ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

உலக ரத்த தான தினம் ! . குருதிக்  கொடை தினம்  ! கவிஞர் இரா .இரவி ! Empty உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Jun 14, 2023 3:36 pm

உலக ரத்த தான தினம் !
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !



------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !

ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !

மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !

சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !

தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !

பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !

புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !

மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !

பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !

அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !

தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !

விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !

இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !

சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !

வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !

தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------


.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலக ரத்த தான தினம் ! . குருதிக்  கொடை தினம்  ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

Post by Dr.S.Soundarapandian Fri Jun 16, 2023 1:36 pm

உலக ரத்த தான தினம் ! . குருதிக்  கொடை தினம்  ! கவிஞர் இரா .இரவி ! 1571444738 :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum