கை ஆலோசனைக் குழுவான சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் (IMFC) தலைவராக இருந்து, முதல் ஆசியத் தலைவராக ஆனார்.

2019 முதல் 2022 வரை, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) மனித மேம்பாட்டு அறிக்கையின் (HDR) ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக இருந்தார்.

தனது இளமை பருவத்தில் தர்மன் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரர். கல்வியின் ஒரு வடிவமாக விளையாட்டைப் பற்றி அவர் பேசினார்.

குழந்தைகள் அணியாக இருப்பதன் மதிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள், நிபுணத்துவத்தை வளர்க்க இது சிறந்த வழி. மேலும், போட்டியில் விழுந்து அல்லது தோல்வியடைந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் திறனை பெறுகிறார்கள்,என்று அவர் கூறினார்.

அவர் 2002 முதல் சைனீஸ் கலிகிராஃபியும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

தர்மன் அரசு சாரா நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தின் கல்வி செயல்திறன் மற்றும் அபிலாஷைகளை உயர்த்த முயற்சிக்கும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் (SINDA) அறங்காவலர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஓங் டெங் சியோங் லேபர் லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் மற்றும் தேசிய வேலை வாய்ப்பு கவுன்சிலுக்கும் அவர் தலைமை தாங்கினார். சர்வதேச மேடைகளில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அரசியல்வாதியான எஸ் ஆர் நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அதிபராக பணியாற்றினார், அதே சமயம் தேவன் நாயர் என்று அழைக்கப்படும் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்த செங்கரா வீட்டில் தேவன் நாயர் 1981 முதல் 85 வரை சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராக பணியாற்றினார்.



சிங்கப்பூர் அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக