புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
21 Posts - 84%
heezulia
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
2 Posts - 8%
viyasan
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
213 Posts - 42%
heezulia
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
21 Posts - 4%
prajai
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10மனதை இயக்கும் மகாசக்தி Poll_m10மனதை இயக்கும் மகாசக்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை இயக்கும் மகாசக்தி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 26, 2010 1:50 pm

சக்தி விகடன் :
மனதை இயக்கும் மகாசக்தி!
ஜனவரி 19,2010,10:34 IST

- சுகி.சிவம்
அந்த ரயில், பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது மூன்று பேர் மூச்சிரைக்க ஓடி வந்தனர். அதற்குள் ரயிலின் வேகம் கூடிவிட்டிருந்தது. ஆனாலும் தலைதெறிக்க ஓடி வந்து இரண்டு பேர் ரயிலில் ஏறினர்; ஒருவர் மட்டும் ரயிலை தவறவிட்டு விட்டு பரிதாபமாக நின்றார்.
இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், விடுங்க சார், ஓடி வந்த மூணு பேர்ல ரெண்டு பேர் ஏறிட்டாங்க, இதுவே பெரிய விஷயம்தான்! என்றார்.
ரயிலைத் தவறவிட்டவர் சலிப்புடன் சொன்னார்; அடப் போப்பா அவங்க என்னை வழியனுப்ப வந்தவங்க, சொல்லச் சொல்ல கேக்காம தண்ணி போட்டானுங்க, இப்ப போதைல அவனுங்க ஏறிப் போறானுங்க!
போதை மயக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலேயே எதையேனும் இசகுபிசகாகச் செய்வது வழக்கம்தான்! ஆனால், குடிக்காமலேயே மயக்கத்தில் இருப்பவர்களும் உண்டு; அவர்களும் இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு!
கோபம், காமம், புகழ், பயம், மோகம் ஆகியவையும் குடிக்காமலேயே மயக்கம் ஏற்படுத்தும் போதைதான்! கோபப்பட்டு கூச்சல் போடும் எவரேனும், நான் கோபத்தில் இன்ன இன்ன பேசுகிறேன் எனும் தெளிவுடன் பேசுகிறார்களா என்ன? ஆக, கோபமும் போதைதான்; கோபத்தில் பேசுவதும் குடிகாரனின் உளறல்தான். காமத்திலும் இதே கதைதான்!
ஓ�ஷா கேட்கிறார்; காமத்தால் நீங்கள் என்னதான் பெறுகிறீர்கள்? ஏதாவது கிடைக்கிறதா? அல்லது அது வெறும் திரும்பச் செய்தல்தானா? நீண்டகாலம் செய்து வந்ததை நிறுத்திவிட்டால், ஏதோ இழந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. தொடர்ந்தாலோ எந்த லாபமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு லாபமும் இல்லை எனும்போது நிறுத்தி விட்டால் என்ன நஷ்டம்? ஆனால் ஏன் இப்படி ஏதோ இழந்ததுபோல் தோன்ற வேண்டும்? எல்லாம் பழைய பழக்கம்தான். திரும்பத் திரும்பச் செய்ததால் அது வசியமாகிவிட்டது; மீண்டும் செய்ய வேண்டியதாகிவிட்டது. தவிர்க்க முடியாத உணர்வாகிவிட்டது என்கிறார்.
மிகப்பெரிய உண்மை இது.


காலையில் தூக்கத்தில் இருந்து விழிப்பது மட்டுமே விழிப்பு அல்ல! எல்லாச் சொற்களிலும் செயல்களிலும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஆனால் அப்படி விழிக்க முடியாதபடி நம்மை மயக்கமுறச் செய்கிறது மனம். அந்த நிலையிலேயே, அதாவது... மயக்க நிலையிலேயே சில செயல்களை நம்மை அறியாமலேயே செய்கிறோம்.
சரி... மனதில் மயக்கம் ஏற்படுவது எப்படி?
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். திரும்பத் திரும்ப சொல்வது அல்லது செய்வது, மனோலசியத்தை ஏற்படுத்துகிறது. ஒரே விஷயத்தை, திரும்பத் திரும்பச் சொல்லும் போது பொய்யைக்கூட திடமான உண்மையாக மனம் ஏற்றுக் கொண்டுவிடுகிறது என்கிறார்கள்.
நோயாளியை ஆழ்நிலைத் தூக்கத்துக்கு இட்டுச் செல்லும் மனநல மருத்துவர் என்ன செய்கிறார்? உனக்குத் தூக்கம் வருகிறது; உன் இமைகளைக் கூட கனமாக உணரும்படி தூக்கம் வருகிறது; உன் கண்களை உன்னால் திறக்க முடிவதில்லை என்பன போன்ற வார்த்தைகளை, அவர் திரும்பத் திரும்பச் சொல்ல... நோயாளியின் மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. வசியத்தின் அடிநாதமே திரும்ப திரும்ப என்பதில்தான் இருக்கிறது.
ஜெர்மானியர் அனைவரையும் வசியம் செய்திருந்தான் ஹிட்லர். எப்படி? உலகிலேயே உயர்ந்த இனம் நம் இனம்... நம்மை நசுக்குபவர்களும், வளர விடாமல் தடுப்பவர்களும் யூதர்களே! அவர்களை அழித்தால் ஒழிய நாம் வளர முடியாது. இதைத் திரும்பத் திரும்ப அவன் சொன்னபோது அந்த நாடே வசியப்பட்டது. முதலில் நம்ப மறுத்த அந்த நாட்டு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இறுதியில் நம்பத் தொடங்கினர். திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஒரு பொய்யைக்கூட மக்கள் மனதில் வலிமையான நிஜமாகப் பதிய வைக்க முடியும் என்பதை அரசியல்வாதிகள் பலர் நன்கு அறிவார்கள்.
மனோதத்துவம் இந்த அளவில் நின்று போகிறது. திரும்பத் திரும்ப நாம் செய்தறியாத சில விஷயங்களில்கூட மனம் லயித்து, வசப்பட்டு நம்மைச் சிக்கலில் தள்ளுவது ஏன் என்பதற்கு மேலைநாட்டு மனோவியல் பதில் சொல்லவில்லை. இதை உணர இந்திய யோகக் கலை, குறிப்பாக பதஞ்சலியின் யோக சூத்திரம் படிப்பது அவசியம்!
பொதுவாக நாம் மனம் என்று சொன்னாலும், அது வெளி மனம், உள் மனம், ஆழ்மனம் மூன்று நிலைகளில், மூன்று விதமாகச் செயல்படுகிறது என்பதை உளவியல் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதையும் தாண்டி மனதை இயக்குவது எது என்ற கேள்விக்கு, பிராணன் என்று விடை கண்டது யோக சாஸ்திரம். பிராணனின் உதவியின்றி மனம் செயல்பட முடியாது. பிராணனின் அதிர்வுகளே, மனதுள் எண்ணங்களை உண்டுபண்ணுகின்றன. பிராணனை உபயோகிக்கும் சிறந்த கருவி மனமே!


மனம் மூன்றாகத் தொழிற்படுவது போல், பிராணனும் ஸ்தூல, சூட்சும, காரணப் பிராணன் என்று மூன்று வகையில் தொழிற்படுகிறது. ஆத்மாவின் நிழல் போல அமைந்துள்ள காரணப் பிராணன், ஆண்- பெண் இருவரது விந்து (சுக்கிலம்) சினை (சுரோணிதம்) ஆகியவற்றில் இருந்து கொண்டு கருவிலேயே அந்த ஜீவனின் கர்ம வினைக்கு ஏற்ப கரு உருவாக வழிகாட்டுகிறது. அதனால்தான் ஆழ்மனப் பதிவுகள் உண்டாகின்றன.
அடுத்து சூட்சுமப் பிராணன், கரு, குழந்தையாக வெளிவந்ததும் ஜீவனின் உடம்பில் உச்சி முதல் நெற்றி வரை சஞ்சரித்து சுவாசிக்கும்படி உடலைத் தூண்டுகிறது. உடனே உடல், உலகின் புறக்காற்றில் கலந்துள்ள ஸ்தூல பிராணனை உள்ளிழுப்பதன் மூலம் குழந்தை உயிர்வாழத் தொடங்குகிறது.
கர்மவினைக்கு ஏற்ப கரு உருவாக, சுக்கில, சுரோணித இணைப்பில் உள்ள காரணப் பிராணன் பங்கு வகிக்கிறது என்றேன். கர்மவினை எப்படி உருவாகிறது என்று அடுத்த கேள்வி வரலாம்!
பல ஜன்மங்களில் நாம் திரும்பத் திரும்பச் செய்த செயல்களால் வசியமாகிறோம். நல்ல செயல்கள் புண்ணியமாகின்றன; தீய செயல்கள் பாவமாகின்றன, ஆனால், இந்தச் செயல்கள்... இவற்றால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மிடம் பதிகின்றன என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
இந்தப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்பர். கர்மபீஜம், வாசனா என இரண்டு வகைகளாக சம்ஸ்காரங்கள் செயல்படுகின்றன. மனதில் பதிவாகி மீண்டும் செயல்படத் தூண்டும் செயல்களில் வித்தாக விளங்கும் விதைநிலை கம்மபீஜம். இந்த சம்ஸ்காரங்களால் தூண்டப்பட்டு நம்மைச் செயல்பட வைக்கும் நினைவுகள் வாசனா எனப்படும்.
நீர்நிலையின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி வரும் குமிழி, நீர்ப் பரப்புக்கு அருகில் வரும்போது கூட நம் கண்களுக்குத் �திவதில்லை. நீர்ப் பரப்புக்குமேல் குமிழி தோன்றி உடைந்து போகும் நிலையில்தான் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது.
அதே போல், ஆழ் மனதில் பதிவாகி இருக்கம் சம்ஸ்காரங்கள் ஜம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளிமனதில் பதிவாகி இருக்கும் சம்ஸ்காரங்கள் ஐம்புலன்களுடன் தொடர்பு கொண்டு வெளி மனதில் எண்ணங்களாக வெளிப்பட்ட பின்னரே அவற்றை நாம் அறிய முடிகிறது. நம் ஆழ்மனதில் கணக்கற்ற கர்மபீஜங்கள், சம்ஸ்காரங்கள் நிறைந்துள்ளன. இவையே ஆசைகளாக, உணர்ச்சிகளாக, நினைவுகளாக, எண்ணங்களாக மீண்டும் மீண்டும் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றன. பிறவா நிலை எய்தும் ஞானி கர்மபீஜங்களை முழுமையாக அழித்துவிடுகிறார்.
இவ்வளவு தகவல்களும் ஸ்ரீஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் எழுதியுள்ள பிராண வித்யா எனும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எனவே மனதைக் கடக்க நினைப்பவர்கள் ஸ்தூல பிராணனை நெறிப்படுத்தி, சூட்சுமப் பிராணனில் பிரவேசித்து காரணப் பிராணனைக் கண்டறிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
அன்னமய கோசத்தை ஆட்டிப் படைப்பது மனோபய கோசம். மனோபய கோசத்தை ஆள்வது பிராணமய கோசம். பிராணனை ஒழுங்குபடுத்துவதன் மூலமே மனோலயம் சாத்தியம் என்கிறது இந்திய யோகக்கலை. பிராணாயாமம் என்பது என்பது பிராணனை ஒழுங்குபடுத்தும் யுக்தி. ஆனால் பிராணாயாமம் செய்தவர்கள் எல்லோருமே ஞானிகள் ஆனார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
- ஆனந்தம் தொடரும்....
படம்: கே.ராஜசேகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக