ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு

2 posters

Go down

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Empty குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு

Post by சிவா Tue Jul 18, 2023 6:11 pm

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  HmRfp8A

குழந்தை பிறந்தவுடன் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2021-ம் ஆண்டில் போர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான்கில் ஒரு தாய் மற்றும் பத்தில் ஒரு தந்தை மனநலம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டடைந்திருக்கின்றனர்.

குழந்தைகளுடன் இருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருப்தி அடைவதையும் இந்த ஆய்வு அவதானித்திருக்கிறது.

அதே சமயம் குழந்தைகளைப் பெற்ற தம்பதியினரிடையே குழந்தை பிறந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து காதல் குறைந்து வருவதாகவும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. குழந்தை இல்லாத 62% பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளின் தாய்மார்களில் இந்த எண்ணிக்கை 38% ஆக மட்டுமே இருந்தது. இதற்கு ஒரு காரணம் அவர்கள் பாலுறவில் ஈடுபடும் அளவு குறைவது அல்லது அதன் தாக்கம் என்று கூறப்படுகிறது.

மன நோய் மற்றும் மன அழுத்தம்


குழந்தை பிறந்த பிறகு கணவன்-மனைவி உறவில் ஏற்படும் பாதிப்பால், பல தம்பதிகள் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள கான்கே மருத்துவமனையின் மத்திய மனநல மருத்துவக் கழகத்தின் (Central Institute of Psychiatry, Ranchi) இணைப் பேராசிரியர் டாக்டர். சஞ்சய் முண்டா, சில உணர்வுள்ள தம்பதிகள் கருத்தரித்த உடனேயே ஆலோசனைக்கு வருகிறார்கள் என்றும், இதனால் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவு மோசமாகப் பாதிக்கப்படாது என்றும் கூறுகிறார்.

டாக்டர் சஞ்சய் முண்டா பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “ஒரு குழந்தையின் பிறந்தவுடன் கணவன்-மனைவி இடையேயான உறவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த விளைவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கலாம். தற்காலத்தில் தனிக்குடும்பங்கள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற நேரங்களில் தம்பதிகளுக்கு அறிவுரை கூற குடும்பத்தில் வேறு யாரும் இல்லை. முதல் முறையாக பெற்றோர் ஆன தம்பதிகளுக்கு முன் அனுபவம் இல்லாததால் பதற்றம் அதிகரிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

“குழந்தை பிறந்த பிறகு, குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தம்பதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போது, அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும்போது, நாங்கள் அவர்களுக்கு மருந்துகளையும் கொடுக்கிறோம் வேண்டும், கவுன்சிலிங்கும் செய்கிறோம்,'' என்றார்.

“ஆலோசனைக்குப் பிறகு, அத்தகைய ஜோடியின் உடல் நிலையையும் மனநிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலைமையை சீராக்க முயற்சிக்கிறோம்," என்கிறார் அவர்.

தனிக் குடும்பங்கள்


ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் அனுஜ் குமார் கூறுகையில், தற்போது நியூக்ளியர் குடும்பங்கள் எனப்படும் தனிக்குடும்பங்களில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் உருவாவதாகக் கூறுகிறார்.

இன்றைய தம்பதிகள் சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பதும், கணவன்-மனைவி இருவரும் தஙக்ள் அலுவலக வேலையிலேயே அதிக கவனம் செலுத்துவதுமாகவும் இருக்கின்றனர். “இவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவில் மோசமான விளைவுகள் உருவாகின்றன," என்கிறார் மருத்துவர் அனுஜ் குமார்.

அவர் மேலும் கூறுகையில், முன்பு நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். குழந்தையைப் பார்த்துக் கொள்ள தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் இருந்தார்கள். இப்போது பெரும்பாலான மக்கள் தனிக் குடும்பமாக வாழ்கின்றனர்.

“இங்கு கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்துடன் அவர்கள் அலுவலக பணியிலும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் இருவரும் பணியில் இருந்தால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். இவற்றில் சூழ்நிலைகள், குழந்தை பிறந்த பிறகு, கணவன்-மனைவி இடையேயான உறவு மோசமாக பாதிக்கப்படுகிறது," என்கிறார்.

அவர் மேலும் பேசுகையில், "மனைவி குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணவன் விரும்புகிறான், மனைவிகள் கணவனிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். பிறகு எல்லாப் பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் குவிந்து, கடைசியில் அது சண்டையாகவும், சச்சரவாகவும் மாறுகிறது. குழந்தை பிறக்கும் முன்னரே எதிர் காலத்தை நன்றாகத் திட்டமிடுவது முக்கியம்,” என்கிறார்.

குழந்தைப்பேறு ஒவ்வொரு தம்பதியையும் பாதிக்கிறதா?


குழந்தைகள் பிறப்பது எல்லா தம்பதிகளின் வாழ்க்கையிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்பது இல்லை.

சில தம்பதிகள், தங்கள் உறவின் வலிமைக்கு குழந்தைகளும் காரணம் என்று சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஜோடியில் பாலிவுட்டின் பிரபல ஜோடியான சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூரும் இணைந்துள்ளனர்.

அவர்களது மகன் தைமூர் பிறந்த பிறகு அவர்களது பிணைப்பு வலுப்பெற்றதாக நம்புகிறார்கள்.

இது குறித்து கரீனா கபூர் 'பிரெக்னன்சி பைபிள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் தைமூர் பிறந்த பிறகு தங்களின் உறவு வலுப்பெற்றது எனவும், அவர்களுக்கிடையேயான காதல் மேலும் அதிகரித்தது, எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் புத்தகத்தில், கரீனா கபூர் கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Empty Re: குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு

Post by Dr.S.Soundarapandian Wed Jul 19, 2023 9:24 am

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum