ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

2 posters

Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by T.N.Balasubramanian Mon Aug 07, 2023 1:45 pm

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு...
சூப்பர் அமலாக்கத்துறைக்கு சக்ஸஸ்.. முழு "கண்ட்ரோலில்" வந்த செந்தில் பாலாஜி.. அடுத்த 5 நாள் என்ன நடக்கும்?
. செந்தில் பாலாஜி வழக்கில் பெரிய ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
சரியாக இன்றில் இருந்து 55 நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளார். அவர் வழக்கில் நடந்தது என்ன? ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது. மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர். அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தன. கைது: 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது. தலைமையின் செயலகத்தில் ரெய்டு முடித்து கிளம்பிய அதிகாரிகள் மீண்டும் சில நிமிடங்களில் மீண்டும் அங்கே வந்தனர் .தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் 10 மணி நேரமாக சோதனை நடந்த பின்பும் மீண்டும் வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் உள்ள மூன்று கணினிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினர். அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
பைபாஸ்:
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முகத்தை கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு செந்தில் பாலாஜி கடுமையாக சத்தம் போட்டார். அவர் சோகமாக அழுத காட்சிகளும் வெளியாகின. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ செய்த மருத்துவர்கள், உடனே பைபாஸ் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதை அமலாக்கத்துறை எதிர்க்க கோர்ட் போராட்டத்திற்கு பின் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பைபாஸ் செய்யப்பட்டது. ஆட்கொணர்வு வழக்கு: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை முறையின்றி கைது செய்து இருப்பதாக அவரின் மனைவி மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முதலில் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கில் தனி தனி தீர்ப்பு வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதி சி கார்த்திகேயன் முன் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது சரியானதே.. இதை சட்ட விரோதம் என்று கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் உடனடியாக செந்தில் பாலாஜி மனைவி சார்பாக ஆட்கொணர்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணை பாயிண்ட்:
இந்த உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த ஒன்றரை வாரமாக தீவிரமாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு பின்வரும் வாதங்களை வைத்தது,
1. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை நிராகரிக்க வேண்டும்; அதிகாலை, மனித உரிமை மீறி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
2. அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர். மனைவியிடம், உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை. அமலாக்கத்துறை விதி மீறல்கள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கைது செய்துள்ளனர்.
3. கைதுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்படவில்லை. கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை. செந்தில் பாலாஜியிடமே ஏன் என்று சொல்லாமல் கைது செய்துள்ளனர். மனித உரிமையை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்., என்று வாதம் வைத்தார்.
4. காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை விசாரித்தனர். அவருக்கு உணவு கூட கொடுக்காமல் டார்ச்சர் செய்துள்ளனர்.
5. அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.
6.பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும். கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..
7. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கூறும் போது அவசர அவசரமாக கைது ஏன்? ஆகிய வாதங்களை செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபல் வைத்தார்.

அமலாக்கத்துறை வாதம்:
அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார். அதில், அவர் முக்கியமான சில பாயிண்டுகளை வைத்தார். அவர் வைத்த பாயிண்டுகள் பின்வருமாறு..
1. ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை எப்படி போட முடியும். ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.
2. நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.
3. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் எங்கே உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசார்ணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர். மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை
4. கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் எங்களுக்கு காவல் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை.
5. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது. அதனால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது.
6. சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும். முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.
7. நாங்கள் ஆதாரம் எல்லாம் இல்லாமல் கைது செய்யவில்லை. உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார். 8. கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்.
9. கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார், என்று வாதம் வைத்துள்ளார்.
. செந்தில் பாலாஜிக்கு ஷாக் தந்த உச்ச நீதிமன்றம்..

அமலாக்கத்துறைக்கு வந்த கடைசியில் கஸ்டடி: விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகாரபூர்வமாக்கிவிடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது. இதனால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை இன்றி கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty Re: செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by சிவா Mon Aug 07, 2023 3:24 pm

ஐயா அமலாக்கத்துறை அதிகாரிகளே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது உண்மையா இல்லையா என்பதை மட்டும் கூறிவிடுங்கள்...

மற்ற விசாரணைகளை பிறகு நடத்திக் கொள்ளலாம்....


செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty Re: செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by T.N.Balasubramanian Mon Aug 07, 2023 5:21 pm

இது பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு , சட்டம் இடம் கொடுக்கிறதா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty Re: செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by சிவா Mon Aug 07, 2023 5:27 pm

T.N.Balasubramanian wrote: இது பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு , சட்டம் இடம் கொடுக்கிறதா?

விசாரிக்க வேண்டாம், சட்டையைக் கழற்றிப் பார்த்தால் தெரியும் தானே... சோகம்


செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty Re: செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by T.N.Balasubramanian Mon Aug 07, 2023 6:48 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote: இது பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு , சட்டம் இடம் கொடுக்கிறதா?

விசாரிக்க வேண்டாம், சட்டையைக் கழற்றிப் பார்த்தால் தெரியும் தானே... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: undefined

தெரியாமல்தான் ஒரு விஷயம் கேட்கிறேன்.
மயக்கமருந்து கொடுத்து மார்பில் ஒரு கீறல் போட்டு
அதை தைத்துவிட்டால், ஆபரேஷன் செய்ததற்கான அறிகுறியாகுமா அது.?

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம். Empty Re: செந்தில் பாலாஜி -அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு -உச்ச நீதிமன்றம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» கிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீடு: உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum