புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_m10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_m10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_m10 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 4:56 pm

 தைராய்டு, மாரடைப்பு, மைக்ரேன், மார்பகப்புற்று - உங்கள் உடல் பிரச்சனைகளை நீங்களே கண்டுபிடிக்கலாம் DzqfO0J

பெண்களில் 50-60 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர் தொற்றுப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மில்லி சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள்.

உடல்நலம், மனநலம் எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால் தீவிர பாதிப்பை மட்டுமல்ல, அதிக செலவையும் தவிர்க்கலாம். வீட்டிலேயே எளிய சுய பரிசோதனையின் மூலம் பிரச்னைகளைக் கண்டறிவதற்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவர்கள் ஆலோசனைகள் அளித்துள்ளனர். இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிசோதனைகள் ஒரு தெளிவுக் காக மட்டுமே. எனவே, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.



மார்பகப் புற்றுநோய்


பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்: மார்பகத்தில் வலி மிகுந்த அல்லது வலியில்லாத கட்டி, காம்பில் ரத்தம், நீர் அல்லது சீழ் வடிதல், புண், காம்பு உள்நோக்கி இழுக்கப் பட்டிருத்தல், மார்பகத்தின் சருமம் ஆரஞ்சுப்பழம் போன்று புள்ளிகளுடன் இருப்பது, சிவப்பு நிறம், தடிப்பு, அக்குள் பகுதியில் நெறிக்கட்டி, மார்பகங்கள் சம அளவில் இல்லாதிருத்தல்.

சுய பரிசோதனை


கண்ணாடியின் முன் நின்று தோள்பட்டையை நேராக வைத்து, கைகளை இடுப்பில் வைத்து மார்பகங்கள் இயல்பான வடிவிலும் நிறத்திலும் இருக் கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

இரண்டு கைகளை உயர்த்திய நிலையிலும் மேலே சொன்னதைப் பரிசோதிக்க வேண்டும்.

அடுத்ததாக, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, கை விரல்கள் நான்கையும் சேர்த்தாற்போல் வைத்து, மார்பகப் பகுதிகளில் ஏதேனும் கட்டி தென்படுகிறதா என நுனிவிரல்களால் மென்மையாக வட்ட இயக்கத்தில் தடவிப் பார்க்க வேண்டும்.

இடது புறத்தை வலது கை விரல்களைக் கொண்டும், வலது புறத்தை இடது கை விரல்களைக் கொண்டும் மார்பகத்தின் மேலே, கீழே, பக்கவாட்டுப் பகுதி மற்றும் அக்குள் ஆகியவற்றில் இதே முறையில் பரிசோதிக்க வேண்டும்.

மாதத்தில் ஒருமுறை இவ்வாறு பரிசோதிக்க வேண்டும். மாதவிடாய் நாள்களுக்குப் பிறகு பரிசோதிப்பது நல்லது.



சிறுநீர்ப்பாதைத் தொற்று


பெண்களில் 50-60 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர் தொற்றுப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மில்லி சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள். சிறுநீர்க்குழாயின் அளவு சிறியதாக இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் இடம், வெஜைனா, ஆசனவாய் மூன்றும் அருகருகில் இருப்பதாலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, பொதுக் கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துதல், மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவது போன்றவை இந்தப் பிரச்னையை உருவாக்கலாம்.

சுய பரிசோதனை


மருத்துவப் பரிசோதனையில்தான் இதை உறுதி செய்ய முடியும். இருப்பினும் கீழே குறிப்பிட்டுள்ள கேள்விகளில் ஒன்று அல்லது அதற்கு மேலானவற்றுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம்.

1. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறதா?

2. அடிவயிற்றில் வலி உள்ளதா?

3. குளிருடன் காய்ச்சல் அடிக்கிறதா?

4. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா?

5. சிறுநீர் கழித்த பின்னரும் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு உள்ளதா?

6. சீராகப் பிரியாமல் சிறுநீர் விட்டுவிட்டு வருகிறதா?

7. வெள்ளையாக இல்லாமல் சிறுநீரின் நிறம் கலங்கியதுபோல இருக்கிறதா?

8. சீழுடன் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா? (இந்த அறிகுறி சிறுநீர் வெளியேறும் இடத்தில் ஏற்பட்டிருக்கிறதா அல்லது வெஜைனாவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெஜைனாவில் ஏற்பட்டால் அது அந்தப் பகுதியைச் சார்ந்த தொற்றாக இருக்கலாம்.)

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஓரிரு நாள்களுக்கு மேல் நீடித்தால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் தொற்று தீவிரமாகி பல உறுப்புகளை பாதிக்கும். சிறுநீரில் காணப்படும் பாக்டீரியா, ரத்தத்தில் கலந்துவிட்டால் ரத்தத்தில் நச்சேற்றம் ஏற்பட்டு உயிரிழப்புகூட ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகினால் வெறும் மருந்துகளிலேயே சரி செய்துவிடலாம்.



வெள்ளைப்படுதல்


வெள்ளைப்படுதல் எல்லா பெண்களுக்கும் இயல்பாக இருக்கும் உடலியல் செயல்பாடு. பீரியட்ஸுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்களுக்கு வெள்ளைப்படுதல் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கும். பீரியட்ஸ் நிறைவடைந்த நேரத்தில் வெளியாகும் திரவம் நீர்த்துக் காணப்படும்.

கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெடிக்கும் நாள் மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு நாள்களை கருத்தரிக்க உகந்த காலம் என்போம். இந்த நான்கைந்து நாள்களில் வெள்ளைப்படுதலில் நீர்த்தன்மையும், அளவும் மேலும் அதிகரிக்கும். அந்த நான்கைந்து நாள்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்கள் வரை திரவம் கெட்டியாகவே காணப்படும். பீரியட்ஸ் ஏற்படும் வரை அதே நிலையில்தான் இருக்கும்.

எது பிரச்னை?


மலத்துவாரத்திலிருக்கும் பாக்டீரியா, பூஞ்சையினால் தொற்று ஏற்படலாம். உடலுறவின்போது துணையிடமிருந்து தொற்று பரவலாம். கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், அனீமியா உள்ளவர்கள், கர்ப்பிணிகள் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பூஞ்சைத்தொற்று ஏற்படலாம். பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருந்தால் வெள்ளைப்படுதலின் நிறம், வாடை, அளவு என அனைத்தும் மாறுபடும். பாதுகாப்பற்ற உடலுறவு, ஒன்றுக்கும் மேற்பட்டவர் களுடனான பாலியல் செயல்பாடுகளால் ‘பாக்டீரியல் வெஜைனோசிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று வரலாம். பூஞ்சைத் தொற்று, பாக்டீரியல் வெஜைனோசிஸ் உள்ளிட்ட தொற்றுகள் என அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் பாதிப்பை (Mixed Infection) ஏற்படுத்தலாம்.

சுய பரிசோதனை


பூஞ்சைத் தொற்று - வெள்ளைப்படுதல், தயிர் போன்று கெட்டியாக வெளியேறும்.

பாக்டீரியல் வெஜைனோசிஸ் - மீன் போன்ற வாடை, மஞ்சள் நிறத்துடன் தண்ணீர் போன்று வெளியேறும்.

ஒரே நேரத்தில் பல தொற்றுகள் - மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கலாம்.

அந்தரங்கப் பகுதி, தொடை இடுக்கில் அரிப்பு, சருமம் வழண்டுபோகும் அளவுக்கு காயம், புண்கள், எரிச்சல்.

வெஜைனா பகுதியில் வைக்கக்கூடிய மாத்திரையிலேயே பெரும்பாலும் பிரச்னை சரியாகிவிடும். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்துவிட்டு, இந்தப் பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். சிலருக்கு உட்கொள்ளும் மாத்திரையும் களிம்பும் தேவைப்படலாம். மெனோபாஸுக்கு பிறகு அல்லது 45 வயதுக்கு மேல் வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். அது புற்று நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.



தைராய்டு


நமது கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பி தைராய்டு. உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதிலும் இந்தச் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் ‘மாஸ்டர் கிளாண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் குறைபாடு ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை, பெண்களை அதிகம் பாதிக்கிறது. நான்கு பெண் களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.

யாருக்கு வரலாம்?


பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அறிகுறிகள்: ஹைப்போ தைராய்டு - சோர்வு, மந்தம், முடி உதிர்தல், வறண்ட சருமம், அரிப்பு, மலச்சிக்கல், சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, எடை கூடுதல்.

ஹைப்பர் தைராய்டு - படபடப்பாக இருப்பது, எடை குறைதல், அடிக்கடி மலம் கழித்தல், கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, `ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety Attack).

எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்காது. ஓரிரு அறிகுறிகள் மட்டுமே காணப்படும். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், ரத்தப் பரிசோதனையில் மட்டும் பிரச்னை காணப்படும். எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் குறைபாட்டைக் கண்டறியலாம். குறைபாடு உறுதியானால் மாத்திரையைத் தவறாமல் உட்கொண்டு, ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என இருந்தால் தைராய்டு பிரச்னையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.



மூல நோய்


ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் மூலநோயால் ஏற்படும் வலியால் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கல் தொடர்கதையாகி மலம் கழிக்க சிரமப்பட்டு, அதிக அழுத்தம் கொடுக்கும்போது ஆசனவாய்ப் பகுதியின் ரத்தநாளங்கள் வீங்குவதுதான் மூலநோய்.

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை, வயது முதிர்ச்சி, தைராய்டு, வெயிலில் அதிகம் அலையும் வேலை பார்ப்பவர்களுக்கும் ஏற்படலாம். உடல் உழைப்பு குறைந்து, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் அதிகரித்துள்ளது. இந்தப் பழக்கம் மூலநோய் உருவாகும் தன்மையுடையவர்களுக்கு அதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

3 நிலைகள்


நிலை 1: ஆசனவாயின் உள்பகுதியில் மட்டும் ரத்தநாளங்களில் வீக்கம் இருக்கிறது. வெளியில் எதுவும் அறிகுறிகள் தென்படவில்லை.

நிலை 2: மலம் கழிக்கச் சிரமப்படும்போது வீங்கியிருக்கும் ரத்தநாளம் வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுவிடும்.

நிலை 3: வீக்கம் அதிகரித்து சதை ஆசனவாயின் வெளியில் தொங்குவது.

சுய பரிசோதனை


நாள்பட்ட மலச்சிக்கல்

ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு உணர்வு அல்லது வலி

மலம் கழிக்கும்போது வலியில்லாத ரத்தக்கசிவு

மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போது சதை அல்லது வீக்கம் தென்படுதல்.

முதல்நிலையிலேயே சிகிச்சை பெற்றால் நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம், உடல் இயக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றால் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சரி செய்துவிடலாம். 2-ம் நிலையில் மாத்திரைகள், உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றால் சரிசெய்ய முடியும். சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ செயல்முறை தேவைப்படலாம். 3-ம் நிலைக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. மலத்தில் ஒரு துளி ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் அது இயல்பானது இல்லை. மூலம் மட்டுமல்லாமல் ஆசனவாய் வெடிப்பு, குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே, ரத்தக்கசிவு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒற்றைத் தலைவலி


மைக்ரேன் பாதிப்புள்ளவர்களில் மூன்றில் இருவர் பெண்கள். தலைவலியை முதன்மை நிலை, இரண்டாம் நிலை என இரண்டாகப் பிரிக்கலாம். தாங்க முடியாத அளவுக்கு வலிக்கிறது என்றால் அது `மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி.

நோய், விபத்தினால் காயம் என எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படும் தலைவலி முதன்மை நிலை. மூளையில் பிரச்னை, சைனஸ் தொந்தரவு என ஏதாவது காரணத்தால் ஏற்படுவது இரண்டாம் நிலை. மைக்ரேன் என்பது முதன்மை நிலையைச் சேர்ந்தது. பூப்பெய்தும் வயதையொட்டி அல்லது 20-30 வயதுக்குள் பெரும்பாலும் இந்தப் பிரச்னை தொடங்கும். மெனோபாஸ் நிலையைக் கடந்தவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவது குறையும்.



காரணங்கள்


மரபியல், குடும்பப் பின்னணி, மன அழுத்தம், தூக்கமின்மை, கருத்தடை மாத்திரைகள்... காரணம் இல்லாமலும் வரலாம்.

சுய பரிசோதனை


தலைவலி வருவதற்கு முன்பு ‘ஆரா’ (Aura) என்பதை உணர்வார்கள். அதாவது, மங்கலான பார்வை, ஒளிரும் வெளிச்சம், ஸிக்-ஸாக் கோடுகள், விதவிதமான உருவங்கள் போன்றவை பார்வைக்குத் தெரியும்.

‘ஆரா’ விலக விலக 2-3 மணி நேரத்துக்குள் தலைவலி மெள்ள அதிகரிக்கத் தொடங்கும்.

பெரும்பாலும் ஒருபுறம் மட்டுமே தலைவலி இருக்கும், சிலருக்கு இருபுறமும் ஏற்படலாம்.

‘விண்’ணென்று தெறிப்பது போன்ற தீவிரமான தலைவலியாக இருக்கும். வாந்தி ஏற்படலாம்.

வலி 4 முதல் 72 மணி நேரம்கூட நீடிக்கலாம்.

யாரும் பேசினால் எரிச்சலுணர்வு தோன்றும் `போனோபோபியா’ (Phonophobia) அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சலுணர்வு தோன்றும் ‘போட்டோபோபியா’ (Photophobia) ஏற்படும்.

தடுப்பது எப்படி?


பூ, பெர்ஃபியூம் வாசனைகள், சீஸ், சாக்லேட் போன்ற உணவுகள் என ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் விஷயங்களைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். தூங்கும் முறையை சரிப்படுத்தி, சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். போதை, புகை, மதுப்பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஓரிரு முறை வருகிறது என்றால் அவர்களுக்கு வலி மாத்திரை பரிந்துரைக்கப்படும். அடிக்கடி மைக்ரேன் ஏற்படுபவர்களுக்கு தடுப்பு முறை, தெரபி மற்றும் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.



குறட்டை


நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கு, தொண்டை வழியே சுவாசக் குழாயின் மூலம் நுரையீரலை அடைகிறது. சுவாசக் குழாய் சுருங்கினாலோ, சுவாசக் குழாய்க்குச் செல்லும் காற்று தடைப்பட்டாலோ குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) ஏற்படலாம். இந்தப் பிரச்னை, ஆண்களை அதிகம் பாதிக்கிறது. மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடலுழைப்பு குறைவது, உடல் பருமன் ஆகிய காரணங்களால் முகம், கழுத்து ஆகிய இடங்கள் பருத்து, சுவாசக்குழாய் சுருங்கி சுவாசம் தடைப்படும். இதனால் ஆக்ஸிஜன் உடலுக்குச் செல்வதும் தடைப்படுவதால், உடலின் அனைத்து செல்களிலும் ஆக்ஸிஜன் குறைந்து ‘கிரானிக் ஹைப்போக்ஸியா’ (Chronic Hypoxia) எனும் நிலை ஏற்படலாம். இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும்போது ரத்த ஓட்டமும் குறைந்து மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுவாசக்குழாய், நுரையீரலில் ஏதேனும் பிரச்னை, தைராய்டு, நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னை, சர்க்கரை நோய், மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல் போன்ற காரணங்களாலும் ‘ஸ்லீப் ஆப்னியா’ ஏற்படலாம். மூக்கு, தொண்டைப் பகுதியில் சதை வளர்தல் பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

சுய பரிசோதனை


எந்த நிலையில் படுத்துத் தூங்கினாலும் குறட்டை விடுதல்.

வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, பேசிக் கொண்டிருக்கும்போதோ தூங்கி விடுதல்.

கண்ணாடி முன் நின்று வாயை நன்றாகத் திறந்து பார்க்கும்போது `அண்ணம்’ எனப்படும் உள்நாக்கு தெரியாமல் இருப்பது.

பற்களுக்குள் அடங்காமல் நாக்கு வெளியே துருத்திக்கொண்டு இருப்பது.

கழுத்தின் சுற்றளவு 42 இஞ்சுக்கு மேல் இருப்பது மற்றும் தொப்பை (ஆண்களுக்கு).

பெண்களுக்கு 30-க்கு மேல் காணப்படும் BMI அளவு.

மூன்று மாதங்களுக்கும் மேல் அறிகுறிகள், குறட்டையுடன் மூச்சுத்திணறல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். லேசான பாதிப்புக்கு மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும். மிதமான பாதிப்புக்கு உறக்கத்தில் சுவாசம் தடைப்படாமல் இருக்கப் பொருத்திக் கொள்ளும் கருவிகள் பரிந்துரைக்கப்படும். தீவிர பாதிப்புக்கு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும்.



மனச்சோர்வு


மனநலப் பிரச்னைகளில் மிகவும் பொதுவானவை மன அழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வு (Depression). மன அழுத்தம் தீவிரமாகி அது மனச்சோர்வு என்ற நோயாக மாறினால் மருத்துவ சிகிச்சை அவசியம். உலக மக்கள்தொகையில் 4-5% பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்படலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மனச்சோர்வால் பாதிக்கப்படலாம்.

ஆண்களைவிட பெண்கள்தான் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். பெண்களின் உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் அதற்கு காரணம். பூப்பெய்தும் வயது, மகப்பேறு காலம், மெனோபாஸ் போன்ற காலங்களில் பெண்கள் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

புறச்சூழலால் மட்டும் மனச்சோர்வு ஏற்படுவதில்லை. மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஹார்மோனின் பங்களிப்பு இருக்கிறது. முக்கியமாக `செரட்டோனின்’ என்ற ரசாயனத்தின் அளவு மூளையில் குறைந்தால் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென்று மனச்சோர்வு ஏற்படலாம்.

சுய பரிசோதனை


நாள் முழுவதும் சோகமான மனநிலையில் இருப்பது

குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதற்குக்கூட ஆற்றல் இல்லாமல் இருப்பது

விரும்பிச்செய்யும் பொழுதுபோக்குகளில்கூட ஈடுபாடு இல்லாதது

ஞாபக மறதி, கவனச்சிதறல்

அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை

குறைவாகச் சாப்பிட்டு எடை மெலிவது அல்லது அதிகம் சாப்பிட்டு எடை அதிகரிப்பது

தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, தற்கொலை எண்ணம்

இரண்டுக்கும் மேலான அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

மனச்சோர்வு உடையவர்கள், சிகிச்சை பெற்றால்தான் அதிலிருந்து விடுபட முடியும். குறைந்தது ஆறு மாதங்கள், அதிகபட்சம் ஓராண்டு வரை சிகிச்சை பெற்றால் போது மானது.


குறிச்சொற்கள்
#மார்பகப்_புற்றுநோய்
#சிறுநீர்ப்பாதைத்_தொற்று
#வெள்ளைப்படுதல்
#தைராய்டு
#மூலநோய்
#ஒற்றைத்_தலைவலி
#குறட்டை
#மனச்சோர்வு
#மாரடைப்பு
#வயிற்று_அல்சர்
#கண்புரை
#குடல்வால்_அழற்சி
#பல்_சார்ந்த_பிரச்னைகள்
#செவித்திறன்_இழப்பு


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 5:07 pm


மாரடைப்பு


இதய நோய்களில் மாரடைப்புதான் முன்னணியில் உள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக நமது உடல் சில அலெர்ட் சிக்னல்களைக் கொடுக்கும். அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது அல்லது சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, தாடைப் பகுதியில் வலி, நடக்கும்போது பல் வலிப்பது போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவும் வலி (Exertional pain) போன்றவை மாரடைப்புக்கான அலெர்ட் சிக்னல்கள்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பாதிப்பு, மெனோபாஸ் அடைந்த பெண்கள், உடல் இயக்கம் இல்லாதது, அதீத மன அழுத்தம், குறட்டைப் பிரச்னை.

சுய பரிசோதனை


உடல் ஏதேனும் எச்சரிக்கை சிக்னலை கொடுத்தால் அல்லது ஆபத்தானவர்கள் பட்டியலில் இருந்தால் அல்லது இரண்டுமே இருந்தால் கீழே கூறப்பட்டுள்ள பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது மாடிப்படி ஏறிய உடன் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும். மிகவும் ரிலாக்ஸ்டான நிலையில் இருக்கும்போது மட்டுமே இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனைகள் தோராயமான முடிவுக்கு வருவதற்காக மட்டுமே. அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வீட்டிலுள்ள பல்ஸ்ஆக்ஸிமீட்டர் கருவியில் இதயத்துடிப்பை (Pulse) பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு 70 -100 வரை இருந்தால் நார்மல். 100-க்கு மேல் சென்றால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. விளையாட்டு வீரர்கள் தவிர, பிறருக்கு இதயத்துடிப்பு 50-க்கும் குறைவாக இருந்தால் இதயம் சார்ந்த வேறு பிரச்னையாக இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகவும்.

உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதயத்துடிப்பை பரிசோதிக்கச் சொல்லலாம். உறங்கும்போது இதயத்துடிப்பு அதிகமாக இருந்தால் இதயத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியில் பரிசோதிக்கும்போது 120/80 - 130/90 என்ற அளவு வரை இருந்தால் நார்மல். அதற்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் இதயத்தில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது மாடிப்படி ஏறிய உடன் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும்.

சாப்பிட்டு 20-30 நிமிடங்களுக்குப் பிறகு இதயப் பகுதியிலோ தோள்பட்டையிலோ வலியை உணர்ந்தால் அது இதயத்தில் ஏற்படும் வலி. நாம் சாப்பிட்ட உடன் ஜீரண வேலைகளுக்காக இதயத்திலிருந்து ரத்த விநியோகம் குடல் பகுதிக்குச் செல்லும். ரத்த ஓட்டம் குடலுக்குச் செல்லும்போது, இதயத்துக்குப் போதுமான ரத்தம் இல்லாமல் போகும்போது இதயத்தில் வலி ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சாப்பிட்ட உடன் 5-10 நிமிடங்களுக்குள் வலி வந்தால் அது உணவு, குடல் பகுதியை இரிட்டேட் செய்வதால் ஏற்படும் வலி.



வயிற்று அல்சர்


வயிற்றுப்புண் (Peptic ulcer) என்று பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்தப் பிரச்னை, வயிற்றுப் பகுதியிலும் குடலின் ஆரம்ப பகுதியிலும் ஏற்படும். பெரியவர்கள், சிறியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் புகை, மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஆண்களிடம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter Pylori) என்ற பாக்டீரியாதான் இந்தப் பிரச்னைக்கு 90% காரணம். சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதாலும், உணவு வழியாகவும், வேறு நபரிடமிருந்தும் வாய் வழியாக இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்று இரைப்பையில் தங்கும். அதனால் ஏற்படும் பக்கவிளைவான அல்சர், வயிற்றிலும் குடல் பகுதியிலும் வரும். மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் இது ஏற்படலாம்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடாததும், அதிக காரமாகச் சாப்பிடுவதும்தான் இதற்கு காரணம் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய ஆராய்ச்சி யாளர்களான பேரி ஜெ மார்ஷல் மற்றும் ராபின் வாரன் ஆகிய இருவரும் ‘பெப்டிக் அல்சர்’ பிரச்னைக்கு காரணமான ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை கண்டறிந்த பிறகு, இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதற்காக, ஜெ.மார்ஷல் மற்றும் ராபின் வாரன் இருவரும் 2005-ம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றனர்.

சுய பரிசோதனை


சாப்பிட்டால் வயிற்றில் வலி குறைவது அல்லது அதிகரிப்பது

அதிக நேரம் சாப்பிடாமல் இருந்தால் வலி ஏற்படுவது

தார் போன்ற அடர் கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்

மேல் வயிற்றுவலி

- இவை அல்சருக்கான பொதுவான அறிகுறிகள்.

அல்சரால் வரும் சிக்கல்கள்


வயிற்றுக்குள் இருக்கும் உணவு, குடலுக்குள் செல்லாது. இதனால் சாப்பிட உடன் வாந்தி வரும்.

குடல் அரித்து மலத்தில் ரத்தம் கசியும்.

பசியின்மை, எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.

தீர்வுகள் என்ன?


ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 99 சதவிகிதம் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். பிரச்னை தீவிரமடைந்தால் அறுவை சிகிச்சைதான் தீர்வு.

கண்புரை


தேசிய பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1.2 கோடிக்கும் அதிகமானோருக்கு பார்வை இழப்பு உள்ளது. இவற்றில் 80.1% கண்புரையால் ஏற்பட்ட பார்வை இழப்பு. ஓராண்டில் மட்டும் சுமார் 38 லட்சம் பேருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது.



மூன்று வகை பாதிப்பு


வயது மூப்பு காரணத்தால் ஏற்படும் கண்புரை (Senile Cataract) தான் மிகவும் பொதுவானது. கர்ப்ப காலத்தில் தாய் ஏதாவது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், மரபணு காரணங்களால் பிறந்த குழந்தைக்கும் `கண் புரை’ (Congenital Cataract) ஏற்படலாம். சர்க்கரை நோய், விபத்தினால் கண்ணி லுள்ள லென்ஸ் சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால் நடுத்தர வயதினரை பாதிப்பதை ‘இரண்டாம் நிலை கண்புரை’ (Secondary Cataract) என்பார்கள்.

கண்களில் இயற்கையாக இருக்கும் லென்ஸ்தான் கண்களுக்குள் நுழைகிற ஒளிக்கதிர்களை ஃபோகஸ் செய்து மூளைக்குத் தகவல் அனுப்பும். சில புரதங்களால் ஆன அந்த லென்ஸ், ஒளிபுகும் வகையில் (Transparent) இருக்கும். வயதாக ஆக, லென்ஸிலிருக்கும் புரதத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதன் நிறம் மாறிவிடும். அதனால் ஒளிக்கதிரை மூளைக்குக் கடத்தும் திறன் குறைந்து, சரியாக ஃபோகஸ் செய்யாமல், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி முதிர்ச்சியடைந்த புரையாக மாறும்.

சுய பரிசோதனை


பார்வை மங்கிக்கொண்டே வருதல்

பனிபடர்ந்தது போன்று தெரிவது

இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதது

எதிரில் வரும் வாகன வெளிச்சம் படர்ந்து அதிக ஒளிவட்டம் போல் தெரிவது

வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது

பிறந்த குழந்தையின் கண் கருவிழி வெள்ளையாகத் தெரிவது.

சராசரியாக 55 வயதுக்கு மேல் கண்புரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வயது, மரபணு, நோய்கள், சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் இது ஏற்படுகிறது. சிலருக்கு கண்புரை பாதிப்பு மெதுவாக அதிகரிக்கும். சிலருக்கு வேகமாக முற்றிய நிலைக்குச் சென்றுவிடும். அறிகுறிகள் தென்பட்ட உடனே அறுவை சிகிச்சை செய்தால் புரையை அகற்றி விட்டு செயற்கை லென்ஸ் பொருத்தப்படும். பிரச்னை தீவிரமடைந்தால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து, நரம்புகள் சேதமடையும். சேதமடைந்த நரம்புகளை சீரமைக்க முடியாது என்பதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம்.



குடல்வால் அழற்சி


சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் வால் போன்ற அமைப்பு (Appendix) இருக்கும். அந்த வால் பகுதியில் ஏற்படும் தொற்று `அப்பெண்டிசைட்டிஸ்’ எனப்படும் குடல்வால் அழற்சி (Appendicitis). ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இந்தப் பிரச்னை ஏற்பட பிரத்யேக காரணங்கள் கிடையாது. மலச்சிக்கல், மலம் இறுகி கல்போன்று மாறி குடல்வாலின் வாய்ப்பகுதியில் அடைத்துக்கொள்வதாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள்: தொப்புளைச் சுற்றி வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு அல்லது வாந்தியெடுத்தல், பசியின்மை, லேசான அல்லது மிதமான காய்ச்சல்.

சுய பரிசோதனை


படுக்கையில் மல்லாந்து நேராகப் படுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு கால்களையும் லேசாக மடக்கிய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். குத்துக்காலிடும் அளவுக்கு மடக்க வேண்டாம்.

அப்போது வயிறு சற்று தளர்வாக, இயல்பான நிலையில் இருக்கும்.

கைவிரல்கள் நான்கையும் சேர்த்தாற்போல வைத்துக் கொள்ளுங்கள்.

தொப்புளுக்குக் கீழ் அடிவயிற்றில் வலது பக்கத்தில் (Right Lower Abdomen) விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும்.

அழுத்தும்போது வலித்தாலோ, அழுத்திவிட்டு சட்டென்று விரல்களை எடுக்கும் போது அதிகமான வலியிருந்தாலோ குடல் வால் பிரச்னையாக இருக்கலாம்.

தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் இருக்கிறதா என்றும் பரிசோதிக்கலாம்.

உரிய நேரத்தில் கவனிக்காமல், குடல்வால் பகுதியில் பொத்தல் ஏற்பட்டு சீழ் வெளியேறினால் ரத்தத்தில் நச்சேற்றம் பரவி உயிரிழப்புகூட நிகழலாம்.

அறிகுறிகள் தென்பட்டதும், மருத்துவரை அணுகினால் நுண்துளை அறுவைசிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை எளிதாக நீக்கிவிடலாம். சில நாள்களில் நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பிவிடலாம்.



பல் சார்ந்த பிரச்னைகள்


உலக அளவில் 350 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு பல் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், பெரும்பாலானோர் தாங்க முடியாத வலி ஏற்படும்போதுதான் மருத்துவரிடம் செல்கின்றனர்.

வாய் சுகாதாரம் பேணாதது, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவது, புகையிலை, மதுப்பழக்கம் உள்ளிட்டவை பல் சார்ந்த பிரச்னைகளுக்கான பொதுவான காரணங்கள்.

சுய பரிசோதனை


முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக் கொள்ளவும் அல்லது செல்போனின் முன் பக்க கேமராவை ஆன் செய்து கொள்ளவும்.

வெளிச்சமான இடத்தில் நின்றுகொண்டு பற்களைப் பரிசோதிக்கத் தொடங்க வேண்டும்.

வாயின் மேற்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டிலும் பின்வரிசையிலிருந்து முன்வரிசை வரை பொறுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.

பல் சொத்தை இருந்தால் பற்களின் மேல் பகுதியில் உணவு ஒட்டிக்கொள்ளலாம்.

பற்களின் மேல் கறுப்பாகக் காணப்பட்டால் பல்சொத்தை இருக்கிறது என்று அர்த்தம்.

பற்களைக் கடிக்கும்போது வலி ஏற்பட்டால் பல்சொத்தை அதிகமாகி வேர் வரை பாதித்திருக்கக்கூடும்.

பல்லில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் கறை படிந்திருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். அது கால்குலஸ் (Calculus) அல்லது டார்டார் (Tartar) எனப்படும்.

கறையை நாக்கால் தொட்டுப்பார்த்தால் சொரசொரப்பாக இருக்கும்.

பல்லின் மேற்பகுதியிலோ, அதிக இடைவெளியின் காரணமாக இரண்டு பற்களுக்கும் நடுவிலோ உணவு சிக்கி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இரண்டு பற்களுக்கு நடுவே உணவு சிக்கியிருந்தால் ஈறு பிரச்னையாக இருக்கலாம்.

பற்களின் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் மெழுகு போன்ற படிவம் படிந்திருந்திருப்பது ஈறுகளின் உள்ளே அழுக்கு சேர்ந்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

பிரஷ் செய்யும்போதும், ஆப்பிள் போன்று எதையாவது கடிக்கும்போதும் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அது ஈறு பிரச்னையின் முதல் நிலையாக இருக்கலாம்.

கால்குலஸ் பிரச்னையை அலட்சியம் செய்தால் ஈறுகள், எலும்பை பாதித்து பல் ஆட ஆரம்பித்துவிடும். பல் சொத்தைக்கு முதல் அறிகுறி பல்கூச்சம். ஈறு இறங்கினாலோ, பற்கள் தேய்ந்திருந்தாலோகூட பல் கூச்சம் ஏற்படலாம். சாப்பிடும்போது மட்டும் பல் வலிக்கிறது. அதற்குப் பிறகு சரியாகிவிடுகிறது என்றால் பல்லை அடைப்பதன் மூலம் அதிலிருக்கும் சொத்தையை சரி செய்யலாம்.

இரவில் அதிகரிக்கும் பல்வலி, வீக்கம் போன்றவை பல்லை எடுக்க வேண்டும் அல்லது வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்கான அலர்ட். பிரச்னையைக் கண்டறிந்ததும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பற்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காப்பாற்றலாம்.



செவித்திறன் இழப்பு


மனிதர்களிடையே காணப்படும் உணர்திறன் குறைபாடுகளில் பொதுவானது செவித்திறன் இழப்பு. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

மரபணு காரணங்கள், பிரசவ நேரத்தில் குழந்தையின் காதுக்கு ரத்த ஓட்டம் குறைதல், டௌன் சிண்ட்ரோம் போன்ற பிறவிக் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரலாம். சளித் தொந்தரவு, அடினாய்டு அழற்சி போன்ற காரணங்களால் செவிப்பறையின் பின்னால் ஒரு திரவம் சேரும். வெளியிலிருந்து காதுக்குள் நுழையும் ஒலி, அந்தத் திரவம் வழியாக ஊருடுவ இயலாமல், மூளைக்குச் செல்ல வேண்டிய தகவல் போய்ச் சேராமல் செவித்திறன் குறைவு அல்லது இழப்பு ஏற்படும். பள்ளிக் குழந்தைகளின் செவித்திறன் இழப்புக்கு இதுவே காரணம்.

வைரஸ் தொற்று, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலியை உள்வாங்குதல், ஹெட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பெரியவர்களுக்கு இது ஏற்படலாம். விபத்துகளின் காரணமாக காதிலிருந்து மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகள் அறுந்தாலோ, காதினுள் இருக்கும் மூன்று சிறிய எலும்புகள் வேறு இடத்துக்கு நகர்ந்தாலோ, காது ஜவ்வு கிழிந்தாலோ செவித்திறன் பாதிக்கப்படும். வயது முதிர்வினாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம்.

சுய பரிசோதனை


டிவி பார்க்கும்போது, பாடல் கேட்கும்போது இயல்பைவிட அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது

யாராவது பேசும்போது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்வது

ஒரு காது கேட்காதபோது, நம்மை அறியாமலேயே ஒரு பக்கமாக தலையைத் திருப்பிக் கேட்பது

அருகிலிருப்பவர்களைவிட அதிக சத்தமாகப் பேசுவது

வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் அல்லது இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலது பக்கம் என செல்போனை மாற்றி வைத்துப் பேசுவது

யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பது.

தீர்வு என்ன?


பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறனில் பிரச்னை இருந்தால் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பள்ளிப்பருவ குழந்தைகளுக்கு காதில் திரவம் சேரும் பிரச்னைக்கு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் செவிப்பறையில் துளையிட்டு அங்கு சேர்ந்திருக்கும் திரவம் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் சிறிய குழாய் பொருத்தப்படும். நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு, தொற்றுக்கு சிகிச்சை எடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

விபத்தினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கும் சிகிச்சை எடுத்தாலே போதுமானது. ஆனால், விபத்தில் காது நரம்புகள் அறுந்துவிட்டால் திறனை மீட்டெடுக்க முடியாது. ஹெட்போன் பயன்பாட்டினால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் இழப்பு ஏற்படத் தொடங்கும். நரம்புகள் சேதமடைந்துவிட்டால் செவித்திறனை மீட்டெடுக்க முடியாது. எனவே, ஹெட்போன் பயன்பாட்டைக் குறைப்பதே நல்லது. வயது முதிர்வினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு காது கேட்கும் கருவி பொருத்திக் கொள்ளலாம்.

செவித்திறன் பிரச்னை இருந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். தாமதிப்பது கேட்கும் திறனைக் குறைத்துக்கொண்டே போய், நிரந்தர செவித்திறன் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.



குறிச்சொற்கள்
#மார்பகப்_புற்றுநோய்
#சிறுநீர்ப்பாதைத்_தொற்று
#வெள்ளைப்படுதல்
#தைராய்டு
#மூலநோய்
#ஒற்றைத்_தலைவலி
#குறட்டை
#மனச்சோர்வு
#மாரடைப்பு
#வயிற்று_அல்சர்
#கண்புரை
#குடல்வால்_அழற்சி
#பல்_சார்ந்த_பிரச்னைகள்
#செவித்திறன்_இழப்பு

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக