ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகான்.

Go down

காஞ்சி மகான். Empty காஞ்சி மகான்.

Post by T.N.Balasubramanian Tue Jul 04, 2023 3:44 pm

ஒரு முறை பரிவாரங்களுடன் திருநெல்வேலி செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டுருந்தார் காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கி இருந்தார். அங்கு வந்து சேர்ந்த அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜையை முடித்து விட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.
தனக்குப் பணிவிடை பண்ணும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து, “அப்பா நாகு…நாளைக்கு விடியகாலம்பற மூணரை மணிக்கெல்லாம் நான் எழுந்து ஸ்நானம் பண்ணி ஆகணும். நீ ஞாபகம் வெச்சுக்கோ” என்று கட்டளை இட்டார் ஆச்சார்யாள்.
உடனே அந்த இளைஞன் நாகு மிக அடக்கத்துடன், “உத்தரவு பெரியவா. நீங்க ஆக்ஞாபித்தபடியே சரியா மூணரைக்கு, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர’ னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா” என பவ்யத்துடன் தெரிவித்துக் கொண்டான்.
பெரியவா புரிந்து கொண்டு, லேசாகப் புன்னகைத்தபடியே, “மூணரை மணிக்கு ஒங்களை எழுப்பி விட்டுடறேன்னு சொன்னா அவ்வளவா நன்னா இருக்காதுங்கறதாலே, “ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர’ னு சொல்லி எழுப்பறேங்கறியாக்கும்” என்று நாகுவைப் பார்த்து பளிச்சென்று கேட்டார். நாகு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.
“சரி..சரி. அப்டியே பண்ணு !” என்று கூறி விட்டு, உள்ளே சென்று விட்டார் ஆச்சார்யாள். இரவு மணி பதினொன்று. சத்திரம் உறக்கத்தில் ஆழ்ந்தது. பெரியவாளும் சயனத்துக்குச் சென்று விட்டார். நாகுவுக்குத் தூக்கமே வரவில்லை. கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அந்தச் சத்திரத்தில் சுவர்க் கடிகாரமோ, அலாரம் டைம்பீசோ இருக்கவில்லை. மடத்திலும் இல்லை. நாகுவிடம் இருப்பதோ அவனுடைய மாமா, ‘பூணூல்’ கல்யாணத்தில் பரிசளித்த ரொம்பப் பழைய வாட்ச் ஒன்று தான். பெரியவாள் உடனேயே எப்போதும் இருக்க வேண்டி உள்ளதால், அதையும் கையில் கட்டிக் கொள்வதில்லை. அது நாகுவின் பழைய டிரங்க் பெட்டிக்குள்ளேயே அடைக்கலமாகி இருக்கும். ஒவ்வொரு நாளும் நாகு அதற்கு ‘கீ’ கொடுக்க எடுத்துப் பார்ப்பதோடு சரி…அப்புறம் தொடுவதில்லை.
‘தானும் படுத்துத் தூங்கி விட்டால் விடியக் காலம் மூணரைக்குப் பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் ?’ என்ற விசாரம் நாகுவைத் தொற்றிக் கொண்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன், நேராகப் ஸ்டார் ரூமுக்குப் போனான். டிரங்க் பெட்டியைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். நேராக ஸ்வாமிகள் சயனித்திருக்கும் அறைக்கு வெளியே சந்தடி இன்றி வந்து அமர்ந்தான். சத்தம் துளிக் கூட வெளியில் கேட்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ண ஆரம்பித்து விட்டான். திரும்பத் திரும்பப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். தனது கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக 3.30 . நாகு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு, ஸ்வாமிகள் சயனிக்கும் அறையைப் பார்த்தபடியே, சன்னமான குரலில், ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர..’ என நாமாவளி கோஷம் எழுப்பினான். சற்று நேரத்திலேயே அறைக் கதவு திறந்தது. சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனே நடந்து வருவது போல சிரித்தபடியே மந்தகாசத்துடன் வெளிப்பட்டு, ‘சுப்ரபாத’ தரிசனம் அளித்தார் ஆச்சார்யாள். அந்த தரிசன பாக்கியம் அன்று நாகுவுக்கு மட்டுமே கிடைத்தது.
ஆச்சார்யாள், அந்த சத்திரத்து வாசற்படி வரை மெதுவாக நடந்து போய் விட்டு வந்தார். ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்ய விரைந்தான் நாகு. சத்திரம் விழித்துக் கொண்டது.
அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே மாதிரியே நாகுவின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாம கோஷம் எனத் தொடர்ந்தது.
நான்காவது நாள் இரவு, ‘தன் இடுப்பில் கைக் கடிகாரத்தைச் செருகிக் கொண்டு ஸ்வாமிகளின் அறைக்கு வெளியே விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் செய்தபடியே விழித்துக் கொண்டிருந்த நாகு, தன்னையும் அறியாமல் கண் அயர்ந்து விட்டான். திடீர் என்று, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்று ஒரு தெய்வீகக் குரல் நாகுவைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான். எதிரே, கருணை ததும்பச் சிரித்த முகத்துடன் ஆச்சார்யாள்.
ஸ்வாமிகள் வாத்ஸல்யத்துடன், “கொழந்தே, மணி சரியா மூணரை ஆறதுடாப்பா. அசதிலே நீ தூங்கிப் போயிட்டே போலிருக்கு. பாவம்..நோக்கும் நாள் பூரா கைங்கர்யம். சரீர சிரமம் இருக்குமோனோ ?” என்று சிரித்தபடியே கூறிவிட்டு, வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார். இடுப்பில் செருகி இருந்த கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான் நாகு. மணி சரியாக 3.30.
மிகவும் ஆச்சர்யப்பட்டான் நாகு. ‘நாம குரல் கொடுக்காமலே எழுந்து வந்து ‘மணி மூணரை’ னு சரியாச் சொல்லறாளே பெரியவா !
இது எப்படி சாத்தியம் என்று மிகவும் குழம்பினான். அவன் காதுகளில் ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்ற அந்த நடமாடும் தெய்வத்தின் தெய்வீகக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. இது வரை அவன் அப்படிக் கேட்டதே இல்லை.
அன்றிரவு பதினோரு மணி. பெரியவா, சயனத்துக்குச் சென்று விட்டார். ‘எப்படியும் இன்று இரவு கண்ணயரவே கூடாது’ என்று திட வைராக்கியத்துடன் ஸ்வாமிகளின் அரை வாசலில் வந்தமர்ந்தான் நாகு. கையோடு ஒரு சிறிய பித்தளை செம்பில் ஜலம். ஒரு வேளைஅசதியின் மிகுதியால் தூக்கம் வந்து விட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவே ஜலம்.
இரவு மணி 2 .30 . அது வரை தூங்காமல் தாக்குப்பிடித்து விட்டான் நாகு. ஆனால் தொடர் விஷ்ணு சஹஸ்ரநாம பாரயணத்தையும் மீறி அவனுக்குத் தூக்கம் வந்து விட்டது. தன்னையும் அறியாமல் கிழே சுருண்டு படுத்தான். உறங்கி விட்டான்.
கதவு திறந்தது. ஆச்சார்யாள் மெதுவாக வெளியே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நாகுவைப் பார்த்தார்; அவனுக்குப் பக்கத்தில் இருந்த செம்பையும் பார்த்தார். புரிந்து கொண்டார். சிரித்தார்.
“ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாகு…எழுந்துறாப்பா” என மிருதுவாகக் குரல் கொடுத்தார் ஆச்சார்யாள். தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான் நாகு. எதிரே புன் முறுவலுடன் பெரியவா.
“நாகு, மணி சரியா மூணரை. பாவம்…இன்னிக்கும் முடியாம தூங்கிட்டே போலிருக்கு. சரி…சரி…ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொல்லி விட்டு, வழக்கப்படி வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார் ஸ்வாமிகள். தனது கடிகாரத்தைப் பார்த்தான் நாகு. சரியாக மூணரை. வியந்து நின்றான். அன்று மதியம் பூஜையை முடித்து விட்டு, ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் ஆச்சார்யாள். மெதுவாக அவரருகே வந்து நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றான் நாகு. வாய் திறந்து அவன் ஒன்றும் பேசவில்லை.
ஸ்வாமிகளே பேசினார், “ஏண்டாப்பா நாகு…நீ நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பாத்தா, ஏதோ எங்கிட்டே கேட்டு தெருஞ்சுக்க வந்துருக்காப்லே படறதே. என்ன தெரியணும் ? கேளு…சங்கோஜப்படாதே.”
நாகு மிகவும் தயங்கினான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா…” என்று இழுத்தான். உடனே ஸ்வாமிகள் புன்முறுவல் பூத்தபடியே, “ஒம் மனுசுலே என்ன கேக்க நெனச்சுண்டு நீ தயங்கறேங்கறது நேக்குப் புரியறது. ‘ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே…பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரைக்கு எழுந்துண்டு வர்றார் ? அவர் கிட்டே தான் ஒரு கடிகாரமும் இல்லியே…எப்படி முழுச்சுக்கரார்னு’ னு கொழம்பிண்டிருக்கே…இல்லியா ?” என்று கேட்டார்.
நாகுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாம் கேட்க நினைத்ததைப் பெரியவா சொல்கிறாரே என்று மலைத்தான்.
நாகுவுக்கு இப்போது தைரியம் வந்து விட்டது. “ஆமா பெரியவா…என்னன்னே தெரியலே. ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிப் போயிடறேன். பெரியவா தான் சரியா மூணரை மணிக்கு எழுந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள். நேக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. சரியா மூணரை மணிக்கு எப்படிப் பெரியவாளுக்கு…” என்று நாகு முடிப்பதற்குள்…
ஸ்வாமிகள், “ஏதாவது கர்ண யக்ஷிணி (காதில் வந்து சொல்லும் தேவதை) காதுலே மணிய சொல்றதானு சந்தேகம் வந்துடுத்தோ நோக்கு ?” என்று கேட்டு விட்டு இடி இடி என்று சிரித்தார்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…பெரியவா” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் நாகு.
பெரியவா சொல்ல ஆரம்பித்தார், “எங் காதுலே ஒரு யஷிணியும் வந்து சொல்லலே. எங் காதுலே மணி மூணரைங்கறதைச் சொன்னது ஒரு பஸ். அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ். பஸ். ஆச்சரியப்படாதே. மொத நாள் சரியா மூணரைக்கு நீ, ‘ஹர ஹர சங்கர…” சொல்லி எழுப்பி விட்டே. வெளியிலே வந்தே நான், வாசப் பக்கம் வந்தேனா…அப்போ ஒரு பஸ் சத்திர வாசலைக் கடந்து டவுன்குள்ளே போச்சு.
அடுத்தடுத்து ரெண்டு நாளும் பார்த்தேன். அதே மூணரைக்கு அந்த பஸ் சத்திர வாசலைக் தாண்டித்து. அப்புறமா விசாரிச்சேன். அது டி.வி.எஸ். கம்பெனியோட பஸ். மதுரைலேர்ந்து புதுக் கோட்டைக்கு விடியக் காலம் வர மொத பஸ்ஸுனும் சொன்னா…சத்திர வாசலுக்கு அந்த பஸ் விடியக் காலம் சரியா மூணரைக்கு வந்து தாண்டிப் போறது. ஒரு செகண்ட்…இப்படி அப்படி மாறல்லே. டி.வி.எஸ். பஸ் ஒரு எடத்துக்கு வர குறிப்பிட்ட டயத்த வெச்சுண்டே, நம்ம கடிகாரத்த கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்னு சொல்லுவா. அது வாஸ்தவம் தான். மூணு நாள் சரியா பார்த்து வெச்சுண்டேன். நாலாம் நாள்லேந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தான எழுந்துட்டுண்டேன்…வேற ஒரு ரகசியமும் இதுலே இல்லேடாப்பா நாகு…!” பெரியவா தன்னை மறந்து சிரித்தார்.
பதில் சொன்ன ஆச்சார்யாளின் முகத்தையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நாகு.

நன்றி முகநூல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகான். Empty Re: காஞ்சி மகான்.

Post by T.N.Balasubramanian Tue Jul 04, 2023 3:48 pm

அந்த காலங்களில் மதுரையில் TVS பஸ் வரும் ஓசை கேட்டு
கடிகாரம் சரியாக ஓடுகிறதா அல்லது சாவி கொடுக்கவேண்டுமா
என்று சரிபார்ப்பார்களாம்.

TVS என்றாலே சரியான நேரம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum