புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
48 Posts - 51%
heezulia
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
48 Posts - 51%
heezulia
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மருத்துவக் காப்பீடு  Poll_c10மருத்துவக் காப்பீடு  Poll_m10மருத்துவக் காப்பீடு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் காப்பீடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 8:29 pm

மருத்துவக் காப்பீடு  TnJBkjh

மருத்துவக் காப்பீடு எடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டால், லட்சக் கணக்கில் பணம் செலவாகும். அந்தச் சமயத்தில், பணம் இல்லாத நேரத்தில் யாரும் நமக்கு உதவி செய்ய வருவார் களா என்று தெரியாது.

மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்து வைத்திருந்தால், அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியின் மூலம் மருத்துவ மனைக்கான செலவுகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமாளித்து விடலாம்.

பணமில்லா (Cashless) சிகிச்சை வசதிகொண்ட பாலிசி எனில், பணம் எதுவும் கட்டாமலேயே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்துவிடலாம். மருத்துவக் காப்பீட்டு பாலிசி எந்த கம்பெனியில் எடுத்திருக்கிறோமோ, அந்த கம்பெனி யிலிருந்து அனுமதி கிடைத் ததும் மருத்துவமனையில் சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்பதால் கவலை இல்லாமல் இருக்கலாம்.

உதாரணமாக, மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்காத ஒருவருக்கு திடீரென மாரடைப்பு வருகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு பணம் கையில் இருந்தால், செலவு செய்துவிடலாம். இல்லையெனில், எங்கே போவது? அந்த மாதிரியான நேரத்தில் மருத்துவக் காப்பீடு பாலிசி நமக்குக் கைகொடுக்கும். நம் கையில் இருந்து பெரிய அளவில் பணம் செலவு செய்யாமல், பிரச்னையை சமாளிக்கலாம்.

ஒட்டுமொத்தமாக 20 வருடத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் பிரீமியம் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். ஆனால், அந்த 20 வருடத்தில் எத்தனையோ முறை சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்ந்திருக்கலாம். எவ்வளவோ தொகையை க்ளெய்ம் செய்திருக்கலாம். மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்காமல் இருந்திருந்தால், மருத்துவமனை செலவுகள் அனைத்துக்கும் கையில் இருந்துதான் காசு போட்டுக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

எனக்கு எந்த நோயும் வராமல் இருந்து, மருத்துவ மனைக்கே போகாமல் இருந்திருந்தால் எனக்கு பிரீமியம் செலுத்திய தொகை மிச்சம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? எதிர் பாராத நிகழ்வுகள் எப்போதும் வரலாம். எனவே, அதற்காக நாம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதே பாதுகாப்பான நிலையை உருவாக்கும்.

நம் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். மனசந்தோஷத்துக் காக மட்டுமே நாம் செய்யும் அந்தச் செலவுகளுக்கு நாம் கணக்கே பார்ப்பதில்லை. ஆனால், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்கும்போது மட்டும் நம்மில் பலரும் நிறையவே யோசிப்பதைப் பார்க்கிறோம். மருத்துவக் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் பிரீமியம் செலுத்தப்போகிறோம். இளம் வயது குடும்பம் எனில், ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000-தான் பிரீமியமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், ரூ.5 லட்சம் கவரேஜ் கொண்ட ஒரு பாலிசிக்கு சுமார் ரூ.8,000-தான் பிரீமியமாக இருக்கும்.

வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்ட இந்தக் காலத்தில் நம் உடம்புக்கு எந்த நோயும் வராது என் றெல்லாம் நாம் சொல்ல முடியாது. நம் மூதாதையர்கள் சாப்பிட்ட உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை. அவர்கள் போல, நாம் ஓடியாடி வேலை பார்ப்ப தில்லை. உடலுக்கும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு தந்து, உற்சாகப்படுத்திக்கொள்வதில்லை. யாரும் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை; தூங்குவ தில்லை, இந்தப் பிரச்னை எல்லாத் தரப்பினரிடமும் உண்டு என்றாலும், தகவல் தொழில்நுட்ப துறையினர் இது மாதிரியான வாழ்க்கை முறையினால் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.

இன்னும் சிலர், வேலை பார்க்கும் அலுவலகத்தில் தரப் பட்டுள்ள குழுக் காப்பீட்டை (Group Insurance) மலை போல நம்பி இருக்கிறார்கள். இந்தக் குழுக் காப்பீட்டு பாலிசி மட்டுமே ஒருவருக்குப் போதுமானதாக இருக்காது. ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது, பழைய நிறுவனத்தில் எடுத்த மருத்துவக் காப்பீடு பாலிசி புதிய நிறுவனத்தில் செல்லுபடி ஆகாது. புதிய நிறுவனத்தில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்த பிறகு உடனடியாக உங்களை அவர்களின் குழு மருத்துவக் காப்பீட்டில் சேர்க்க கொஞ்சம் காலம் பிடிக்கலாம். மேலும், புதிய நிறுவனத்தில் குழுக் காப்பீட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அலுவலகங்களில் தரப்படும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்குத் தரப்படும் கவரேஜ் தொகை என்பது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்துக்கு உள்ளாக மட்டுமே இருக்கும். மருத்துவச் செலவானது ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்த கவரேஜ் தொகை என்பது நிச்சயம் போதாது. மருத்துவமனையில் ரூ.4 லட்சம் செலவாகும்பட்சத்தில் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் தந்துவிட்டு, மீதமுள்ள ரூ.2 லட்சத்தை உங்கள் கையில் இருந்துதான் தர வேண்டும்.

ஆனால், நீங்கள் தனியாக ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்திருந்து, குழுக் காப்பீட்டு பாலிசியும் உங்களிடம் இருந்தால், இந்த இரண்டு பாலிசிகள் மூலமும் மருத்துவமனைக்கான செலவுகளை க்ளெய்ம் செய்ய முடியும்.

ஒருவர் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மருத் துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பதாகும். இந்த பாலிசியை எடுப்பவர்கள் மருத்துவமனை தொடர்பான செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். பல லட்சம் ரூபாயை மருத்துவமனைக்குச் செலவு செய்வதைவிட சில ஆயிரம் ரூபாயைத் தந்து மருத்துவக் காப்பீட்டு பாலிசியை அனைவரும் எடுக்கலாமே!

பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு


வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட பெற்றோருக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டும் எனில், அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கிறது என்று பலரும் யோசிக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கு வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகையும் கூடுதலாகவே இருக்கும். ஆனால், பெற்றோர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கத் தவறக் கூடாது.

உதாரணமாக, பெற்றோர் இருவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 பிரீமியம் கட்ட வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் வருடம் ரூ.50,000 பிரீமியம் செலுத்திய சில மாதங்களில், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ மருத்துவச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது நீங்கள் செலுத்தியிருக்கும் பிரீமியம் ரூ.50,0000-தான். ஆனால், நீங்கள் ரூ.10 லட்சம் வரை சிகிச்சை எடுத்துக்கொண்டு, க்ளெய்ம் செய்யலாம். ஆனால், நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்கவில்லை எனில், இந்தச் செலவை கையிலிருந்துதான் செய்ய வேண்டியிருக்கும். பணம் இல்லாத நிலையில் கடன் வாங்க வேண்டியிருக்கும்; முக்கியமான சொத்தை அடமானம் வைத்து பணத்தைத் திரட்ட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான நிலை வராமல் இருக்க மருத்துவக் காப்பீடு அவசியமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 10, 2023 8:31 pm

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை



ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலை, தொழில் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். குடும்பம், வேலை என்று இரண்டு பொறுப்புகளையும் சுமப்பதால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு உதவும் வகையில் பல காப்பீட்டு நிறுவனங்கள், பிரத்தியேக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

எந்த அடிப்படையில் இந்த திட்டங்களை தேர்வு செய்வது, எந்த காப்பீடு அதிக பலன் தரக்கூடியது போன்ற குழப்பங்கள் பலருக்கு இருக்கலாம். ஆண்களுக்கான மருத்துவ தேவைகளும், பெண்களுக்கான மருத்துவ தேவைகளும் வெவ்வேறாக இருப்பதால் பொதுவான கருத்துகளைக் கொண்டு ஒரு பெண் தனக்கான மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்ய முடியாது. அந்தவகையில் பெண்கள் மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்பு எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

30 வயதிற்குள் மருத்துவ காப்பீடு: பெண்களுக்கு 30 வயது நெருங்க ஆரம்பிக்கும்போதே உடல் ரீதியான பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் இருக்கும்போது, தனக்கு பொருத்தமான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது கடினமான இருக்கும். எனவே, பெண்கள் 30 வயதை நெருங்குவதற்கு முன்பே மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.

பெண்கள் சார்ந்த நோய்கள் காப்பீட்டில் அடங்கி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்:


40 வயதை அடையும் பெண்கள் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், எலும்பு தொடர்பான நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் இதுபோன்ற பெண்கள் சார்ந்த நோய்களை சேர்ப்பது இல்லை. எனவே மருத்துவக் காப்பீடு எடுக்கும்போதே மேலே குறிப்பிட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைகளும் அந்த திட்டத்தில் அடங்கியுள்ளதா என்பதை விசாரித்து தேர்வு செய்வது நல்லது.

மகப்பேறு நன்மைகள்:


பெண்களுக்கான முக்கியமான மருத்துவச் செலவுகளில் மகப்பேறு செலவும் ஒன்று. இன்றைய காலத்தில் மகப்பேறு செலவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு செலவுகளும் அடங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பிறந்த குழந்தையின் அத்தியாவசிய செலவுகளான தடுப்பூசி போன்றவற்றையும் உள்ளடக்கிய மகப்பேறு காப்பீட்டு திட்டமாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

உங்களது மருத்துவ தேவைகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்ற காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு திட்டமானது நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகள் ஆகியவற்றில் செல்லுமா? அந்த திட்டத்திற்கு வரி விலக்கு உள்ளதா என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக