புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கக்கன் பிறந்த தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 18, 2023 6:03 am

கக்கன் பிறந்த தினம் Picsar45

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது

அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்

சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை

சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் காமராஜர் அமைத்த அரசில் அமைச்சரானார்

அமைச்சர் ஆனாலும் சாதாரண மக்களோடு பேருந்து பயணம், எளிமையான வாழ்வு என்றுதான் இருந்தார். மகா எளிமையான வாழ்வு

பொதுபணிதுறை, மின்சார துறை, விவசாயதுறை, காவல்துறை என அந்த காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் அமைச்சராக இருந்தும் சல்லி காசு கூட சம்பாதிக்க தெரியாத நேர்மையான அரசியல்வாதி அவர்

அவர் பொதுபணிதுறை அமைச்சராக இருந்தபொழுதுதான் மேட்டூர் அணை உயரம் அதிகரிக்கபட்டது, மணிமுத்தாறு வைகை அணைகள் எல்லாம் கட்டபட்டன‌

அவர் விவசாய அமைச்சராக இருந்தபொழுதுதான் உரங்கள் கிடைக்க வசதி, கூட்டுறவு முறை எல்லாம் கொண்டுவரபட்டது

அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்

மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது

அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள்.

அதுவும் பெரியார் சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க‌, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள்,

ஏ அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்க.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்”

அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை

எங்கு பெரியார் பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்

1967ல் திராவிட புரட்சியில் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது

அதன் பின் கக்கனை பற்றி செய்தி இல்லை, அவர் பராரி கோலத்தில் சென்னையில் மக்களோடு மக்களாக சுற்றினார். இவ்வளவிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவர சத்யமூர்த்திபவனும் கைவிட்டது

மிக்க வறுமையில் சிக்கிய அவரை சிவாஜி கணேசன் சந்தித்து கண்ணீர் சிந்தினார், சிவாஜி கஞ்சன் என்பார்கள் ஆனால் செய்ய வேண்டிய இடங்களில் செய்தார்

தனக்கு பரிசாக வந்த தங்க‌ சங்கிலி ஒன்றை ஏலம் விட்டார், பணம் குவிந்தது, தன் பணத்தையும் போட்டு வங்கியில் டெப்பாசிட் செய்து கக்கனின் வறுமை போக்க முனைந்தார் சிவாஜி கணேசன்

அந்த மாமனிதனை அன்று தமிழக அரசும் எட்டிபார்க்கவில்லை, நேரு பின்னால் கொடி பிடித்த அவரை இந்திரா அரசும் எட்டிபார்க்கவில்லை

தன்மானத்தில் உயர்ந்துநின்ற கக்கன் அவர்களிடம் கையேந்தவுமில்லை

பின்னொருநாள் ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அரசு மருத்துவமனைக்கு சுற்றிபார்க்க சென்றார், அங்கே ஓர் முதியவர் பாய் விரித்து படுத்திருந்தார், நோய் அவரை படாதபாடு படுத்தியிருந்தது

ராமசந்திரனிடம் அதுதான் கக்கன் என சொன்னார்கள்

தான் சினிமாவில் நடித்துகொண்டிருந்தபொழுது பெரும் அமைச்சராக கோலோச்சியவர் இவரா? அந்த பெருமகனா என மனம் நொந்த ராமசந்திரன் அவரை நல்ல மருத்துவமனையில் சேர்த்தார்

எந்த ராமசந்திரன்? மக்களை மயக்க எந்த முகத்தை திமுக பயன்படுத்தியதோ? கக்கன் காமராஜரை வீழ்த்த எந்த ராமசந்திரனை ஒப்பனையிட்டு மக்கள் முன்னால் நிறுத்தியதோ அந்த ராமசந்திரன்

நிச்சயம் அன்று ராமசந்திரனின் மனம் கலங்கி இருக்க வேண்டும், இந்த மாமனிதனை என்னை வைத்தா தோற்கடித்தார்கள் என அவர் கலங்கி இருக்க வேண்டும், அப்படி கலங்கினார் என்றுதான் நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள்

உண்மையில் ராமசந்திரன் அவர் நலம் காக்க போராடினார், ஆனால் இம்மக்களுக்காக உழைத்து பின் அவர்களால் தோற்கடிக்கபட்டு புழுதியில் எறியபட்டு மனதால் செத்திருந்த கக்கன், உடலாலும் பிணமானார்

இன்று கக்கனின் பிறந்தநாள்

கக்கனின் வாழ்வே கொடுமை நிறைந்தது, அதனை விட கொடுமையான செய்தி கக்கனின் மகன் ஒருவன் வாழ வழியின்றி பைத்தியமாகிவிட்டான் என்ற செய்தி அது

அந்த பொதுநல பித்தன் இம்மக்களுக்காக உழைத்து தன் மகனை பராரியாக்கி பித்தனாக்கி இருக்கின்றான்

14 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவன் ஒரு பைசா இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயில் கிடந்த தமிழகத்தில்தான், முதல்வர் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடும், பெரும் பணத்தோடும் பெரும் உல்லாச வாகனங்களில் அலைகின்றார்கள்

கக்கனை விரட்டினார்கள் திமுகவினர், இதோ கக்கனின் குடும்பத்து சொத்து என ஒரு செங்கல்லை காட்ட முடியுமா? ஆனால் திமுக அதிமுக‌ சொத்து மதிப்பு வங்க கடலையும் விட பெரியதாக போகின்றது

இதனை பார்க்கும்பொழுது தமிழகம் நாணத்தால் தலைகுனிகின்றது, எப்படிபட்ட வீழ்ச்சியினை சந்தித்துவிட்டோம் என வெட்கி அழுகின்றது

நேர்மைக்கு அடையாளம் அந்த கக்கன், எளிமையான‌ மக்கட் பணிக்கு பெரும் அடையாளம் அந்த மாமனிதன்

அவரை போன்றவர்கள் இனி வரமாட்டார்கள்,

தமிழக அரசியல் நதி அவ்வளவு சுத்தமான நதியாக ஓடியிருக்கின்றது, அந்த சோலை அவ்வளவு மணமாக இருந்திருக்கின்றது, அந்த விளக்கு அவ்வளவு பிரகாசமாக ஒளிவீசியிருக்கின்றது என கக்கன், காமராஜரின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன‌

இன்று நாறிவிட்ட சாக்கடையாக, கருவாட்டு மூட்டையாக, பெரும் இருளில் சிக்கிவிட்ட அந்த அரசியலில் இருந்து ஓரமாக நின்று அந்த பொற்காலத்தை நினைத்து அழுவோம்

தெய்வங்கள் அருள்வழங்கிய அந்த ஆலயத்திலிருந்து அவைகளை விரட்டிவிட்டு சாத்தான்களை குடி வைத்ததற்காய் அழுவோம்

அதில் கக்கனுக்காகவும் அழுவோம் , இவர்களை போல உத்தமர்களை அதுவும் தோற்றபின்னும் மறுபடியும் வந்து வாக்கு தாருங்கள் உங்களுக்காக உழைக்கின்றோம் என நின்ற அந்த அப்பாவிகளை விடாமல் துரத்தினோம் என்றால்

கிறிஸ்துவினை கொன்ற யூதனுக்கும், இவர்களை விரட்டிய தமிழனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

அந்த பாவத்திற்கு பெரும் தண்டனையும், பெரும் கண்ணீரும் பெற்றுத்தான் தீரவேண்டும்

அதனால்தான் இந்த அழுகை அழவேண்டியிருக்கின்றது தமிழகம், அழுவோம் வாய்விட்டு அழுவோம்

அதில் இந்த அப்பாவி கக்கனுக்காக ஓங்கி அழுவோம்

கக்கனும் அவரை போன்றவர்களும் எவ்வளவு உத்தமமான மகான்கள் என உலகிற்கு காட்ட பின் வந்தவர்கள் எல்லாம் ஊழலும், லஞ்சமும் நிறைந்த சுயநல ஆட்சி நடத்தினார்கள்

அதில் கக்கனின் நேர்மையினை உலகிற்கு சொன்னார்கள், கக்கனை விரட்டிவிட்டதாக நினைத்தவர்கள் உண்மையில் அவருக்கு பெரும் புகழை ஈட்டிதந்திருக்கின்றார்கள்

தமிழகம் கண்ட தனிபெரும் தியாகிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அப்படிபட்டவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றார்கள் என்ற நினைவு பெருமூச்சில் பொங்கி வரும் கண்ணீருடன் அம்மகானுக்கு அஞ்சலிகள்
கக்கனின் சாயலில் ஒருவரை இன்றைய அரசியலில் காட்டமுடியுமென்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது பாரதபிரதமர் மோடி

கட்சிதான் வேறு என்றாலும் அந்த அரசியல் துறவறத்தில் கக்கனுக்கு அருகில் சரியாக அமர்ந்திருப்பவர் மோடி

(கக்கன் தாழ்த்தபட்டவர் , காமராஜரும் சூத்திர சாதி ஆனால் மிகபெரும் தியாகிகளாய் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். மிக பெரும் இடத்திற்கு அவர்கள் சென்றார்கள்

நிச்சயம் அவர்களை வீழ்த்தியது ஆரிய பார்பனியமோ, உயர் சாதி சூழ்ச்சியோ அல்ல. தாழ்த்தபட்டவர்களை உயர்த்துவோம் என புரட்சி செய்தவர்கள்தான் அவர்களை வீழ்த்தினார்கள்

அதாவது ஆரிய சூழ்ச்சி செய்யவேண்டிய வேலையினை இவர்களே செய்தார்கள், செய்துவிட்டுத்தான் திராவிட் புரட்சியில் சூத்திரன் வாழ்வு, தாழ்த்தபட்டவன் முன்னேற்றம் என அவர்களே சொல்லிகொண்டார்கள்..)

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 18, 2023 5:33 pm

காமராஜர் /கக்கன்/பா ஜீவானந்தம் போன்ற பரிசுத்த அரசியல்வாதிகள் --
காணமுடியாத அப்பழுக்கின்றி வாழ்ந்த அரசியல்வாதிகள்.

காமராஜர் இறக்கும்போது அவரது பையில் சில சில்லறைகள் தான் அவர் சொத்து/

கக்கனின்  மகன் நான் வேலை செய்துகொண்டு இருந்த  சிம்சனில் வேலையில் இருந்தார்.
கக்கன் அவர்களும் போக்குவரத்து மந்திரியாகதான் (!!!!!) இருந்தார். அவரது பிறந்ததினம்
போற்றப்படவேண்டிய ஒன்று.

பா ஜீவானந்தம் குடிசையில் வாழ்நதவர் . ஒரு முறை காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்திற்கு
அழைத்தபோது நீங்கள் முதலில் போகவும் நான் பிறகு வருகிறேன் என்றார்.காரணம்
போட்டுக்கொண்டு இருந்த சட்டையை துவைத்து அதைத்தான் போட்டுக்கொண்டு வரவேண்டிய நிலை.

சமீப காலங்களில் திரு  இரா நல்லக்கண்ணு அவர்கள் அந்த வரிசையில் வாழும் உத்தமர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 19, 2023 12:38 pm

"தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்" -
அருமை சிவா! :வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 7:05 pm

T.N.Balasubramanian wrote:காமராஜர் /கக்கன்/பா ஜீவானந்தம் போன்ற பரிசுத்த அரசியல்வாதிகள் --
காணமுடியாத அப்பழுக்கின்றி வாழ்ந்த அரசியல்வாதிகள்.

காமராஜர் இறக்கும்போது அவரது பையில் சில சில்லறைகள் தான் அவர் சொத்து/

கக்கனின்  மகன் நான் வேலை செய்துகொண்டு இருந்த  சிம்சனில் வேலையில் இருந்தார்.
கக்கன் அவர்களும் போக்குவரத்து மந்திரியாகதான் (!!!!!) இருந்தார். அவரது பிறந்ததினம்
போற்றப்படவேண்டிய ஒன்று.

பா ஜீவானந்தம் குடிசையில் வாழ்நதவர் . ஒரு முறை காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்திற்கு
அழைத்தபோது நீங்கள் முதலில் போகவும் நான் பிறகு வருகிறேன் என்றார்.காரணம்
போட்டுக்கொண்டு இருந்த சட்டையை துவைத்து அதைத்தான் போட்டுக்கொண்டு வரவேண்டிய நிலை.

சமீப காலங்களில் திரு  இரா நல்லக்கண்ணு அவர்கள் அந்த வரிசையில் வாழும் உத்தமர்.


அரசியல் உத்தமர்கள் பற்றிய தங்களின் பதிவு அருமை தலைவரே.

கக்கன் பிறந்த தினம் 1571444738 கக்கன் பிறந்த தினம் 1571444738 கக்கன் பிறந்த தினம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக