Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
2 posters
Page 1 of 1
போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
![போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள் B82d2c80-1743-11ee-8cae-4785e93eadf1](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/c1e6/live/b82d2c80-1743-11ee-8cae-4785e93eadf1.jpg)
நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து தொடங்கிய அங்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் சோபியா பெட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போலீஸ் துப்பாக்கி முனையில் சிறுவனை
மிரட்டும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி
சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது மதிக்கத்தக்க நஹெல்.எம் என்ற சிறுவன், பிரான்சின் ஒரு முக்கியப் பகுதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தச் சொல்லியதாகத் தெரிகிறது.
ஆனால், சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிறுவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவரை நோக்கிச் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி செய்தி முகமை உறுதி செய்துள்ளது.
அதிபர் சொல்வது என்ன?
“சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மன்னிக்க முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அவரது மரணத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்றும் கூறியுள்ளார். அதிபர் இவ்வாறு கூறியுள்ளதற்கு போலீஸ் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதனிடையே, “இந்தச் சம்பவத்தை வைத்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு நாட்களில், இரவு நேரங்களில் தீவைப்பு, வெடி வைத்தல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக அரசு கட்டடங்கள், கார்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
ஃபிரான்சின் நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
ஆறாயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி
இந்த நிலையில், நஹ்லின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இறந்த சிறுவனின் தாயார் அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று, நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நான்காவது நாள் இரவு வன்முறையின்போது கார்களுக்கு தீ வைக்கப்பட்டது
நாடு முழுவதும் பரவிய போராட்டம்
சிறுவனின் மரணத்தைக் கண்டித்து பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துலூஸ் நகரில் போராட்டக்காரர்கள் பொது சொத்துகளைத் தீயிட்டு எரிக்க முயன்றதாகவும், தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்களை கல்வீசித் தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோன்று, பிரான்சின் வட பகுதியில் அமைந்துள்ள லில்லி நகரில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்சில் நகரில் சுமார் 300 பேர் கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பலர் ஆத்திரத்தில் அங்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட முயன்றதாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிலைமையைத் தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாரிஸ் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிபரின் கருத்தும், போலீஸ் சங்கங்களின் எதிர்ப்பும்
“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாதது எனவும், இதை எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது” என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்திருந்தார். அதிபரின் இந்தக் கருத்துக்கு ஃபிரான்சில் உள்ள பல்வேறு போலீஸ் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாகக் கருத முடியாது. ஆனால், சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக அதிபர் அவசரப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அலையன்ஸ் போலீஸ் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை ‘துணிவு மிக்கவர்’ என்று குறிப்பிட்டு, மற்றொரு போலீஸ் சங்கம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும், ‘அந்தச் சிறுவனை அவரது குடும்பம் நல்ல விதத்தில் வளர்க்கவில்லை’ என்று அந்தச் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், “அதிபரை விமர்சிப்பது போன்ற அரசியல் தலையீடு, காவல்துறையின் மீதான வெறுப்பை அதிகரிக்கும்” என்று ‘யுனைட் எஸ்ஜிபி போலீஸ்’ எனும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முயன்றால், காவல் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் எச்சரித்துள்ளார்.
போர்க்களமாக காட்சி அளிக்கும் பாரிஸ் நகர வீதிகள்
நஹெலின் தாய் சொன்னது என்ன?
நஹெல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவலைக் கேட்டதும் அவரது தாய் மோனியா அதிர்ந்து போனார். மகனை இழந்து தவிக்கும் நிலையில், சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று மோனியா அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.
அத்துடன், தனது மகனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஃபிரான்ஸ் போலீசுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வகை செய்யும் சட்டம் 2017இல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஓடும் கார்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்று ‘Le Monde’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தால், கறுப்பின மக்கள் அவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளது என்று மனித உரிமை ஆர்வலரான ரோகயா டயல்லோ அச்சம் தெரிவித்துள்ளார்.
நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்
தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.
அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் கெட்டவர்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியபடியே, போலீசார் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திற்கு நிச்சயம் நினைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, 2005இல் நிகழ்ந்ததைப் போன்று மீண்டுமொரு முறை விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்வதைத் தற்போதைய அரசு நிச்சயம் விரும்பாது.
தான் கூறும் வார்த்தைகள் அமைதிக்கும் வழி வகுக்கும்; அதேநேரம் வன்முறையையும் தூண்டும் என்பதை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நன்கு உணர்ந்திருக்கிறார் என்று பாரீசில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ஃபிரான்ஸ் அதிபர் ஆறுதல் செய்தி அனுப்பி உள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 13 பேரை சுட்டுக்கொன்ற ஃபிரான்ஸ் போலீஸ்
ஓய்வூதியம் தொடர்பான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வதைக் கண்டித்து, ஃபிரான்ஸ் மக்கள் ஏற்கெனவே வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் பொதுமக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தற்போது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து, பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மீண்டும் 2005இல் நிகழ்ந்ததைப் போன்று நீடிக்க அனுமதிக்க கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டே அதிபர் மக்ரோனும், அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகின்றனர்.
கடந்த 2017இல் இருந்து, ஃபிரான்ஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர்கள் அல்லது அரேபியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலை போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 பேர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது கொல்லப்பட்டுள்ள சிறுவன் நஹெலும், பிரெஞ்சு -அல்ஜீரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிறுவனின் அண்டை வீட்டுக்காரர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
பிரான்ஸில் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் யார்? வன்முறை தொடர்வது ஏன்?
![போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள் 03897950-189c-11ee-8bb2-833a49de157b](https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/8083/live/03897950-189c-11ee-8bb2-833a49de157b.jpg)
பிரான்ஸில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி நஹெல் என்ற 17 வயது சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் சொந்த ஊரான நான்டெர் உட்பட பிரான்ஸ் முழுவதும் வன்முறை பரவியுள்ளது.
சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி. செய்தி முகமை உறுதி செய்துள்ளது.
தனது ஒரே மகனாக நஹெலை இழந்து தவிக்கும் அவரின் தாய் இது தொடர்பாக சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.
யார் இந்த நஹெல்?
டெலிவரி வேலை செய்துவந்த நஹெலிக்கு ரக்பி விளையாட்டில் ஆர்வம் அதிகம். ரக்பி லீக்கிலும் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். தனது வீட்டின் அருகேயுள்ள சுரேனே என்ற பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரீஷியனானப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அல்ஜீரியரான நஹெல் அவர் வசித்த நான்டெர் பகுதியில் உள்ள மக்களால் விரும்பப்படும் நபராக இருந்துள்ளார். தனது தந்தை குறித்து நஹெல் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று சிறுவனுக்கு பழக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நஹெலுக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அடிக்கடி விடுப்பு எடுத்துள்ளார். உள்ளூர் போலீஸருக்கும் நஹெல் அறிமுகமானவராக இருக்கிறார். எனினும், அவருக்கு எந்தவித குற்றவியல் பின்னணியும் இல்லை என்று குடும்ப வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த நாளன்று, காலை 9 மணியளவில் மெர்சிடீஸ் காரை அவர் ஓட்டிவந்துள்ளார். 17 வயதான நஹெலிடம் ஓட்டுநர் உரிமம் கூட கிடையாது. போலீஸார் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதை தொடர்ந்து நெஞ்சில் குண்டு பாய்ந்து நஹெல் உயிரிழந்துள்ளார்.
"நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்?" என்று சிறுவனுடைய அம்மா வேதனையுடன் கேட்கிறார். “நான் அவனுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்தேன். எனக்கொன்றும் 10 குழந்தைகள் இல்லை. எனக்கு இருந்ததோ ஒரேயொரு மகன் தான். என் வாழ்க்கையே அவன் தான்” என்று நஹெலின் தாய் தெரிவித்தார்.
நஹெல் மிகவும் நல்ல பையன் என்று அவரது பாட்டியும் தனது பேரன் குறித்து கூறுகிறர்.
“காரை நிறுத்தவில்லை என்பதற்காக கொலை செய்துவிடலாம் என்ற அனுமதியை உங்களுக்கு யாரும் வழங்கவில்லை” என்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஆலிவர் ஃபரே கூறுகிறார். குடியரசின் அனைத்து குழந்தைகளுக்கும் நீதிக்கான உரிமை உண்டு." என்றும் அவர் தெரிவித்தார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
'யாரையும் கை நீட்டிக்கூட பேசியது கிடையாது'
ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்டவரான நஹெல் கடந்த மூன்று ஆண்டுகளாக பைரேட்ஸ் ஆஃப் நான்டெர் ரக்பி கிளப்பில் விளையாடி வந்தார். மேலும், கற்றலுக்காக சிரமப்படும் பதின்மவயதினருக்காக ஓவல்ஸ் கெயென் என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டுவரும் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பயிற்சிகளில் சேர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கம். அதன்படி, நஹெல் மின்சாதனங்களை பழுதுப் பார்ப்பது தொடர்பாக கற்றுக்கொண்டிருந்தார்.
ஓவல்ஸ் கெயென் தலைவர் ஜெஃப் வூச், நஹெல் பற்றி லீ பாரிஸ் செய்தித்தாளுக்காக பேசும்போது, "போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும், குற்றங்களில் ஈடுபடும் பிற சிறுவர்கள் போல் அவர் கிடையாது. சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர் அவர்.” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் நஹெல் குறித்து தவறாக பரப்பப்படும் தகவல்களுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கிறார்.
பாப்லோ பிக்காசோ எஸ்டேட்டுக்கு குடிபுகுவதற்கு முன்பாக நான்டெர்வின் புறநகர் பகுதியான வீ போண்ட் பகுதியில் நஹெல் தனது தாயாருடன் வசித்துவந்தபோதே சிறுவனை ஜெஃப்க்கு தெரியும்.
நஹெல் குறித்து பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மாரூனே, நஹேல் தனக்கு ஒரு தம்பி போன்றவர் என்றார்; மேலும் கனிவாகவும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்துடனும் நஹெல் வளர்ந்துவந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“நஹெல் யாரையும் கைநீட்டி பேசியது இல்லை. அவன் வன்முறையில் ஈடுபட்டதும் கிடையாது” என்கிறார் மாரூனே
நஹெல் தாயார் கூறுவது என்ன?
தனது மகனின் முகத்தில் அரபு சாயலை போலீஸார் பார்த்திருக்கிறார், அதனால்தான் அவரை சுட்டுக்கொன்றுள்ளார் என்று நஹெலின் தாய் கூறுகிறார். 'ஃபிரான்ஸ் 5' தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “என் மகனை சுட்டுக்கொன்ற அந்த ஒரு அதிகாரியை மட்டுமே நான் குற்றஞ்சாட்டுகிறேன். மொத்த போலீஸையும் அல்ல. காவல்துறையிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்கள் முழு மனதுடன் என்னுடன் இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
"காவல்துறையின் வன்முறை ஒவ்வொரு நாளும் நடக்கிறது, குறிப்பாக நீங்கள் அரேபியராகவோ அல்லது கறுப்பினத்தவராகவோ இருந்தால்," என்று கூறுகிறார் நஹெலிக்காக நீதி கேட்கும் இளைஞர் ஒருவர்.
எனினும் நஹெல் குடும்பத்தின் வழக்கறிஞர் யாசின் பௌஸ்ரோ, இது இனவாதம் பற்றியது அல்ல, நீதிக்கானது என்று கூறினார்.
" காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கிற வகையிலும் தண்டனையிலிருந்து விலக்கும் வகையிலும் நமது சட்டம் உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
ஏற்கனவே போலீஸ் சோதனைகளுக்கு உள்ளான நஹெல்
2021 ஆம் ஆண்டு முதல் நஹெல் ஐந்து முறை போலீஸ் சோதனைகளுக்கு உட்பட்டுள்ளார். இந்த சோதனைகள் பிரஞ்ச் மொழியில் refus d'obtempérer என்று கூறப்படுகிறது. அதாவது வாகனத்தை நிறுத்துமாறு கூறும் உத்தரவுக்கு மறுப்பது ஆகும்.
நஹெலை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அவர் இரண்டு பயணிகளுடன், போலந்து நம்பர் பிளேட் கொண்ட மெர்சிடிஸ் காரை ஓட்டிச் சென்றார். அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை.
உத்தரவுக்கு இணங்க மறுத்ததற்காக அவர் கடந்தவார இறுதியில் கூட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும், செப்டம்பரில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பலவிதமான விசாரணைகளுக்காக அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் `தாஜ்` என்ற போலீஸ் கோப்பில் அவரது பெயர் இருந்தது.
கடந்த செப்டம்பரில் நஹெல் மீது நீதிபதி ஒருவர் ஒழுங்கு நடவடிக்கையும் விதித்துள்ளார். அவர் மீதான தொடர் குற்றச்சாட்டே ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவது, போலியான வாகன எண்ணை பயன்படுத்துவது போன்றவைதான்.
ஆனால் நஹெல் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் மீது குற்றவியல்பதிவு இல்லை என்றும் அவரது குடும்ப வழக்கறிஞர் ஜெனிபர் காம்ப்லா கூறினார். போலீசார் ஒரு நபர் குறித்து அறிந்திருப்பதாலேயே அவருக்கு குற்றவியல் வரலாறு இருப்பதாக அர்த்தம் கிடையாது என்று பிரஞ்ச் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
![போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள் C7ebed00-1897-11ee-8cae-4785e93eadf1](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/2793/live/c7ebed00-1897-11ee-8cae-4785e93eadf1.jpg)
இறுதிச் சடங்கில் பல்லாயிரம் பேர் பங்கேற்பு
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் நஹெலுக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. சிறுவனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளானோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக லீ மான்டே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவனின் இறுதிச்சடங்கு முடிந்த பின்னரும் அங்குள்ள மசூதிக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், 'நஹெல் மறைவுக்கு நீதி வேண்டும்' என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
பிரான்ஸில் தற்போது நிலைமை எப்படி உள்ளது?
நஹெல் மரணத்தைத் தொடர்ந்து ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. வியாழன்று 900 பேர், வெள்ளியன்று 1,300, சனிக்கிழை 486 பேர் என இதுவரை 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று 45,000 போலீஸார் வரை நாடு முழுவதும் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஃபிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும் வன்முறையை தூண்டுவதாக கொத்துக்கொத்தாக பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். தலைநகர் பிரஸ்ஸல்சில் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதிகாரிகளின் மனோபாவம் உலகம் முழுவதும் ஒன்றுதானோ? அதிகாரிகளுக்குப் பயிற்சி தருவதில் மிகுந்த குறைபாடு உள்ளது! மக்களை மதிக்கும் போக்கு வளர்க்கப்பட வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து நடத்திய தமிழர்! சுட்டுக் கொன்ற போலீஸ்
» ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து நடத்திய தமிழர்! சுட்டுக் கொன்ற போலீஸ்
» ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|