புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்
Page 1 of 1 •
புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருந்துச் செலவு மிக மிக அதிகம் என்பதால் பலரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலையும் சந்திக்கிறது
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), உலக சுகாதார நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவை, மத்திய - மாநில அரசுகள் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. அந்த அளவுக்கு அரசுகளைக் கண் விழிக்கச் செய்திருக்கிறது அந்த ஆய்வு தந்திருக்கும் ஒரு புள்ளிவிவரம்.
இந்தியாவின் 26 மாநிலங்களையும், 4 யூனியன் பிரதேசங்களையும் தேர்வு செய்து, அங்கு வாழும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன புற்றுநோய்கள் எந்த அளவில் வருகின்றன என்பதில் தொடங்கி நடந்தது இந்த ஆய்வு. சிகிச்சை விவரங்கள், சிகிச்சையின் பலன்கள், சிகிச்சை கொடுத்த மருத்துவமனையின் கட்டமைப்பு, அங்கு புழக்கத்தில் இருக்கும் சேவை விவரங்கள் வரை பல்வேறு விஷயங்களை இதுவரை இல்லாத வகையில் ஆய்வு செய்தார்கள்.
137 மூன்றாம்நிலைப் பராமரிப்பு (Tertiary care) மருத்துவமனைகளிலும், 92 இரண்டாம் நிலைப் பராமரிப்பு (Secondary care) மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்காகப் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதன் முடிவை ‘National centre for disease informatics and research - NCDIR’ வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் 75,000 குழந்தைகள் ஆண்டுதோறும் புதிதாக ஏதேனும் ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது உலக அளவில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் எண்ணிக்கையில் 20%. ‘மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது புதுடெல்லியில்தான் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பு அதிகம்' என்கிறது அந்த அறிக்கை. மேலும், இதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதுதான் நம் கவலையை இன்னும் அதிகரிக்கிறது.
தடைகள் என்னென்ன?
இந்தியாவில், குழந்தைப் பருவ புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கணிப்பதிலும், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதிலும் உள்ள தடைகளையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாள்பட்ட காய்ச்சல், உடல் வலி, எலும்பு வலி, உடல் எடை குறைவது, கடுமையான சோர்வு, கட்டிகள், சில்லுமூக்கு போன்ற ரத்தக்கசிவுகள் ஆகியவை குழந்தைகள் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள். இவை சில சாதாரண தொற்றுநோய்களுக்கும் பொருந்தும் என்பதால், இவற்றைப் புற்றுநோய் அறிகுறிகளாக எடுத்துக் கொள்வதில் பொதுநல மருத்துவர்களுக்கே பல நேரங்களில் சந்தேகம் வருவதுண்டு. அதனால், புற்றுநோயை ஆரம்பநிலையில் மருத்துவர்களே கவனிக்கத் தவறி விடுகின்றனர் என்கிறது அந்த அறிக்கை.
பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளோடு ஒப்பிடும்போது, குழந்தைப் பருவ புற்றுநோய்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிக அதிகம் தாக்குகிறது. ‘புற்றுநோய் என்பது வயதானவர்களுக்கு வரும் நோய்' என்று இந்தியர்களின் பொதுப்புத்தியில் காலம் காலமாகப் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால், சாமானியப் பெற்றோர்கள் இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அலட்சியம் செய்துவிடுகின்றனர்.
வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனைகள் காப்பீட்டுத் திட்டங்களில் அனைவருக்கும் கிடைப்பதாலும், மேம்பட்ட சிகிச்சைகள் தடையின்றிக் கிடைப்பதாலும், குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பில் 20% பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். இந்தியாவிலோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாமதமாக சிகிச்சைக்கு வருவதாலும், அப்போது புற்றுநோய் அவர்கள் உடலுக்குள் பல பகுதிகளில் பரவிவிடு வதாலும், சிகிச்சை பலனின்றி 60% பேர் வரை உயிரிழக்கின்றனர்.
குறைவான பரிசோதனை வசதிகள்
இத்தனைக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்குக் காரணம் தெரிந்து, ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் 80% வரை குணப்படுத்திவிட முடியும். ஆனால், அப்படிக் காரணம் தெரிவதிலும் நடைமுறைச் சிரமங்கள் இருக்கின்றன. சிலருக்கு சில வைரஸ் தொற்றுகள் காரணமாகின்றன. மற்றவர்களுக்கு தற்போதைய மேற்கத்திய உணவுமுறைகளும் நவீன வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். அதேசமயம், இன்னும் தெரியாத காரணங்கள் பலவும் இருக்க வாய்ப்பு உண்டு. சுமார் 10% பேருக்கு மட்டுமே மரபு சார்ந்த காரணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களைக் கண்டறிந்து, புற்றுநோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள குழந்தைகளுக்குச் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. ‘நோய் முன்கணிப்புப் பரிசோதனைகள்’ (Screening Tests) என அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை களுக்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் பொது மருத்துவமனைகளில்கூட இந்தப் பரிசோதனை வசதிகள் முழுமையாக இல்லை. குழந்தைப் பருவ புற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறுவதில் சிரமங்கள்
புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருந்துச் செலவு மிக மிக அதிகம் என்பதால் பலரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலையும் சந்திக்கிறது. தனியார் என்றாலும், அரசு சார்ந்தது என்றாலும், பெரும்பாலான தரமான புற்றுநோய் மருத்துவமனைகள் பெரு நகரங்களில்தான் இருக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையில் மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை என இருவகை உண்டு. இந்தச் சிகிச்சைகள் சில வாரங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும் தன்மையுள்ளவை. ஆகவே, அக்காலம் முழுவதும் குழந்தைகள் வெளி நோயாளியாகவோ, மருத்துவமனையில் தங்கியோ சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், நாட்டில் பெரும்பாலான புற்றுநோய்க் குழந்தைகள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோர் தினக்கூலிகளாக இருக்கின்றனர். ஆரம்ப சிகிச்சைக்காக அதிக தூரம் பயணிப்பதற்கும், தொடர் சிகிச்சைக்காகப் பலமுறை பயணிப்பதற்கும், நீண்ட காலம் நகர்ப்புற மருத்துவமனைகளில் தங்குவதற்கும் அவர்களின் பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. இந்த ஒட்டுமொத்த அனுபவமும் அந்தக் குடும்பங்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் அடிக்கடி சிகிச்சையைக் கைவிட்டுவிடுகின்றனர். இதனால், இந்தியாவில் குழந்தைப் பருவ புற்றுநோய்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிப்பதும் கடினமாகிறது.
அப்படியே அவர்கள் சிகிச்சை எடுக்க முன்வந்தாலும், இந்தியாவில் பல அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமலிருப்பதால், அவர்கள் தங்கும் இட வசதிக்கும் சிரமப்படுகின்றனர். இவ்வகையினர் நாட்டில் பல பகுதிகளில் நடைபாதைகளில் படுத்து உறங்கும் அவலத்தையும், அடிக்கடி மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போதாமையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
பிரச்னை என்னவென்றால், இப்போதுள்ள தேசிய புற்றுநோய்த் திட்டங்கள் எல்லாமே பெரியவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு தொடர்பாகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை பெற வழி செய்திருப்பதோடு, மத்திய அரசு தன்னுடைய கடமையை நிறுத்திக் கொள்கிறது. அதிகம் சென்றால், அயல்நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. இவைமட்டும் போதாது. தற்போது அதிகரித்து வரும் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்புகளைச் சரியாக எதிர்கொள்ள, இதற்கென்றே தனியாக ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கி, குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கென மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
போதுமான குழந்தைநல புற்றுநோய் சிறப்பு மருத்துவர்களைப் (Paediatric Oncologists) பணியில் அமர்த்த வேண்டும். எல்லாப் பொதுநல மருத்துவர்களுக்கும், செவிலியர் உள்ளிட்ட துணைச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான தொடர் கற்றல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கணித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியும். பயனாளிகள் பெற்றோருடன் குறைந்தது தாலுகா அளவிலாவது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். மொத்தத்தில், குழந்தைகள் என்பதாலேயே அவர்களின் உயிர் மலிவானதல்ல என்பதை அரசுகள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
இந்தியாவில் 100 புற்றுநோயாளிகளில் 4 பேர் குழந்தைகளாக இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கியமானவை ரத்தப் புற்றுநோய் (Leukemia), எலும்புப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், நிணநீர்க்கட்டி புற்றுநோய் (Lymphomas).
பெண்களைவிட ஆண் குழந்தைகளுக்கே புற்றுநோய் அபாயம் அதிகம்.
புற்றுநோய் பாதித்த இந்தியக் குழந்தைகளில் 49% பேர், தங்களுக்குப் புற்றுநோய் இருப்பதையே அறியாமல் இருக்கின்றனர்.
டாக்டர் கு.கணேசன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|