Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கக்கன் பிறந்த தினம்
3 posters
Page 1 of 1
கக்கன் பிறந்த தினம்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது
அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்
சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை
சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் காமராஜர் அமைத்த அரசில் அமைச்சரானார்
அமைச்சர் ஆனாலும் சாதாரண மக்களோடு பேருந்து பயணம், எளிமையான வாழ்வு என்றுதான் இருந்தார். மகா எளிமையான வாழ்வு
பொதுபணிதுறை, மின்சார துறை, விவசாயதுறை, காவல்துறை என அந்த காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் அமைச்சராக இருந்தும் சல்லி காசு கூட சம்பாதிக்க தெரியாத நேர்மையான அரசியல்வாதி அவர்
அவர் பொதுபணிதுறை அமைச்சராக இருந்தபொழுதுதான் மேட்டூர் அணை உயரம் அதிகரிக்கபட்டது, மணிமுத்தாறு வைகை அணைகள் எல்லாம் கட்டபட்டன
அவர் விவசாய அமைச்சராக இருந்தபொழுதுதான் உரங்கள் கிடைக்க வசதி, கூட்டுறவு முறை எல்லாம் கொண்டுவரபட்டது
அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்
மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது
அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள்.
அதுவும் பெரியார் சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள்,
ஏ அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்க.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்”
அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை
எங்கு பெரியார் பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்
1967ல் திராவிட புரட்சியில் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது
அதன் பின் கக்கனை பற்றி செய்தி இல்லை, அவர் பராரி கோலத்தில் சென்னையில் மக்களோடு மக்களாக சுற்றினார். இவ்வளவிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவர சத்யமூர்த்திபவனும் கைவிட்டது
மிக்க வறுமையில் சிக்கிய அவரை சிவாஜி கணேசன் சந்தித்து கண்ணீர் சிந்தினார், சிவாஜி கஞ்சன் என்பார்கள் ஆனால் செய்ய வேண்டிய இடங்களில் செய்தார்
தனக்கு பரிசாக வந்த தங்க சங்கிலி ஒன்றை ஏலம் விட்டார், பணம் குவிந்தது, தன் பணத்தையும் போட்டு வங்கியில் டெப்பாசிட் செய்து கக்கனின் வறுமை போக்க முனைந்தார் சிவாஜி கணேசன்
அந்த மாமனிதனை அன்று தமிழக அரசும் எட்டிபார்க்கவில்லை, நேரு பின்னால் கொடி பிடித்த அவரை இந்திரா அரசும் எட்டிபார்க்கவில்லை
தன்மானத்தில் உயர்ந்துநின்ற கக்கன் அவர்களிடம் கையேந்தவுமில்லை
பின்னொருநாள் ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அரசு மருத்துவமனைக்கு சுற்றிபார்க்க சென்றார், அங்கே ஓர் முதியவர் பாய் விரித்து படுத்திருந்தார், நோய் அவரை படாதபாடு படுத்தியிருந்தது
ராமசந்திரனிடம் அதுதான் கக்கன் என சொன்னார்கள்
தான் சினிமாவில் நடித்துகொண்டிருந்தபொழுது பெரும் அமைச்சராக கோலோச்சியவர் இவரா? அந்த பெருமகனா என மனம் நொந்த ராமசந்திரன் அவரை நல்ல மருத்துவமனையில் சேர்த்தார்
எந்த ராமசந்திரன்? மக்களை மயக்க எந்த முகத்தை திமுக பயன்படுத்தியதோ? கக்கன் காமராஜரை வீழ்த்த எந்த ராமசந்திரனை ஒப்பனையிட்டு மக்கள் முன்னால் நிறுத்தியதோ அந்த ராமசந்திரன்
நிச்சயம் அன்று ராமசந்திரனின் மனம் கலங்கி இருக்க வேண்டும், இந்த மாமனிதனை என்னை வைத்தா தோற்கடித்தார்கள் என அவர் கலங்கி இருக்க வேண்டும், அப்படி கலங்கினார் என்றுதான் நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள்
உண்மையில் ராமசந்திரன் அவர் நலம் காக்க போராடினார், ஆனால் இம்மக்களுக்காக உழைத்து பின் அவர்களால் தோற்கடிக்கபட்டு புழுதியில் எறியபட்டு மனதால் செத்திருந்த கக்கன், உடலாலும் பிணமானார்
இன்று கக்கனின் பிறந்தநாள்
கக்கனின் வாழ்வே கொடுமை நிறைந்தது, அதனை விட கொடுமையான செய்தி கக்கனின் மகன் ஒருவன் வாழ வழியின்றி பைத்தியமாகிவிட்டான் என்ற செய்தி அது
அந்த பொதுநல பித்தன் இம்மக்களுக்காக உழைத்து தன் மகனை பராரியாக்கி பித்தனாக்கி இருக்கின்றான்
14 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவன் ஒரு பைசா இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயில் கிடந்த தமிழகத்தில்தான், முதல்வர் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடும், பெரும் பணத்தோடும் பெரும் உல்லாச வாகனங்களில் அலைகின்றார்கள்
கக்கனை விரட்டினார்கள் திமுகவினர், இதோ கக்கனின் குடும்பத்து சொத்து என ஒரு செங்கல்லை காட்ட முடியுமா? ஆனால் திமுக அதிமுக சொத்து மதிப்பு வங்க கடலையும் விட பெரியதாக போகின்றது
இதனை பார்க்கும்பொழுது தமிழகம் நாணத்தால் தலைகுனிகின்றது, எப்படிபட்ட வீழ்ச்சியினை சந்தித்துவிட்டோம் என வெட்கி அழுகின்றது
நேர்மைக்கு அடையாளம் அந்த கக்கன், எளிமையான மக்கட் பணிக்கு பெரும் அடையாளம் அந்த மாமனிதன்
அவரை போன்றவர்கள் இனி வரமாட்டார்கள்,
தமிழக அரசியல் நதி அவ்வளவு சுத்தமான நதியாக ஓடியிருக்கின்றது, அந்த சோலை அவ்வளவு மணமாக இருந்திருக்கின்றது, அந்த விளக்கு அவ்வளவு பிரகாசமாக ஒளிவீசியிருக்கின்றது என கக்கன், காமராஜரின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன
இன்று நாறிவிட்ட சாக்கடையாக, கருவாட்டு மூட்டையாக, பெரும் இருளில் சிக்கிவிட்ட அந்த அரசியலில் இருந்து ஓரமாக நின்று அந்த பொற்காலத்தை நினைத்து அழுவோம்
தெய்வங்கள் அருள்வழங்கிய அந்த ஆலயத்திலிருந்து அவைகளை விரட்டிவிட்டு சாத்தான்களை குடி வைத்ததற்காய் அழுவோம்
அதில் கக்கனுக்காகவும் அழுவோம் , இவர்களை போல உத்தமர்களை அதுவும் தோற்றபின்னும் மறுபடியும் வந்து வாக்கு தாருங்கள் உங்களுக்காக உழைக்கின்றோம் என நின்ற அந்த அப்பாவிகளை விடாமல் துரத்தினோம் என்றால்
கிறிஸ்துவினை கொன்ற யூதனுக்கும், இவர்களை விரட்டிய தமிழனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
அந்த பாவத்திற்கு பெரும் தண்டனையும், பெரும் கண்ணீரும் பெற்றுத்தான் தீரவேண்டும்
அதனால்தான் இந்த அழுகை அழவேண்டியிருக்கின்றது தமிழகம், அழுவோம் வாய்விட்டு அழுவோம்
அதில் இந்த அப்பாவி கக்கனுக்காக ஓங்கி அழுவோம்
கக்கனும் அவரை போன்றவர்களும் எவ்வளவு உத்தமமான மகான்கள் என உலகிற்கு காட்ட பின் வந்தவர்கள் எல்லாம் ஊழலும், லஞ்சமும் நிறைந்த சுயநல ஆட்சி நடத்தினார்கள்
அதில் கக்கனின் நேர்மையினை உலகிற்கு சொன்னார்கள், கக்கனை விரட்டிவிட்டதாக நினைத்தவர்கள் உண்மையில் அவருக்கு பெரும் புகழை ஈட்டிதந்திருக்கின்றார்கள்
தமிழகம் கண்ட தனிபெரும் தியாகிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அப்படிபட்டவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றார்கள் என்ற நினைவு பெருமூச்சில் பொங்கி வரும் கண்ணீருடன் அம்மகானுக்கு அஞ்சலிகள்
கக்கனின் சாயலில் ஒருவரை இன்றைய அரசியலில் காட்டமுடியுமென்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது பாரதபிரதமர் மோடி
கட்சிதான் வேறு என்றாலும் அந்த அரசியல் துறவறத்தில் கக்கனுக்கு அருகில் சரியாக அமர்ந்திருப்பவர் மோடி
(கக்கன் தாழ்த்தபட்டவர் , காமராஜரும் சூத்திர சாதி ஆனால் மிகபெரும் தியாகிகளாய் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். மிக பெரும் இடத்திற்கு அவர்கள் சென்றார்கள்
நிச்சயம் அவர்களை வீழ்த்தியது ஆரிய பார்பனியமோ, உயர் சாதி சூழ்ச்சியோ அல்ல. தாழ்த்தபட்டவர்களை உயர்த்துவோம் என புரட்சி செய்தவர்கள்தான் அவர்களை வீழ்த்தினார்கள்
அதாவது ஆரிய சூழ்ச்சி செய்யவேண்டிய வேலையினை இவர்களே செய்தார்கள், செய்துவிட்டுத்தான் திராவிட் புரட்சியில் சூத்திரன் வாழ்வு, தாழ்த்தபட்டவன் முன்னேற்றம் என அவர்களே சொல்லிகொண்டார்கள்..)
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கக்கன் பிறந்த தினம்
காமராஜர் /கக்கன்/பா ஜீவானந்தம் போன்ற பரிசுத்த அரசியல்வாதிகள் --
காணமுடியாத அப்பழுக்கின்றி வாழ்ந்த அரசியல்வாதிகள்.
காமராஜர் இறக்கும்போது அவரது பையில் சில சில்லறைகள் தான் அவர் சொத்து/
கக்கனின் மகன் நான் வேலை செய்துகொண்டு இருந்த சிம்சனில் வேலையில் இருந்தார்.
கக்கன் அவர்களும் போக்குவரத்து மந்திரியாகதான் (!!!!!) இருந்தார். அவரது பிறந்ததினம்
போற்றப்படவேண்டிய ஒன்று.
பா ஜீவானந்தம் குடிசையில் வாழ்நதவர் . ஒரு முறை காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்திற்கு
அழைத்தபோது நீங்கள் முதலில் போகவும் நான் பிறகு வருகிறேன் என்றார்.காரணம்
போட்டுக்கொண்டு இருந்த சட்டையை துவைத்து அதைத்தான் போட்டுக்கொண்டு வரவேண்டிய நிலை.
சமீப காலங்களில் திரு இரா நல்லக்கண்ணு அவர்கள் அந்த வரிசையில் வாழும் உத்தமர்.
காணமுடியாத அப்பழுக்கின்றி வாழ்ந்த அரசியல்வாதிகள்.
காமராஜர் இறக்கும்போது அவரது பையில் சில சில்லறைகள் தான் அவர் சொத்து/
கக்கனின் மகன் நான் வேலை செய்துகொண்டு இருந்த சிம்சனில் வேலையில் இருந்தார்.
கக்கன் அவர்களும் போக்குவரத்து மந்திரியாகதான் (!!!!!) இருந்தார். அவரது பிறந்ததினம்
போற்றப்படவேண்டிய ஒன்று.
பா ஜீவானந்தம் குடிசையில் வாழ்நதவர் . ஒரு முறை காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்திற்கு
அழைத்தபோது நீங்கள் முதலில் போகவும் நான் பிறகு வருகிறேன் என்றார்.காரணம்
போட்டுக்கொண்டு இருந்த சட்டையை துவைத்து அதைத்தான் போட்டுக்கொண்டு வரவேண்டிய நிலை.
சமீப காலங்களில் திரு இரா நல்லக்கண்ணு அவர்கள் அந்த வரிசையில் வாழும் உத்தமர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கக்கன் பிறந்த தினம்
"தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்" -
அருமை சிவா!
அருமை சிவா!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கக்கன் பிறந்த தினம்
T.N.Balasubramanian wrote:காமராஜர் /கக்கன்/பா ஜீவானந்தம் போன்ற பரிசுத்த அரசியல்வாதிகள் --
காணமுடியாத அப்பழுக்கின்றி வாழ்ந்த அரசியல்வாதிகள்.
காமராஜர் இறக்கும்போது அவரது பையில் சில சில்லறைகள் தான் அவர் சொத்து/
கக்கனின் மகன் நான் வேலை செய்துகொண்டு இருந்த சிம்சனில் வேலையில் இருந்தார்.
கக்கன் அவர்களும் போக்குவரத்து மந்திரியாகதான் (!!!!!) இருந்தார். அவரது பிறந்ததினம்
போற்றப்படவேண்டிய ஒன்று.
பா ஜீவானந்தம் குடிசையில் வாழ்நதவர் . ஒரு முறை காமராஜர் ஒரு பொதுக்கூட்டத்திற்கு
அழைத்தபோது நீங்கள் முதலில் போகவும் நான் பிறகு வருகிறேன் என்றார்.காரணம்
போட்டுக்கொண்டு இருந்த சட்டையை துவைத்து அதைத்தான் போட்டுக்கொண்டு வரவேண்டிய நிலை.
சமீப காலங்களில் திரு இரா நல்லக்கண்ணு அவர்கள் அந்த வரிசையில் வாழும் உத்தமர்.
அரசியல் உத்தமர்கள் பற்றிய தங்களின் பதிவு அருமை தலைவரே.
Similar topics
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» வ.உ.சி. பிறந்த தினம்
» எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் (ஜன.17, 1917)
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» வ.உ.சி. பிறந்த தினம்
» எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் (ஜன.17, 1917)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|