புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_lcapசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_voting_barசெந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Jul 2023 - 15:34

செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு 4eb18420-2262-11ee-941e-23d1e9ab75fa

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், அவரது கைதுக்கான காரணங்கள் சொல்லப்படவில்லை என்று கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டவிரோத காவலில் உள்ள செந்தில் பாலாஜியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

'கைது செல்லும்'


வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பரத சக்கரவரத்தி, மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், செந்தில்பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் காவல் கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று, (ஜூலை 15, வெளிக்கிழமை) மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செந்தில் பாலாஜி கைது செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன்தான் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.

'மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு சரியானது


தற்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு சரியானது என்று கூறுகிறார் முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம்

சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் வழக்கின் போக்கு, செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி பிபிசி தமிழ் ஒரு சட்ட வல்லுநரிடமும் ஒரு அரசியல் விமர்சகரிடமும் பேசியது.

தற்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு சரியானது என்று கூறுகிறார் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனு செல்லாது என்றார். “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக எப்படிச் சொல்லமுடியும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், இவ்வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்றார். “இதேபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா இதேபோன்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு, இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்கள் இருக்கின்றன, எனவே இந்த வழக்கு மேற்கொண்டு செல்லும், என்றார்.

செந்தில் பாலாஜிக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்?


இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வருவது நிச்சயம் என்றார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

இந்தத் தீர்ப்பின் மூலம், செந்தில் பாலாஜி சந்திக்கக்கூடிய சிக்கல்களைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி குறுகிய காலகட்டத்தில் வெளியே வருவது கடினம் என்றார்.

இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்ல வேண்டிய வருவது நிச்சயம் என்கிறார் குபேந்திரன்.

“இப்போது அவர் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் அவர் ஒரு கஸ்டடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். எப்படியும் அடுத்த 2 அல்லது 3 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டிவரும்,” என்றார்.

மேலும், அவர் ஒவ்வொருமுறை ஜாமீனுக்காக விண்ணப்பிக்கும் போதும், அமலாக்கத்துறை அவருக்கு எதிரான ஒரு புதிய ஆவணத்தை வெளியிட்டு, இந்த சாட்சிகளை அவர் கலைக்கப் பார்ப்பார் என்று வாதிட்டு, ஜாமீன் கிடைப்பதை முடக்கப் பார்க்கும், என்றார் குபேந்திரன்.

மேலும் அவரது தம்பி அசோக் குமார் இருக்கும் இடம் இன்னும் தெரியாமல் இருப்பதும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் குபேந்திரன். அவரை வைத்து இவரை வளைக்கப் பார்ப்பார்கள் என்கிறார்.

அதேபோல், ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததும் அவருக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளது, என்கிறார் குபேந்திரன்.

செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?


செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிய அவர், அவர் சிறையிலிருந்து வந்த பின்னும் அவரை தி.மு.க ஆதரிக்குமா என்பது அவரைச் சுற்றியிருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள், அவருக்கு எதிரான ஆவணங்கள் ஆகியவற்றைப் பொருத்தது, என்றார்.

தமது கணிப்பில் செந்தில் பாலாஜி இந்தப் பிரச்னையிலிருந்து முழுதாக வெளிவர ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்.

“அவர் எந்த சிக்கலும் இன்றி இந்த வழக்கிலிருந்து வெளியே வந்துவிட்டால், தி.மு.க.விலேயே தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

ஆனால் அவருக்கு எதரான ஆவணங்கள், சிறைத்தண்டனை என்று மேலும் சிக்கல்கள் உருவானால் அவரது அரசியல் வாழ்க்கை தடைபடும். இருப்பினும் சிறைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு அரசியல்வாதியில் அரசியல் வாழ்க்கை தடைபடாது,” என்றும் குறிப்பிட்டார், குபேந்திரன்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?


கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அந்த விஷயத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

பிபிசி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 15 Jul 2023 - 22:13

சமீபத்தில் ஒரு சீரியலில் போலீஸ் லாக்கப்பில் இருந்த மூன்று கைதிகள்

நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று கதறி, ஆசுபத்திரி போகும் வழியில் தப்பித்து ஓடியதாக

கூறினார் எனது உறவினர்.

நல்ல முன்னுதாரணம். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக